Mandhira Yutham
1/5
()
About this ebook
Reviews for Mandhira Yutham
1 rating0 reviews
Book preview
Mandhira Yutham - Gauthama Neelambaran
http://www.pustaka.co.in
மந்திர யுத்தம்
Mandhira Yuththam
Author:
கௌதம நீலாம்பரன்
Gowthama Neelambaran
For more books
http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
மணிமாறனைத் தெரியுமா உங்களுக்கு? அதோ பொதியமலைக் காட்டில், கருவேலமரங்களை வெட்டி, அதன் உருட்சி திரட்சியான நீண்ட கழிகளை ஒப்புரவாகச் சீவித் தனியே அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறானே, அவன்தான் மணிமாறன்.
அகன்ற மார்பும் - உருண்டு திரண்ட தோள்களும் - கம்பீரமான தோற்றமும் கொண்ட அந்த இளைஞன், உழைப்பிலேயே கண்ணும் கவனுமாக நேரம் போவரே தெரியமால் கருத்தூன்றிக் கிடப்பதைப் பார்க்கிறீர்களல்லவா….?
சாதாரண விறகு வெட்டிபோலத் தோன்றினாலும் அவன் அற்புதமான வீர இளைஞன். ஆவன் கழுத்திலே கரும் பட்டுக் கயிற்றிலே கட்டப்பட்டுத் தொங்குகிறதே புலிப்பற்கள் இரண்டு. அவை அவனே தன் கரங்களால் போரிட்டுக் கொன்ற புலி ஒன்றின் வாயிலிருந்து பறிக்கப்பட்டவை.
மணிமாறன் நடக்கும் பாதையில் மதயானையும் எதிர் வரத் தயங்கும். தவறினால் ஒரே பாய்ச்சலில் அதன் முதுகில் ஆரொகணித்து, மத்தகமே பிளக்கும் வண்ணம் முஷ்டியால் சரமாரியாகக் குத்திக் கோர நர்த்தனம் புரிந்து விடுவான்.
சிங்கம், புலி, காட்டெருமை என எந்த மிருகத்தையும் கண்டு அஞ்சாதவன் அவன். போதியமலைக் காட்டின் புதல்வன் என்றே அவனைச் சொல்லலாம்.
மணிமாறன் வெட்டிச் சாய்த்த முள் மரத்தின் சின்னச் சின்ன மிலாறுகளை அகற்றிக் கட்டி வைத்துவிட்டு, பெரிய கட்டைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறானே மாலன், அவன் மணிமாறனின் இணைபிரியா நண்பன்.
பொழுது உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. வெயில் அதிகம் என்று சொல்ல முடியாது. பொதிய மலைச் சாரலில் சில்லென வீசும் குளிர் காற்றில், சூரிய ஒளி கூட நிலவின் குளுமையை அடைந்து விட்டிருந்தது. ஆனால், கடுமையான உழைப்பின் காரணமாகப் பசி வயிற்றைக் கிள்ளியது. அதனால் சற்று அயர்வடைந்த மாலன்.
மணிமாறா! வா, ஆற்றில் போய் நீர் அருந்தி வருவோம்…
என்றான்.
அவனுடைய மனம் அறிந்த மணிமாறனும் மறு பேச்சின்றி கோடாரியைத் தோளில் சார்த்திக் கொண்டு புறப்பட்டான். அந்த மலையை ஒட்டியுள்ள காட்டாற்றின் கரைநோக்கி இருவரும் நடந்தனர்.
தென்பாண்டி நாட்டிலுள்ள பொதியமலை தெரியுமில்லையா உங்களுக்கு?
தென்றல் காற்றின் பிறப்பிடம் இந்தப் பொதிய மலைதான் என இலக்கியங்கள் கூறுகின்றன. குளுகுளு அருவிகள் பல இந்த மலைகளில் பொங்கி வழிகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது குற்றால அருவி. இதைப்பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
பஞ்சுப் பொதிகளைப் போன்ற மேகங்கள் தவழ்ந்து உலவும் மலை என்பதால் வந்த பெயர்தான் பொதிகை என்பது. பொதிகை மலை என்றும் கூறுபது உண்டு.
