Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pavala Pallathakku
Pavala Pallathakku
Pavala Pallathakku
Ebook127 pages58 minutes

Pavala Pallathakku

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402160
Pavala Pallathakku

Read more from Rajesh Kumar

Related to Pavala Pallathakku

Related ebooks

Related categories

Reviews for Pavala Pallathakku

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    V g O O d s t O r y

Book preview

Pavala Pallathakku - Rajesh Kumar

http://www.pustaka.co.in

பவளப் பள்ளத்தாக்கு

Pavala Pallathakku

Author:

ராஜேஷ் குமார்

Rajesh Kumar

For more books

http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

பவளப் பள்ளத்தாக்கு

1

ஜனோதிபதி மாளிகையின் பிரதான ஹாலில் அந்த விருதுகள் வழங்கும் விழா ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடந்து கொண்டிருந்த்து.

ஏற்கெனவே ரிகர்சல் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாதலால் எல்லோருமே ஸ்விட்ச் போட்ட மாதிரி செயல்பட்டார்கள்.

மேடையின் மேல் இருந்த பிரதான நாற்காலியில் எண்பது வயது ஜனாதிபதி பல்செட் உபயத்தில் புன்னகை புரிய, மேடையின் முன்வரிசையில் எழுபது வயதுப் பிரதமர் சி.பி.ஐ. விசாரணைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் தன் மகன்களை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற கவலையோடு உட்கார்ந்திருந்தார்.

பிரதமர்க்குப் பின்புற வரிசையில் பல்வேறு ஊழல்களில் சிக்கியிருக்கும் மந்திரிகள் வெளிநாட்டு பேங்குகளில் போட்டுள்ள பணத்தை மனசுக்குள் எண்ணியபடி சாய்ந்திருந்தார்கள்.

அவர்களுக்குப் பின்னால் வி.வி.ஐ.பி.க்கள்.

அதற்கடுத்த வரிசையில் வி.ஐ.பி.க்கள். பக்கவாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலியில் விருதுகளை வாங்க வந்தவர்கள் பிரமிப்போடு தெரிந்தார்கள்.

மேடையில் பளபளக்கும் வழுக்கை மண்டையுடன் அரசு அதிகாரி ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். பாதி ஹிந்தி. பாதி ஆங்கிலம்.

"இந்த 47-வது விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைத்துப் பிரமுகர்களுக்கும் விழாக் கமிட்டியின் சார்பாக வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு இந்தியா இவ்வளவு பெரிய வளர்ச்சியைத் தொழில் துறையிலும் விவசாயத் துறையிலும் கண்டிருப்பதற்குக் காரணம் நமது நாட்டின் அறிவியல் வல்லுநர்களின் சேவைதான்.

இந்தச் சேவையைப் பாராட்டித்தான் ஒவ்வொரு வருடமும் சிறந்த சேவை புரிந்த பலதரப்பட்ட வல்லுநர்களை அரசாங்கம் தேர்ந்தெடுத்து கெளரவம் செய்கிறது. இந்த வருடம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வல்லுநர்களின் பட்டியலை இப்போது படித்துக் காண்பிக்கப் போகிறேன்.

அரங்கத்தில் மெலிதாய்க் கைத்தட்டல் எழுந்தது.

அரசு அதிகாரி கம்ப்யூட்டர் தாள்களை கையில் வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்.

"மிஸ்டர் மலானி - சுரங்கத் துறை, மிஸ்டர் வாத்வா - தொழில் துறை, டாக்டர் சிவசங்கர மேனன் - மருத்துவம், பேராசிரியர் சூர்யநாராயணன் - நுண்ணுயிர்ப் பிரிவு. இங்கே பேராசிரியர் சூர்ய நாராயணனைப் பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்ல வேண்டியது அவசியம்.

"தமிழ்நாட்டில் உள்ள விவசாயப் பல்கலைக் கழகத்தில் மைக்ரோ பயாலஜி பேராசிரியராகப் பணிபுரிந்து இப்போது ஓய்வு பெற்று - ஓய்வு பெற்ற பின்பும் நுண்ணுயிர் ஆராய்ச்சியைக் கைவிடாமல் சொந்தமாய் லேப் நிர்மாணித்து அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருப்பவர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு இவர் கண்டுபிடித்த ஒருவகை நுண்ணுயிர்ப் பாக்டீரியாவை விவசாய நிலங்களில் பயன்படுத்தியதில் மகசூல் இருபது சதவீதமாக உயர்ந்துள்ளது.

