Puthaiyal Theevu
By Sivan
()
About this ebook
Reviews for Puthaiyal Theevu
0 ratings0 reviews
Book preview
Puthaiyal Theevu - Sivan
http://www.pustaka.co.in
புதையல் தீவு
Puthaiyal Theevu
Author:
சிவன்
Sivan
For more books
http://www.pustaka.co.in/home/author/sivan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ஓர் அறிமுகம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
ஓர் அறிமுகம்
உலகப் புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆர். எல். ஸ்டீவென்சன். இவரது முழுப் பெயர் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன். இவர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்க் நகரில் 1850-ம் ஆண்டுஇநவம்பர் மாதம் 13-ஆம் தேதி பிறந்தவர். சட்டம், இவரை மிகவும் கவர்ந்த ஒரு பாடமாக இருந்ததால், சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். இவரது உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டதால் வெயில் நிறைந்த பகுதிகளிலேயே பெரும்பாலும் இவர் பயணம் செய்ய நேர்ந்தது. சட்டத்துறையைவிடஇஇவர் அதிகம் புகழ்பெற்றது எழுத்தின் மூலமாகத்தான். இவரது படைப்புகளிலேயே மிகவும் அதிகப் புகழ்பெற்றது டிரஷர் ஐலண்ட் (புதையல் தீவு) தான். உலகம் முழுவதிலுமுள்ள சிறுவர்-சிறுமியர் ஒட்டுமொத்தமாக விரும்பும் ஒரு நவீனம் இது. ஸ்டீவென்சனின் முப்பத்து மூன்றாவது வயதில் - 1883-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. இவரது குறிப்பிடத்தக்க மற்றும் சில படைப்புகள்: டாக்டர் ஜெக்கில் அண்டு மிஸ்டர் ஹைடு (1886), தி மாஸ்டர் ஆஃப் பாலன்ட்ரா (1889) , கிட்நாப்டு (1889).
வெப்பப் பிரதேசமான சாமோ தீவில் மனைவி ஃபேன்னியுடன் வசித்தார். இவரது கதை சொல்லும் பாணியால் ஈர்க்கப்பட்ட இவரது அண்டை அயலாரும், உறவினர்களும், ‘துசிதலா (ஆச்சரியகரமான கதைகளைச் சொல்பவர்)’ என்று இவரை அழைப்பார்களாம்.
1894-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 3-ம் தேதியன்று இவர் எழுதிக் கொண்டிருந்த ‘வேர் ஆஃப் ஹெர்மிஸ்ட்டன்’ என்ற கடைசி நாவலை முடிக்காமலேயே, மூளையிலுள்ள ரத்தக்குழாய் வெடித்து மரணமடைந்தார். இவரது விருப்பப்படியே, இவரது உடல் மான்ட்வே குன்றின் உச்சியில், கடலைப் பார்த்தபடி புகைக்கப்பட்டுள்ளது.
சாகசக் கதையின் ஊடாக மனித மனங்களை வெளிப்படுத்துவதில் ஸ்டீவென்சன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். பிரமிக்க வைக்கும் கதையின் போக்கு, இயல்பான சம்பவங்கள்இஅதன் மூலம் நிகழும் எதிர்பாராத விளைவுகள் போன்றவை, ஸ்டீவென்சனின் படைப்புத் திறமையின் அருமையான வெளிப்பாடுகள் எனலாம்.
புதையல் தீவு உத்வேகம் மிக்க ஒரு படைப்பு. ஜிம் ஹாக்கின்ஸ் என்கிற ஸ்காட்லாந்துச் சிறுவன் ஒருவனுக்கு வரைபடம் ஒன்று கிடைக்கிறது. கடற்கொள்ளையர்கள்இதங்களது நீண்ட நாள் உழைப்பின் பலனாகச் சேமித்த பெருமளவு செல்வத்தைத் தீவு ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதை விளக்கும் வரைபடம் அது. எனவே, அந்தப் புதையலைத் தேடி ஒரு குழு பயணம் புறப்படுகிறது. அந்தக் குழுவினருக்கே தெரியாமல், அவர்களுடன் கடற்கொள்ளையரின் கும்பல் ஒன்றும் பயணம் செய்கிறது. ஏராளமான சாகசம் மற்றும் ஆச்சரியகரமான சம்பவங்களுக்குப் பிறகு, அவர்கள் புதையலைக் கண்டெடுக்கிறார்கள். இறுதியில் பத்திரமாக ஊர் வந்து சேர்கிறார்கள். இந்தச் சம்பவங்களை ஆர். எல். ஸ்டீவென்சன் சொல்லியிருக்கும் விதம், சிறுவர்-சிறுமியரை மட்டுமல்ல, பெரியவர்களையும் கவரவே செய்யும்.
