Un Vizhiyil Vizhunthen
5/5
()
About this ebook
Reviews for Un Vizhiyil Vizhunthen
1 rating0 reviews
Book preview
Un Vizhiyil Vizhunthen - Lakshmi Praba
http://www.pustaka.co.in
உன் விழியில் விழுந்தேன்
Un Vizhiyil Vizhunthen
Author :
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
உன் விழியில் விழுந்தேன்
1
பச்சை மரங்களுக்குள் பதுங்கியிருந்த பறவைகள் ‘கீச். கீச்’ என்று இன்னிசைக் கச்சேரியை ஆரம்பித்தன. எங்கிருந்தோ ஒரு சேவல் கன கச்சிதமாய் கூவியது. விடிந்ததே தன்னால்தான் என்று ஏழெட்டு முறை கம்பீரமாய், ஆணவமாய் தனது கழுத்தை உயர்த்தித் தூக்கிக் கூவி விட்டு அடங்கியது.
பனி சாம்பிராணி போட்டது போல் பரவிக் கிடந்தது. உதயா சேலையை உயர்த்திச் செருகி நெளி நெளியாய் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். ஈரக் கூந்தலை டவலால் சுற்றி... கொண்டை போட்டிருந்தாள்.
தந்தத்தைக் கடைந்தாற் போன்று… பளிச்சென்ற நிறம். ரோஜாவின் மென்மையைப் பிரதிபலித்த தேகம்... கை தேர்ந்த ஒவியன் ஒருவன் வரைந்து வரைந்து ஒவ்வொன்றையும் முகத்தில் ஒட்ட வைத்தது போல்... களையாக கவிதை பாடலாம் போலிருந்தாள்.
வாசலருகே நின்ற பவளமல்லிகை மரத்தில்… பூக்கள் பூத்துக் குலுங்கி தன் சுகந்த நறுமணத்தை அந்தத் தெருவெங்கும் விநியோகம் செய்து கொண்டிருந்தது. ஆழ மூச்செடுத்து அந்த சுகந்த மணத்தை ரசித்த உதயா... கோலப் பொடி கிண்ணத்தை நிலைப்படியருகே வைத்துவிட்டு வந்தாள்.
பவள மல்லிகை மரத்தடியில்… தரையெங்கும் கொட்டிக் கிடந்த பவள மல்லிப் பூக்களைக் கொஞ்சம் அள்ளி யெடுத்தாள். படியேறி கூடம், கம்பி போட்ட முற்றம், தாழ் வாரம், ரேழியைக் கடந்து.. கொல்லைப் புறக் கதவைத் திறந்தாள்.
சில்லென்ற காற்று சுதந்திரமாய் உள்ளே புகுந்து… அவளது அழகிய முகத்தை இதமாய் ஸ்பரிசித்தது. கிணற்று மேடையிலிருந்து பத்தடி தள்ளி நின்ற துளசி மேடையில் செழிப்பாக வளர்ந்திருந்தது துளசிச் செடி.
துளசி மேடையிலும், செடியிலும் பூக்களைத் தூவி, தொட்டு வணங்கி விட்டு கூடத்திற்கு வந்தாள் உதயா.
கூடத்தில்... சாமி சிலைகளும், படங்களும் வைக்கப் பட்டிருந்த அலமாரிக்கும் கீழே குத்து விளக்கை ஏற்றி வைத்தாள். எதிர்ப்புற சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தருகே வந்து நின்றாள்.
அவளையும் அவளது அக்கா சூரியாவையும் உள்ளங் கையில் வைத்துத் தாங்கிப் பாச மழை பொழிந்த தந்தை நடேசன். அந்தப் பெரிய சட்டத்துக்குள் அடங்கி... முகத்தில் சாந்தம் தவழ, இதழோரம் சிறு புன்னகையுடன் அவளை நேர்ப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
சேர்ந்தாற்போல் இரு நிமிடங்கள் நின்று அவரது படத்தை உற்று நோக்க முடியாதபடி.. அவளது அழகிய விழிகளில் நீர்த்திரையிட்டது.
‘எங்களை அம்போன்னு தவிக்க விட்டுட்டுப் போயிட் டீங்களே அப்பா?’
அவளது இமைக்கரைகளைத் தாண்டி. கன்னங்களில் வாய்க்கால் போட்டுக் கொண்டு வழிந்தது கண்ணீர்.
உள்ளறையிலிருந்து வந்த அண்ணன் சபேசனின் இருமல் சத்தம்… அவளைக் கலைத்தது. சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அடுப்பங்கரைக்குள் அடைக்கலமானாள்.
பாத்திரத்தைக் கழுவி பாலை ஊற்றி அடுப்பில் வைத்தாள். காய்கறிகளை நறுக்கத் தொடங்கினாள். காலை நேரப் பரபரப்பு தொற்றிக்கொள்ள... கால்களில் சக்கரத்தை மாட்டிக் கொள்ளாத குறையாகப் பம்பரமாகச் சுழன்றாள்.
அண்ணி சுகந்தி தனது அனந்த சயனத்திலிருந்து அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்து கொள்ள மாட்டாள். ஆனால்… எழுந்ததுமே காபி, டிபன் எல்லாமே தயாராக இருக்க வேண்டும்.
