Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள்
கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள்
கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள்
Ebook475 pages3 hours

கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?
இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு திரும்பி வருவார் என்பதை பாவிகள் அறியார்கள். ஆனால் இக்காலத்தின் அடையாளங்களில் இருந்து இதனைக் குறித்து நீதிமான்களாகிய நாம் நன்கு அறிவோம். உலகமானது படு பயங்கரமான வேகத்தில் பல்வேறு மாற்றங்களினூடாக செல்லுகிறது. ஆயினும், உலகத்தை எதிரிகள் தம்முடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வருவதற்கு இன்னமும் அதிக தூரம் இருக்கிறது. இது நடந்தேற வேண்டுமானால், இந்த உலகத்தில் இப்போது இருக்கும் சட்டங்கள் முற்றிலுமாக அகற்றப் படவேண்டும்.
இத்தகைய வழக்கத்திற்கு மாறான காலத்தில் வாழுகையிலே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறவர்கள் இந்த கொள்ளை நோயை எதிர்கொள்ளுவது எப்படி?

Languageதமிழ்
PublisherPaul C. Jong
Release dateJun 11, 2023
ISBN9788928213924
கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள்

Related to கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள்

Related ebooks

Reviews for கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள் - Paul C. Jong

    Sermon01

    நாம் இந்த உலகத்திற்கு சொந்தமானவர்கள் அல்ல, பரலோகத்திற்கு சொந்தமானவர்கள்

    < வெளி 4 >

    இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று. அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன. அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. மேலும், சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

    நம்முடைய இணையதளத்திற்கு வருகிறவர்கள் எங்களுடைய இரட்டை மொழிகளிலான ஈ-நூல்களை அதிகமாக தகவிறக்கம் செய்வதாக கேள்விப் பட்டேன். நாம் இரட்டை மொழிகளில் நூல்களை முதன் முதலாக வெளியிட்ட போது, அதிகப்படியாக இரண்டொரு பேர் தான் அவற்றை தகவிறக்கம் செய்தார்கள், ஆனால் நேற்று மட்டுமே, பதினான்கு பேர்கள் இவற்றை தகவிறக்கம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டதில் மகிழுகிறேன். உலகிலுள்ள நாடுகளுக்கு அவற்றிற்கே உரிய தனித்துவமான மொழிகள் இருக்கின்றன, ஆகவே நாம் இரட்டை மொழிகளில் புத்தகங்களைத் தருகிறோம், இதன் மூலமாக மக்களால் இரண்டு மொழிகளிலும் உள்ளவற்றை வாசித்து ஒப்பீடு செய்ய முடியும். உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களுக்கிடையே இந்தப் புத்தகங்கள் பிரபலமானதாக இருப்பதினால், இன்னமும் அதிகமான இரட்டை மொழிப் புத்தகங்களை வெளியிட நான் விரும்புகிறேன். உலகத்திலே அநேக மக்கள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன் படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையே. அநேக நாடுகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் பெற்றோர்களும் கூட வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களாக இருக்கிறார்கள், ஆகவே இத்தகைய குடும்பத்தினருக்கு நம்முடைய இரட்டை மொழிப் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். நாம் அதிகமான அளவு இரட்டை மொழிப் புத்தகங்களை வெளியிடும் போது, உலகம் முழுவதும் இருக்கும் அநேக மக்கள் அவற்றைத் தகவிறக்கம் செய்வார்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக அவர்களுடைய ஆத்துமாக்கள் மிகவும் செழிப்படையும். என்னால் எல்லா எடுத்துக்காட்டுக்களையும் இங்கே கூற முடியாது, ஆனால் சில மக்கள் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட மின்னூல்களை தகவிறக்கம் செய்திருக்கிறார்கள், ஆகவே மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், நம்முடைய மின்னூல்களை தகவிறக்கம் செய்த பிறகு இந்த மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் அவற்றை அதிகமான மக்களிடம் பகிர்ந்து கொள்ளுவார்கள். அந்த மக்களும் கூட தம்முடைய இருதயங்களில் மாற்றம் உண்டாவதைக் காணுவார்கள். இதனால் தான் நாம் இன்னமும் கடினமாக உழைக்கிறோம், தேவனுடைய நீதியின் செயலுக்காக அவருக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.

    நாம் இப்போது வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 4 ஐ முழுவதுமாக வாசித்தோம். சில காலத்திற்கு முன்னர், அப்போஸ்தலனாகிய யோவான் ஆசியாவின் ஏழு சபைகளுக்கு கொடுத்த செய்தியை பகிர்ந்ததின் மூலமாக ஆசீர்வதிக்கப் பட்டோம். வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய, அப்போஸ்தலனாகிய யோவான், இயேசுவானவரின் சீடனாக இருந்து, யோவான் என்ற நற்செய்தியையும் எழுதினான், அது நான்கு நற்செய்திகளில் ஒன்றாகும், அவற்றில் 1, 2 மற்றும் 3 யோவான் ஆகியவையும் அடங்கும்.

