Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kutumpa Vilakku
Irunta Veetu
Thamizhiyakkam
Audiobook series3 titles

Bharathithasan Complete Works

Written by Bharathithasan and Bharathidasan

Narrated by Ramani

Rating: 0 out of 5 stars

()

About this series

ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களின் அன்றைய நிகழ்வுகள் வாயிலாக எப்படி ஒரு குடும்பம் இருக்கக்கூடாது என்பதை பாரதிதாசன் தனது கவிதை நடையில் பொருட்பட புனைந்துள்ளார். எந்த ஒரு குடும்பத்தில் சோம்பேறி குணமும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றனவோ அவையே "இருண்ட வீடு'. குடும்பத் தலைவர் வாணிகத்தின் வழியாகப் பொருள் ஈட்டுகிறார். அவருக்குச் சிற்றம்பலம் என்பவர் கடன் கொடுக்க வேண்டும். இந்தச் சிற்றம்பலம் கடனைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடிவிடத் திட்டம் தீட்டியிருந்தார். இதை அறிந்த தலைவரின் நண்பர் ஒருவர், இச்செய்தியைக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார். தலைவரின் வீட்டுக்கு வந்த கடிதத்தைத் தலைவி பார்த்தாள். அவள் கல்வி அறிவு இல்லாதவள். ஆதலால், அந்தக் கடிதத்தைத் திருமண அழைப்பிதழ் என்று எண்ணினாள்; அக்கடிதத்தை ஒரு வாரமாகத் தலைவரிடம் காட்டவில்லை. கடிதம் கிடைக்காததால் தலைவர், சிற்றம்பலத்திடம் பணம் வசூலிக்க உடனே ஆள் அனுப்பவில்லை. அவன் பணத்தைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடி விட்டான் என்ற செய்தியை அறிந்து தலைவர் வருந்தினார். தலைவி கல்வி அறிவு இல்லாதவள். எனவே, தலைவனுக்குப் பொருள் இழப்பு ஏற்படக் காரணமாகிவிட்டாள். பொருள் இழப்பு ஏற்பட்டதால் தலைவர் கோபம் கொண்டார். தலைவியும் ‘விட்டேனா பார்’ என்று சண்டைக்கு எழுந்தாள். இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு தலைவர் வெளியேறி விட்டார். தலைவர் தமது கோபத்தை உணர்த்தக் கருதியதால் வீட்டை விட்டு வெளியேற எண்ணினார். தலைவி தன்னை ‘வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லித் தடுப்பாள் என்று அவர் எதிர்பார்த்தார். கல்வி அறிவும் குடும்பப் பொறுப்பும் சிறிதும் இல்லாத தலைவிக

Languageதமிழ்
Release dateJan 20, 2023
Kutumpa Vilakku
Irunta Veetu
Thamizhiyakkam

Titles in the series (3)

  • Thamizhiyakkam

    1

    Thamizhiyakkam
    Thamizhiyakkam

    பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் மதுரைக்கு வரும்பொழுதெல்லாம் மதுரை நகர்மன்றச் சாலையில் இருந்த பாரதி புத்தக நிலையத்தில் அமர்ந்து தன் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர் மதுரைக்கு வந்த ஒருமுறை நகர்வுலாச் சென்றுவிட்டு பாரதி புத்தகநிலையத்திற்கு வந்தார். அக்கடையின் உரிமையாளர் சாமிநாதனிடம் தாளும் கோலும் வாங்கி, தமிழ் வளர்த்த மதுரைத் தெருக்களிலேயே தமிழ் இல்லையே எனச் சினந்து, தமிழியக்கம் என்னும் 120 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்த இந்நூலை இயற்றினார். இந்நூலின் முதற்பதிப்பு புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தில் அமைந்திருந்த செந்தமிழ் நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. வெறுப்புண்டோ ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6

  • Kutumpa Vilakku

    2

    Kutumpa Vilakku
    Kutumpa Vilakku

    பாரதிதாசன் குடும்ப விளக்கு நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்னும் கருத்தை முன்னிறுத்தி பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமது குடும்ப விளக்கு நூலினை எழுதியுள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு எனும் நூலால் பின்னப்பட்டு, பாசவலையில் கட்டுண்டிருக்குமாறு பணித்துள்ளார். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கு தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைந்து, இல்லறம் சிறக்கிறது என்கிறார். அதிகாலையில் துயில் எழுவது முதல் தனது கடமைகளைச் செவ்வனே செய்யும் ஒரு பெண்ணாகக் குடும்ப விளக்கின் தலைவியை மிளிரச் செய்துள்ளார். நேர்மையாக வாணிபம் செய்து பொருள் ஈட்டுபவனாகத் தலைவன் படைக்கப்பட்டுள்ளான்.‌ அன்பான பெற்றோர், அழகான குழந்தைகளுடன் சிறந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்நூல் வழியாகக் காட்டியுள்ளார். பாரதிதாசனின் குடும்ப விளக்கு வழிநின்று, குடும்பங்கள் சிறப்புற அமையுமானால், இந்தச் சமுதாயம் உயர்வடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

  • Irunta Veetu

    3

    Irunta Veetu
    Irunta Veetu

    ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களின் அன்றைய நிகழ்வுகள் வாயிலாக எப்படி ஒரு குடும்பம் இருக்கக்கூடாது என்பதை பாரதிதாசன் தனது கவிதை நடையில் பொருட்பட புனைந்துள்ளார். எந்த ஒரு குடும்பத்தில் சோம்பேறி குணமும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றனவோ அவையே "இருண்ட வீடு'. குடும்பத் தலைவர் வாணிகத்தின் வழியாகப் பொருள் ஈட்டுகிறார். அவருக்குச் சிற்றம்பலம் என்பவர் கடன் கொடுக்க வேண்டும். இந்தச் சிற்றம்பலம் கடனைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடிவிடத் திட்டம் தீட்டியிருந்தார். இதை அறிந்த தலைவரின் நண்பர் ஒருவர், இச்செய்தியைக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார். தலைவரின் வீட்டுக்கு வந்த கடிதத்தைத் தலைவி பார்த்தாள். அவள் கல்வி அறிவு இல்லாதவள். ஆதலால், அந்தக் கடிதத்தைத் திருமண அழைப்பிதழ் என்று எண்ணினாள்; அக்கடிதத்தை ஒரு வாரமாகத் தலைவரிடம் காட்டவில்லை. கடிதம் கிடைக்காததால் தலைவர், சிற்றம்பலத்திடம் பணம் வசூலிக்க உடனே ஆள் அனுப்பவில்லை. அவன் பணத்தைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடி விட்டான் என்ற செய்தியை அறிந்து தலைவர் வருந்தினார். தலைவி கல்வி அறிவு இல்லாதவள். எனவே, தலைவனுக்குப் பொருள் இழப்பு ஏற்படக் காரணமாகிவிட்டாள். பொருள் இழப்பு ஏற்பட்டதால் தலைவர் கோபம் கொண்டார். தலைவியும் ‘விட்டேனா பார்’ என்று சண்டைக்கு எழுந்தாள். இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு தலைவர் வெளியேறி விட்டார். தலைவர் தமது கோபத்தை உணர்த்தக் கருதியதால் வீட்டை விட்டு வெளியேற எண்ணினார். தலைவி தன்னை ‘வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லித் தடுப்பாள் என்று அவர் எதிர்பார்த்தார். கல்வி அறிவும் குடும்பப் பொறுப்பும் சிறிதும் இல்லாத தலைவிக

Related to Bharathithasan Complete Works

Related categories

Reviews for Bharathithasan Complete Works

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words