Kanjan Kathaigal
()
About this ebook
இக்காலத்தில் 'சிக்கனம்' என்பது மிக அவசியம். ஆனால் இக்கதையில் வரும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு எவ்வளவு சிக்கனம் தேவை என்பதை புரியாமல், கஞ்சத்தனமாக இருந்து அவர்கள் வாழ்க்கையையும் வாழாமல், பிறரையும் வாழவிடாமல் வாழும் வாழ்க்கையை நகைச்சுவையாகவும், அழகாகவும் சொல்லப்பட்டிருக்கிறது இந்த கஞ்சன் கதைகளில்....
Related to Kanjan Kathaigal
Related ebooks
Nee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsThaimaiyil Kaniyum Iraimai Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Maranthean, Mannithean Rating: 0 out of 5 stars0 ratingsBindi Sabji Rating: 0 out of 5 stars0 ratingsயாருக்கு மாப்பிள்ளை யாரோ..? Rating: 0 out of 5 stars0 ratingsPuliyin Pasi Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsTheervu Rating: 5 out of 5 stars5/5Nandha Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsIlavu Kaatha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsViraivil Vibareetham Rating: 0 out of 5 stars0 ratingsTheengukkal Rating: 0 out of 5 stars0 ratingsUrimai Urangukirathu! Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Kadal Rating: 5 out of 5 stars5/5Kaduthasi Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vaasam Purappadum Penney Rating: 4 out of 5 stars4/5Poojaikku Vantha Malarey Vaa...! Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Oru Paarvai Paarthalenna? Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Pookkalile Kuzhaitha Aasai Karangalo! Rating: 3 out of 5 stars3/5Time To Murder Rating: 5 out of 5 stars5/5Yathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Ini Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanjan Kathaigal
0 ratings0 reviews
Book preview
Kanjan Kathaigal - Seevalai Ilamathi
http://www.pustaka.co.in
கஞ்சன் கதைகள்
சிறுகதைகள்
Kanjan Kathaigal
Sirukadhaigal
Author :
சீவலை இளமதி
Seevalai Ilamathi
For more books
https://www.pustaka.co.in/home/author/seevalai-ilamathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நீயே பெரிய கஞ்சன்
2. ஏன் முன்பே சொல்லவில்லை?
3. இதுவா சிக்கனம்?
4. நேர்மையானவன்!
5. நானா அரிச்சந்திரன்?
6. யார் பெரிய கஞ்சன்?
7. கடனுக்கு மட்டும் விற்காதே
8. கருமிகள் கூட்டணி
9. மலிவு விலை மாம்பழம்
10. கடவுளுக்குத் தந்த பங்கு
11. சிறந்த ஊர் எது?
12. கடன் வாங்கிப் பிச்சை போட்ட கருமி
13. கருமியும் பாடகனும்
14. வியாபாரி பெற்ற பிள்ளையா?
15. ஒலியும் நுகர்வும்
16. எங்கப்பாதான் பெரிய கஞ்சன்
17. கஞ்சக் கணவனும் முட்டாள் மனைவியும்
18 நல்லவேளை தப்பினேன்!
19. மாமியார் வீட்டை விட்டு நகராத மருமகன்
20. அவர் சொல்வதும் சரிதான்!
21. தங்கப் பூனை
22. இலை நிறையச் சோறு
23. ஒரு ரூபாய்ப் பசு
24. மனிதனும் பணமும்
1. நீயே பெரிய கஞ்சன்
மார்த்தாண்டபுரம் என்ற ஊரில் திப்பையா என்று ஒரு கஞ்சன் இருந்தான். எச்சில் கையால் காக்கையை விரட்டினால் கையிலுள்ள பருக்கை கீழே சிந்தி காக்கைக்கு உணவாகிவிடுமே என்று அஞ்சும் அளவுக்கு மகாக் கருமி அவன்.
கையில் விசிறியை வைத்துக்கொண்டு, எவ்வளவுதான் புழுங்கினாலும், விசிறியால் விசிறி விட்டுக் கொள்ளமாட்டான் திப்பையா. விசிறினால், விசிறி சீக்கிரம் பிய்ந்து விடுமே என்ற அச்சமே அதற்குக் காரணம்!
