Idhayamellam Un Ninaivu
5/5
()
About this ebook
Reviews for Idhayamellam Un Ninaivu
2 ratings0 reviews
Book preview
Idhayamellam Un Ninaivu - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
இதயமெல்லாம் உன் நினைவு
Idhayamellam Un Ninaivu
Author :
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
1
அதிகாலையில்... வானம் பன்னீர் தெளிக்க ஆரம்பித்தது. பூமி, மண் வாசனையை அனுப்பி மழையை வரவேற்கத் தொடங்கியது.
குளித்து உடை மாற்றிக் கொண்டு... பூஜைக்குரிய பூக்களைப் பறிப்பதற்காக பின்புறத் தோட்டத்திற்குள் புகுந்தாள் பார்கவி.
மழை பாடும் பள்ளியெழுச்சியில் ஒவ்வொரு பூக் களும், இலைகளும் சிலிர்த்துப் பரவசமடையும் அழகை.. பார்வையால் வருடிக் கொடுத்தபடியே செம்பருத்திப் பூக்களைப் பறித்தாள்.
பவளமல்லி மரத்தை மெல்ல உலுக்கியதும்... முத் தும், பவளமும் சிதறுவது போல் பொலபொலவென்று பவளமல்லிப் பூக்கள் உதிர்ந்து... தங்களது நறுமணத்தை காற்றுக்கு வினியோகம் செய்தன.
ஆழ மூச்செடுத்து சுகந்த மணத்தை ரசித்த பார்கவி, மரத்தின் அடியில் கொட்டிக் கிடந்த பூக்களை அள்ளியெடுத்தாள்.
"ஏய்... கவி! மழையில நனைஞ்சுகிட்டே பூவைப் பறிக்க ஆரம்பிச்சுட்டியா? சாமி படத்துக்கும் உங்கம்மா படத்துக்கும் ஒரு நாள் பூ போடலைன்னா... குடியா முழுகிப் போகும்?
"கூறு கெட்டவ மாதிரி… காலங்கார்த்தால தோட்டத்துல மழையில் நனைஞ்சுட்டு நிக்கிறியே? அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?
விடிஞ்சும் விடியாததுமா மூத்த தாரத்துப் பொண்ணை தோட்டத்துக்கு அனுப்பி மழையில நனைய வைக்கிறாளே சித்திக்காரின்னு... என்னைக் கண்டபடி பேச மாட்டாங்களா?
இ... இதோ வந்துட்டேன் சித்தி
திடுக்கிட்டுத் திணறி பதில் கொடுத்த பார்கவி... மறுகணம் ஓட்டமும் நடையுமாக வீட்டிற்குள் புகுந்து... இடுப்பில் கை வைத்தபடி தன்னை முறைத்துப் பார்த்த சித்தி பூரணியின் மீது பயப் பார்வையை வீசினாள்.
"உன் மனசுல என்னதான் நெனச்சுட்டு இருக்கேன்னு தெரியலையே? தலையை நல்லா துவட்டு... காய்ச்சல் ஜலதோஷம்னு ஏதாச்சும் வந்துடப் போகுது அதட்டினாள் பூரணி.
அவளது குரலில் கடுமை வழிந்தாலும்… அந்த கணத்தில் சட்டென்று நெகிழ்ந்து தான் போனாள் பார்கவி.
சரிங்க சித்தி
பவ்யமாய் பதிலளித்து விட்டு நகர எத்தனித்தாள்.
"காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம்னு ஏதாவது வந்து தொலைச்சா நீ வேற சுருண்டு படுத்துக்குவே… ஆபீசுக்கும் மட்டம் போடுவே... சம்பளம் கட்டாகும்.
"பத்தும் பத்தாதுக்கு உன்னையும் நான் கட்டி அழணும். பக்கவாதம் வந்து படுக்கையில விழுந்து கிடக்கிற உங்கப்பனை கட்டியழுது அழுது என் ஜீவனே வத்திப் போகுது.
"இரண்டாம் தாரமா உங்கப்பாவுக்கு கழுத்தை நீட்டி இந்த வீட்டுலே அடியெடுத்து வச்ச நாள்லே இருந்து.. என்ன சுகத்தை கண்டிருக்கேன்?