அரங்கில் அப்போது பலத்த கைத்தட்டல் எழுந்து முப்பது விநாடிகளுக்குப் பின் அடங்கியது.

அரசு அதிகாரி தொடர்ந்தார்.

அவர் கண்டுபிடித்த புதுவகை நுண்ணுயிர் பாக்டீரியாவுக்கு BAC-SN என்று பெயரிடப்பட்டுள்ளது. SN என்றால் சூர்யநாராயணன் என்று பொருள். இதை சர்வதேச நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்தியாவில் பெருகிவரும் ஜனத் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்தக் கட்டாயத்தை உணர்ந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மைக்ரோ பயாலஜிஸ்ட் பேராசிரியர் சூர்யநாராயணன் பாராட்டுக்குரியவர்.

அரங்கில் மறுபடியும் கைதட்டல்.

இப்போது மதிப்புக்குரிய அந்த விருதுகளை நம் கண்ணியத்துக்குரிய ஜனாதிபதி அவர்கள் வழங்கி கெளரவிப்பார்கள். முதலில் திரு. மலானி அவர்கள் சுரங்கத் துறையில் சிறப்பாய்ச் சேவை புரிந்ததற்காக சேவா ரத்னா விருது பெற வருகிறார்...

கைதட்டல் எழ மலானி எழுந்து மேடையை நோக்கிப் போனார்.

பக்கத்து சீட்டில் மனைவியோடு உட்கார்ந்திருந்த சூர்யநாராயணன் - தன் கழுத்து டையை இறுக்கிக் கொண்டு மனைவியிடம் கிசுகிசுத்தார்.

ல்ட்சுமி...

என்னங்க...?

நினைச்சாலே பிரமிப்பா இல்லை...?

எதை...?

ஜனாதிபதி கையால பரிசும் விருதும் வாங்கப் போறதை நினைச்சாத்தான்…

லட்சுமி சிரித்தாள்.

இதுல என்ன பிரமிப்பு வேண்டியிருக்கு...? உங்க உழைப்புக்கும் அறிவுக்கும் கிடைக்க வேண்டிய விருது தானே இது..?

இருந்தாலும்... பிரஸிடெண்ட் கையால ஒரு விருது வாங்கணும்னா அதுக்கு எவ்வளவு ஃபார்மாலிடீஸ் இருக்கு... தெரியுமா?

மேடையில் மலானிக்கு ஜனாதிபதி தங்கப் பதக்கம் ஒன்றை அணிவித்து பரிசுப் பணம் ஐந்து லட்சத்துக்குரிய செக் கவர் ஒன்றைக் கையில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கணவரிடம் லட்சுமி கேட்டாள்.

என்னங்க... ஃபங்க்ஷன் எப்படியும் ரெண்டு மணி நேரம் நடக்கும் போலிருக்கே..?

அவ்வளவு நேரமெல்லாம் ஆகாது…! ஒரு மணி நேரத்துக்குள்ள முடிஞ்சுடும்...

அடுத்தபடியாக உங்களைத்தான் கூப்பிடுவாங்களா...?

இல்லை... நான் ஏழாவது ஆள்...

லட்சுமி கணவரின் முகத்தைப் பார்த்துவிட்டு லேசாக ஆச்சர்யப்பட்டாள்.

என்னங்க... இது..?

எது...?

இது ஏ.ஸி. ஹால். ரொம்பக் குளிராயிருக்கேனு நானே பட்டுப்புடவையைப் போர்த்திக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு இப்படி வேர்க்குதே?

என்னமோ தெரியலை... ரெண்டு நிமிஷமா இப்படித்தான் வேர்க்குது...

விருது வாங்கப் போற டென்ஷனா..?

"அப்படியெல்லாம் எதுவுமில்லை.

Enjoying the preview?
Page 1 of 1