அவன் மிகவும் வசதியுள்ளவனாக இருந்தாலும் தன் வீட்டில் மிகவும் கருமித்தனமாகவே நடந்து வந்தான். காலணிகள் வாங்கிவைத்திருந்தாலும் அவற்றைக் காலில் போட்டுக் கொண்டு நடந்தால் தேய்ந்து விடுமே என்று அஞ்சி கையிலே பிடித்துக் கொண்டுதான் நடப்பான்,
வாழைப்பழம் வாங்கினால் அதன் பழத்தைத் தன் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, தோலை உரித்து அதன் உட்புறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சதைப் பற்றைப் பிய்த்துத்தான் தின்பான்.
வீட்டில் குழம்பு வைத்தால், எண்ணெய் விட்டுத் தாளிக்கக்கூட விடமாட்டான்! எண்ணெய் விட்டுத் தாளிப்பது அநாவசியச் செலவு என்பது அவனுடைய வாதம்.
அவன் வீட்டில் ஒரு பசு மாடு இருந்தது. அதன் கோமியத்தை நல்ல காரியங்களின் போது வீடுகளில் தெளிக்க உள்ளூர்வாசிகள் விரும்பி வந்து கேட்டால், ஒரு செம்பு கோமியம் 50 காசு என்று அதற்கும் விலை வைத்து விற்று வந்தான்!
அவனுடைய கருமித்தனம் அந்த ஊரில் மட்டுமின்றி அக்கம்பக்கத்து ஊர்களிலும் பரவிப் பிரபலமாகியிருந்தது.
மார்தாண்டபுரத்திற்கு பத்துக்கல் தொலைவில் மாசானபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் இன்னொரு கஞ்சன் இருந்தான். அவன் பெயர் சுப்பையா.
திப்பையா கஞ்சன் என்றால் சுப்பையா வடிகட்டிய கஞ்சன்!
சுப்பையாவுக்குப் புகைபிடிப்பதில் மிகுந்த விருப்பம். ஆனால் காசு கொடுத்துப் பீடி சிகரெட் வாங்கிப் புகைக்க அவனுடைய கஞ்சத்தனம் இடங்கொடுப்பதில்லை. அதனால் அவனுக்குப் புகைபிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் உள்ளூர் ஆலமரத்தடிக்குப் போய் உட்கார்ந்து விடுவான்.
கிராமத்தில் வேலையில்லாத விவசாயிகள் ஓய்வாக அமர்ந்து வம்பளப்பது அந்த ஆலமரத்தடி மேடையில்தான். அப்பொழுது அவர்களில் சிலர் சுருட்டுப் புகைப்பது வழக்கம். சுப்பையா அவர்களுக்கு நடுவில் போய் அமர்ந்து கொண்டு விடுவான். அந்த புகைக்கு நடுவே இருந்து கொண்டு ‘எனக்கு இதுவே போதும்’ என்று மகிழ்வான்.
அதனால் அவனுக்கு ‘புகை விழுங்கிக் கஞ்சன்’ என்ற பட்டப் பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்கள் மாசானபுரம் மக்கள்.
அவனுடைய புகழும் அக்கம் பக்கத்து ஊரிலெல்லாம் பரவியது. சுப்பையாவின் கருமித்தனத்தைப்பற்றிப் பேசிக் கேலி செய்யாத மக்கள் அந்த வட்டாரத்திலேயே இல்லை என்றாலும், சுப்பையாவுக்கு ஒரு குறை இருந்து வந்தது.
கருமித்தனத்தில் தன்னையும் மிஞ்சியவன் மார்த்தாண்டபுரம் திப்பையா என்று சிலர் கூறியதைக் கேட்ட போது அவனுக்கு வியப்பாக இருந்தது. நம்மைவிட ஒருவன் கஞ்சனாக இருக்க முடியுமா என்று அவனுக்குச் சந்தேகமும் ஏற்பட்டது.
அதை நேரிலேயே போய் பாாத்துவிட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்த சுப்பையா ஒரு நாள் காலையில் புறப்பட்டு மார்த்தாண்டபுரத்திற்குக் கால்நடையாகவே நடந்து சென்றான்.
உச்சிப் பொழுதில் மார்த்தாண்டபுரத்தை அடைந்த சுப்பையா, அந்த ஊரில் இருந்த தன் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டு இருட்டுகிற வேளையில் திப்பையாவின் வீட்டுக்குப் போனான்.
