Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maatri Yosi
Maatri Yosi
Maatri Yosi
Ebook83 pages32 minutes

Maatri Yosi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனம் ஒரு குரங்கு என்று தெரியாமலா சொன்னார்கள் பெரியோர்கள். குரங்கு எப்படி ஒரு இடத்தில் நிலையில்லாமல் இங்கும் அங்கும் தாவுமோ, அதுபோல தான் மனித மனதும்.

மனித மனதின் இந்த நிலையில்லா குணத்தை விளக்கும் விதமாக தோன்றிய எண்ணங்களைக் சிறுகதைகளாக மாற்றி யோசித்ததின் விளைவு “மாற்றி யோசி” என்ற இந்த சிறுகதை தொகுப்பு.

என் எண்ணக் கருவிலிருந்து தோன்றிய முதல் குழந்தை இந்த புத்தகம்.

இதை சாத்தியமாக்க காரணமாய் இருந்த புஸ்தகா நிறுவனத்தின் இயக்குனர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும், புஸ்தகா நிறுவனத்திற்கும், புஸ்தகா நிறுவனத்தைப் பற்றி நான் அறிய காரணமாக இருந்த மத்தியமர் குழுவின் சகோதர சகோதரிகளுக்கும் என் நன்றிகள் பல. மனம் நிறைந்த மகிழ்ச்சி மற்றும் நன்றிகளுடன் கௌரி கோபாலகிருஷ்ணன்.

Languageதமிழ்
Release dateJan 21, 2023
ISBN6580161409499
Maatri Yosi

Related to Maatri Yosi

Related ebooks

Reviews for Maatri Yosi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maatri Yosi - Gowri Gopalakrishnan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மாற்றி யோசி

    சிறுகதைகள்

    Maatri Yosi

    Sirukathaigal

    Author:

    கௌரி கோபாலகிருஷ்ணன்

    Gowri Gopalakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gowri-gopalakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆண்டவன் கருணை

    ஆற்றாமை

    தாய்மை

    இல்லம்

    குணம் நாடி

    கைராசி

    சகுனம்

    சுதந்திரம்

    நான் எனும் நந்தி

    பதற்றம்

    புன்னகை

    யதார்த்தம்

    மாற்றி யோசி

    விளையாட்டு

    பயம்

    டிப்பரஷன்

    சுதந்திரம்

    மாறாக் காதல்

    முற்பகல் செய்யின்...

    கண்டேன் சீதையை

    செய்யும் தொழிலே தெய்வம்

    ஆண்டவன் கருணை

    கவிதாவிற்கு ஆச்சரியம். குழப்பம், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளும் ஒருசேர மனதில் எழுந்தது. எதிர் பிளாக் பால்கனியில் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருந்திருந்த ஜோடியை பார்த்ததிலிருந்து தான் இத்தனை விளைவுகளும். இது எப்படி நிகழ்ந்தது? அதை தெரிந்து கொள்ளா விட்டால் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

    கவிதா இந்த வீட்டிற்கு குடிவந்து ஒரு வாரம் தான் ஆகிறது. சாமான் எல்லாம் அடுக்கி ஓய்ந்து ரெஸ்ட் எடுத்த பின், இன்று மாலை தான் பால்கனியில் அமர்ந்து சிறிது வேடிக்கை பார்க்கலாம் என்று வந்தாள். அப்போது தான் இவ்வளவு உணர்ச்சி குவியலாக மாறி விட்டாள்.

    இப்போது உடனே போய் அவர்களை நேரடியாக கேட்டு விடலாமா என்று எண்ணினாள். ஆனால் தயக்கம் தடுத்தது. சரி, நாளை காலையில் பார்த்து கொள்ளலாம் என்று தன் ஆர்வத்தை அடக்கி கொண்டாள். இரவு முழுவதும் இதே யோசனை தான். அவர்களை தான் சந்தித்த சோகமான சூழ்நிலையே சுற்றி சுற்றி வந்தது. தூக்கம் பிடிக்கவில்லை.

