Anthapura Raagangal
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsSalanam Rating: 0 out of 5 stars0 ratingsUravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsArali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Nila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Anuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5
Related to Anthapura Raagangal
Related ebooks
Arali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsSonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Saathaga Paravai Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Manasu Rating: 5 out of 5 stars5/5Paruva Vayasum... Paal Manasum... Rating: 5 out of 5 stars5/5Nadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsUthama Thirudi Rating: 5 out of 5 stars5/5Thottil Sugam Rating: 5 out of 5 stars5/5Nee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5Naalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramanan Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Pathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsMaaruthalukku Oru Hemalatha Rating: 0 out of 5 stars0 ratingsThirisangu Sorgam Rating: 5 out of 5 stars5/5Thisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Paravai Rating: 5 out of 5 stars5/5Manakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Kanavu Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsVelli Kanavu Rating: 5 out of 5 stars5/5Kanavu Kanavan Rating: 3 out of 5 stars3/5Agini Ambugal Rating: 5 out of 5 stars5/5Ariyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Anthapura Raagangal
2 ratings0 reviews
Book preview
Anthapura Raagangal - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
அந்தப்புர ராகங்கள்
Anthapura Raagangal
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
நூற்றியோராவது தடவையாக, கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்கிறாள் ஜானகி.
மணி எட்டரை.
மழைக்கால இருட்டு. ஏற்கனவே இருள் கவிழ்ந்திருந்த கூடத்தை-இன்னமும் ஏகமாய்க் கறுப்பாக்கிக் காட்டுகிறது.
முற்றம் தாழ்வாரத்தோடு கூடிய வீடு. கும்பகோணம், மாயவரம் பக்கங்களில் அனேகமாய்-இது போன்ற வீடுகள்தாம்.
மழை பெய்தால் கரண்ட் போய்விடும். அதற்காகவே, சாயந்திர நேரங்களில் சிரமத்தைப் பார்க்காமல், சிம்னி விளக்குகளைத் துடைத்து ஏற்றி விடுவாள் ஜானகி.
அவள் சற்று மறந்தாலும்-கூடத்து மூலையில், குளிருக்காக ஸ்வெட்டரும், மழுங்க சிரைத்த தலையில் பழுப்பேறிய நார்மடியுமாய், கால்களை உடம்போடு மடக்கியபடி உட்கார்ந்திருக்கும் கிழவி லக்ஷம், மறக்க மாட்டாள்.
மருமகளைத் தொணப்பி எடுத்து விடுவாள்.
பொசுக்குனு கரண்ட்டு போயிடும்டீ, ஜானகீ. விளக்கை ஏத்தி வையேன்...நாலரை மணிக்கே ஏத்தினா ஒரு கலம் எண்ணெயா செலவழிஞ்சுடப் போறது? இதுக்கே இத்தனை கணக்கு பார்க்கிறேளேடியம்மா! இன்னும் அந்த நாளாயிருந்தா, மாக்கல் விளக்குதான்; இலுப்பெண்ணெய ஆட்டி வச்சுண்டு... அடியம்மா! பத்து வயசுல கல்யாணம் நேக்கு. ஒம்பது கஜத்தை, ஆறுகஜமா சுத்திண்டு வளைய வருவேன். புடவையெல்லாம் இலுப்பெண்ணெய் நாத்தம் தான்! சுந்தரத்தோட அப்பா திட்டுவார், முதல்லே, புடவைய எண்ணெய் கறை போக துவைச்சு கட்டிண்டு வாடியின்னு... புடவைன்ன உடனே ஞாபகம் வர்றது, இந்தப் பொண்ணு சியாமளி, நல்ல புடவைய அவுத்து, பந்தாட்டம் சுருட்டி, வெந்நீர் ரூம்லே வச்சிருந்தா. எலி கடிச்சு வைக்க போறது. நான் சொன்னா கேட்கறதில்லைன்னு வச்சிண்டிருக்குகள்... நீயாவது கேட்கப்படாதோ...?
கிழவி, சிம்னி விளக்கைப் பற்றிப்பேச ஆரம்பித்துத் தனது இறந்த காலத்துக்கு ஒருமுறை போய், மறுபடியும் நிகழ்காலத்திய வாழ்க்கையில் தனக்குள்ள சம்பந்தம் இன்னமும் போகவில்லை என்பதைக் காட்டிக் கொண்டு தான் முடிப்பாள்.
