Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sinthiya Ratham Inthiya Ratham
Sinthiya Ratham Inthiya Ratham
Sinthiya Ratham Inthiya Ratham
Ebook98 pages48 minutes

Sinthiya Ratham Inthiya Ratham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sinthiya Ratham Inthiya Ratham

Read more from Rajeshkumar

Related to Sinthiya Ratham Inthiya Ratham

Related ebooks

Related categories

Reviews for Sinthiya Ratham Inthiya Ratham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sinthiya Ratham Inthiya Ratham - Rajeshkumar

    21

    1

    செங்குத்துப்பாறை மலையடிவாரம். இருட்டில் கரைந்து போயிருந்தது. வானத்தில் உடம்பு தேய்ந்து போயிருந்த நோயாளி நிலா ஒரு பெரிய மேகத்துக்குப் பின்னால் மூச்சு திணறிக் கொண்டிருக்க - நட்சத்திரங்கள் அதை கண்டு கொள்ளாமல் கண் சிமிட்டின. அடித்த குளிர் காற்றில் மரங்கள் ஜோராய் கிளைகளை ஆட்டியது. சுற்றிலும் ஒரு பொட்டு வெளிச்சமில்லை.

    ஜோதி பாறைகளின் மேல் தாவி ஏறிக் கொண்டிருந்தாள். சாயம் போன ஸ்டோன்வாஷ் பேண்ட், சர்ட், பரட்டைத்தலை, தாடையில் முள் முள்ளாய் தாடி, உடம்பில் சூடான ரத்தம், பாறைகளைத் தாவி ஏறுவதில் ஒரு துள்ளல், இருபத்தேழு வயது ஜோதி ஒரு வெடிகுண்டுக்கு சமமானவள். பதினான்காவது வயதிலேயே பழுத்து விட்டவன். ட்யூஷன் படிக்கப் போன இளம் மரியபுஷ்பம் டீச்சரையே கற்பழிக்க முயற்சி செய்து போலீசாரால் போர்டு ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டு... இருபது வயதில் ஏராளமான சூராதத்தோடும் கோபத்தோடும் விடுதலையாகி, வெளியே வந்து பெற்றவர்கள் வீட்டில் சேர்க்கமாட்டேன் என்று சொல்லி விட்டதால் - ரௌத்காரமாய் சத்தம் போட்டு விட்டு - வடநாட்டுப் பக்கம் போய் - கணிசமான கெட்டப் பழக்கங்களோடு திரும்பவும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டான்.

    ஜோதி ஒரு பாறையின் முகட்டுக்கு ஜாக்கிரதை பாய் போய் அதன் இடுக்கில் இறங்கினான்.

    உள்ளே டார்ச் வெளிச்சம் தெரிந்தது.

    ஓரு குரல் மேலே உயர்ந்து வந்தது.

    யார்...?

    நான் ஜோதி…...

    மௌனம்.

    ஜோதி பாறைச் சரிவில் இறங்கி மணலில் குதித்தான் தீப்பந்த வெளிச்சம் அப்போது பிரகாசமாய் அடித்தது. பக்கத்தில் ஒரு ஓடை சலசலவென்று பேசியது.

    தீப்பந்த வெளிச்சத்தில் நான்கைந்து இளைஞர்கள் தெரிந்தார்கள், எல்லோருமே முகத்தில் மூர்க்கம் காட்டும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள். சிவப்பு உறைந்து போன விழிகள். மழிக்கப்படாத தாடைகள் இடுப்பு பெல்ட்களில் பதுங்கியிருந்த பிஸ்டல்கள்.

    என்ன ஜோதி...? ஒருவன் கேட்டான்..."

    க்ரீன் சிக்னல்...

    புறப்படலாமா...?

    ம்... எல்லாமே நமக்கு சாதகமா இருக்கு...

    ஒரு நிமிஷம்! ஹெட் குவார்ட்டர்ஸை கான்டாக்ட் பண்ணி பேசிடலாம். கடைசி நிமிஷ மாறுதல்கள் ஏதாவது இருக்கலாம்...

    சொன்னவன் பாறையின் குடைவுக்குப் போய் அதில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த வயர்லெஸ்ஸை உயிர்க்கு கொண்டு வந்தான். பீங்க்... பீங்க்" என்ற சத்தத்தை தொடர்ந்து அவன் பேசினான்.