உயர்ந்த மலைச் சிகரங்களும் அதில் தவழும் மேகங்களும் பொங்கிப் பெருகும் அருவிகளும் உள்ள இந்தக் பொதிகையைத் தாண்டும்போது, கதிரவனின் தேர்ச்சக்கரங்கள் கூட வழுக்குமாம். சூரியனின் ரதத்தை ஏழு வண்ணப் புரவிகள் இழுப்பதாகச் சொல்வார்கள். அந்தப் புரவிகளின் கால்களும் இங்கு வழுக்குமாம்! இதனை.
‘தேனருவித் திரை எழும்பி, வானின் வழி ஒழுகும் - செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்’ என அழகாக வருணிக்கிறது. ‘குற்றாலக் குறவஞ்சி’ எனும் இலக்கியம்.
சேர நாட்டுக்கும் தென்பாண்டி நாட்டுக்கும் இடையே இயற்கையே ஒரு பெரிய மதிள் சுவரை உருவாக்கி வைத்திருப்பது போன்று அமைந்திருக்கும் இந்தப் பொதிய மலைச் சிகரங்களைப் பாரத பூமியின் பெரும் பகுதியில் நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆரம்பம் என்றும் கூறலாம்.
இதன் அடர்ந்த காடுகளில் ஆங்காங்கே குடிசைகள் அமைத்துக் கொண்டு ஏராளமான குறவர் இன மக்கள் வாழ்கின்றனர்.
பொதுவாக இவர்கள் காட்டு மிருகங்களை வேட்டையாடிப் பிழைப்பவர்கள் என்றாலும், வேறு சில பணிகளிலும் ஈடுபடுவர்.
காடுகளில் கிடைக்கும் சந்தனம், அகில், தேன், மான் தோல், புலித்தோல் போன்ற பல்வேறு பொருட்களைச் சேகரித்து, மலையடிவாரத்துக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் விற்று வருவர்.
இந்த மலைபடு பொருட்களைச் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். மிகுந்த செல்வ வளம் சேர்ப்பவை இவை. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலம் நகரை ஆண்ட சாலமன் என்ற மன்னன் ஒரு புதிய கோயிலை நிர்மாணித்தான். அதன் உபயோகத்துக்காக மயிலிறகு. அகில் கட்டைகள், யானைத் தந்தம் போன்றவற்றை அவன் இந்தத் தென்பாண்டி நாட்டுப் பொதிய மலையிலிருந்து வரவழைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் - இந்தச் செய்தி பழைய ஏற்பாடு எனும் புனித நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காட்டாறு செல்லும் வழியில் மாந்தோப்பு ஒன்றிருந்தது. அதில் ஏதாளமான மந்திக் குரங்குகள் உண்டு. இந்த மந்திகள் மாங்கனிகளைப் பறித்துப் பந்து விளையாடும் என்பதையும் இலக்கியங்கள் கூறுகின்றன. மணிமாறன், மந்திகளைப் பார்த்துக் கைகளைத் தட்டினான். அவை அவனுடைய குறிப்பை உணர்ந்து, சில மாங்கனிகளைப் பறித்துக் கீழே எறிந்த. அவற்றை எடுத்து வருமாறு மாலனிடம் கூறிவிட்டு அவன் ஆற்றில் இறங்கி, முகம், கை, கால்களைக் கழுவி, நாலைந்து கை நீரள்ளிப் பருகினான். பிறகு தன் கைக் கோடாரியை ஆற்றுப் பாறைக்கல் ஒன்றில் கூர் தீட்டி நின்றான்.
மாலன் வந்து மாங்கனி ஒன்றை அவனிடம் அளித்தான். மணிமாறனும் அதை வாங்கிப் புசித்தான்.
மணிமாறா, எத்தனை நாட்கள் தான் நாம் இப்படி விறகு வெட்டிப் பிழைப்பது, நம் வாழ்வில் ஒரு விடிவுகாலம் பிறக்காதா?
என்றான் மாலன்.
என்னப்பா இதற்கு இத்தனை வேதனையுடன் பேசுகிறாய்… இன்று உன் பேச்சில், செயலில் அதிகச் சோர்வு புலப்படுகிறதே?
என்றான் மணிமாறன்.
