Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thesiya Geethangal
Thesiya Geethangal
Thesiya Geethangal
Ebook126 pages30 minutes

Thesiya Geethangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Chinnaswami Subramania Bharathi (11 December 1882 – 11 September 1921) was an Indian writer, poet, journalist, Indian independence activist and social reformer from Tamil Nadu. Popularly known as "Mahakavi Bharathi", he is a pioneer of modern Tamil poetry and is considered one among the greatest of Tamil literary figures of all time. His numerous works were fiery songs kindling patriotism and nationalism during Indian Independence movement. Born in Ettayapuram of the then Tirunelveli district (present day Thoothukudi) in 1882, Bharathi had his early education in Tirunelveli and Varanasi and worked as a journalist with many newspapers, notable among them being the Swadesamitran and India. Bharathi was also an active member of the Indian National Congress.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580106601683
Thesiya Geethangal

Read more from C. Subramania Bharathi

Related to Thesiya Geethangal

Related ebooks

Reviews for Thesiya Geethangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thesiya Geethangal - C. Subramania Bharathi

    http://www.pustaka.co.in

    தேசிய கீதங்கள்

    Desiya Geethangal

    Author:

    சி.சுப்ரமணிய பாரதியார்

    C.Subramaniya Bharathiyar

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பாரத நாடு

    1. வந்தே மாதரம்

    2. ஜய வந்தே மாதரம்

    3. நாட்டு வணக்கம்

    4. பாரத நாடு

    5. பாரத தேசம்

    6. எங்கள் நாடு

    7. ஜயபாரத

    8. பாரத மாதா

    9. எங்கள் தாய்

    10. வெறி கொண்ட தாய்

    11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

    12. பாரத மாதா நவரத்தின மாலை

    13. பாரத தேவியின் திருத் தசாங்கம்

    14. தாயின் மணிக்கொடி பாரீர்

    15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

    16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

    17. பாரத சமுதாயம்

    18. ஜாதீய கீதம்

    19. ஜாதீய கீதம்

    2. தமிழ்நாடு

    20. செந்தமிழ் நாடு

    21. தமிழ்த்தாய்

    23. தமிழ்மொழி வாழ்த்து

    24. தமிழச் சாதி

    25. வாழிய செந்தமிழ்!

    3. சுதந்திரம்

    26. சுதந்திரப் பெருமை

    27. சுதந்திரப் பயிர்

    28. சுதந்திர தாகம்

    30. விடுதலை

    31. சுதந்திரப் பள்ளு

    4. தேசிய இயக்கப் பாடல்கள்

    32. சத்ரபதி சிவாஜி

    33. கோக்கலே சாமியார் பாடல்

    34. தொண்டு செய்யும் அடிமை

    35. நம்ம ஜாதிக் கடுக்குமோ

    36. நாம் என்ன செய்வோம்.

    37. பாரத தேவியின் அடிமை

    38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று

    39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

    40. நடிப்பு சுதேசிகள்

    5. தேசியத் தலைவர்கள்

    41. வாழ்க நீ எம்மான்

    42. குரு கோவிந்தர்

    43. தாதாபாய் நவுரோஜி

    44. பூபேந்திர விஜயம்

    45. வாழ்க திலகன் நாமம்!

    46. திலகர் முனிவர் கோன்

    47. லாஜபதி

    48. லாஜபதியின் பிரலாபம்

    49. வ.உ.சி.க்கு வாழ்த்து

    6. பிற நாடுகள்

    50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை

    51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து

    52. புதிய ருஷியா

    53. கரும்புத் தோட்டத்திலே

    மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்

    தேசிய கீதங்கள்

    1. பாரத நாடு

    1. வந்தே மாதரம்

    ராகம் - நாதநாமக்கிரியை

    தாளம் - ஆதி

    பல்லவி

    வந்தே மாதரம் என்போம் - எங்கள்

    மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

    சரணங்கள்

    ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

    ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்

    வேதிய ராயினும் ஒன்றே - அன்றி

    வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) 1

    ஈனப் பறையர்க ளேனும் அவர்

    எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

    சீனத்த ராய்விடு வாரோ? - பிற

    தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 2

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

    அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்

    தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

    சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 3

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 4

    எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்

    யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

    முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

    முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) 5

    புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு

    போயின நாட்களுக் கினிமனம் நாணித்

    தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

    தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) 6

    2. ஜய வந்தே மாதரம்

    ராகம் - ஹிந்துஸ்தானி பியாக்

    தாளம் - ஆதி

    பல்லவி

    வந்தே மாதரம் - ஜய

    வந்தே மாதரம்.

    சரணங்கள்

    ஜயஜய பாரத ஜயஜய பாரத

    ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) 1

    ஆரிய பூமியில் நாரிய ரும்நர

    சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே) 2

    நொந்தே போயினும் வெந்தே மாயினும்

    நந்தே சத்தர் உவந்தே சொல்வது (வந்தே) 3

    ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்

    சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) 4

    3. நாட்டு வணக்கம்

    ராகம் - காம்போதி

    தாளம் - ஆதி

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

    இருந்ததும் இந்நாடே - அதன்

    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

    முடிந்ததும் இந்நாடே - அவர்

    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

    சிறந்ததும் இந்நாடே - இதை

    வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்

    வாயுற வாழ்த்தேனோ? - இதை

    'வந்தே மாதரம், வந்தே மாதரம்'

    என்று வணங்கேனோ? 1

    இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்

    ஈந்ததும் இந்நாடே - எங்கள்

    அன்னையர் தோன்றி

    Enjoying the preview?
    Page 1 of 1