என் தலையில எழுதி வச்சுட்டானே பகவான்? நான் நரக வேதனையை அனுபவிச்சுத்தானே ஆகணும்?...
சித்தி பூரணி தன் மீது காட்டிய அக்கறையில் நெகிழ்ந்து போயிருந்த பார்கவிக்குள் ஏமாற்றம் முற்றுகையிட்டது.
தணலின் மேல் நின்று கொண்டிருப்பதைப் போன்ற அவஸ்தையில் தவித்துப் போனாள்.
சித்தியின் கர்ண கடுரமான குரல்... அவளது செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது.
பூரணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்ததால்... அவளை ஏறிட்டுப் பார்க்கவே பயமாக இருந்தது.
மெல்ல நகர்ந்து அடுக்களைக்குள் தஞ்சமடைந்தாலும்… அதற்கும் அர்ச்சனை நடக்கும்.
"என்ன நான் பேசிட்டிருக்கேன்… நீ பாட்டுக்கு அடுக் களைக்குள்ளே புகுந்துகிட்டே? ‘அவ கத்திட்டு அடங்கட்டும் நம்ம வேலையைப் பார்ப்போம்’னு நெனக்கிறியா?
என்னை என்னன்னு நெனச்சே? சித்திங்கிற மட்டு மரியாதை இருக்கா? நாய் மாதிரி குலைச்சுட்டுப் போகட்டும்னு நெனக்கிறியாடி?
பயத்தில் அடுக்களைக்குள் அடைக்கலமானாலும் பிலுபிலுவென்று பிடித்து விடுவாளே சித்தி?
என்ன மசமசன்னு நிக்கிறே? பாலைக் காய்ச்சி காபி போட்டு சீக்கிரமா குடு.
சாரிங்க சித்தி! பாலைக் காய்ச்சி காபி போட்டுக் குடித்துட்டு… நான் ஒரு நடை கோவிலுக்குப் போயிட்டு வந்துடட்டுமா?
கெஞ்சும் குரலில் கேட்டாள் பார்கவி.
"நாள் கிழமை தவறாம கோவிலுக்குப் போறே. சீக்கிரமா உன்னோட வேண்டுதல் பலிச்சு கடவுள் கண்ணைத் திறக்கிறாரான்னு பார்க்கலாம்.
பெத்த தாயை முழுசா முழுங்கிட்டு குத்துயிரும் கொலையுயிருமா கெடக்கற தகப்பனுக்கு பாரமா... துரதிர்ஷ்டக் கட்டையா தெண்டத்துக்கு நடமாடறே... துளி அதிர்ஷ்டத்தையும் சேர்த்துக் குடுங்கன்னு கடவுள் கிட்ட வரம் கேளு.
சித்தி பூரணி வழக்கம் போல் ஒரு பாட்டம் பாடி பார்கவியைக் கரித்துக் கொட்டினாள்.
செம்பருத்திப் பூக்களை சாமி மாடத்தில் வைத்து விட்டு துரித கதியில் அடுக்களைக்குள் நுழைந்தாள் பார்கவி.
அவளது விழிகளில் கண்ணீர் இமை விளிம்பைத் தொட்டு எட்டிப் பார்த்துவிட்டு உடைப்பெடுத்துக் கொண்டு வழிந்தது.
நாசூக்காய் துடைத்துக் கொண்டவள் சர்க்கரை, டிகாக்ஷன் சேர்த்து காபியை திட்டமாய் கலந்தாள்.
சித்தி... காபி!
டம்ளரை அவள் முன் நீட்டினாள்.
கோவிலுக்குப் போயிட்டு வந்து... என்ன டிபன் பண்ணப் போறே?
மாவு இருக்கு சித்தி. இட்லி அவிச்சு தொட்டுக்க தக்காளிச் சட்னி வச்சிடவா?
நந்தா இட்லின்னாலே முகத்தை சுளிக்கிறான். அவனுக்கு சேமியா புட்டுன்னா உசிரு... அவனுக்கு புட்டு செஞ்சிடு...
ச… சரி சித்தி.