அட போப்பா…. உழைத்தவன் உழைத்துக்கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கிறது; பிழைக்க எங்கே முடிகிறது? காலம் பூரா விறகு விற்றுப் பிழைத்த உன் தந்தை இப்போது காலில் கோடாரியைப் போட்டுக் கொண்டு, ஆறாத ரணத்தால் அவதிப்படுகிறார். இனி நீயும் காலம் பூரா விறகு வெட்டிக் கொண்டே கிடக்க வேண்டியதுதானா? நாமெல்லாம் முன்னேறி ஒரு நல்வாழ்வை அடைய வழியே இல்லையா?
மணிமாறன் சிறிது யோசித்தான். வயதான தந்தை காலில் ரணத்துடன் படுகிற சிரமங்கள் அவன் இதயத்தைப் பிசைந்தது.
மாலன் அதற்கு நாம் குருட்டு அதிர்ஷ்டங்களை நம்பிப் பயனில்லை. இப்போது கருவேலங் கழிகளை அழகாக வெட்டிச் சீவி அடுக்கி வைத்துள்ளேன் பார். ஆவை அரசாங்க வீரர்களுக்கு வேல் கம்புகளாகவும் ஈட்டிகளாகவும் பயன்படத் தக்கவை. வேணாட்டு வீரர்களிடம் அவற்றை விற்று நல்ல பொருளீட்டுவது என் நோக்கம். நாளையே உதயகிரிக் கோட்டைப் பக்கம் போய் வரலாமென்று எண்ணியுள்ளேன். நீயும் வா, விறகுக் கட்டுகளைவிட இவற்றை நல்ல விலைக்கு விற்கலாம்….
என்றான்.
சிரித்தான் மாலன். பிறகு. மணிமாறா! நீ உலகம் புரியாதவன், வேல் கம்பு, ஈட்டிகளுக்கான கருவேலங்கழிகளை விற்பதானால் மட்டும் நம் நிலை உயர்ந்து விடப் போகிறதா என்ன? கால் வயிறு கஞ்சி குடிக்கிற நாம் அரை வயிறு கஞ்சி குடிக்க வேண்டுமானால், அது உதவும், இதெல்லாம் ஒரு வாழ்வு என்றா நீ நினைக்கிறாய்?
சரி, என்னதான் செய்ய வேண்டுமென்கிறாய் நீ….?
ஈழ நாட்டில் ரத்தினபுரி என்றொரு இடம் உண்டு. அஙகு ஓடும் ஆறு ஒன்றில் கூழாங்கற்களுக்குப் பதிலாக ரத்தினக் கற்கள் குவிந்து கிடக்குமாம். வுணிக மரக்கலங்களில் ஈழம் செல்வோர் அங்கிருந்து இந்த ரத்தினங்களை அள்ளி வந்து இங்கு சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் விற்றுப் பெரும் செல்வந்தர்களாகி விடுகின்றனர். அது போன்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு நமக்கு எப்போது கிட்டுமோ தெரியவில்லை…
உன் ஆசைக்கு ஆற்றில் ரத்தினங்கள் அகப்பட்டால் மட்டும் போதாது. எங்காவது மலையே தங்கமலையாக இருந்தால் தான் சரிப்படும். வீண் ஆசைகளுக்கும் கற்பனைகளுக்கும் என் மனதில் இடமில்லை என்பது உனக்குத் தொயாதா?
என்றான் மணிமாறன்.
அப்போது அங்கே அலறியடித்துக் கொண்டு ஓடிவந்த பச்சையப்பன். மாலன், உங்க அப்பா தேன் எடுக்கப் போனவர் திரும்பி வரும் வழியில் ஒற்றை ஆரமரத்தினடியில் மலைப்பாம்பிடம் சிக்கிக் கொண்டு விட்டார். ஓடி வா, ஓடிவா….
என்றான்.
ஐயோ, அப்பா! என்றலறியபடி, மணிமாறா, நீயும் வா… எதாவது செய்து, என் தந்தையை உயிருடன் மீட்க முடிகிறதா…. பார்போம்.
என்ற படியே பச்சையப்பன் பின்னால் ஓடத்து வங்கினான். மணிமாறனும் அவர்களைத் தொடர்ந்து ஓடினான்.
மலைத் தேன் எடுக்க மலைப்பாறைகளின் இடுக்குகளிலும், அடர்ந்த மரக் காடுகளிலும் அலைந்து திரியும் தந்தையுடன் செல்லாமல், நட்புக்காகத் தன்னுடன் விறகு பிளக்க வந்த மாலனுக்கு எவ்வகையிலும் உதவியே ஆக வேண்டுமென்ற தீர்மானத்துடன் சென்றான் மணிமாறன்.