    ரத்தத்துளிகள் - எண் - ஐந்து பேசுகிறோம்..."

    ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது?

    தயார் நிலையில்...

    அருள்மிகு சங்கமேஸ்வரரின் நூற்றி முப்பத்தியிரண்டு அடி. கோபுரம்... நாளை காலை ஆறு மணிக்கு தரைமட்டமாகி சாய வேண்டும்...

    சாயும்...

    பொருத்தப்போகிற டைனடைஸ் எந்த வகை...?"

    ஸ்மேஷ்... ஃபார்ட்டி ஸெவன்

    ரிமோட் கண்ட்ரோல்?

    ஆமாம்…...

    ரேன்ஞ்ச...?

    இருநூறு மீட்டர்……"

    "கோபுரம் தரைமட்டமான செய்தி இந்த தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்க வேண்டும்... இந்துக்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் செய்து

    கொண்டிருக்கும்போதே முத்து நகரில் உள்ள மசூதி உடைபட வேண்டும்...

    திட்டத்தின் ஒவ்வொரு படியையும் வெற்றிகரமாய் தாண்டுவோம்.

    மகிழ்ச்சியான செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்... வயர்லெஸ் அணைந்தது.

    ஜோதி கேட்டான்.

    என்ன ஹாஜா...?

    ஹெட் குவார்ட்டர்ஸ் தலை அசைத்து அனுமதி கொடுத்தாச்சு...

    கிளம்பலாமா...?

    ம்……

    "டைனமைட் சமாச்சாரங்கள் நிரம்பிய - கருநீல காற்பாஸ் பைகளை சிரமமாய் எடுத்து முதுகோடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்கள். மற்றவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு - பாறையின் சிப்புகளில் கால் பதித்து மேலே ஏறி வெளியே வந்தார்கள்.

    குளிர்காற்று தாக்கியது.

    நான்கு திசைகளிலும் இருட்டு படுதா.

    தொலைவில் சங்கமேஸ்வர கோயிலின் கோபுர உச்சியும் - அதில் எரிந்து கொண்டிருந்த நீலவிளக்கும் தெரிந்தது.

    அந்த அழகான கோபுரம் நாளைக்கு விடியற்காலை இல்லை ஜோதி சிரித்துக் கொண்டே ஒரு பாறையைத் தாவினான்.

    ஹாஜா கேட்டான்.

    அந்தக் கோபுரம் கட்டி எத்தனை வருஷம் இருக்கும்...?

    எழுநூறு வருஷம்... செண்பக மாறவர்மன் வைஷ்ணவ மதத்திலிருந்து சைவ மதத்துக்கு கட்சி மாறியதும் கட்டின கோபுரம் அது...?

    "கோபுரம் சிதிலமாக ரெண்டு டைனமைட் போதுமா...?

    போதும்...

    கிராமம் அடிவாரத்தில் - சொற்ப விளக்குகளோடு தூங்கிக் கொண் டிருக்க - ஜோதியும் ஹாஜாவும் மளமளவென்று பாறைகளில் சரிந்து - கீழே வந்தார்கள்.

    டயம் எவ்வளவு…...?

    ஒண்ணு பத்து...

    அடிவாரத்தின் கரடுமுரடான இருட்டுப் பாதையில் நடந்து -பனையோலைகள் வேய்ந்த அந்த வீட்டுக்கு முன்பாய் வந்து நின்றார்கள்.

    ஹாஜா கதவைத் தட்டினான்.

    டொக்... டொக்...

    "உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் குரல்.

    யாரது...?

    நான்தான்... இசக்கி!

    கதவு பளிச்சென்று திறந்தது.

    மாநிறமாய், அழகாய் கொடி மாதிரியான உடலமைப்போடு - இசக்கி பற்களைக் காட்டினாள்.

    கரெக்டா வந்துட்டீங்களே...

    சீக்கிரமா வந்து வைக்கப் போரை அள்ளிப் போடு…...

    இசக்கி வெளியே வந்து - இருட்டில் சுற்றும் முற்றும் பார்த்தாள். "ஹாஜாண்ணே! உங்க

    Enjoying the preview?
    Page 1 of 1