நந்தா எழுந்திட்டிருப்பான். காபி எடுத்துட்டுப் போயி அவனுக்குக் குடுத்துட்டு… கோவிலுக்குப் போ
என்றபடி காபியை உறிஞ்சத் தொடங்கினாள் பூரணி.
பார்கவிக்கு உடல் முழுக்க ஒரு பயம் ஊடுருவியது. என்னடி மசமசன்னு நிக்கிறே? சீக்கிரம் போய் காபி கொடுத்துட்டு... கோவிலுக்குப் போயிட்டு வந்து டிபன் வேலையை கவனி
அதட்டினாள்.
போறேன் சித்தி.
அறைக்கதவு திறந்து தான் இருந்தது. கட்டிலில் அமர்ந்தபடி அவ்வளவு காலையிலேயே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான் நந்தன்.
தூங்கி எந்திரிச்சதுமே உன்னைத்தான் நெனச்சேன். நீயே வந்துட்டே
என்று அவளை ஆழமாய் ஊடுருவிப் பார்த்த நந்தனுக்கு வயது முப்பத்தைந்துக்கு மேலிருக்கும். ஆகிருதியான உடம்பு.
பூரணியின் கூடப் பிறந்த தம்பி தான் இவன். அப்பா சண்முக நாதனுக்கு பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்ததிலிருந்து... பூரணியின் தம்பிக்கு துணிச்சல் துளிர் விட்டது. அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்த நந்தன்... சமீப காலமாய் வீட்டோடு தங்கி விட்டான்.
பூரணிக்கு அடிக்கடி தூபம் போட்டு தூண்டி விட்டுக் கொண்டிருந்தான். இவன் வீட்டோடு தங்கியதும் பூரணியின் அக்கிரமச் செயல்களுக்கு அளவில்லாமல் போய் விட்டது.
பார்கவியை வேலைக்காரியைப் போல் விரட்டி, தான் வேலை வாங்குவது போதாதென்று… வக்கிர மனம் படைத்த தனது தம்பி நந்தனுக்கும் பார்கவி சேவகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாள்.
பெரியவர்களின் பேச்சிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் பண்பான குணம் கொண்டவள் பார்கவி. எதிர்த்து வாயாடத் தெரியாதவள். பூரணி என்னதான் கொடுமை செய்தாலும்… அவளைத் தன் தாய்க்கு நிகரான ஸ்தானத்தில் வைத்துப் பார்த்துப் பழகி விட்டதால்... அவள் கிழித்த கோட்டை ஒரு போதும் பார்கவி தாண்டியதில்லை.
ஏவிய ஏவலுக்குப் பணிந்து செக்கு மாடாக அவள் உழைத்துக் கொட்டத் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் நந்தனின் சல்லித் தனமான பார்வையையும் பேச்சையும் தான் அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
மாமா... காபி
டம்ளரை மேஜையின் மீது வைக்கப் போனாள்.
சிகரெட்டைத் தரையில் போட்டு நசுக்கியபடி, கவி! காபியை என் கையில் கொடுத்தா என்னவாம்?
என்றான்.
பார்கவி காபியை அவனிடம் நீட்டினாள். டம்ளரை வாங்கும் சாக்கில் அவள் கையை வருடினான். சட்டென்று கையை உருவிக் கொண்டாள்.
தீயை மிதித்து விட்டாற் போல் பதறி... அறையை விட்டு வெளியேற முயன்றாள்.
இரு, கவி! என்ன அவசரம்? டம்ளரை வாங்கிட்டே போயிடேன்
என்றதும், பார்கவி தயங்கி நின்றாள்.
உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்தும் தோற்றம் நந்தாவுக்கு. உட்காரேன்
காபியை மெல்ல உறிஞ்சினான்.
ப... பரவாயில்ல.
கோவிலுக்குக் கிளம்பணுமா? அக்கா கிட்டே நீ பேசிட்டிருந்ததை நான் கேட்டேன். எனக்காக வேண்டி சேமியா புட்டு பண்ணப் போறியா?
உம்!
என்றாள் முகத்தைப் பார்க்காமல். நான் கிளம்பறேன். எனக்கு நிறைய வேலை கிடக்கு
நகர முற்பட்டாள்.
"பிய்ச்சுகிட்டு ஒடறதிலேயே குறியா இருக்கியே...