அங்கே, வயதானவர் என்றாலும், உடல் உரமும் மனத்துணிவும் கொண்ட மாலனின் தந்தை, அந்த மலைப் பாம்புடன் கட்டிப் புரண்டு கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார். நெருநேரப் போராட்டத்தில் சற்று அவர் தளர்வடைகிற சமயம் - பெருந்தொடைப் பருமனுள்ள அந்தப் பாம்பு அவர் தலையைக் கவ்வி, விழுங்க முயன்று கொண்டிருந்தது.
சடாரெனப் பாய்ந்து அதன் வாலில் தன் கைக் கோடாரியைப் பாய்ச்சினான் மணிமாறன். ஒரே போடில் வால் துண்டிக்கப்பட்ட சினத்தில் பாம்பு வாயைப் பிளக்கவே மாலனின் தந்தை தலையை உதறி, விடுவித்துக் கொண்டார். ஆயினும் பாம்பின் பிடி அவர் உடலில் இறுகிக் கிடந்தது. அதை விலக்கும் முயற்சியில் மணிமாறன் கடுமை காட்டவே பாம்பு அவரை விட்டுவிட்டு, அவன் உடலைச் சுற்றிப் படர்ந்து இறுக்கியது. இளமை திமிர்த்த உடலுடனும் முறுக்கேறிய வலிமையான கரங்களுடன் வீர வேங்கை போன்றிருந்த அவன் அந்த மலைப்பாம்புடன் போரிட்டு, அதன் வாயைத் தன் இரு கரங்களால் கிழித்துக் கொன்றான். ஆனால்….
அப்போது மாலனின் தந்தை கூறிய வார்த்தைகள் அவன் இதயத்தை வாள் கொண்டு கிழிப்பது போனன்றிருந்தது. தலை சுற்றி, மயக்கம் வரும் போலிருந்தது அவனுக்கு.
அப்படி என்ன கூறினார் அவர்?
2
மலைப் பாம்புடன் கடுமையாகப் போரிட்டு, அதைக் கொன்று போட்டுவிட்டுத் திரும்பிய மணிமாறன், மாலனின் தந்தையருகே ஓடிவந்தான்.
அவர் மகனின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கிடந்தார். அவர் உடல் துடித்துக் கொண்டிருந்தது. பாம்பின் பற்கள் அவர் தலையில் ரணங்களை ஏற்படுத்தியிருந்தன. அதில் பொங்கும் குருதியைத் தன் உடையைக் கிழித்துத் துடைத்துக் கொண்டிருந்தான் மாலன்.
உன் தந்தையை உடனே நாட்டு வைத்தியரிடம் தூக்கிச் செல்ல வேண்டும். மலைப் பாம்பின் பல்லில் கொடிய விஷம் எதுவும் கிடையாது. இது சாதாரண காயம்தான். பச்சிலை மருந்திட்டால் உன் தந்தை பிழைத்துக் கொள்வார். புறப்படு. நானே இவரை என் தோளில் தூக்கி வருகிறேன்
என்றான் மணிமாறன்.
ஆனால், மாலனின் தந்தை இந்த யோசனையை வேண்டாமென்று மறுத்துவிட்டார்.
"மணிமாறா நீ மாவீரன். எனக்காக நீ அந்த மலைப் பாம்புடன் கடுமையாகப் போரிட்டதற்கு நன்றி. அதன் வாயைக் கிழித்துக் கொன்ற உன் வீரம் பாராட்டத் தக்கது. ஆனால், இனி நான் பிழைக்க மாட்டேன். வைத்தியரிடம் தூக்கிச் செல்வது வீண் முயற்சி. அந்தக் கொடிய மலைப்பாம்பு கடுமையாக என் உடலை முறுக்கியதால் விலா எலும்புகள் உடைந்து, நொறுங்கி விட்டன. தலையை வேறு கடித்துக் குதறிவிட்டது. குத்துயிரும் குலை உயிருமாய் துடிக்கும் இந்த நிலையில் உன்னிடம் ஒரு வேண்டுகோள். என் மகன் அறியாச் சிறுவன். உலகம் புரியாதவன். நான் செத்த பிறகு அவன் அநாதை ஆகிவிடக் கூடாது. நீ தான்