    அவன் இயேசுவானவருடைய மிகவும் அன்பான சீடனாக இருந்தான், அவன் தன் வாழ்வின் முடிவிலே, ரோம சக்கரவர்த்தியினால் துன்புறுத்தப் பட்ட பத்மோஸ் என்ற தீவிலே சிறை வைக்கப் பட்டிருந்தான். அந்த காலத்திலே அப்போஸ்தலனாகிய யோவானின் தாய்நாடான, இஸ்ரவேல், ரோமர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்ததினால், ரோமர்களின் சட்டங்களை மீறுகிறவர்கள் சிறையில் அடைக்கப் பட்டு பாடுகளை அனுபவிப்பது சாதாரனமாக இருந்தது. சக்கரவர்த்தியை ஆராதிக்க வேண்டும் என்ற ரோம சட்டத்தை மீறியதற்காக அப்போஸ்தலனாகிய யோவானை, ரோம அதிகாரிகள் பத்மோஸ் தீவுக்கு நாடு கடத்தி அங்கே அவனை சிறைப்படுத்தினர். ஆனால், அப்போஸ்தலனாகிய யோவான், பத்மோஸ் தீவிலே சிறை வைக்கப் பட்டிருந்த போது, அப்போஸ்தலனாகிய யோவானால், இயேசுவானவருடனே கூட ஒரு ஆழமான ஐக்கியத்தை கைக்கொள்ள முடிந்தது, ஆகவே அந்த சிறையின் பாடுகள் அவனுக்கு ஆசீர்வாதமாக அமைந்தன, வெளிப்படுத்தின விசேஷத்தை அவன் இங்கே வைத்து தான் எழுதினான். இந்த தீவில் வைத்துத்தான் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் குறித்து கர்த்தர் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினார். இப்படியாக, நீதிமான்கள் எப்போதெல்லாம் பாடுகளை அனுப்பவிக்கிறார்களோ, அப்போதெல்லாம், இந்த பாடுகளினூடாக அவர்கள் ஆசீர்வதிக்கப் படுவதை உறுதி செய்ய கர்த்தர் செயல் படுகிறார்.

    கர்த்தருடைய அருளினால் தான் அப்போஸ்தலானாகிய யோவானுக்கு அவருடைய வெளிப்படுத்தல் கிடைத்தது, ஆகவேத் தான் அதனை இன்று நாம் பெற்றோம். அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய வெளிப்படுத்தின விசேஷத்தை பின்புலத்துடனே கூட நாம் வாசிக்கும் போது, கர்த்தர் நம்மை எப்படி வழி நடத்துவார் என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும்.

    இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்

    பத்மூ என்ற தீவிலே, உலகம் எப்படி மாற்றம் அடையும் என்று கர்த்தர் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு காட்டினார். நாடு கடத்தப்பட்டதினால் உண்டான அயர்ச்சியில், அப்போஸ்தலனாகிய யோவான் கர்த்தரிடம் ஜெபித்தான், அவன் அப்படி ஜெபித்த போது கர்த்தருடைய ஆவியானவரால் வழிநடத்தப் பட்டான் அப்போது அவனால் பரலோகத்தின் வெளிப்படுத்தலைக் காணவும் கேட்கவும் முடிந்தது. இப்படியாக எழுதப் பட்டுள்ளது, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் (வெளி 4:1)

    வெளி 4:1-11 இலே, பரிசுத்த ஆவியானவராலே ஆட்கொள்ளப் பட்ட, அப்போஸ்தலனாகிய யோவான் தன் கண்களாலும் இருதயத்தாலும் கண்டவற்றைக் குறித்து கர்த்தர் பேசுகிறார். அங்கே, அவன் கர்த்தருடைய சிங்காசனத்தைக் கண்டான், இருபத்து நான்கு மூப்பர்கள் பொன்முடி சூடப்பட்டவர்களாக தம்முடைய சிங்காசனங்களில் அமர்ந்திருந்தனர், அங்கே ஆறு சிறகுகளை உடையதும் அவை முழுவதும் கண்கள் இருக்கக் கூடியதுமான ஆறு ஜீவராசிகள் இருந்தன. இரவும் பகலும், இந்த ஜீவராசிகள் எவ்வித ஓய்வும் எடுக்காமல் கீழ்வருமாறு கூறின:

    "இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய

    சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" (வெளி 4:8). வேதாகமமானது இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய என்று கூறும் போது அது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. அது நீர் மற்றும் ஆவியினால் வந்த இரட்சகரைக் குறிக்கிறது, அவர் இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் மனிதர்களாகிய நம்மை இரட்சித்தார்.