மாசானபுரம் சுப்பையா வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட திப்பையா, அவனை வீட்டுக்கு வெளியே வந்து ஆவலோடு வரவேற்றான். அவனும் சுப்பையாவின் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால், அவனோடு பேசி அவன் எப்படியெல்லாம் கருமித்தனத்தைக் கடைப்பிடித்து வருகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான்.
அதனால் சுப்பையாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான் திப்பையா.
திப்பையாவின் வீட்டில் பல அறைகள் இருந்தும், ஓர் அகல் விளக்கு மட்டும்தான் எரிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு லாந்தர் விளக்கு இருந்தாலும் அதைக் கொளுத்தாமல் விட்டிருந்தான் திப்பையா.
அதைப் பார்த்து சிரித்தான் சுப்பையா. அந்த அகல் விளக்கின் அருகில் போய் அமர்ந்த திப்பையா, வாங்க சுப்பையா! இப்படி உட்காருங்க
என்றான்.
சுப்பையாவும் அவனருகில் போய் அமர்ந்து கொண்டான். பின்னர் திப்பையாவை விளக்கு வெளிச்சத்தில் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டுப் பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கை ‘பூ’ என்று ஊதி அணைத்தான், சுப்பையா.
அடடே, விளக்கை ஏன் அணைத்தீர்கள்?
என்று கேட்டான் திப்பையா.
நாம் ஒருவர் முகத்தை ஒருவர் விளக்கு வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்துக்கொண்டு விட்டோம். இனிமேல் பேசிக் கொண்டுதானே இருக்கப் போகிறோம்? அப்பொழுது விளக்கு எரிவது வீண் செலவுதானே! அதனால்தான் அணைத்தேன்!
என்றான் சுப்பையா!
‘அட, இந்த யோசனை நமக்குத் தெரியாமல் போய் விட்டதே’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் திப்பையா.
பின்னர், அந்த இரண்டு கஞ்சன்களும் சிக்கனமாக வாழ்வது எப்படி என்பதைப்பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது திப்பையாவின் மனைவி சமையலறையிலிருந்து, சாப்பாடு தயாராகிவிட்டது. சாப்பிட வருகிறீர்களா? என்று குரல் கொடுத்தாள்.
உடனே திப்பையா, என்ன சுப்பையா! நான் விளக்கை ஏற்றட்டுமா
என்றான்.
கொஞ்சம் பொறுங்கள். நான் சட்டையைப் போட்டுக் கொள்கிறேன். அதன் பின்னர் விளக்கை ஏற்றலாம்
என்று பதறினான் சுப்பையா.
வரும்போது சட்டையை உடம்பில்தானே போட்டிருந்தீர்கள் என்று கேட்டான் திப்பையா.
வரும்போது போட்டுக் கொண்டுதான் வந்தேன். நாம் பேச உட்கார்ந்ததும், இருட்டில்தானே பேசப் போகிறோம். அது எதற்கு அழுக்காக வேண்டும் என்று கழற்றி மடித்து வைத்துவிட்டேன். அதை நான் போட்டுக் கொண்டவுடன் சொல்கிறேன். அதன் பின்னர் நீங்கள் விளக்கை ஏற்றலாம்!
என்றான் சுப்பையா.
அதைக் கேட்ட திப்பையா அதிர்த்து போய்விட்டான்.
அப்படியே சுப்பையாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆகா! உங்களை மாதிரி ஒரு சிக்கனமான அறிவாளியை இதுவரை நான் பார்த்ததே இல்லை! என்னைவிட நீங்கள்தான் உலக மகா கஞ்சன்! உங்கள் கஞ்சத்தனத்திற்கு முன்னால் என் கஞ்சத்தனம் உறைபோடக்கூட முடியாது" என்றான் திப்பையா.
2. ஏன் முன்பே சொல்லவில்லை?
முத்துப்பேட்டை என்ற ஊரில் மூக்கன் என்று ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மகனும் இருந்தான். கருமி மூக்கனுக்குப் போதிய வசதிகள் இருந்தும், வாய்ப்புகள் இருந்தும் மன அமைதியே இல்லை.
காரணம், தன் மகனும் தன்னைப் போலக் கருமியாக இல்லையே என்ற கவலை அவனை வாட்டிக் கொண்டிருந்ததுதான். அதற்காக எப்பொழுதும்