தோழமையுடன்
சிவன்
சென்னை 600078
தொலைபேசி : 4837681
புதையல் தீவு
-சிவன்
ஆர். எல். ஸ்டீவன்சன்
1
புதையல் தீவின் கதையை எழுதுமாறு டாக்டர் லிவ்ஸேவும், மிஸ்டர் டிரலவேனியும் என்னிடம் கேட்டுக்கொண்டனர். எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்ததால், உடனே ஒப்புக்கொண்டேன். சுவாரஸ்யமான அந்தக் கதையை ஆரம்பத்திலிருந்து கடைசிவரையில் ஒரு சம்பவத்தைக்கூட விட்டுவிடாமல் முழுமையாக எழுதப்போகிறேன். ஆனால், அந்தப் புதையல் தீவு எங்கு உள்ளது என்பதை மட்டும் நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. ஏனெனில், அந்தப் புதையலின் ஒரு பகுதி இன்றும் அங்கேயே உள்ளது. அதற்காக மறுபடியும் நான் அந்தத் தீவுக்கு போகப் போவதில்லை. நிச்சயமாக ஒருபோதும் போகமாட்டேன்!ஒருமுறை போய்விட்டு வந்ததில் ஏற்பட்ட அனுபவங்களே எனக்குப் போதும்!
1760-ம் வருடத்தில் கதை துவங்குகிறது. நேற்றுத்தான் நடந்தவைபோல் எல்லாச் சம்பவங்களும் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. அட்மிரல் பென்பொ சத்திரம் என் அப்பாவுக்குச் சொந்தமானது. அப்போது எனக்குப் பதினைந்து வயது. திடகாத்திரசாலியான ஓர் இளைஞன் நான். பெயர் ஜிம்ஹாக்கின்ஸ். என்னுடைய அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாததால், சத்திரத்தின் வேலைகளில் என்னால் முடிந்த அளவு அப்பாவுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன்.
குளிர்காலத்தின் ஒரு விடியல்வேளை. அன்றுதான் அவர் எங்கள் சத்திரத்துக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கைவண்டி ஒன்றில் அவரது மாலுமிப்பெட்டி இருந்தது. உயரமான, சற்றுப் பருமனான, தவிட்டு நிறமுள்ள மனிதர் அவர். மாலுமிகளுக்கே உரித்தான உடையணிந்திருந்தார். அவரது கருமையான தலைமுடி, கசங்கியிருந்த அவரது கோட்டின் தோள்பட்டைப் பகுதியில் சுருண்டு படிந்திருந்தது. முனைப்பகுதி உடைந்துபோன கைவிரல் நகங்கள், ஏராளமான வெட்டுக்காயத் தழும்புகளுள்ள முன்கைப் பகுதிகள். வலதுபுறக் கன்னத்தில் நீளவாட்டில் தென்பட்டது வெட்டுக்காய வடுஒன்று. மொத்தத்தில் அவர் சோர்வடைந்து, அசிங்கமான தோற்றத்துடன் விளங்கினார்.
அவர் வந்து சத்திரத்தின் கதவைத் தட்டியபோதுஇஎன்னுடைய அப்பாதான் கதவைத் திறந்தார். புதிய விருந்தாளியை ஒருமுறை ஏறஇறங்கப் பார்த்தார் அப்பா. பிறகு உள்ளே வருமாறு அழைத்தார். வந்தவர் கேட்டுக்கொண்டபடி முதலில் ஒரு கிளாஸ் நிறைய ரம் கொடுத்தார் அப்பா. அழகை ரசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவரைப் போல், அவர் அதை நிதானமாகச் சுவைத்துக் குடித்தார். நடுநடுவே ஜன்னல் வழியாக வெளியே தென்பட்ட பாறைக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தார்.
வந்தவர் உட்குழிவான கடல் பகுதியைப் பார்த்தபடி சத்திரத்துக்குள் நாற்காலி ஒன்றில் அமர்ந்தார். அவரது உதடுகள் ஒரு பழைய கப்பல் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு எத்தனையோ தடவை அந்தப் பாட்டை அவர் பாடி, நான் கேட்டிருக்கிறேன்.