    உலகத்தில் இருக்கிற மனிதகுலம் முழுவதும் இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களிலும் விழுந்து அழியவிருந்த போது, தேவன் இந்த உலகத்திற்கு வந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக மனிதகுலத்தை அதின் பாவங்களில் இருந்து ஒரேதரமாக இரட்சித்தார். இந்த தேவன் இயேசு கிறிஸ்துவாகும். இந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடித்த இயேசுவானவர், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த பிறகு தன் சீடர்களிடம் கீழ்வருமாறு கூறினார், வானத்திற்கும் பூமிக்கும் மேலான அதிகாரம் எனக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. (மத்தேயு 28:18). வானத்தையும் பூமியையும் ஆளுகிறவர் தேவன் ஆவார். அவர் பாவிகளை இரட்சித்த இரட்சகர் மட்டும் அல்ல, அவர் நீதிமான்களையும் சாத்தானையும் கூட ஆளுகை செய்கிறவராக இருக்கிறார். இயேசுவானவரின் இந்த ஆளுகையைக் குறித்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளுவது நமக்கு அவசியமாகும், தேவனை நாம் சந்திக்கிற அந்த நாள் வரையிலே இந்த புரிந்து கொள்ளுதலுடன் நாம் வாழ வேண்டும்.

    பழைய ஏற்பாட்டின் பழங்காலத்திலே, யேகோவா கர்த்தருக்கு மட்டுமே ஜெபங்கள் ஏறெடுக்கப் பட்டன, ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்திலே, இயேசு கிறிஸ்துவிடம் ஜெபிக்கும் போது கூட நம் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கிறது என்பதை நாம் அறிவோம், அவர் கர்த்தராக இருக்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசிகளாகிய நம் அனைவருக்கும் இந்த ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாகவும் கூட இயேசு கிறிஸ்து கூறினார்.

    வெளி அதிகாரம் 4 இலே, பரலோகத்தில் இருந்து பூலோகம் வரையிலும், அனைத்தையும் நம் தேவன் எப்படி ஆளுகைச் செய்கிறார் என்பதை அவர் காட்டுகிறார். எல்லா மனிதர்களும் இயேசு கிறிஸ்துவிற்கு முன்னதாகவும் அவர் அதிகாரத்திற்கு முன்னதாகவும் தலைவணங்க வேண்டும். நாம் கர்த்தருடைய அன்பை தரித்துக் கொண்டிருப்பதினால், விசுவாசத்தால் அவருக்கு ஆராதனை செய்ய முடியும்.

    இயேசு கிறிஸ்து தன்னால் படைக்கப் பட்டவைகளுக்கும் தேவதூதர்களுக்குடையதுமான புகழ்சிக்கேதுவானவர். பழைய காலங்களிலே, வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய பெயர்கள் அநேகம், அவற்றிலே, யாவே என்பதும் அடங்கும், அதன் பொருள் இருக்கிறவராக இருக்கிறேன், ஏலோகீம் Elohim இதன் பொருள் மகத்துவமான கர்த்தர். இயேசு கிறிஸ்து வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும் படைத்த கர்த்தர், அவர் தன் படைப்புகள் அனைத்தையும் ஆளுமைச் செய்கிறார். இன்றைய வேதாகம வசனம் நமக்கு இன்று காட்டுவது இதுதான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம் அனைவரிடமும் இயேசுவானவர் கர்த்தர் என்றும் அவர் நம் புகழுதல்களுக்கும் ஆராதனைக்கும் ஏற்றவர் என்றும் நம்மிடம் கூறுகிறது. அவருக்கு ஆராதனை செய்யாமிலிருக்கும் படியான குறைபாடுகள் அவரிடம் இல்லை, அவர் நம்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தத்தின் மூலமாக இரட்சித்தமையால், அவருடைய மரியாதையும் மகிமையும் அளவில்லாதவை.

    தேவன் இந்த பூமிக்கு திரும்பி வரும் போது, இந்த உலகத்தில் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிற நீதிமான்களை தன்னுடைய ராஜ்யத்திற்கு - அதாவது பரலோக ராஜ்யத்திற்கு - அழைத்துச் செல்லுவார், இயேசு கிறிஸ்துவே உண்மையான ஆளுகையாளர் என்று விசுவாசிக்காமல் அவரை எதிர்த்து நிற்பவர்களை அவர் நியாயம் தீர்ப்பார். இந்த மனிதர்கள் தம் செயல்களுக்கும் அவிசுவாசத்திற்கும் தக்கவாறு தண்டிக்கப் படுவார்கள்.