அவள் தொண தொணப்பு தாளாமல் ஜானகிதான் பம்பரமாய்ச் சுற்றி வருவாள்.
சியாமளிக்கும், கௌரிக்கும், பிரபாகரனுக்கும் பாட்டியின் கேள்விகளும், அம்மாவின் பணிவான பதில்களும் கேலிக்குரிய விஷயமாக இருக்கும்.
இருந்தாலும் சொல்ல முடியாது...தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.
கொஞ்சம் பலமாய் சிரிப்பு ஒலித்தாலும், சுந்தரராமனுக்கு முகம் சிவந்து விடும்.
ஹும்!
இப்படி உறுமுவார்...
ஏய்... யாரங்கே?
என்னப்பா?
அங்கே என்ன கெக்கே பிக்கேன்னு இளிப்பு?
அது வந்துப்பா...இந்தப் பிரபு இல்லேப்பா. அவன் வந்து...
வந்தாவது போயாவது...டேய் பிரபாகரா...
என்னப்பா?
உனக்கு வயசென்ன ஆறது?
..........
சொல்லித் தொலையேன்...வாயில என்ன அடைச்சிருக்கு?
இருபது...
இருபது வயசுக்கு, பொம்மனாட்டிகளோட உட்கார்ந்து என்னடா அரட்டை...மாடிக்குப் போய் படி...
அவன், விட்டால் போதும் என்பது போல மாடிக்கு ஓடுவான்.
அடுத்த உறுமலுக்கு-சியாமளியோ, கெளரியோ அவரெதிரில், சில சமயங்களில், வாங்குகிற மண்டகப் படியை இருவருமாய்ச் சேர்த்தே வாங்கிக் கட்டிக் கொள்வோம் என்கிற நல்லெண்ணத்துடன் இரண்டு பேருமே, அவரெதிரில் போய் நிற்பார்கள்.
கெளரியோடு, சியாமளியும் போய் நின்றால்-கெளரிக்கு விழுகிற வசவு குறையும்.
அதற்குக் காரணமுண்டு.
சியாமளிக்கு வயசு இருபத்தியாறு... இதோ, இந்த ஆவணி வந்தால், இருபத்தியேழு பிறக்கப் போகிறது.
பார்த்தால் தெரியாது. இருபத்தியிரண்டுக்குமேல் மதிக்க முடியாது.
சியாமளி சாயல் எல்லாம் ஜானகியை உரித்து வைத்திருந்தாள். நிறத்தில் மட்டும் அப்பாவைப் போல பளபளக்கும் எண்ணெய்க் கறுப்பு.
கௌரியும், பிரபாகரனும்-கூடத்து மூலையில் மரவட்டை மாதிரி சுருண்டு கிடக்கும் பாட்டியைப் போல நல்ல சிவப்பு. அதிலும் கெளரி-மஞ்சள் கலந்த சிவப்பு!
ஆரம்ப காலத்தில்-அதாவது, சியாமளி இவர்களுக்குச் சீமந்த புத்திரியாகப் பிறந்த காலத்தில், இந்த நிற பேதங்களைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட பிரச்சனையே அவர்களுள் எழுந்ததில்லை.
பார்க்கப் போனால்-லக்ஷம் பெருமை பட்டுக் கொண்டாள்.
குழந்தை அப்படியே அவ அப்பா நிறத்தை உரிச்சு வச்சிருக்கு. சுந்தரம்-அவனோட அப்பாவை மாதிரி... நானும், அவருமா சேர்ந்து நின்னா எல்லாரும், எள்ளையும் பச்சரிசியையும் கலந்து வச்ச மாதிரி இருக்குன்னு சொல்லுவா.
சியாமளிக்குப் பிறகு ஆறு வருஷங்களுக்கு அந்த வீட்டில் குழந்தை இல்லை.
அப்புறம்தான் பிரபாகரன். அவனுக்கும், கௌரிக்குமே நாலு வயசு வித்தியாசம்.
கெளரியை, ஜானகி வயிற்றில் சுமந்தபோதே பாட்டி, புலம்பத் தொடங்கி விட்டாள்.