இறந்து கிடப்பவனின் மார்மீது பதினைந்து மனிதர்கள்
யோ… ஹோ…ஹோ!
ஒரு பாட்டில் ரம்மும் அருகில்…
இதுதான் அவருக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது.
மிகவும் அமைதியான ஒரு குடாப்பகுதி. நான் தங்குவதற்கு ஏற்ற இடம். இங்கு நிறைய பேர் தங்கியிருக்கிறார்களா?
திடுமென்று புதியவர் கேட்டார்.
இல்லை… கொஞ்சம் பேர்தான் தங்கியிருக்கிறார்கள்
அப்பா பதிலளித்தார்.
அப்படியானால் எனக்கு இந்த இடம் போதும்!
கிளாஸிலிருந்த ரம்மைக் காலி செய்துவிட்டு அவர் தொடர்ந்தார்: நான் தங்கிக்கொள்ள எனக்கு ஓர் அறை வேண்டும். மிகவும் எளிமையான பகுதியே போதும். ரம்மும், உப்பிட்டு உலர்த்திய பன்றிஇறைச்சியும், முட்டையும்தான் என்னுடைய தேவைகள், இவற்றைச் சாப்பிட்டால்தான் என்னுடைய தலை நிமிர்ந்து நிற்கும். இந்த வழியாகக் கடலில் பயணம் செய்யும் கப்பல்களைப் பார்க்கவும் முடியும்… ஆமாம், நீங்கள் என்னை என்ன பெயர் சொல்லி அழைக்கப் போகிறீர்கள்?. . . வெறுமனே கேப்டன் என்று கூப்பிட்டாலே போதும்.
பேசி முடித்த பிறகு நாலைந்து தங்க நாணயங்களை எடுத்து மேஜை மீது வைத்தார்.
அன்று காலையில் தபால் வந்த கப்பலில்தான் அவரும் வந்திருக்க வேண்டும். கப்பலிலிருந்து இறங்கியவுடனேயே, அவர் தங்குவதற்கேற்ற சத்திரம் ஏதாவது பக்கத்தில் இருக்கிறதா என்று விசாரித்திருக்கிறார். யாரோ ஒருவர் எங்களது அட்மிரல் பென்போ சத்திரத்தைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அப்படித்தான் அவர் எங்கள் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தார். இந்தத் தகவல்கள் மட்டுமே அப்போது அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும்.
பகல் பொழுது முழுவதும் அவர் சத்திரத்துக்கு எதிரிலுள்ள கடற்கரையிலேயே உலாவிக் கொண்டிருப்பார் - அல்லது ஏதாவது ஒரு பாறையின் மீது உட்கார்ந்திருப்பார். அவரது கையில் ஒரு டெலஸ்கோப் (தொலைநோக்கிக் கண்ணாடி) இருக்கும். சத்திரத்துக்குள் வந்தால், பெரும்பாலும் கணப்பு அடுப்பின் அருகே அமர்ந்திருப்பார். அடிக்கடி ரம் குடிப்பார்.
அவராக விருப்பப்பட்டால் மட்டும் எப்போதாவது ஒரு தடவை பேசுவார். அவரிடம் நாம் எதையாவது கேட்டால், அது அவருக்குப் பிடிக்காது. அதனால் பெரும்பாலும் அவரைத் தனியாகவே விட்டு விடுவோம். யாரும் அவரைத் தொல்லைப்படுத்துவதில்லை.
மாலுமிகள் யாராவது ரோட்டில் போவதைப் பார்த்தீர்களா?
அடிக்கடி இந்தக் கேள்வியை மட்டும் கேட்பார். ஆரம்பத்தில் இப்படிக் கேட்கும்போது நாங்கள் என்ன நினைத்தோம் என்றால்இஇவரைப் போன்ற யாரோ ஒரு சகமாலுமியை இவர் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறார் என்றுதான். பிற்பாடுதான் எங்களுக்கு அந்த உண்மை தெரிந்தது. உண்மையில் அப்படிப்பட்டவர்களை இவருக்குப் பிடிக்கவில்லை என்பது. சத்திரத்துக்குள் எப்போதாவது யாராவது மாலுமிகளோ, கப்பல் ஊழியர்களோ வந்தால், உடனே ஜன்னல் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்துகொண்டு அவர்களையே ஊன்றிக் கவனிப்பார். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சுத்தமாக எதுவும் பேச மாட்டார். கேப்டன் யாருக்கோ பயப்படுகிறார் என்பது விரைவிலேயே எங்களுக்குப் புரிந்தது. அந்த கேப்டன், எங்களிடம் ஒருபோதும் அவரது பெயரைச் சொன்னதில்லை.