    இயேசு கிறிஸ்துவால் பரலோக ராஜ்யத்திற்கு நம் அனைவரையும் அழைத்துச் செல்ல முடியும் ஏனெனில் உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் உங்களையும் என்னையும் ஒரே தரமாக இரட்சிக்கிற அதிகாரம் அவரிடம் இருக்கிறது. 30 ஆம் வயதிலே, யோவான் ஸ்னானன் அளித்த ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் தன்மீது ஒரேதரமாக எடுத்துக் கொண்டு, தன்னுடைய இரத்தத்தை சிலுவையிலே சிந்தி அந்த எல்லாப் பாவங்களுக்குமான கிரையத்தை செலுத்தி விட்டதினால், அவரால் நம்மை முழுமையானவர்களாக மாற்ற முடிந்தது. அவர் தன் இரட்சிப்பின் செயல்களை செய்து முடித்தார், இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் அனைவரையும் அவர் இந்த பூமியிலே உயிரோடே எழுப்புவார். இப்போது நம் தேவானாகிய இயேசு கிறிஸ்து தன் பரலோக சிங்காசனத்தில் அமர்ந்து நமக்காக காத்திருக்கிறார், தன்னுடைய எல்லா மக்களுக்காகவும் பரலோக ராஜ்யத்தை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார்.

    பூமியிலும் வானத்திலும் இருக்கிற எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறவர் இயேசுவானவர் ஆகும், அவரே வானத்திற்கும் பூமிக்குமான தேவன் ஆவார். இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் இரட்சகராக மட்டுமே இராமல், அவர் உண்மையான கர்த்தராகவும் இருக்கிறார் அவர் விசுவாசிகள் அனைவரிடமிருந்தும் மகிமையையும் மாட்சிமையையும் பெற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான கர்த்தர் ஆவார்.

    இயேசுவானவர் நம் உண்மையான ஆளுகையாளர் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறவர்களாகிய நம் மூலமாக மகிமை அடைவது இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்ற ஒன்றாகும், ஏனெனில் அவர் நமக்காக இந்த பூமியிலே நீதியின் செயலை செய்து முடித்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம் அனைவரும், இந்த காலத்திலும் நேரத்திலும் அவருடைய மக்களாக மாறிவிட்டோம், நாம் அவருக்கு பிரியமானவர்களாகவும் அவருடைய ஊழியர்களாகவும் இருக்கிறோம். பாவிகளைத் தேடி தேவன் இந்த உலகத்திற்கு வந்தார், நீர் மற்றும் ஆவியினால் அவர் அவர்களை இரட்சித்தார், இந்த உண்மையான சத்தியத்தை விசுவாசிக்கும் நம் அனைவரையும் அவர் நேசித்து ஆசீர்வதிக்கிறார்.

    இயேசு கிறிஸ்து வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடையவராக இருக்கிறார்

    முடிவு நெருங்கி வரும் இவ்வேளையில், இயேசு கிறிஸ்துவைக் குறித்து சரியான அறிவு உங்களிடமும் என்னிடம் இருக்க வேண்டும் என்பது இன்றியமையாதது, அவர் நம் உண்மையான ஆளுகையாளராகவும் கர்த்தராகவும் இருக்கிறார், அவரை நாம் சார்ந்து விசுவாசத்தால் பின்பற்ற வேண்டும். ஆகவே நாம் அனைவரும் இதனை கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். நாம் அமைதலாக வாழவேண்டியவர்கள், நம்மை ஆளுகிறவராகிய இயேசு கிறிஸ்துவிடம் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும். இப்போது, முடிவு நெருங்கி வரும் நிலையில், நம் ஆளுகையாளரான இயேசுவானவரையும் அவர் நீதியையும் இன்னமும் அதிகமாக நம் வாழ்விலே உயர்த்த வேண்டும்.

    வெளிப்படுத்தின புத்தகமானது, தேவனால் இரட்சிக்கப் பட்ட நாம் எப்படி, இப்போதிலிருந்து கர்த்தருடனே மகிமையில் வாழப் போகிறோம் என்பதை நமக்கு காட்டுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இப்போது விசுவாசிக்கக் கூறிய நம் அனைவருக்கும் உண்மையான இரட்சிப்பை இயேசு கிறிஸ்துவின் நீதி எடுத்து வந்தது, இயேசு கிறிஸ்து நம்முடைய கர்த்தர் என்ற விசுவாசத்துடனே வாழும் படியாகவும் அது நம்மை ஆசீர்வதித்தது. இந்த கடைசிகாலங்களில் நம்மை ஆளுகிறவர் இருக்கிறார் என்பது எத்தனை ஆச்சரியமானது என்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    சில மக்கள் தாம் இயேசுவானவரை தம்முடைய இரட்சகராக விசுவாசிப்பதாகக் கூறினாலும், இயேசு கிறிஸ்து வானத்தையும் பூமியையும் ஆளுகைச் செய்கிறவர் என்பதை ஏற்றுக் கொள்ளுவதில்லை. ஆகவே, அவர்களுடைய விசுவாசம் என்பது தம் சொந்த மனதை விசுவாசிப்பதாக மட்டுமே இருக்கிறது. இயேசுவானவரைத் தம்முடைய மத அடிப்படையில் விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே பிதாவாகிய கர்த்தர் மிகப் பெரியவர் என்று எண்ணுகின்றனர், ஆனால் இயேசு கிறிஸ்துவும் கர்த்தர் என்பதும் அவர் நம்மால் மதிக்கவும், மகிமைப் படுத்தவும், எல்லோராலும் புகழப்படவும் வேண்டியவர் என்பதை அறியாதவர்களாக உள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் செயல்களையும் அவருடைய ஆளுகையையும் அலட்சியம் செய்கிறார்கள். இது மிகப்பெரும் துயரம். அவர்கள் தம்முடைய சொந்தத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவாகிய கர்த்தரிடம் இருக்கும் அதிகாரமோ அல்லது வல்லமையோ இல்லை என்று தவறாக எண்ணுகிறார்கள். எல்லோருக்கும் ஆளுனராக இருக்கும், இயேசு கிறிஸ்துவை நம்மில் யாரும் தவறாக புரிந்து கொள்ளவோ அல்லது விசுவாசிக்காமல் இருக்கவோ கூடாது. இத்தகைய கொடிய தவறினை செய்யும் படியாக நம்மை அனுமதிக்கக் கூடாது.

    ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மிடம் வந்த இயேசு கிறிஸ்துவானவர், நம் அனைவருக்கும் உண்மையான ஆளுனர், நம் ராஜா, நம் தலைமை ஆசாரியர், நம்முடைய உண்மையான தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் இங்கே சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது (ரோமர் 11:36) என்று வேதாகமம் கூறும் போது அதன் பொருள் என்னவென்று புரிந்து கொள்ளுவது நமக்கு முக்கியமாகும். வானத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லா காரியங்களையும் படைத்த இந்த கர்த்தர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக உங்களையும் என்னையும் உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்ததுடனே கூட, விசுவாசிகளாகிய நமக்கு அவர் உண்மையான கர்த்தராகவும் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு கிறிஸ்துவே வானத்தையும் பூமியையும் ஆளுகிறவராக இருக்கிறார்.

    கர்த்தர் தன்னுடைய அதிகாரத்தை அலட்சியம் செய்கிறவர்களைத் தண்டிப்பார், அதே நேரத்தில், தன் அதிகாரத்திற்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறவர்களுக்கு தகுந்த சன்மானங்களை வழங்குவார். இரண்டு ஏற்பாடுகளிலும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவராக கர்த்தர் நம்முடனே கூட பேசுகிறார், தேவனே நியாயாதிபதியாகவும் ஆளுனராகவும் இருந்து விழுந்து போன தேவதூதர்களைத் தண்டிப்பார் என்பதைக் காட்டினார். ஆளுகைச் செய்கிறவர்கள் நீதிபரராகவும் நியாயவானாகவும் இருப்பதினால், தன்னுடைய கிருபையைத் தேடாதவர்களை அவர்களுடைய பாவங்களுக்காக தண்டிப்பார் என்பதையும் கூட காட்டினார். நாம் இத்தகைய கீழான அழிந்து போகிற படைப்புகளாக இருக்கிறோம், இத்தகைய நம்மை கர்த்தர் உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் ஒரேதரமாக இரட்சித்தார், இதற்கெல்லாம் ஒரே காரணம் கர்த்தருடைய பெரிதான கிருபையே ஆகும். இதனால் தான் கர்த்தருடைய கிருபையின் மேல் சாய்ந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிற நாம் அனைவரும் இந்த கர்த்தரை நம்முடைய இரட்சகர் என்றும் ஆளுனர் என்றும் விசுவாசிக்கிறோம்.

    இயேசு கிறிஸ்துவே உண்மையான ஆளுனராகவும் நம் அனைவருக்குமான கர்த்தராகவும் இருக்கிறார். ஆகவே அவர் நம்முடைய துதிகளை எதிர்பார்க்கிறார். அவருடைய எதிர்ப்பார்ப்புகளுக்கு இணங்க நாம் வாழ வேண்டும். இயேசு கிறிஸ்துவே கர்த்தர் ஆவார் அவர் நம்மால் புகழப்பட வேண்டியவர், ஏனெனில் நம்மை இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்த அவரே கர்த்தர் ஆவார். இந்த காலகட்டத்திலும் கூட இந்த கர்த்தர் நம்மை ஆளுகிறவராக இருக்கிறார். அவருடைய சமூகத்திலே நிற்கும் அந்த நாள் வரையிலே, எல்லாப் பாவிகளுக்கும் கர்த்தருடைய கிருபையை களைப்படையாமல் வெளிப்படுத்த வேண்டும். இப்படியாக, ஆளுகைச் செய்கிறவரின் நீதியை விசுவாசிப்பவர்களின் விசுவாசத்தினால் மட்டுமே அவரைத் தம் வாழ்விலே மகிமைப் படுத்த முடியும்.

