Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorna Regai
Sorna Regai
Sorna Regai
Ebook99 pages1 hour

Sorna Regai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 9, 2016
ISBN6580100701405
Sorna Regai

Read more from Indira Soundarajan

Related to Sorna Regai

Related ebooks

Related categories

Reviews for Sorna Regai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorna Regai - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    சொர்ண ரேகை

    Sorna Rekai

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    என்னுரை!

    இதிலுள்ள இரண்டு நாவல்களுமே மாத நாவல் இலக்கிய ஜாதியைச் சேர்ந்தவை. நாவலிலும் ஜாதியா என்று கேட்டுவிடாதீர்கள். ஒரு அடையாளத்துக்காக கூறப்படுவது இது. அவ்வளவே !

    இன்று படிப்பவர் குறைந்து, பார்ப்பவர் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில் உள்ளோம். தொலைக்காட்சிப் பெட்டியைத் திருகினால் ஐம்பதிலிருந்து அறுபது சேனல்கள்.

    அண்டார்ட்டிகாவில் பனி கரைவது முதல், ஆப்பிரிக்கக் காட்டில் புலி குட்டி போடுவது வரை உட்கார்ந்த இடத்தில் இமை கொட்டாமல் பார்க்க முடிகிறது.

    'த்ரில்' என்பது ஒளிந்திருந்து எலிக்குட்டியானது பொந்தின் வழியாக தலைக்காட்டுவது போல் வெளியிட்ட காலம்போய், இன்று நயாகராவாக கொட்டிய வண்ண முள்ளது.

    விஷூவல் மீடியாவும் அந்த மாதிரி விஷயங்களைச் சார்ந்து இயங்கி தன்னை வளர்த்துக் கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் இதற்கு நடுவில் எழுத்தால் த்ரில்லை உருவாக்குவதும், ஒரு மனதை மிரட்டுவதும் எவ்வளவு கடினம்?

    அந்த கடினத்தை உணர்ந்து இருந்தாலும் முயன்று பார்ப்போமே என்று செய்தவைதான் இந்த சொர்ன ரேகை தொகுப்பில் உள்ள நாவல்கள்.

    இதில் சொர்ண ரேகைக்கு அது அச்சேறிக் கொண்டிருக்கும்போதே அதிர்ஷ்டம் அடித்தது.

    இதன் கருவை நான் மர்மதேசம் இயக்குனர் நாகா அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் கருவால் கவரப்பட்டு அதை இயக்குனர் சிகரம் திரு. K. பால சந்தரின் புதல்வர் திரு. கைலாசத்திடம் கூற, அவர் உடனேயே அதை டி.வி. தொடராக்க விரும்பி என்னை அணுகினார்.

    இப்பொழுது இதை நீங்கள் வாசித்துக் கொண் டிருக்கும்போது மர்மதேசம் வரிசையில் சொர்ண ரேகையை நீங்கள் கலக்கலான டி.வி. தொடராகவும் பார்க்கலாம்.

    மற்ற நாவல்களுக்கும் விரைவில் அந்த மாற்றம் ஏற்படலாம்.

    என்னைப் பொறுத்தவரை வித்யாசமான கரு, கதைக்களம்- சுவாரஸ்யக் குறைவு நேராதபடி சம்பவங்கள் என்று பார்த்துக்கொள்கிறேன்.

    இந்த நூலை எனது இனிய நண்பர் தொலைக்காட்சித் தொடர்களின் எதார்த்த மின்னல் மர்மதேசம் புகழ் திரு. நாகா அவர்களுக்கு சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    நன்றி.

    18.05.99                                             அன்புடன்,

    மதுரை-3 இந்திரா செளந்தர்ராஜன்

    1

    கையில் பெருவிரலுக்குப் பக்க விரலை அடைந்திருக்கின்ற ரேகைகள் நூறாயுசையுடையோர்களுக்கு என்றாகின்றன. அந்த ஆள்காட்டி விரலையடை யாதவைகளாகி நடுவில் அறுந்திருக்கிற ரேகைகளோடு கூடியவன் மரத்திலிருந்து விழுந்து மரிப்பான்.

    - கமல முனிவரின் ரேகை யோகம்

    சேலம் மத்திய சிறைச்சாலை.

    ஏற்காட்டுச் சாலையில், ஏராளமான பரப்பளவில் அசோக வாதநாராயன, வில்வ, புங்க என்ற மரக் கூட்டங்களுக்கு நடுவில் ஒன்பது மீட்டர் உயர தடுப்புச் சுவரோடு ஒரு பந்த் நடக்கும் ஊர் போல அமைதியாகக் கிடக்கிறது

    முகப்பு வாசலில் எல்லா சினிமாக்களிலும் காட்டப்படுகின்ற மாதிரி கட்டைத் துப்பாக்கி சகிதம் இரண்டு சென்ட்ரிகள்.

    சுவர்களுக்கு முன்னாலே சிக்கென்று வந்து தேய்ந்து நிற்கிறது. டாடா சுமோ ஒன்று.

    உள்ளிருந்து இறங்குகிறார் ஃபாதர் காபிரியேல்.

    உஜாலா வெளுப்பில் தாடி மீசை. ஆனாலும் நாவற் பழமாய் கண்கள். அழுந்த வாரிய தலையில் அமெரிக்க நாகரீகச் சாயல், திருச்சபை அனுமதியளித் திருக்கும் நீண்ட வெள்ளை அங்கி. கைகளில் சிகப்பு அட்டை மின்ன பைபிள்.

    காபிரியேலுடன் சேர்ந்து இறங்குகிறார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இருவருக்கும் இப்பொழுது மரியாதையுடன் சிறையின் கதவுகள் திறந்து வழிவிடு கின்றன.

    காபிரியேலால் உடன் நடக்கும் போலீஸ் அதிகாரி போல அத்தனை வேகமாய் நடக்க முடிக்கவில்லை. எண்பது வயது தள்ளாமை, காலை நன்றாகவே கவ்விப் பிடிக்கிறது. இதனால் இன்ஸ்பெக்டர் அவருக்காகச் சற்று நிதான நடைபோட வேண்டியிருக்கிறது.

    எதிர்ப்படுகிறது வார்டரின் அறை.

    உடளளே வார்டர் தனிலிங்கப் பெருமாள்.

    குட்மார்னிங் ஃபாதர் -என்று எழுந்து நின்று வரவேற்புக் கொடுக்கிறார். சரியான திமிர் பிடித்த மனிதர். முரட்டுக் கைதிகளின் கால், கை, மூட்டுக்களுக்கு ஆயில் போடுவதில் வித்தகர்.

    ஃபாதர் காபிரியேலும் பெருமாளைப் பார்த்து நடுங்கியபடி கைகூப்புகிறார். உடன் வந்த போலீஸ்காரர் ஒதுங்கிக்கொள்கிறார்.

    உட்காருங்க ஃபாதர் -எனும் பெருமாளை நடுங்கும் தலையோடு உட்கார்ந்தபடி பார்க்கிறார்.

    என்ன சாப்பிடறீங்க?

    ஒண்ணும் வேண்டாம் பெருமாள். ரொம்ப அவசரம்னு சொல்லி வரவழைச்சிருக்கீங்களே, என்ன விஷயம்?

    சொல்றேன் ஃபாதர். கொஞ்சம் உங்க உதவி தேவைப்படுது எங்க டிபார்ட்மென்ட்டுக்கு.

    என்னன்னு சொல்லாம உதவின்னா என்ன அர்த்தம் பெருமாள்?

    Enjoying the preview?
    Page 1 of 1