Dr. Jekyliyum Mr. Hydeyum
By Sivan
()
About this ebook
Related categories
Reviews for Dr. Jekyliyum Mr. Hydeyum
0 ratings0 reviews
Book preview
Dr. Jekyliyum Mr. Hydeyum - Sivan
http://www.pustaka.co.in
டாக்டர் ஜெக்கிலும் மிஸ்டர் ஹைடும்
Dr. Jekyiliyum Mr. Hydeyum
Author:
சிவன்
Sivan
For more books
http://www.pustaka.co.in/home/author/sivan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
வழக்கறிஞர் அட்டர்ஸன் மிகவும் கறார்ப் பேர்வழி. அவரது முழுப்பெயர் ஜான் கேபிரியேல் அட்டர்ஸன். உயரமான மெலிந்த உடல்வாகு. எப்போதாவது மட்டுமே புன்னகைப்பார் - அதுவும் மிகவும் மெலிதாக மனதுக்குள் அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார். மற்றவர்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஆர்வத்துடன் ரசிப்பார். ஆபத்தில் உதவக் கூடியவர். எவரையும் திட்டமாட்டார்.
அவ்வளவு சுலபத்தில் எவரிடமும் நட்புக் கொள்ள மாட்டார். நீண்ட நாளாகப் பழகியவர்கள் அல்லது உறவினர்கள் மட்டுமே அவருக்கு நண்பர்கள். ரிச்சர்டு என்ஃபீல்டு என்றொரு மைத்துனர் இருக்கிறார். தூரத்து உறவினராக இருந்த போதிலும் வழக்கறிஞரின் நெருங்கிய நண்பர் அவர்தான். நகைச்சுவைப்பிரியரான என்ஃபீல்டு, நகருக்கு அருகில் வசிக்கிறார். எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஒன்றாக உலாவச் செல்வார்கள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று லண்டனின் ஜனநெரிசல் மிகுந்த தெருவை அவர்கள் அடைந்தனர். பாதையோரத்தில் வரிசையாகநின்று கொண்டு, வியாபாரிகள் போட்டிபோட்டு வியாபாரம் செய்தனர். பாதையின் இரு புற விளிம்புகளிலும் ஏராளமான வீடுகள். வீடுகளுக்கு நடுவே ஆங்காங்கே சில கடைகளும் இருந்தன.
இந்தச் சாலையில் கிழக்கு நோக்கித் திரும்பும் வளைவைக் கடந்தால் இடப் புறத்தில் மூன்றாவதாக வீடு ஒன்று தென்படும். பாதையை ஒட்டி எழும்பி நிற்கும் இரண்டு மாடிக் கட்டடம். அதன் கீழ்த்தளத்தில் ஜன்னல்கள் எதுவுமில்லை. அழுக்கடைந்த ஒரே ஒரு வாசல் மட்டுமே உள்ளது. பிச்சைக்காரர்கள் அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து ஓய்வு எடுப்பது உண்டு. அவர்களில் சிலர் தீக்குச்சியைச் சுவரில் உரசி, சிகரெட்டுக்குத் தீ கொளுத்துவார்கள். அந்த வீட்டின் வாசற்படியில் குழந்தைகள் கடை வைத்து விளையாடுவார்கள். அங்கு வந்து அமரும் வேறு சிலரோ, அங்குள்ள நிலைவாசற் கதவில் கத்தியால் ஓவியங்கள் செதுக்குவார்கள். ஒருபோதும் இப்படிப்பட்டவர்களை விரட்டியடிக்கவோ, அந்த வீட்டைச் சுத்தப்படுத்தவோ எவரும் முற்படுவது இல்லை!
என்ஃபீல்டும், வழக்கறிஞரும் அந்த வீட்டின் முன்புறத்தை அடைந்தனர். தன் கையிலிருக்கும் சிறு பிரம்பினால் சுட்டிக்காட்டியபடி என்ஃபீல்டு கேட்டார்:அந்தக் கதவை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?
‘கவனித்திருக்கிறேன்’ என்ற பொருளில் அட்டர்ஸன் தலையாட்டினார்.
மிகவும் துயரம் நிறைந்த ஒரு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட அந்த நிகழ்ச்சி, என் மனத்தில் அப்படியே பதிந்திருக்கிறது!
அப்படியா… என்ன சம்பவம் அது?
அட்டர்ஸன் ஆர்வத்துடன் கேட்டார்.
அது ஏறத்தாழ இப்படித்தான்!
என்ஃபீல்டு கூறத்தொடங்கினார்:"பனிப்பொழிவு மிகுந்த ஒரு விடியற்காலை நேரம். சுமார் மூன்று மணியிருக்கும். விருந்து ஒன்றில் பங்கெடுத்துவிட்டு இந்த வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். பெரும்பாலான மனிதர்கள் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் வேளை. தெருவிளக்குகள் ஒளிசொரிந்து கொண்டிருந்தன. பாதையில் எவராவது தென்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வேகவேகமாகக் கிழக்கு நோக்கி நடந்து வருவதைக் கவனித்தேன். குள்ளமான ஒரு மனிதர். அவருக்கு எதிரில் எட்டு அல்லது பத்து வயது மதிக்கத் தக்க பெண்குழந்தை ஒன்று. அவளும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.
"தெருவின் இந்த மூலைப் பகுதியை நெருங்கியதும் இருவரும் மோதிக் கொண்டனர். என்னை இப்போதும் நடுங்க வைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது அப்போதுதான். தரையில் விழுந்த அந்தப் பெண் குழந்தையைப் பிடித்து எழுப்புவதற்கு பதிலாக, அவளைக் காலால் மிதிக்கத் தொடங்கினார் அந்தக் குள்ளமான மனிதர். அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தாள். என்னை பயப்படுத்தும் ஒரு காட்சியாக இருந்தது அது. விரைந்து சென்ற நான் அவரைப் பாய்ந்து பிடித்தேன். அதற்குள் அங்கு ஒரு சிறு கூட்டம் சேர்ந்துவிட்டது. விரைவிலேயே டாக்டர் ஒருவரும் வரவழைக்கப்பட்டார். இவ்வளவெல்லாம் நடந்தும் குள்ள மனிதர் அமைதியாக நின்றிருந்தார். ஆனால்இஅவர் முகத்தில் தென்பட்ட உணர்ச்சி இருக்கிறதே… குளிரால் நடுங்கும் அந்த விடியற்காலை நேரத்திலும் அந்த முகத்தைப் பார்த்த என் உடல் குப்பென்று வியர்த்தது. அதற்குள் அந்தச் சிறுமியின் வீட்டினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
குள்ள மனிதர் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தார் எனினும், அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் சற்றுத் திகைப்பு அடைந்தார் என்று தோன்றுகிறது. கோபத்துடன் நிற்கும் ஆட்களைப் பார்த்தபடி அவர் கூறினார்:
இந்தச் சம்பத்தைப் பெரிதுபடுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்றால், நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அந்தக் குழந்தைக்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்!"
அந்தச் சிறுமியின் வீட்டாருக்கு அவர் நூறு பவுண்ட் பணம் கொடுக்க வேண்டும் என்ற சமரசத்தில் நாங்கள் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தோம். ஆனால் , அந்தப் பணத்தை எப்படிப் பெறுவது? பணம் எடுப்பதற்காக