Kozhaigal
By Sivasankari
5/5
()
About this ebook
Read more from Sivasankari
Knit India Through Literature Volume 1 - The South Rating: 5 out of 5 stars5/5Bridges Rating: 4 out of 5 stars4/5The Betrayal and Other Stories Rating: 0 out of 5 stars0 ratingsGods Wait To Punish Rating: 0 out of 5 stars0 ratingsKnit India Through Literature Volume 4 - The North Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kozhaigal
Reviews for Kozhaigal
2 ratings0 reviews
Book preview
Kozhaigal - Sivasankari
http://www.pustaka.co.in
கோழைகள்
Kozhaigal
Author :
சிவசங்கரி
Sivasankari
For other books
http://www.pustaka.co.in/home/author/sivasankari
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
கோழைகள்
1
இதப்பாருங்கோ...
ம்?
கூப்பிடறேனே, காது கேக்கலியா?
'ம்'னு கேட்டேனே, ருக்கு!
ம் என்ன ம்? வாயத் தொறந்து என்னன்னு கேட்டா கொறைஞ்சு போயிடுவேளா?
என்ன?
"கீழ, கீரைக்காரி போறா... போயி நல்லதா எட்டணாவுக்கு வாங்கிண்டு வாங்கோ... ஞாயித்துக்கெழமையிலானு கொஞ்சம் உபகாரமா இருக்கக்கூடாதா? மசமசன்னு பேப்பரும் கையுமா இடிச்ச புளியாட்டம் உக்காந்துண்டிருக்கணுமா?
பதில் ஏதும் பேசாமல் ஈஸிசேரிலிருந்து எழுந்து, பேப்பரை மடித்து வைத்துவிட்டு, மாட்டியிருந்த சட்டைப் பையிலிருந்து எட்டணாக் காசை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிப் போகும் அப்பாவைப் பார்க்கையில், சந்துருவுக்குப் பாவமாக இருந்தது.
'நா வேணா போய் வாங்கிண்டுவரட்டுமாப்பா?' என்று கேட்க நினைத்தவன், 'ஏண்டா, உங்கப்பா உருப்படியா ஒரு காரியம் பண்றது உனக்குப் பிடிக்கலியா? பாடத்தைப் படிச்சு ஒழுங்கா நீ கரையேர்ற வழியப்பாரு!' என்று அம்மா பதிலுக்குக் கத்துவாளே என்கிற பயத்தில், ஒருவிதக் கையாலாகாத்தனத்துடன் உட்கார்ந்துவிட்டான்.
இன்றா, நேற்றா!
ஒரு நாளா, இரண்டு நாளா!
நினைவு தெரிந்த நாளாய் நித்தமும் வீட்டில் இதே கதைதான்.
வாயில்லாப் பூச்சி அப்பா...
அவரை ஓடஓட விரட்டும் அம்மா...
அம்மா ஒருத்தி மட்டும் போதாதென்று அவ்வப்போது அவளோடு இரட்டை நாயனம் வாசித்து, ஒத்து ஊதும் நீலா, அன்னம்...
கீழே போன சேஷன் மேலே வந்தார்... கை நிறைய பச்சுப்பச்சென்று கீரைக்கட்டுகள்.
இந்தா...
எவ்ளோ கட்டு குடுத்தா?
நாலணாவுக்கு நாலு... மொத்தம் எட்டு.
அடக் கஷ்டகாலமே! தக்குனூண்டு, தக்குனூண்டு கட்டா இருக்கு... நாலணாவுக்கு ஆறு வாங்கப்படாதோ? நேத்துகூட நா ஆறு மேனிக்கு பன்னெண்டு வாங்கினேனே! என்ன சாமின்னு அவ சிரிச்சிருப்பா, நீங்க ஹிஹின்னு அசடு வழிஞ்சுண்டு, குடுத்ததை வாங்கிண்டு வந்துட்டேளாக்கும்!
இல்ல, ருக்கு... மூணுக்கு மேல தரமாட்டேன்னா... நாந்தான் விடாப்பிடியா பேரம் பண்ணி நாலு வாங்கினேன்... கட்டு பெரிசு...
ஆ...மா... பெரிசு! நீங்க வாங்கிண்டு வந்ததை வெச்சுண்டு சமாராதனை பண்ணிடலாம்!
சந்துருவுக்கு இப்போது நிஜமாகவே கோபம் நெஞ்சுக்குள் குமுகுமுவென்று கொப்பளித்தது.
வாங்கிக்கொண்டு வா என்று விரட்ட வேண்டியது, அப்புறம், வாங்கிக் கொண்டு வந்ததைப் பழிக்க வேண்டியது.
ஏன், தானே போவதுதானே!
திம்மக்கட்டை, திம்மக்கட்டையாய் கண்ணாடிக்கெதிரில் ஒன்றும், ஜன்னல் விளிம்பில் கதை புஸ்தகமும் கையுமாய் ஒன்றும் பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்களே... அவர்களை அனுப்பி அருமையானதாய் வாங்கிக் கொண்டு வரச் சொல்வதுதானே!
ஹூம்... எங்கே!
எல்லாம் சரியான வணங்காமுடிகள்... வணங்கி ஒரு வேலை செய்ய லாயக்கில்லாதவர்கள்.
வாய் மட்டும் இந்தக் காதுக்கு அந்தக் காது!
எதிரில் இருந்தவர்களைப் பார்க்கப் பிடிக்காமல் சந்துரு எகனாமிக்ஸ் புஸ்தகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டான்.
சமையல்கட்டிலிருந்த மனைவியிடம் கீரைக் கட்டுகளைக் கொடுத்துவிட்டு சேஷன் நாற்காலியில் உட்கார்ந்து பேப்பரைப் பிரித்து எண்ணி ஒண்ணேகால் நிமிஷம் போவதற்குள், ருக்கு மீண்டும், இதப்பாருங்கோ...
என்று கூப்பிட்டாள்.
என்ன?
அந்த ரங்கநாதனை ஒரு நடை பாத்துட்டு வரப்போறேளா, இல்லியா?
எந்த ரங்கநாதனை?
அ? சீரங்கத்து ரங்கநாதனை! அடிச்சுக்க ரெண்டு கை போறல எனக்கு! எத்தனை ரங்கநாதனைத் தெரியும் உங்களுக்கு? ம்? அந்தத் தரகனைச் சொல்றேன்...
அவனைத்தான் போன வாரமே பாத்துட்டு வந்தேனே, ருக்கு... கையில பத்தாயிரம் குடுத்து, வைர மூக்குத்தி, தோடு, இருவது சவரன் நகை போடறதுன்னா வா, இல்லேன்னா கிட்டகூட வராதேன்னு கறாரா சொல்லிட்டானே!
அவன் அப்படித்தான் கண்டிஷனா சொல்லுவான்... பொண்ணைப் பெத்த நாமதானே தழைஞ்சு போகணும்? நாலு நடை போய் பாத்துட்டு வரணும்?
"பிள்ளையாத்துக்காரா சொல்றதை தரகன் சொல்றான்... அவனுக்குக் குறைக்கறதுக்கும் கூட்டறதுக்கும் அதிகாரம் ஏது? கையில பத்தாயிரம், வைர மூக்குத்தி, தோடு, இருவது பவுன் எல்லாம் நம்ம ஸ்திதிக்கு அகலக்கால்