Poovarasam Pookkal
()
About this ebook
Read more from Vimala Ramani
Un Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsNee Varuvaiyana Ninaithirunthean Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsMaane Maane Maane Kollathane Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsTher Yeri Vandha Nila Rating: 2 out of 5 stars2/5Putham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsJatayu Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsNeer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMaanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsYetho Mogam Yetho Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsNathi Ilatha Odam Rating: 5 out of 5 stars5/5Pillai Prayathiley Rating: 0 out of 5 stars0 ratingsThookkanan Kuruvi Koodu... Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagaiyil Oru Naal! Rating: 0 out of 5 stars0 ratingsMella Veesum Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsUravukku Appal Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Uthikatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsEllame Nee Sonnathu... Rating: 0 out of 5 stars0 ratingsMegam Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanam Parijatham Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Ennai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsYaazhisai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Poovarasam Pookkal
Reviews for Poovarasam Pookkal
0 ratings0 reviews
Book preview
Poovarasam Pookkal - Vimala Ramani
http://www.pustaka.co.in
பூவரசம் பூக்கள்
Poovarasam Pookkal
Author :
விமலா ரமணி
Vimala Ramani
For more books
https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
நப்பின்னை எழுந்தாள். காலை நேர விடியல் மனதுக்கு இதமாக இருந்தது. இந்த விடியலில் புதிய செய்திகள் வரும். நல்லவைகள் வரும் என்கிற நம்பிக்கையை அந்த விடியல் அவளுக்குள் தோற்றுவித்தது. ‘நினைவு நல்லது வேண்டும்’ என்றான் பாரதி. அந்த நல்ல நினைவுகளோடு நப்பின்னை எழுந்தாள்.
‘விடிவது நமக்கு வயதாவதற்கு மட்டுமல்ல நாம் வாழ்வதற்காகவும் தான்’ என்ற நம்பிக்கையோடு எழுந்தாள்.
அருகில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த சோமநாதனைப் பார்த்தாள் நப்பின்னை.
சோமநாதன் என்று யார் பெயர் வைத்தார்கள்?
சோமபானநாதன் என்று பெயர் வைத்திருக்க வேண்டும். இன்னமும் அவனிடத்தில் மெல்லிய சாராய வாடை… விளம்பரங்களில் காட்டுவதைப்போல் கையெழுத்துப் போட்டுவிட்டு உயர்ந்த ரக விஸ்கியையா குடிக்கப் போகிறான்? இவன் குடிக்கும் சாராயத்தில் கையெழுத்தே நடுங்கிவிடும்!
தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆண்டாளைப் பார்த்தாள். வாழ்வின் பிரச்சினைகள் தெரியாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் பச்சை மழலை. பிறந்து ஒரு வருடம் ஆகிறது. இவள் தந்தைக்கு தமிழ் மேல் காதல். அதனால்தான் இவளுக்கு நப்பின்னை என்று பெயர் வைத்தார்.
இப்போது பேத்திக்கு ஆண்டாள் என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த ஆண்டாள் நோன்பிருக்காமலே குழந்தையாய் கனவு கண்டு உறங்கிக் கொண்டிருக்கிறாள்! கனவில் குழந்தை சிரித்தாள்.
நப்பின்னைதான் தினம் ஒரு கனவு காண்கிறவள். புதிய விடியல் எப்போது பிறக்கும்? என்று ஏக்கக்கனவு காண்கிறவள். தூக்கமின்றியே கண்விழித்துக் கனவு காண்கிறவள். நம்பிக்கை கனவு காண்கிறவள் தூக்கத்தை தொலைத்த விழிகளில் புதுயுகம் காணக் காத்திருப்பவள்!
நப்பின்னை எழுந்தாள். அவளைக் கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த ஐந்து வயதுப் பாலகன் கண்ணனின் கைகளை மெல்ல எடுத்தாள். பாதி உறக்கம் கலைந்த நிலையில் கண்ணன் தன் தாயை இன்னமும் கட்டிக்கொண்டான். அம்மா என்னை விட்டுப் போயிடாதே என்கிற மாதிரி இவளை இறுகக் கட்டிக்கொண்டான்.
