Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andhapura Semparuthi..!!
Andhapura Semparuthi..!!
Andhapura Semparuthi..!!
Ebook76 pages31 minutes

Andhapura Semparuthi..!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எதிர் வீட்டு உறவை, உறவாக நினைக்கும் ஒருவரின் கதையே அந்தபுர செம்பருத்தி

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580147107403
Andhapura Semparuthi..!!

Read more from Nirutee

Related to Andhapura Semparuthi..!!

Related ebooks

Reviews for Andhapura Semparuthi..!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andhapura Semparuthi..!! - Nirutee

    https://www.pustaka.co.in

    அந்தப்புர செம்பருத்தி..!!

    Andhapura Semparuthi..!!

    Author:

    நிருதி

    Nirutee

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nirutee

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    தலைக்கேறிய போதையில், அசந்து தூங்கிவிட்ட நான் மீண்டும் கண் விழித்த போது அந்த அறை இருளில் மூழ்கியிருந்தது. கண் விழித்ததும் முதலில் நான் எங்கிருக்கிறேன் எனப் புரியாமல் சிறிது குழம்பினேன். சில நொடிகளுக்குப் பின் மெல்ல மெல்ல என் உணர்வு மீண்டது. சுய நினைவு வந்ததும் சோபாவை விட்டு எழுந்து விட்டேன்....!!

    இது விழிமலர் வீடு. அவளை ஆஸ்பத்ரியிலிரிந்து கூட்டி வந்து வீட்டில் விட்டதும் களைப்பில் சோபாவில் சாய்ந்தவன் அப்படியே படுத்து தூங்கிப்போய் விட்டேன்....!!

    மணி என்ன இப்போது? என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். இரவு பன்னிரண்டு நாற்பது. ஹாலில் லைட் எரிந்து கொண்டிருந்தது. நான் சோபாவை விட்டு எழுந்து போய் பெட்ரூமை எட்டி பார்த்தேன். மெல்லிய விளக்கொளி வெளிச்சத்தில், தன் குழந்தையை அணைத்துப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் விழிமலர்…!! அவளை எழுப்பலாம் என நினைத்து பெட்ரூமில் நுழைந்து அவள் அருகில் போனேன். அவளோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அதைப் பார்த்து விட்டு அவளை எழுப்ப மனமின்றி திரும்பி விட்டேன்.

    பாத்ரூம் போய் வாய் கொப்பளித்து முகம் கழுவி வந்து சோபாவில் உட்கார்ந்தேன். அடித்த சரக்கின் போதை முழுவதுமாகத் தெளியாமல் லேசாக தலை வலித்தது. கண்களை மூடிக் கொண்டு நெற்றியை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தேன்.

    முழிச்சிட்டீங்களா?என குரல் கேட்டு கண் திறந்தேன். விழிமலர் எழுந்து வந்திருந்தாள். தூக்கம் கலைந்த முகத்துடன் என்னைப் பார்த்தாள். லைட் வெளிச்சத்தில் அவள் முகம் பளிச்சென்று இருந்தது. படுத்து எழுந்ததில் தலைமுடி கலைந்திருந்தது. அது அவளின் அழகை இன்னும் கூட்டிக் காட்டியது.

    ம்ம்நிமிர்ந்து அமர்ந்தபடி அவளைப் பார்த்து தலையை ஆட்டினேன்.

    நானும் நல்லா தூங்கிட்டேன்மெல்லிய புன்னகையுடன் என்னை நோக்கி வந்தாள்.

    பையனுக்கு எப்படி இருக்கு இப்போ...?

    ம்ம்... பரவால்ல. மருந்து குடிச்சிட்டு நல்லா தூங்கறான். சாப்பிடறீங்களா?

    இல்ல வேண்டாம். நான் சாப்பிட்டேன்

    எப்ப சாப்பிட்டீங்க?

    சாப்பிட்டு தான் ஆஸ்பத்ரிக்கே வந்தேன்

    சரி... இப்ப கொஞ்சம் சாப்பிடறது?

    இல்ல பரவால்ல. நீங்க சாப்டிங்களா?

    ஓஓ... சாப்பிட்டேன்என்று மெல்ல நடந்து முந்தானையை சரி செய்தபடி என்னருகே வந்து சோபாவில் சாய்ந்தாள். ஓவர் தண்ணியோ?என்று என்னைப் பார்த்து மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.

    ஏன்?

    சோபால சாஞ்சதுமே தூங்கிட்டிங்க?

    ம்ம்... ஆமா. என்னையறியாம தூக்கம் வந்துருச்சு. இப்ப லேசா தலவலி. வீட்டுக்கு போய் நல்லா தூங்கணும் என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டேன்.

    தலவலியா? ஒரு காபி போட்டு தரட்டுமா? என அக்கறை யோடு கேட்டாள்.

    இல்ல காபி வேண்டாம். சரக்கடிச்சா காபி ஒத்துக்காது

    ஓஓ... அப்படி ஒண்ணு இருக்கா? எனச் சிரித்தாள்...!!

    இந்த விழிமலர்... என் தூரத்து உறவினள். ஆனால் குடியிருப்பது என் பக்கத்து வீட்டில் தான். இரண்டு பையன்கள் அவளுக்கு. மூத்தவன் அம்மா வீட்டில் இருக்கிறான். அவனுக்கு பத்து வயது. இளையவனுக்கு எட்டு வயது. இப்போது அவனுக்குத் தான் உடம்பு சரியில்லை. ஆஸ்பத்ரி போய் வந்தவள் இன்னும் அதே புடவையில்தான் இருந்தாள்.

    ஆறடி உயரமிருக்கும் வழிமலர்... நிச்சயமாக அழகிதான். நல்ல சிவந்த நிறம். கோதுமை நிறம் என்றுகூடச் சொல்லலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1