    காலை எழுந்து வேலைகளை முடித்து கணவர் சுரேஷ் அலுவலகம் சென்றவுடன், புது வீட்டிற்கு வந்திருக்கிறோம். முதலில் பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு போய்விட்டு வரலாம். பின்னர் நேற்று தான் கண்ட காட்சி உண்மை தானா என விசாரிக்கலாம் என கிளம்பி சென்றாள்.

    கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில், கும்பிட நினைத்த தெய்வம் குறுக்கே வந்த மாதிரி, ஃபிலோமினா சிஸ்டர், எதிரில் வருவதை பார்த்தாள்.

    அவரே, ஆச்சரியத்தில் என்ன கவிதா இந்த பக்கம் என்றார். தான் இங்கு குடிவந்து விட்டதை கூறி விட்டு, நானே உங்களுக்கு கால் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் எப்படி இங்கே பிரசன்னமானீர்கள் என்று கேட்டாள்.

    ஃபிலோமினா எல்லாம் சந்தோஷமான விஷயம் தான். உனக்கு தெரியுமே, மகனை விமான விபத்தில் இழந்து, துயரத்துடன் என்னுடைய இல்லத்தில் வாழ்ந்து வந்த அந்த வயதான ஸ்டெல்லா, ஜான் ஆங்கிலோ இந்திய தம்பதியர், அவர்களுக்கு பிள்ளைகள் கிடைத்து விட்டார்கள் என்றார்.

    ஆ அப்படியா! என்று வாய் பிளந்த கவிதாவிடம், என்னுடைய இல்லத்திலேயே வளர்ந்து, இன்று நன்றாக உள்ள, ஜோசப் மற்றும் மேரி தம்பதியர், இவர்களை தங்கள் அப்பா அம்மாவாக தத்து எடுத்துக் கொண்டுள்ளனர்.

    இப்போது அவர்களை தான் பார்த்து விட்டு வருகிறேன். இப்போது இரண்டு ஜோடியும் ஒரே லல்லல்லாதான் என்றார் ஃபிலோமினா.

    உடனடியாக தன்னுடைய குழப்பத்தை தீர்த்து வைத்ததற்கும், அந்த இரு தம்பதிகளுக்கு சந்தோஷத்தை கொடுத்ததற்கும் சேர்த்து பொங்கல் வைப்பதாக, அந்த கோவிலை நோக்கி நன்றி தெரிவித்தாள் கவிதா.

    ஆற்றாமை

    என்ன சார் டிரைவிங் கத்துக்க போறீங்களா? தன்னிடம் டிரைவிங் கற்றுக் கொடுக்கும் முருகனின் போன் நம்பர் கேட்ட பக்கத்து வீட்டு ரவியிடம் கேட்டான் குமார்.

    ஆமாம் சார். வண்டி ஒன்னு புக் பண்ணியிருக்கேன். இன்னும் இரண்டு நாளில் வந்து விடும். அதுதான் இவரோட பேசி டைம் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்னு.

    ஏன் சார், டிரைவிங் ஸ்கூல் போகலையா. இவர் கிட்ட ரேட் ஜாஸ்தி ஆச்சே, குமாரின் கேள்விக்கு, அங்கெல்லாம் டயத்துக்கு வரச் சொல்வான் சார், நமக்கு அதெல்லாம் சரிப்படாது ரவியின் பதில்.

    குமார் டிரைவிங் ஸ்கூல் போய் கற்றுக் கொண்டு, பின்னர் மேலும் டிரெயினிங் தேவைபட்டதால் கற்றுக் கொடுத்த ஆள் தான் இந்த முருகன். குமாருக்கு கார் ஓட்டுவதில் ஐந்து வருட அனுபவம்.

    ரவியிடம் நம்பரை கொடுத்து விட்டு, நமுட்டு சிரிப்புடன் கதவை மூடினான்

    Enjoying the preview?
    Page 1 of 1