மதிய உணவையும் தயாரித்து வைத்து விட்டுத்தான் உதயா கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பது அண்ணியின் உத்தரவு!
வீரபாண்டி கிராமத்துல பிறந்தவளுக்கு அப்படியென்ன படிப்பு வேண்டிக்கிடக்கு? பஸ் பிடிச்சு ஊர் விட்டு ஊரு போயி... பெரிய குளம் காலேஜூல பட்டப் படிப்பு படிக்கலையின்னு யார் அழுதா?
"பொண்ணாப் பொறந்தவ வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். வீட்டு வேலைகளை மாங்கு மாங்குனு இழுத்துப்போட்டு செய்யணும். நாளைக்கு கட்டிக் குடுத்த இடத்துல வேலை செய்யத் தெரியாம... கையைப் பிசைஞ்சுகிட்டு நின்னா… வளர்த்த லட்சணம் பாருன்னு என்னைத்தான் காறித்துப்புவாங்க...
"உங்க அக்காவைக் கட்டிக் கொடுத்தோம். பெரிய கட மையை செய்து பாரத்தை இறக்கிட்டோம்னு நிம்மதியா இருக்க முடியுதா? ஒழுங்கா லட்சணமா குடும்பம் நடத்தினாளா? துப்பு கெட்ட ஜென்மம்னு பேரெடுத்து… எங்க மானத்தை வாங்கிட்டிருக்கா...
"கடல் மாதிரி பெரிய வீடு… பீம சேனன் மாதிரி திட காத்திரமான புருஷன்… பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட்டாலும் கரையாத சொத்து... எப்பேர்ப்பட்ட எடத்துல நம்ம அண்ணி கஷ்டப்பட்டு... நம்மை மகா ராணியா உட்கார்த்தி வச்சாளேங்கிற நன்றி இருக்கா?
"உங்க அக்காளை மாதிரி நீயும் நன்றி கெட்ட ஜென்மமா இருக்காதே? ரெண்டு பொண்ணுங்களைப் பெத்து என் தலையில கட்டிட்டு. பொசுக்குனு போய் தொலைஞ்சுட்டாரே உங்கப்பா?
இந்த வீட்டுக்கு வாழ வந்த பாவத்துக்கு. நான் உழைச்சு ஓடாத் தேய்ஞ்சுட்டேன்.
அண்ணி சுகந்திக்கு நல்ல சரீரம்… அளந்து பார்க்க இன்ச் டேப் போறாது. வெண்கலத் தொண்டை வேறு… எதற்கோ ஆரம்பித்து எங்கெங்கோ சென்று… அனைவரையும் இழுத்துத் தூற்றி விட்டுத் தான் அடங்குவாள்.
அண்ணியின் உபயத்தால் உதயாவுக்கு அந்த வீட்டில் தினப்படி லட்சார்ச்சனை நடக்கும்.
அண்ணன் சபேசன் எதையும் கண்டு கொள்ள மாட்டான். சத்தம் இல்லாமல் நகர்ந்து விடுவான். சுகந்திக்கு மூன்று முடிச்சு போட்ட தினத்திலிருந்தே அவன் ‘தலை யாட்டி பொம்மை’யாகி விட்டிருந்தான்.
சபேசனை விட பதினைந்து வயது இளையவள் உதயா. அக்கா சூரியா இவளை விட ஏழு வயது மூத்தவள்.
உதயா பெரிய குளம் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். கல்லூரியை விட்டு வரும் வழியில் தேனியில் இறங்கி கம்ப்யூட்டர் சென்டருக்குச் சென்று. கம்ப்யூட்டர் கோர்ஸும் கற்று வந்தாள்.
அவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தருணத்தில்... அந்த ஞாயிற்றுக் கிழமை நெஞ்சு வலியால் துடித்தார் நடேசன்.
அண்ணன் சபேசன் டாக்ஸியைப் பிடித்தக் கொண்டு வந்தான். தேனியிலிருந்த பிரபல மருத்துமவனையை நோக்கி டாக்ஸி பறந்தது.
மகனின் மடி மீது தலைவைத்துப் படுத்தபடி வலியால் துடித்த நடேசன் திக்கித் திணறிப்பேசியது… இன்றளவும் உதயாவின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு தானிருந்தது.
"ச… சபேசா! உங்கம்மா என்னைக் கூப்பிடற மாதிரி இருக்குப்பா... நா. நான் கண்ணை மூடிட்டா.. தங்கைகளை நீ தான் கரையேத்தணும். உ.. உ.. உங்கம்மாவோட நகைங்க இருக்கு... நான் சேர்த்து வச்சதே. அவங்க எதிர்காலத்துக்கு எதேஷ்டமா இருக்கும். எந்த விதத்துலேயும் அவங்க உனக்கு பாரமா இருக்க மாட்டாங்க...
அவங்களை நல்லாப் படிக்க வைச்சு.. ந.. நல்ல.. எடத்துல பிடிச்சுக் கு.. குடுத்துடுப்பா.. தாயில்லாப் பொண்ணுங்களுக்கு… இனிமே.. இ.. இனிமே எல்லாமே நீ தான்.