வயசுக்கு வந்த பொண்ணை வீட்டுல வச்சுண்டு, நீங்களே-சிறுசுகளாட்டமா இருந்தா எப்படி? ஆம்பிளைகளுக்குப் பொறுப்பு தெரியாதுடி. நாமதான் நாலையும் யோசிக்கணும். பெரிசுக்கு விவரம் தெரியறதுக்கு முன்னே, மாப்பிள்ளையைத் தேடச் சொல்லாம, இப்படி முப்பது வயசுக்கு மூணாவதைச் சுமந்துண்டு வந்து நிக்கறியே...
லக்ஷத்துக்கு, தன் பிள்ளையைச் சொல்ல மனசு வராது. ஜானகி, திருமணமாகி இரண்டு வருஷம் வரையில், ஒண்டியாக நின்றதற்கும் இவளைத்தான் குற்றம் சாட்டினாள். இன்று, மூன்றாவதைச் சுமந்த போதும், இவள் மீதுதான் பழியைப் போட்டாள்.
ஆம்பிளைகளுக்கு இதெல்லாம் தோணாதுடி... நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்...
ஜாக்கிரதை என்ன ஜாக்கிரதை?
இந்தக் காலம் மாதிரி, தடுக்கி விழுகிற இடமெல்லாம், விளம்பரமா ஒட்டியிருந்தார்கள்?
பதினாறு வருஷங்களுக்கு முன்பு-இந்த கெளரி வயிற்றில் வந்த பின்-ஜானகி, இதைக் கரைப்பதற்காக ஏதேதோ மாத்திரைகளைச் சாப்பிட்டாள்.
சுந்தரராமனும், பெண்டாட்டியைக் கோவிலுக்கு அழைத்துப் போவதாய்ச் சொல்லி-மாதவிடாய் தாமதமா... அணுகுவீர் '......' கிளினிக்' - இப்படி போர்டு மாட்டியிருந்த மருத்துவர்களிடமெல்லாம் அழைத்துப் போனார்.
எல்லா சக்தியையும் மீறி-தெய்வ சக்தி என்று ஒன்று இருக்கிறதல்லவா?
அதற்கு ஒரு எடுத்துக் காட்டுதான் கெளரி.
குழந்தை சொர்ண விக்கிரகம் மாதிரி இருக்கா.
லக்ஷம் இப்படிச் சொன்னபோது, ஜானகிக்குத் துக்கம் பொங்கிப் பொங்கி வந்தது.
'இந்தக் குழந்தையை அழிக்கவா அத்தனை மருந்து தின்னேன்? இதைத் துரத்தவா, அத்தனை சுவாமிகள் கிட்டயும் பிரார்த்தனைப் பண்ணினேன்... கடவுளே!'
கெளரி வளர வளரத்தான் பிரச்னையும் வளர்ந்தது.
சியாமளியை நேருக்கு நேர் பார்க்க லஜ்ஜையுற்ற சுந்தரம், ஒன்றுமில்லாத அற்ப விஷயத்துக்கெல்லாம் கெளரியை அடிக்கத் தொடங்கினார்.
சியாமளிக்கு அந்த வீட்டில் சலுகைகளும் உண்டு. கண்டிப்பும் உண்டு.
ஆனாலும், சுந்தரம், அவளிடம் பல விஷயங்களில் தோற்றிருக்கிறார்.
இந்த க்ஷணம் எனக்கு, அடுத்த வீட்டு ராகினிக்கு வாங்கியிருக்கிற மாதிரி பட்டுப் பாவாடை வேணும்...
இப்ப உனக்கு வாங்கினா, சின்னவளுக்குமில்லே வாங்கியாகணும்.
அதைப்பத்தி எனக்குத் தெரியாது... எனக்கு வேணும்...
அவள் மிக அழுத்தமாய், பிடிவாதமாய்க் கூறுவாள்...
இதே பிடிவாதம்தான் அவளை-நாலு வருஷங்களாய் விதவிதமான கல்லூரிகளில் விதவிதமான பாடத்தை எடுத்து, எதிலும் தேர்ச்சி பெறாது நிற்கச் செய்தது.
இந்த மெத்தனம் தான்-இப்பொழுது கொஞ்ச நாட்களாய் டைப், ஷார்ட் ஹேண்ட் வகுப்புக்கு அவளை நடைபோட வைத்திருக்கிறது.