அன்று திரவுபதிக்கு ஒரு கண்ணன் துயில் கொடுத்தான்! இன்று இந்தக் கண்ணன் தாய்க்கு என்ன தரப்போகிறான்?
சேலையின் கிழிசல் கண்ணை உறுத்தியது. தற்சமயம் இவள் கணவன் சோமநாதன் ஒரு சேலை வாங்கிக் கொடுத்தால் போதும்! அவன் சேலை எங்கே வாங்கித் தரப்போகிறான்? இவளுக்கு புலம்பலை வாங்கித் தந்தவன்! கணவனைப் பற்றிய புரிதல் மனதுள் வர நப்பின்னை எழுந்தாள்.
ஜன்னலுக்கு வெளியே எதிர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் இவள் எண்ணங்களை மாற்றியது.
சர்க்கஸ்… சிங்கம், புலிகளுடன் விளையாடும் சின்னப்பெண்!
விளம்பர வாசகங்கள்…
அம்மா சர்க்கசுக்குப் போகலாமா? அங்கே சிங்கம் இருக்கும்… புலி இருக்கும்… பார் விளையாடுவாங்க…
கண்ணன் அன்றொரு நாள் கேட்டான்.
சிங்கம் வீட்டிலேயே கர்சித்துக்கொண்டுதான் இருக்கிறது. இரை எடுக்கத் தெரியாமல் தன் எதிரில் வருபவர்களை அடித்துக் கொன்று கொண்டிருக்கிறது.
இவள்தான் பெண் புலியாய் பதுங்கிப் பதுங்கி வாழவேண்டியது இருக்கிறது! பார் விளையாட சர்க்கஸ் எதற்கு? சோமநாதனே தினம் தினம் பார் விளையாடித்தானே சோர்ந்து போய் இருக்கிறான்!
நப்பின்னை எழுந்து பல் துலக்கியபோது பழையவைகள் துலங்கின!
2
ஒரு பள்ளியின் தமிழாசிரியராய் இருந்தவர்தான் நப்பின்னை தந்தை குருநாதன்.
இவர் பெயரைப் போலவே இவர் பலரின் குருநாதன். நல்ல தமிழை அனைவருக்கும் போதித்த நல் ஆசான்!
இவர் வகுப்பெடுக்கும்போது தமிழ் கொஞ்சியது. விளையாடியது. இராமாயண பாடம் எடுத்தால் ராமனும், சீதையும் அங்கு உலா வந்தனர். சிலப்பதிகாரம் வகுப்பில் கையில் ஒற்றைச் சிலம்போடு ‘தேராமன்னா’ என்கிற கண்ணகியின் குரலைக் கேட்டனர் மாணவ, மாணவிகள். குமரகுருபரரின் பிள்ளைத்தமிழில் ‘சிறுசிறு நடந்து குறுநடை பயின்ற’ முருகனைக் கண்டார்கள் மாணவ, மாணவிகள். ‘குற்றாலக் குறவஞ்சி’யில் குறிஞ்சி மலைச்சாரலுக்கே வகுப்பு பயணித்தது. ஜோக் என்ற பெயரில் இந்தக் காலம்போல யாரையும் இழிவுபடுத்தியவர் அல்ல இவர்! இவர் எண்ணங்கள் உயர்ந்தவை.
ஆனால் இவர் பொருளாதாரத்தில் உயரத்தை எட்டவில்லை! தமிழ் சோறு போட்டது! அவ்வளவுதான்! இப்போதாக இருந்தால் சாம்பார் யார் ஊற்றினார்கள்? என்று கேள்வி கேட்பார்கள். இவர் எதையும் எதிர்பாராமல் தன் தொழிலை ‘ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்று எண்ணி வாழ்ந்தவர். இவர் மனைவி வள்ளியம்மைக்குதான் ஆதங்கம். பிழைக்கத் தெரியாத மனிதராக இருக்கிறாரே என்கிற வருத்தம்.
வீட்டிலே