Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkey Uyiraanen
Unakkey Uyiraanen
Unakkey Uyiraanen
Ebook98 pages52 minutes

Unakkey Uyiraanen

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
LanguageUnknown
Release dateJun 18, 2016
ISBN6580105700884
Unakkey Uyiraanen

Reviews for Unakkey Uyiraanen

Rating: 4 out of 5 stars
4/5

6 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Excellent and revolutionary story selldom writers have the courage to write about women

Book preview

Unakkey Uyiraanen - Vidhya Subramaniam

http://www.pustaka.co.in

உனக்கே உயிரானேன்

Unakkey Uyiraanen

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidhya Subramaniam

For more books

http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

உனக்கே உயிரானேன்

1

அட்டோ அண்ணா சாலையின் சிக்னல் ஒன்றில் நின்றபோது மீனாட்சியின் மொபைல் போன் சத்தமின்றி அதிர்ந்தது. ஏதோ அழைப்பு வருவதை உணர்ந்த, மீனாட்சி அதன் திரையில் ஒளிர்ந்த எண்களைப் பார்த்தாள். லோகேஸ் வரனின் மொபைல் எண்கள் பெயருடன் தெரிந்ததும் முகம் மலர ஹலோ என்றாள்.

எங்க இருக்க? அவர் குரலில் வழக்கமான உற்சாகமில்லை.

ஆட்டோல போயிட்டிருக்கேன். என்ன, சொல்லுங்க.

அப்பா.

அப்பாக்கென்ன?

போய்ட்டார்.

மீனாட்சி அதிர்ந்து போனாள். நெஞ்சில் பந்தாய் ஏதோ அடைத்தது.

'இதோ நான் வந்துடறேன். வீட்லதானே இருக்கீங்க?"

ஸ்டேஷன் போனும். டிக்கெட்ஸ் கிடைக்குதான்னு பாக்கணும்.

‘'வேணாம். நீங்க வீட்லயே இருங்க. நான் போய் டிக்கெட் வாங்கிடறேன். யார் யார்க்கு வாங்கட்டும்னு மட்டும் சொல்லுங்க."

‘'வேற யார்க்கு? எனக்கும், பசங்களுக்கும் வாங்கிடு."

மீனாட்சி உதட்டைக் கடித்துக் கொண்டாள். பளிச் சென்று உள்ளே மின்னலாய் ஒரு வலி. ஒரு கணம்தான். சட்டென்று அதைக் கடந்தாள்.

சரி, வாங்கிடறேன்.

அப்படியே அவங்க ரெண்டு பேர்க்கும் ரிடர்ன் டிக்கெட்டும் வாங்கிடு. நாளன்னிக்கு வராப்போல.

சரி. வேறென்ன வேணும்? ஏதாவது சாப்பிட்டீங்களா?

"பட்டினி கிடந்தா அப்பா திரும்பிடுவாரா? உங்க ஹெல்த்தும் முக்கியம். பாலாவது சாப்பிடுங்க. ஊருக்குப் போய் எவ்வளவு வேலையிருக்கு. ’’

சரி. நீ சீக்கிரம் வா.

மீனாட்சி மொபைலைக் கைப்பையில் வைத்தாள். ஆட்டோவை எழும்பூருக்குத் திருப்பச் சொல்லி விட்டு, மீண்டும் செல்லை எடுத்து யாருடனோ பேசினாள்.

ப்ளீஸ் சார். அவசரமா தென்காசிக்கு மூணு டிக்கெட் வேணும். நான் வந்துட்டே இருக்கேன். டிரை பண்ணுங்க. சரியா?

ஆட்டோ எழும்பூர் ஸ்டேஷனுக்கு முன் நிற்க, பணத்தைக் கொடுத்துவிட்டு வேகமாய் உள்ளே நடந்தாள். சற்று முன் போனில் பேசியிருந்த நபரைத் தேடிச் சென்றாள்.

''சாரி மேடம்." உதடு பிதுக்கினான் அவன்.

இல்லைங்க. இது ரொம்ப அவசரம். ஒரு டெத். போயே ஆகணும்.

