Devathai Vamsam
4.5/5
()
About this ebook
Reviews for Devathai Vamsam
5 ratings0 reviews
Book preview
Devathai Vamsam - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
தேவதை வம்சம்
Devathai Vamsam
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
தேவதை வம்சம்
1
மாலை மாற்றும் போதுதான் புருஷனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள் பவித்ரா. ஒப்புக்குக் கூட ஒரு புன்னகையின்றி இறுகிய பாறையாயிருந்தது தினகரின் முகம். ஒரு கல்யாண மாப்பிள்ளையின் முகம் இப்படியா இருக்கும்? யாரிடம் கோபம் இவனுக்கு? முகத்தை இப்படி இறுக்கமாக வைத்துக் கொள்ளுமளவுக்கு என்ன பிரச்சனை?
யாரோ அவன் அங்கவஸ்திரத்தையும் அவள் புடவைத் தலைப்பையும் முடிச்சிட அவர்கள் மும்முறை அக்னி வலம் வந்தார்கள்.
தாலி கட்டும் போது அவன் முகத்தின் இறுக்கம் இன்னும் அதிகரிக்க இனம் புரியாத கலக்கம் அவள் அடிவயிற்றில் பரவியது.
முகூர்த்தச்சடங்குகள் முடிந்ததும் யார்யாரோகை குலுக்க வர, ஒன்றிரண்டு பேரிடம் மட்டும் கை குலுக்கி விட்டு மாலையைக் கழட்டி வைத்து விட்டு வேகமாய் தனக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்கு அவன் செல்ல தனியே நின்றபடி மலங்க மலங்க விழித்தாள். மற்றவர்கள் அதை பெரிய விஷயமாய் எடுத்துக் கொண்டாற்போல் தெரியவில்லை.
வந்திருந்த கூட்டம் சாப்பாட்டு ஹாலை நோக்கி படையெடுக்க, பவி நீயும் கொஞ்சம் வேணா ரெஸ்ட் எடுத்துக்க
. அம்மாவின் குரல் அருகில் கேட்டது.
பவித்ரா மணப்பெண் அறையை நோக்கி நடந்தாள்.
அங்க எங்க போங்கண்ணி இங்க வாங்க
தினகரின் தங்கை பின்னாலேயே ஒடி வந்து அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள்.
"அண்ணன் இங்க இருக்கும்போது அவரை தனியா விட்டுட்டு நீங்க போனா எப்படி? கேட்டவாறு அறைக் கதவை தட்டினாள்.
யாரது?
எரிச்சலோடு கேட்டான் தினகர். நாந்தாண்ணா ரம்யா.
என்ன?
என்றபடி அவன் கதவைத் திறக்கும் போது ரம்யா ஒடி மறைந்தாள். திருதிருவென்று நின்றிருந்த பவித்ராவைக் கண்டதும் அவன் முகம் மாறியது.
உங்க தங்கைதான்... நா வேணா போயிட்றேன்
அவன் முகமாற்றம் கண்டதும் அவள் அவசரமாகக் கூறினாள்.
உள்ள வா
, கரகரத்த குரலில் அவன் அழைக்க தயங்கியபடி உள்ளே போனாள். கதவைத் தாளிட்டு விட்டு வந்தான் அவன்.
உட்கார்
கட்டிலைச் சுட்டிக்காட்டினான். அவள் உட்கார்ந்ததும் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு எதிரில் உட்கார்ந்தான்.
என்னைப் பத்தி என்ன நினைக்கற?
எடுத்த எடுப்பில் இப்படி ஒரு கேள்வி வந்து விழுந்ததும் தடுமாறிப் போனாள் அவள்.
ஒண்ணும் நினைக்கல.
முட்டாளா நீ...?
"ம்... ?
ஒண்ணுமே நினைக்காமயா எனக்கு கழுத்து நீட்டின?
பெரியவங்க ஏற்பாடு இது.
என்னோட சந்தோஷமா வாழ்வோம்னு நம்பிக்கை இருக்கா?
நிறைய.
நீ ஏமாந்து போகப்போற! உனக்கு துக்கத்தை தவிர வேற எதுவும் மிஞ்சப்போறதில்ல. அவள் மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.
இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்ப மில்லையா?
இல்லவே இல்ல
தென் ஒய்...? ஏன் சம்மதிச்சீங்க?
நிர்ப்பந்தம்
எதனால என்னைப் பிடிக்கல?
நாகாதலிக்கற பெண் கர்ப்பமா இருக்கா.
கடவுளே...!
அவள் அதிர்ந்தாள். அழுகை தொண்டையை அடைத்தது. தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் இப்படி கவிழ்க்கப்படுவோம் என அவள் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு துணிச்சலிருந்தால் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவான்...! இவன் தாலி கட்டவில்லை என்று நான் அழுதேனா? அவள் ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தாள். அவன் கழுத்தை அப்படியே நெறித்துக் கொன்றால் கூட பாவமில்லை என்று தோன்றியது.
எதுக்காக அவளை விட்டுட்டு என் கழுத்துல தாலி கட்டினிங்க...?
ரொம்ப சிம்பிள்... எங்கப்பாவோட சொத்துக்காகத்தான்.
வெக்கமால்ல இப்டி சொல்ல?
இதுல என்ன வெக்கம்? நா ஒண்ணும் சினிமா ஹீரோ இல்ல, லட்சியம் பேச ஐ ஆம் எ பிராக்டிகல் மேன். எனக்கு காதலும் முக்கியம் காசும் முக்கியம். அப்பா எங்க காதலுக்கு ஒத்துக்கல. அவர் வழிக்குப் போறதைத் தவிர வேற வழியில்ல. ஸோ... காசுக்காக இந்த கல்யாணம். என் சந்தோஷத்துக்கு அந்த கல்யாணம்.
நாகாட்டிக் கொடுத்துட்டா...? உங்கப்பாகிட்ட சொல்லி உங்களுக்கு காசு கிடைக்காம செய்துட்டா...?
தாராளமாக செய். நீ எங்கப்பாகிட்ட சொல்ற அதே நேரம் நா உங்கப்பா கிட்ட சொல்லுவேன். உங்க பொண்ணு வாழ்க்கை விஷயத்துல நீங்க ஏமாந்துட்டீங்கன்னு. உங்கப்பா ஒரு ஹார்ட் பேஷண்ட் இல்ல?
அவன் அலட்சியமாக அவளைப்பார்க்க, அவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.
அப்பாவுக்காகத்தான் அவள் இந்த கல்யாணத்திற்கே சம்மதித்தாள். சென்ற வருடம் இதே நேரம் அவருக்கு பைபாஸ் சர்ஜரி நடந்து அவரோடு சேர்ந்து அனைவருமே படாதபாடு பட்டு விட்டனர். டிஸ்சார்ஜ் ஆன நிமிடத்திலிருந்து அப்பா அவள் கல்யாணம் குறித்து கவலைப்படத் துவங்கி விட்டார். எம். பி. ஏ படித்துக் கொண்டிருந்தவளுக்கு படிப்பு முடிவதற்கு முன் அவசரமாய்