Aagaya Pookkal
()
About this ebook
Reviews for Aagaya Pookkal
0 ratings0 reviews
Book preview
Aagaya Pookkal - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
ஆகாயப் பூக்கள்
Aagaya Pookkal
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathanam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
***
ஆகாயப் பூக்கள்
வித்யா அலுவலகத்தில் நுழைந்தாள். எல்லோரும் தன்னையே பார்ப்பது போல இருந்தது. வெட்கத்தில் முகம் சிவந்தது. தன் மேஜையின் மீது கைப்பையைக் கொண்டு வைத்தாள். இரண்டு மாதமாக உபயோகப் படுத்தப்படாத மேஜை தூசும் தும்புமாக இருந்தது. அவளைப் பார்த்ததும் ப்யூன் மாணிக்கம் ஓடி வந்து மேஜையைத் துடைத்தான்.
பக்கத்து சீட் லல்லி அவளைப் பார்த்தாள். ஹாய் விது, இன்னும் ஒரு மாசமாவது லீவ் போடுவாய் என்று நினைத்தேன்
என்றாள்.
நினைப்பாய், நினைப்பாய்,
என்று பழிப்பது போலக் கூறிய வித்யா பைல்களை எடுத்து வைத்துக் கொண்டாள்.
லல்லி எழுந்து வந்து வித்யாவின் அருகில் நின்று கொண்டாள். காதருகில் குனிந்து உன் ஹப்பி அலுவலகம் போக விட்டாரா?
என்று கேட்டாள்.
அனைவரும் அவளது கல்யாணத்திற்கு வந்தவர்கள் தான். அவளது தனிமையான சந்தர்ப்பத்தை கேலி செய்து பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவில்லை.
மாலை மூன்று மணி வரை ஒவ்வொருவரின் கேலி மொழிகளும் அவளைத் துரத்திக் கொண்டிருந்தன. கல்யாணி அவளைப் பரிகாசமாகப் பார்த்தாள்.
ஏய் விது, நீ இன்று அலுவலகம் வந்ததைக் கொண்டாடி னால் என்ன? ஒன்றும் அதிகம் வேண்டாம். எதிரே உள்ள ஹோட்டலுக்குப் போய் ஒரு எஸ் கே ஸி - முடிந்தால் ஐஸ்க்ரீம் வாங்கித் தாம்மா
என்று ஆரம்பித்தாள்.
பெண்கள் அனைவரும் பிடித்துக் கொண்டு விட்டனர். தப்ப முடியவில்லை. விவஸ்தைகள் இல்லாத அந்தரங்க கேலிகள் வேறு.
ஓ எஸ்
என்று அவள் ஆமோதித்ததும் பெண்கள் அனைவரும் கிளம்பி விட்டனர். இந்த விஷயம் ஆண்களுக்கு எட்டவில்லை; தவிர சிலர் அலுவலகம் வரவில்லை. டெஸ்ட்மாட்ச் பார்க்கப் போய் விட்டிருந்தார்கள். அதனால் பெண்கள் கிளம்புவது சுலபமாக இருந்தது.
சூப்பரிண்டெண்டெண்டு வயதானவர். ஸார் உங்களுக்கு இங்கேயே கொண்டு வரச் செய்கிறேன். நம்ம மாணிக்கம் கொண்டு வந்து விடுவான்
என்று குழைந்தாள் விது.
வெற்றிலை சீவலை மென்ற சூப்பரிண்டெண்டெண்டு தலையை அசைத்தார். அலுவலகத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ரெஸ்டாரண்டை அடைந்தனர். ஆனால் எதிர்ப்பக்கம் கடக்கும் பொழுது-
சற்று நின்றார்கள். சர்சர்ரென்று போகும் கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் விதுவிற்குக் கண்களைக் கட்டிவிட்டது போல் ஒரு மயக்கம்-கடைசி ஸ்கூட்டரில் போனது அவளது கணவன் சங்கரா? அவனுக்குப் பின்னால் ஒரு பெண், அவனது தோளைப் பற்றிப்படி-
அது நிச்சயம் சங்கர்தானா? ‘இருக்காது இருக்காது’ என்று கத்த வேண்டும் போல் நெஞ்சில் ஒரு பரபரப்பு மூண்டது. அது சங்கரானால் பின்னால் அமர்ந்த பெண் யார்? சே! நன்றாகப் பார்க்காமல் இது என்ன பரிதவிப்பு!
நெஞ்சிலிருந்து ஒதுக்க முயன்றாலும் ஒரு முள்ளாக தவறித் தைத்த ஊசியின் கூர்மையான தையலாகப் படிந்து விட்டதே. டிபன் சாப்பிட்டது, பில்லுக்குப் பணம் கொடுத்தது எல்லாமே தன் நினைவின்றிய செயலாகத்தான் செய்தாள். தோழிகள் கேலிகளை ரசிக்க முடியவில்லை.
மீண்டும் அலுவலகம் போனதும்தான் சங்கர் சீக்கிரம் தன்னை வரச் சொன்னது நினைவுக்கு வந்தது. சூப்பரிடெண் டெண்டு எதிரில் போய் நின்றாள். அவர் டிபனில் தன்னிலை இழந்திருந்தார்.
ஸார், கொஞ்சம் சீக்கிரம் போக வேண்டும்
என்றாள் விது.
அவர் நிமிர்ந்து பார்த்தார். போ… போ… நானே உன்னை அனுப்பி இருக்கணும்
என்றார் பரிகாசமாக சிரித்தபடி
விது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
பஸ் பிடித்து வீட்டிற்கு வந்த பொழுது நல்ல காலப் சங்கர் திரும்பி இருக்கவில்லை கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் பக்கத்து வீட்டில் பாலை வாங்கி வைத்து விட்டுப் போயிருந்தாள். அதை எடுத்துக் கொண்டு வந்து காய்ச்சி, டிகாக்ஷனைப் போட்டு வைத்து விட்டு வந்து உட்கார்ந்தாள்.
நெஞ்சில் புரையோடிக் கொண்டிருக்கும் சந்தேகத்திற்கு சங்கர் வந்துவிட்டால் தேவலாம் போல ஒரு வேதனை சங்கருடன் வெளியே போனால் அங்கேயே எங்காவது சாப்பிட்டு விடுவார்கள். அதனால் அவள் சமைக்கவில்லை.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து அவள் சோபாவில் படுத்தே கண்ணயர்ந்து விட்டாள். ஹால் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. பதினோரு மணிக்கு ஸ்கூட்டர் சப்தம் கேட்டது. தேய்ந்து நிற்கும் ஒலிகூட வித்யாவை எழுப்பவில்லை.
சங்கர் கதவைத் தட்டி உலுக்கிய பிறகுதான் எழுந்தாள். தூக்கம்போகாத கண்களுடன் கொட்டாவி விட்டுக் கொண்டே கதவைத் திறந்தாள். சங்கர் ஸ்கூட்டரைப் படியின் சரிவில் ஏற்றி நடையில் கொண்டு நிறுத்தினான். வித்யா கதவைச் சாத்திக் கொண்டு வந்தாள்.
அவனைப் பார்த்ததுமே ஓர் இன்ப ஊறல் அவள் உடலில் ஓடியது.