    நாம் விசுவாசிக்கிற கர்த்தர் தன்னுடைய நீதியை எதிர்த்து நிற்பவர்களை அழித்து ஒழிக்க விரும்பவில்லை, அதற்கு மாறாக, அவர்களைத் தன் கிருபை நிறைந்த அன்பினாலும் நீதியினாலும் மேற்கொள்ள விரும்புகிறார். தன்னுடைய கிருபையினால் பாவிகள் இரட்சிக்கப் படுவதை கர்த்தர் விரும்புகிறார்.

    இந்த காரணத்தினால் தான் வெளிப்படுத்தின புத்தகம் இயேசு கிறிஸ்து தேவதூதர்களாலும் மூப்பர்களாலும் வணங்குதலுக்கு உரியவர் என்று நமக்கு காட்டுகிறது. இப்படியாக எழுதப் பட்டுள்ளது, "இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:

    கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும்

    பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்,

    நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே

    அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்

    சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது" (வெளி 4:10-11).

    நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிற நாம் அனைவரும் தேவன் எத்தனை உன்னதமானவர் என்பதை அறிந்திருக்கிறோம், இந்த புரிந்து கொள்ளுதலுடனே கூட கீழ்ப்படிதலுடனே நம்மை அவரிடம் ஒப்படைப்போம். உன்னதமானவர் நம்முடைய உண்மையான இரட்சகராக இருப்பது மட்டுமில்லாமல் நம் உண்மையான ஆளுனராக இருப்பதும் இதற்கு காரணமாகும்.

    உண்மையான ஆளுனர் யார்?

    வெகுகாலத்திற்கு முன்னதாக, குறிப்பிட்ட தேவதூதர்கள் கர்த்தருஐய அதிகாரத்தை எதிர்த்து நின்றார்கள், ஆனால் கர்த்தர் தன்னுடைய வல்லமையினால் அவர்களை அழிக்க விரும்பவில்லை, தன் நீதி, கிருபை, நியாயம் போன்றவற்றினால் அவர்களை மேற்கொள்ள அவர் விரும்பினார். கர்த்தருடைய நீதியையும் அவருடைய அன்பையும் விசுவாசிக்கிற நாம் உண்மையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது நம் ஆளுனராகிய கர்த்தருடைய சித்தமாக இருக்கிறது. மனிதர்களை ஆளுகிறவர் தன்னுடைய அன்பை தேவதூதர்களுக்கு மட்டுமே கொடுக்காமல், மனிதர்களாகிய நமக்கு கொடுக்கவும் விரும்புகிறார்.

    கர்த்தரை எதிர்த்து நின்ற சாத்தானுடைய சோதனையிலே விழுந்து போன, ஆதாமுடைய வமிசத்தாருக்கு இயேசு கிறிஸ்து தன் நீதியை அருளிச் செய்தார்; கர்த்தருடைய கிருபையாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக இயேசுவானவர் இந்த ஆசீர்வாதத்தை வெளிப்படுத்த விரும்பினார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக தன்னை விசுவாசிப்பவர்கள் தம் உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் நித்தியமாக இரட்சிக்கப் பட வேண்டும் என்று அவர் விரும்பினார். மனிதர்கள் அனைவரும் கர்த்தருடைய நீதியின் அன்பின் மூலமாக, அவர்களுடைய கீழ்ப்படியாமையின் பாவங்கள் அனைத்திலிருந்தும் இரட்சிக்கப் பட வேண்டும் என்று அவர் விரும்பினார். இதனால் தான் தம்முடைய பாவங்களை புரிந்து கொண்டு தன் உண்மையான பிள்ளைகளாகும் படியாக அவருடைய நீதியை விசுவாசிப்பவர்களை கர்த்தர் ஆசீர்வதித்தார்.

    மிக நீண்ட காலத்திற்கு முன்னதாக, தேவதூதர்கள் கர்த்தரை எதிர்த்து நின்றதைப் போலவே, இப்போதும் கூட, அநேக மக்கள் கர்த்தருடைய நீதியை எதிர்த்து நிற்கிறார்கள். ஆகவே, தன்னுடைய சித்தத்திற்கு எதிராக நிற்கும் அவர்களுடைய பாவங்களுக்காக விழுந்து போன தேவதூதர்களை தண்டிக்க கர்த்தர் எத்தனித்தார். ஆயினும், கர்த்தர் மனிதர்களை இந்த தேவதூதர்களிடம் இருந்து வேறுபட்ட முறையில் படைத்தார். மனித குலத்தை தண்டிப்பதற்கு பதிலாக, தன்னுடைய உண்மையான இரட்சிப்பின் கிருபையை அவர்களுக்கு வெளிப்படுத்த அவர் விரும்பினார். இயேசு கிறிஸ்து நமக்கு அருளிச் செய்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக இந்த இரட்சிப்பின் கிருபை வெளிப்படுத்தப் பட்டது. இந்த நற்செய்தியில் கர்த்தர் தன்னுடைய நீதியின் கிருபையை வெளிப்படுத்தியதால், இதனை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ, அவர்களால் கர்த்தருடைய மகிமையைக் காண முடியும்.