ஒரு நாள் கேப்டன் என்னை அருகில் வருமாறு அழைத்தார். ஜிம், முன்புறமுள்ள ரோட்டில் ஒற்றைக் காலுள்ள மாலுமி யாராவது போவதைப் பார்த்தாயா?
என்று கேட்டார்.
நான் , இல்லை!
என்றேன்.
அப்படிப்பட்ட ஒருவரைப் பார்த்தால் உடனே தனக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும், இந்த வேலையைச் செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எனக்கு நான்கு பென்ஸுகள் (நாணயங்கள்) ஊதியம் தருவதாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் ஒருபோதும் செயல்படுத்தியதே இல்லை!
அந்த விநாடியிலிருந்து நான் அந்த ஒற்றைக் கால் மாலுமியைக் கனவு காணத் தொடங்கினேன். பயங்கரமான காற்று வீசும் இரவு நேரங்களில், சத்திரத்தின் மேற்கூரை கிடுகிடுவென்று நடுங்கும்போது, கடலலைகள் சீற்றத்துடன் கரையில் மோதிப் பயங்கரமான இரைச்சலை ஏற்படுத்தும்போது – ஆயிரம் வடிவங்களில் நான் அவனை எதிர்பார்த்தேன். சில வேளைகளில் முழங்காலின் கீழ்ப்பகுதி வெட்டப்பட்ட நிலையில்… இன்னும் சில சந்தர்ப்பங்களில் இடுப்பின் கீழ்ப்பகுதி வெட்டுப்பட்ட நிலையில்… மற்றும் சில சந்தர்ப்பங்களில் எனக்கு இப்படிக்கூடத் தோன்றியதுண்டு: ‘அந்த ஒற்றைக்கால் என்பது அவனது இடுப்பின் மையத்திலிருந்து நேராகத் தரை நோக்கி இறங்கியிருப்பதாக!’
கதவுகளையும், தடைகளையும் உடைத்துக் கொண்டு எனக்குப் பின்னால் அவன் துள்ளிக்குதித்துப் பாய்ந்து வருவதாக அடிக்கடி கண்ட பயங்கரமான கனவுதான் என்னை அதிகமாகப் பயமுறுத்தியது எனலாம்.
ஒரு சில இரவுகளில் கேப்டன் வழக்கத்தைவிட அதிகமாகக் குடிப்பார். அத்தகைய சந்தர்ப்பங்களில் சத்திரத்திலுள்ள மொத்தப் பேரையும் அருகில் வருமாறு கூப்பிடுவார். பிறகு ஒரே பாட்டும் கும்மாளமும்தான். இந்தக் கோலாகலங்களுக்கு நடுவே தனது வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில பகுதிகளைத் துண்டு துண்டாகச் சொல்லவும் செய்வார்.
அவர் சொன்ன கதைகள் பெரும்பாலும் பயமேற்படுத்தக் கூடியவையாக இருந்தன. தூக்கில் தொங்கி இறந்தவர்களைப் பற்றி… புயல்காற்றைக் குறித்து… கொலை, கொள்ளை, பழிக்குப்பழி என்று ஒவ்வொன்றும் பயங்கரமானவையாக இருந்தன. அங்கிருந்த ஒவ்வொருவரும் அவர் கூறும் கதையைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தனது கத்தியை வெளியே எடுத்து, கழுத்தை வெட்டுவேன்… இதயத்தை அறுத்து வெளியே எறிவேன்!
என்றெல்லாம் மிரட்டுவார்.
இந்த மாதிரியான கதைகளைக் கேட்டுக்கேட்டு மேற்கொண்டு யாருமே இந்தச் சத்திரத்துக்கு வரமாட்டார்கள். நிலைமை இப்படியே போனால், நாம் ஒட்டுமொத்தமாக அழிய வேண்டியதுதான்.
