Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathai Paathiram
Kathai Paathiram
Kathai Paathiram
Ebook61 pages23 minutes

Kathai Paathiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுவாரசியமான சின்ன சின்ன ஜனரஞ்சகமான கதைகள். ஒவ்வொரு கதையிலும் ஒரு பிரச்சினை முடிச்சு இருக்கும். அது எப்படி அவிழ்கிறது என்பதே சுவாரசியம். பனிரெண்டு சிறுகதைகள் தொகுத்து படிப்பவரின் ஆர்வப்பசியை போக்கவே இந்த கதைப் பாத்திரம். எப்படி இந்த கதைகள் உருவாகின என்ற பின்னோட்ட கதை உருவான கதையும் ஒவ்வொரு கதையின் இறுதியிலும் உண்டு.

Languageதமிழ்
Release dateSep 4, 2023
ISBN6580168110062
Kathai Paathiram

Related to Kathai Paathiram

Related ebooks

Reviews for Kathai Paathiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathai Paathiram - Ravikumar Veerasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கதைப் பாத்திரம்

    (சிறுகதை தொகுப்பு)

    Kathai Paathiram

    (Sirukathai Thoguppu)

    Author:

    ரவிக்குமார் வீராசாமி

    Ravikumar Veerasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ravikumar-veerasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கதை உருவான கதை

    2. தவிப்பு

    3. பேட்டைத் துள்ளி

    4. மேஜர் - மைனர்

    5. ஆயிரத்தில் ஒருவன்

    6. உறவுகள்

    7. சரவெடி

    8. மூலதனம்

    9. கி.பி 2071

    10. ஊருக்குத்தான் உபதேசம்

    11. கிறுக்கு கோயிந்தன்

    12. பிம்பம்

    1. கதை உருவான கதை

    எப்படி கதை எழுதறீங்க? எங்கேயிருந்து இந்த ஐடியாவெல்லாம் கிடைக்குது? ஒரு கதை எழுத உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? இதுவெல்லாம் என் நண்பர்கள் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்விகள்.

    பொதுவாகவே நமக்கு தெரிந்த ஒரு விசயத்தை அடுத்தவருக்கு நன்றாகப் புரிந்து கொள்ளும்படியாகவும், ஜனரஞ்சகத்துடனும், ரசிக்கும்படியாகவும் எடுத்துச் சொல்வதோ அல்லது எழுதுவதோ என்பது ஒரு பெரிய கலை ஆகும். என்னுடைய வேலை நிமித்தமாக நான் நிறைய விசயங்களை மற்றவர்களுக்கு எழுத்து மூலமாக விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். எனது வாடிக்கையாளர்களுக்கும், மேலாளர்களுக்கும், என்னுடன் வேலை பார்க்கும் சக பணியாளர்களுக்கும் நான் சொல்ல வந்த செய்தியை நன்றாகப் புரியும்படியாகவும், முறையாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்ல வேண்டியது ரொம்ப அவசியமானது. இல்லையெனில் நம் அடிப்படை நோக்கம் நிறைவேறாது. ஆகவே அதனை ஒரு நகைச்சுவையுடன் சொல்ல வேண்டிய விதத்தில் நீட்டி, நெளித்து, குழைத்து சொன்னால்தான் அது சரியாக அடுத்தவரின் ரசிப்பிற்குப் போய் சேரும். மற்றவர்களும் அதை கேட்டுவிட்டு ரசிப்பார்கள், சிரிப்பார்கள். அப்படி இல்லையென்றால், ஓ அப்படியா? எனக் கொட்டாவிதான் விடுவார்கள். அப்படிப்பட்ட இந்த எழுத்துக் கலையை எனக்குள்ளே நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வக்கோளாறுதான் நான் ஏதாவது எழுத ஆரம்பித்ததற்கான உந்துதல்.

    கதை, கவிதை இரண்டுமே எழுதி இந்த கலைப் பாதையில் மூழ்கி பயணிக்க வேண்டுமென எனக்குள் ரொம்பவே பேராசை. ஆனால் பாருங்கள், இந்த கவிதை எழுதுவது என்பது கதையைக் காட்டிலும் கொஞ்சம் கடினமான வேலையே. கண்டிப்பாக தலைவலியே வந்துவிடும். பலசமயங்களில் நான் கவிதையென எதையாவது எழுதி நண்பர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. கதை எழுதுவது கவிதையைக் காட்டிலும் கொஞ்சம் சுலபமானது என்பது என்னுடைய தனிப்பட்டக் கருத்து. ஆனால் கதை எழுதவும் அடிப்படையாக ஒரு மூலக்கருத்தும் கதைக்களமும் வேண்டும்.

    எனக்கு அனுபவப்பட்ட வரையில் சிறுகதைகளில் பெரும்பாலும் ஒருமுடிச்சு இருக்கும். கடைசியில் அந்த முடிச்சு அவிழ்ந்து ஏதாவது ஒரு செய்தியோ கருத்தோ இருக்கும். நானும் அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களையும், நான் கேள்விப்பட்டறிந்த செய்திகளையும் மையக் கருத்தாகக் கொண்டு, அதில் கற்பனையையும் கலந்து கதை எழுத, இல்லையில்லை,

    Enjoying the preview?
    Page 1 of 1