நீங்க வேணா அவரைப் பாருங்களேன். வேறொரு நபரின் பெயரைக் குறிப்பிட்டான் அவன்.

சரி. அவள் உடனே போனாள். ஒரு மணி நேரம் அங்கே அலையாய் அலைந்து ஒரு வழியாய் டிக்கெட் கிடைத்தபோது சோர்ந்து போயிருந்தாள்.

கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.

வீடு நிசப்தமாக இருந்தது. எப்போதும் சிரிப்பும், சங்கீதமும், பேச்சும் நிரம்பியிருக்கும் அந்த வீட்டின் அமைதி அவளைத் துக்கப்படுத்தியது. சோபாவில் கண் மூடி அமர்ந்திருந்த லோகேஸ்வரனை இதுவரை இப்படிக் கண்டதில்லை.

மரணம் மனிதரைப் புரட்டிப் போட்டு விடும் என்பது உண்மைதான். அவர் அருகில் சென்று அமர்ந்தவள் தன் அன்பு அத்தனையும் திரட்டி அணைத்துக் கொண்டு அந்த துக்கத்திலிருந்து அவரை மீட்டு விட முயற்சித்தாள்.

சட்டென்று குழந்தையாய் மாறி அவள் தோளில் சரிந்தவரின் கண்ணிர் சூடாக அவள் தோளில் வழிந்தது. என்ன பேசுவதென்று புரியவில்லை. வாயால் சொல்ல முடியாத ஆறுதல் வார்த்தைகளைக் கைகள் மூலம் அவருக்குள் கடத்தினாள்.

டிக்கெட் கிடைச்சுதா?

சற்றுப் பொறுத்து இயல்புக்கு வந்தார்.

வாங்கிட்டேன்.

அவள் சொல்ல, அவர் முகத்தில் ஒரு பெரிய கவலை கரைந்து விலகியது. நன்றியோடு அவளைப் பார்த்தார்.

இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு. நான் போய்த் துணிமணி யெல்லாம் எடுத்து வெக்கறேன். சாந்தியும் ராஜாவும் எங்கே?

மாடில இருக்காங்க.

அவள் மாடிக்குப் போனாள்.

டிக்கெட் கிடைச்சுடுச்சா ஆன்ட்டி. முக்கியமா ரிடர்ன் கிடைச்சுடுச்சா? சாந்தியின் குரலில் கவலை. திரும்பியதும் பரிட்சை காத்திருந்தது.

கிடைச்சுடுச்சுடா. பேச டைம் இல்ல. உடனே கிளம்புங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல வண்டி ஏறியாகணும்.

மீனாட்சி மூன்று பேருக்கும் துணிமணிகள் பேஸ்ட், பிரஷ், டவல் என்று எதுவும் விட்டுப் போகாமல் எடுத்து வைத்தாள். டிரைவரைக் காரைத் தயாராக வைத்திருக்கச் சொன்னாள்.

அரை மணியில் அவர்கள் தயாரானார்கள். அதற்குள் சூட்கேஸ்களைக் காரில் ஏற்றினாள்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் அனைவரும் ஸ்டேஷனில் இருந்தார்கள். வண்டி புறப்படப் பத்தே நிமிடம்தான் இருந்தது. கோச் எண் பார்த்து அவசரமாய் ஏறினார்கள். மீனாட்சி ஜன்னலுக்கு வெளியே நின்று பேசினாள்.

இந்த துக்கத்துக்கெல்லாம் ஆறுதலே கிடையாது. நாமளாத்தான் மீண்டு வரணும். காலம் மெல்ல மெல்ல அதைக் கரைக்கும். அப்பாவுக்குச் செய்ய வேண்டியதை யெல்லாம் சிறப்பா செய்ங்க. அவர் கையை அழுத்திப் பிடித்தபடி சொன்னாள். அவர் கண்கள் லேசாய்க் கலங்கின.

என்னப்பா இது, கண்ணைத் துடைங்க!

தானே துடைத்து

Enjoying the preview?
Page 1 of 1