    ஆகவே, இப்போது, கிருபை நிறைந்த கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பை, அவருடைய அன்பின் படியும் நீதியின் படியும் விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து மட்டுமே இரட்சகர் என்றும் அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்தார் என்றும் படைக்கப் பட்ட அனைத்தும் விசுவாசிக்க வேண்டும். நம்மை ஆளுகிறவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் மனித குலம் முழுவதையும் விடுதலை செய்தார். அவர் அப்படிச் செய்திருக்காவிட்டால், நாம் அனைவரும் கர்த்தருடைய பகைவர்களாகவே இருந்து அவருடைய நீதியை எதிர்த்து நின்றிருப்போம்.

    ஆகவே நாம் ஆளுகை செய்கிறவரின் அன்பினை விசுவாசிக்க வேண்டும் இந்த விசுவாசத்தினால் அவர் நம்மை நீதிமான்களாக மாற்றி நம் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் படிச் செய்தார். இந்த விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம் முழுமையான கர்த்தர் நம்மைப் பாவம் இல்லாதவர்களாக மாற்றினார், நாம் நம்முடைய தேவனுக்கு நன்றி கூற வேண்டும், அவர் நம் எஜமானராகவும் இரட்சகராகவும் இருக்கிறார், மேலுமாக அவர் நம்மை விழுந்து போன தேவதூதர்களைப் போல நடத்தவில்லை. ஆகவே, நாம் நம்முடைய வாழ்வை வாழும் போது, நம்முடைய நேர்மையான விசுவாசத்தின் மூலமாக கர்த்தரைப் புகழுவதே சரியானதாக இருக்கும். நம்மை ஆளுகிறவரின் சாயலிலே நாம் படைக்கப் பட்டிருக்கிறோம், நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை ஒரேதரமாக இரட்சிக்கும் படியாக இந்த முழுமையான கர்த்தர் இந்த பூமிக்கு வந்தார். இதனால் தான் நாம் அவருடைய இரட்சிப்பை விசுவாசித்து நம் வாழ்வின் மீதான அவருடைய ஆளுகையை விசுவாசிக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும், நம்முடைய இரட்சகர் நம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்திருக்கும் நிலையில், நாம் எப்படி அவரால் ஆளப் படாமல் இருக்க முடியும்?

    வெளிப்படுத்தின புத்தகம் நமக்கு காட்டியதைப் போல இயேசு கிறிஸ்து கர்த்தருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார், மேலுமாக விசுவாசத்தினால் இரட்சிக்கப் பட்ட நாம் அனைவரும் கூட அவருடைய ராஜ்யத்திலே வாழுவோம். இந்த பூமியிலே கர்த்தர் என்ன செய்தார் என்பதை விசுவாசிக்கும் அனைவரும் கூட இயேசுவானவருடனே கூட பரலோகத்திலே வாழுகிற மகிமையைப் பெறுவர். ஆளுகிறவரின் கிருபையை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு இந்த மகிமையான ஆசீர்வாதம் கர்த்தருடைய ஆசீர்வாதமாக அருளப்படுகிறது. ஆசீர்வதிக்கப் பட்டவர்களாகிய நாம் நம்முடைய ஆளுனருடனே கூடட பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்து நித்தியமாக வாழுவோம். கர்த்தருடைய நீதியின் அன்பை விசுவாசிக்கிறவர்கள், அதாவது நீதியின் ஆளுனாரை விசுவாசிக்கிறவர்கள், அவருடைய ராஜ்யத்திலே நித்தியமாக வாழுவோம். நித்தியமான ஐசுவரியத்தையும் மகிமையையும் அனுபவிக்கும் படியாக கர்த்தர் தன்னுடைய மக்களை ஆசீர்வதித்தார் என்பதை நீங்கள் எப்போதும் மறக்கவே கூடாது. ஆகவே, நம்முடைய இரட்சகராகவும் ஆளுகீறவராகவும் இருக்கிற நம்முடைய கர்த்தருக்கு, நாம் நன்றிகளையும், மரியாதையையும், மகிமையையும் செலுத்துகிறோம். இப்படிச் செய்ய வேண்டுமானால், நாம் தேவனுக்கான நம் விசுவாச வாழ்வை வாழ வேண்டும்.