இதோ-
நடுப்பகல் அவள் வகுப்புக்குக் கிளம்பும் போதே-சுந்தரம் சொன்னார்:-
மழை வரும் போல இருக்கு... குடைய எடுத்துண்டு போ...
ப்சு!
அவள் அலட்சியமாய் சூள் கொட்டிவிட்டுக் கிளம்பினாள்...
லக்ஷம் வேறு சொன்னாள் :
சீக்கிரமா வந்துடு... மழைக்காலமா இருக்கு... நாலு மணிக்கே இருட்டிடறது...
சியாமளி இதற்கு எந்தப் பதிலும் கூறாமல் கிளம்பியவள் தான்... இதோ மணி எட்டரை.
இன்னும் வரவில்லை.
சுந்தரம், வாசலுக்கும் உள்ளுக்குமாய் நடை போடுகிறார்.
ஜானகிக்கு அடி வயிற்றில் புளி கரைக்கிறது.
கெளரி கூட, ஒப்புக்கு பாடப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, வழிமேல் விழி வைத்து, வாசலையே பார்க்கிறாள்.
இதோ... சொட்டச் சொட்ட நனைந்தபடி... அது யார் வாசலில்...
சியாமளிதான்... கூடவே, கர்ச்சீப்பை தலையில் போட்ட படி அவளுடன் வருபவன் யார்...
சுந்தரம் புருவங்கள் முடிச்சிடப் பார்க்கிறார்.
2
ஜானகிக்கு, மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு, எவனோ ஒருத்தனுடன் தோளுடன் தோள் உராய்ந்தபடி வந்து நிற்கும் மகளைப் பார்ப்பதை விடவும் கணவனின் முகத்தைப் பார்க்கத்தான் பயமாகவும் இருக்கிறது.
அவர் மானஸ்தர். கவரிமான் பிறப்பு.
இதோ-முத்து முத்தாய் மூன்று சூழந்தைகள் பிறந்தும், மனைவியை இன்று வரையில் பெயர் சொல்லி அழைக்காதவர்.
'சியாமளீ' - என்பார். அவள் வீட்டில் இல்லை என்பது தெரிந்தும் கூட அப்படித்தான் அழைப்பார்.
சியாமளீ... ஒரு தம்ளர் தீர்த்தம் கொண்டா...
சியாமளா... என் பர்ஸை எடு...
இலை போட்டாச்சா... சாப்பிட வரலாமா சியாமளா...
சியாமளி என்ன, அப்பாவின் பக்கத்திலேயே நின்று கொண்டா இருக்கிறாள்?
செய்வதெல்லாம் பெண்டாட்டி. அப்புறம், அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் என்ன?
அது என்னவோ லஜ்ஜை!
லக்ஷத்துக்கே கூட ஆச்சரியமாகவே இருக்கும்.
கடைசி, கடைசியாய் கெளரி பிறந்த பிறகு தன் மகன், மனைவியிடமிருந்து மிகவும் விலகிப் போய் விட்டானோ என்று கூட கவலையாக இருக்கும்.
மழையில் நனைந்த குருவி மாதிரி, கூடத்து மூலையில், உடம்பு முழுக்க கம்பளியால் போர்த்தியபடி உட்கார்ந்திருப்பவள், சதா-மகனையும், மருமகளையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள்.
'கெளரி பொறந்தப்போ-ரெண்டு வார்த்தை கடுமையாப் பேசிட்டேன்கறதாலே-இந்த ஜானகி, அப்படியே சமையல் கட்டோட அடைஞ்சு கிடக்காளோ...'
இந்த உறுத்தல் அதிகமாகும் போதெல்லாம் தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல், ஜானகியை அழைத்துச் சொல்லுவாள்:
"ஏண்டீ-சும்மா, அடுப்பங்கரையிலே என்னத்தைக் குடைஞ்சுண்டிருக்கே... என்னமோ சாமி படம் வந்திருக்காமே... நேத்து-சுப்புணி பார்த்துட்டு வந்து, கதை கதையாச் சொன்னான். அகமுடையானும், பொண்டாட்டியுமா போயிட்டு வர மாட்டேளோ? எனக்கென்ன, ராத்திரிக்கு ஒரு தம்ளர் கோதுமை ரவை கஞ்சி போதும். குமுட்டி அடுப்புல ரெண்டு தணலைப் போட்டு வச்சுட்டுப் போ. அது