அப்பா அடிக்கடி இந்த வார்த்தைகளைச் சொல்வார். இது ஒரு புகாராகவே இருக்கும். ஆனால், எனக்கென்னமோ இந்த கேப்டன் வந்த பிறகு எங்களுக்கு நல்லது நடந்திருப்பதாகவே தோன்றுகிறது. சத்திரத்தில் தங்கியிருந்த ஒருசிலர், கேப்டன் மீது தனி மரியாதை வைத்திருந்ததாகவும் தெரிகிறது.
தான் தங்கியிருக்கும் அறைக்கான வாடகையை கேப்டன் ஒருபோதும் அப்பாவிடம் தந்ததில்லை. அப்பாவியான என்னுடைய அப்பா, கேப்டனிடம் பணம் கேட்கவே பயந்தார் என்றுகூடச் சொல்லலாம். ஒருவகையில் சொல்வதானால் கேப்டன், எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருந்தார். அவரிடமிருந்த பணம் சுத்தமாகத் தீர்ந்து போனபிறகும் அவர் சத்திரத்தைவிட்டு வெளியேறவில்லை. மாதக் கணக்கில் எங்கள் சத்திரத்திலேயே தங்கியிருந்தார். அப்பா, பணத்தைப் பற்றி ஏதாவது பேச்செடுத்தால், கேப்டன் பதிலுக்கு உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குவார். அதன் பிறகு பயம் அதிகமாகியோ, திகைப்பு அடைந்தோ அப்பா அங்கிருந்து அவசர அவசரமாக நகர்ந்து விடுவார்.
கேப்டன் எங்கள் சத்திரத்தில் வசித்த காலம் முழுவதும் தனது உடையில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. வரும்போது அவர் அணிந்திருந்த கோட், கண்டபடி கிழிந்து நாசமாகிவிட்டிருந்தது. அவர், தனது அறைக்குள் அமர்ந்து, கிழிந்த பகுதிகளையெல்லாம் தன் கைப்படவே ஒட்டுத் துணி கொடுத்துத் தைப்பார். கடைசியில் ஒட்டுத்துணி போடாத ஒரு பகுதியே அந்த கோட்டில் இல்லை என்றானது. அதேபோல் ஒருபோதும், அவர் யாருக்கும் கடிதம் எழுதியதாக எனக்கு ஞாபகமே இல்லை. ஒருவேளை அவருக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லாததால் அப்படி நிகழ்ந்திருக்கலாம். அவருக்கும் அதுவரை எந்த ஒரு கடிதமும் வந்தது இல்லை. பக்கத்து அறைகளில் தங்கியிருந்தவர்களைத் தவிர வேறு யாரிடமும் அவர் பேசி நான் பார்த்ததுமில்லை. வரும்போது அவர் கொண்டு வந்த பெட்டியை, அதற்குப் பிறகு அவர் திறந்ததாகவும் தெரியவில்லை. அல்லது யாருக்குமே அதைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ‘அதற்குள் என்ன இருக்கிறது?’ என்று கேட்கும் தைரியமும் அங்கிருந்த எவருக்கும் இல்லை!
அப்பாவின் உடல்நிலை மோசமடைந்து விட்டதால், அவர் பெரும்பாலும் படுத்த படுக்கையாகவே கிடந்தார். அதனால் அப்பாவுக்குச் சிகிச்சையளிப்பதற்காகத் தினந்தோறும் மாலை நேரத்தில் டாக்டர் லிவ்ஸே எங்கள் சத்திரத்துக்கு வருவார். ஒரு நாள் டாக்டர் சற்றுத் தாமதமாக வந்தார். அப்பாவைப் பரிசோதித்த பிறகு சாப்பாட்டை முடித்துக் கொண்டு சத்திரத்தின் வரவேற்பு அறையில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தார். அவரை அழைத்துச் செல்லும் குதிரை வண்டி வருவதற்காகக் காத்திருந்தார் என்றும் சொல்லலாம். வரவேற்பு அறையில் வேறு சில வாடிக்கையாளர்களும் இருந்தனர். கேப்டன் அதிகமாக ரம் குடித்திருந்தார். எனவே போதையில் தன்னுடைய வழக்கமான கப்பல் பாட்டை உரத்த குரலில் பாடத் தொடங்கினார்.
இறந்து கிடப்பவனின் மார்மீது…
‘இப்படி இறந்து கிடப்பவனின்