Oru Naal Iravu
()
About this ebook
Reviews for Oru Naal Iravu
0 ratings0 reviews
Book preview
Oru Naal Iravu - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
ஒரு நாள் இரவு
Oru Naal Iravu
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
ஒரு நாள் இரவு
நாலு முழம் ஜாதிமல்லி, அரைக் கிலோ மில்க் ஸ்வீட், கால் கிலோ மிக்ஸர். வேறு ஏதாவது விட்டுவிட்டோமா என்று யோசித்தான் பிரபு. ம்ஹஇம், எதுவுமில்லை, சரண்யாவுக்குப் பிடித்தவை அவை மூன்றுதான்.
மோட்டார் பைக்கின் ஸைட் பாகில் அவற்றைப் போட்டுவிட்டு உதைத்து கிளப்பினான். வண்டி காற்றாய்ப் பறந்தது. பாரீசிலிருந்து தாம்பரம் எத்தனை கிலோ மீட்டரோ தெரியாது. இன்னும் அரைமணியில் சரண் யாவைப் பார்க்கப் போகிறோம் என்று நினைக்கும்போது அவனுக்கு தேன் மழையில் குளிப்பதுபோல் சுகமாயிருந்தது.
பிரபு-சரண்யா கல்யாணம் நடந்து சரியாய் இருபது நாட்களே ஆகின்றன. ஆனி மாதக் கடைசியில் கல்யாணம். கல்யாணத்தன்று முதலிரவு இருக்கும் என்று எதிர்பார்ப் போடு காத்திருந்தவனது எண்ணத்தில் மண். அம்மா பெரிய குண்டாய் தூக்கிப்போட்டாள். நல்ல நாள் பாத்து நாங்க பிற்பாடு வெச்சுக்கறோம். ஆடி மாசம் கழியட்டும்
என்று கூறிவிட்டாள்.
ஆடி பிறப்பதற்கு இரண்டே நாள்தான் இருந்தன. அந்த இரண்டு நாளும் வேறு வழியின்றி அசடு வழிய மனைவியை கண்களால் தழுவினான். அவ்வளவே. புதுப் பெண்ணாதலால் சரண்யாவோ அவன்கிட்டே டோனாலேகாத தூரம் ஓடினாள். அதன்பின் ஆடி பிறந்து அவள் தாய் வீடு சென்று விட்டாள்.
ஆயிற்று இன்னும் பதினைந்தே நாள். ஆவணி பிறந்து விடும். பிரபு எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிடும். பிரபு பைக்கை ஒட்டியபடியே மெல்ல சீட்டியடித்தான்.
மாமனார் வீடு நெருங்கியதும் நியூட்ரலில் வண்டியை ஒட விட்டுவிட்டு வாசலில் சத்தமின்றி நிறுத்தினான். சந்தி கால வேளையானதால் வாசல் கதவு திறந்தே இருந்தது. வீடு நிசப்தமாயிருந்தது. மெதுவாக பூனை மாதிரி உள்ளே சென்று கேன்வாஸ் ஷஅவைக் கழட்டினான். ஊஞ்சல் சப்தம் மெதுவாகக் கேட்டது. நடையிலிருந்து ஹா எட்டிப் பார்த்தான். இவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு ஒருக் களித்த நிலையில் ஏதோ புஸ்தகம் படித்துக் கொண்டிருந் தாள் சரண்யா.
மெல்ல ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலின் அருகில் வந்து அதன் போக்கிலேயே சென்று சட்டென்று அப்படியே படுத்து அவளை அணைத்துக்கொள்ள வீல் என்று எத்தினாள் சரண்யா.
ஆமா, எங்கே பூதங்களை எல்லாம் காணும்?
பூதமா?
ம்! உன்னை பொத்தி பொத்தி வெச்சுக்குமே கண்லயே காட்டாம. அதுங்களத்தான் சொல்றேன்.
சரண்யா காபி கொண்டு வரும்போது ராமையாவும் அலமேலுவும் உள்ளே வந்தனர்.
வாங்க மாப்பிள்ளை? எப்ப வந்தீங்க?
தோ இப்பதான் ரெண்டே ரெண்டு நிமிஷந்தான் ஆச்சு.
பக்கத்து கோயில் வரைக்கும் போயிருந்தோம். ஏதோ காலட்சேபம் நடக்குது வாங்களேன்னா.
"அடடா, ஏன்