    பரலோகத்தின் ஆளுகைச் செய்கிறவரின் மூலமாக, பரலோகத்தில் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளப் போவது யார் என்பது குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு காண்பித்தான். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப் பட்டவர்களாகிய நமக்கு எத்தகைய ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன எனவும் கூட அவர் நமக்கு காட்டினார். நம்முடைய தேவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் ஒரேதரமாக இரட்சித்தமைக்காக ஏற்கனவே நாம் அவருக்கு நன்றியறிதல் உடையவர்களாக இருக்கிறோம். ஆயினும், இது ஏதோ போதாது என்பதைப் போல, நாமும் கூட பரலோக ராஜ்யத்திலே நம்மை ஆளுகைச் செய்கிறவருடனே கூட நித்தியமாக வாழப் போகிறோம், ஆகவே கர்த்தருக்கு நன்றிகளையும் மகிமையையும் செலுத்துவதை நம்மால் தவிர்க்க முடியாது.

    இயேசு கிறிஸ்து நம் கர்த்தர் என்று விசுவாசிப்பதின் மூலமாக, நம் அனைவராலும் நம் வாழ்விலே அவருக்கு மகிமையைச் செலுத்த முடியும். நம் அனைவருக்கும் கர்த்தர் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைக் கொடுத்ததினால், நம்முடைய முழுமையான கர்த்தருக்கு நம்முடைய மீதமிருக்கும் வாழ்வை அர்ப்பணம் செய்ய வேண்டும். நம்முடைய கர்த்தர் நாம் எப்படி நம் விசுவாச வாழ்வை வாழ வேண்டும் என்று விரும்பினாரோ அதன் படி வாழ்வதை விட வேறு வழியில்லை.

    தேவன் இந்த பூமிக்கு திரும்பி வருவார்

    வெளிப்படுத்தின புத்தகத்திலே கர்த்தர் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு இந்த காட்சியைக் காண்பித்தார் ஏனெனில் அந்த காலத்திலே அவனும் மற்ற அநேக கிறிஸ்தவர்களும் கர்த்தருடைய பகைவர்களினால் மிகவும் துன்புறுத்தப் பட்டனர். ஆகவே, அந்த சபையின் தொடக்க காலத்திலேயே, தேவனைப் பின்பற்றுகிறவர்கள் அவர் திரும்பி வர வேண்டும் என்று காத்திருந்தார்கள். நாம் இப்போதும் 21ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தாலும் கூட, நாமும் கூட நம்முடைய தேவனின் வருகைக்காக காத்திருக்கிறோம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

    இப்போது 2021 ஆகும், ஆனால் 2035 ஆம் ஆண்டிலே, எண்ணெயில் ஓடக்கூடிய, உள்ளெரி இயந்திரங்கள் அனைத்தும் தடை செய்யப் படும் என்று கூறப்படுகிறது. அப்போது வண்டிகள் எதன் மூலமாக ஓடும்? அவை மாற்று சக்திகளால், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற மின்சாரம் அல்லது ஹைட்ரஜன் சக்தியினால் இயக்கப் படும். அப்போது, டுரோன்களைப் போல பறக்கூடிய வண்டிகள் பயன் பாட்டில் இருக்கும். 2055 ஆம் ஆண்டிலே, ஒரு லிட்டர் ஹைட்ரஜன் என்பது ஒரு பெரிய அளவு நிலக்கரி அல்லது எண்ணெய்க்கு சமமானதாக இருக்கும் படியானதாக தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும்.

    எல்லாக் காரியங்களும் பொருள் அடிப்படையிலானதாக மாறியிருக்கும். மனிதர்களின் மான்பு அழிந்து போய், கம்ப்யூட்டர்களும், இணையமுன், செயற்கை அறிவும் (ஏஐ) எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக் கொள்ளும் ஒரு புதிய காலம் வருகிறது. இந்த காலம் வரும் போது, மனிதர்களின் வாழ்வு மிகவும் குறைந்த மதிப்புள்ளதாக மாறி ஏஐ என்பது உயர்த்தப் படும். ஏஐ என்பதைக் கட்டுப்படுத்துகிறவர்கள் மற்றவர்களை ஆளுகைச் செய்வார்கள், கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்களை இன்னமும் அதிக அளவிலான மக்கள் எதிர்த்து நிற்பார்கள், அப்போது நம்மை ஆளுகைச் செய்யும் தேவன் திரும்பி வந்து விசுவாசிகளாகிய நம்மை அழைத்துச் செல்லுவார்.

    முழுமையான தேவன் இந்த பூமிக்குத் திரும்பி வருவார். என்னை என் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தமைக்காக தேவனுக்கு நான் மிகவும் நன்றியறிதல் உடையவனாக இருக்கிறேன், ஆனால் சில நேரங்களில் என் மனதில் சமானத்துடன் இருப்பதில் சிரமப் படுகிறேன், ஆகவே கர்த்தர் எனக்காக ஆயத்தம் செய்த பரலோக ஆளுகைக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1