Vaigairai Deepangal
By GA Prabha
4.5/5
()
About this ebook
Reviews for Vaigairai Deepangal
5 ratings0 reviews
Book preview
Vaigairai Deepangal - GA Prabha
http://www.pustaka.co.in
வைகறை தீபங்கள்
Vaigarai Deepangal
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
எண்ணங்களே நம்மை
வழிநடத்திச் செல்கிறது
நம்பிக்கை அதற்குத்
துணை நிற்கிறது.
விழிக்கும் போது வானம் தெரிந்தது.
வானம் தெரியும் நாள் எல்லாம் இனிதாக இருக்கிறது. எல்லை இன்றி பரந்து கிடக்கும் வானம் போல் மனமும் பரந்து விசாலமாகிறது. தன் குடை கீழ் பாதுகாப்பு தரும் வானம் போல் தானும் தன் கைகளுக்குள் அனைவருக்கும் அடைக்கலம் தரும் உணர்வு ஊற்றாய் பெருக்கெடுத்து விடுகிறது.
சுபத்ரா வானம் பார்த்தபடி படுத்திருந்தாள்.
இரவு முழுவதும் பெய்த மழையில் ஜன்னல் விளிம்புகள் நனைந்திருந்தன. முத்தாய் தேங்கியிருந்த மழைநீர் நிலவொளியை உள்வாங்கி பிரதிபலித்தது.
பழைய வீட்டில் விழிக்கும் போது பக்கத்து வீட்டுச் சுவர் தான் தெரியும். இங்கு ஜன்னல் தாண்டி சீட் அவுட் கைப்பிடி சுவர் தெரிகிறது. தெருவிளக்கின் ஒளி முழுதாகப் பிரதிபலிக்கிறது. நடு இரவில் விழித்தால் வானம் , நிலவு , நட்சத்திரங்கள் தெரியும்.
சுபத்ரா எழுந்து முகம் , கை , கால் கழுவி வந்து அமர்ந்தாள். மனதுக்குள் இருந்த உணர்வுகளை ஒன்று திரட்டி தீப ஒளியாக்கி நெற்றிப் பொட்டிற்கு கொண்டு வந்தாள். பழக்கப்பட்ட மனம் அடங்கியது.
பிரபஞ்ச சத்தியே! மௌலீஸ்வரனை சந்திக்கணும்
– உச்சரித்தது.
மீண்டும் நாங்கள் சேரணும்!
- இறைஞ்சியது மனம்.
துணையும் தொழுந்தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப் பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே!
மீண்டும் , மீண்டும் கூறினாள் பாடலை.
மனம் இறைஞ்சியது , கெஞ்சியது , ஏங்கியது. கிட்டத்தட்ட நூறு நாட்கள் ஆகிறது. அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பித்து. இருபது வருஷத்துக்கு முன் பிரிந்து சென்றவன் வருவானா?
கண்ணுக்குள் மௌலீஸ்வரன் நின்று சிரித்தார்.
மௌலி
– மெல்ல முனகிக் கொண்டாள். வருவீர்களா?சந்திப்போமா?
சந்திப்போம்
– உள்மனது கூவியது.
திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தையே சொல்வதால் அது சக்தி மிக்கதாகி விடும். தனக்குள் மந்திரமாய் உச்சரிக்க ஆரம்பித்தாள். சந்திப்போம்
– ஆட்டோ சஜஷன். வெற்றியை நாம் அடைய விரும்பினால் , வெற்றியை அடையும் மந்திரத்தை , நம்பிக்கையை நமக்குள்ளே நாம் திரும்ப திரும்ப கூறுவதால் அது நடக்கிறது.
தாகித்தவர் இவ்வுலகில்
தண்ணீரைத் தேடுகின்றனர்!
தண்ணீரும் தேடுகிறது
தாகம் கொண்டவர்களை:
பாரசீக்க கவிதை நினைவுக்கு வந்தது. சந்திப்பும் தங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. சுபத்ராவும் , மொளலீஸ்வரனும் சந்திப்பதை. தாகம் கொண்ட தவிப்போடு காத்திருக்கிறாள். தாகம் தீரும் நிச்சயம் தீரும்.
நினைப்பே சந்தோஷத்தைத் தர , எழுந்து உட்கார்ந்தாள் சுபத்ரா. வெறும் தரை தான். இன்னும் எந்த சாமானும் வந்து சேரவில்லை. நேற்று இரவு தான் இந்த வீட்டுக்கு வந்தது. நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வீடு. மொத்தமாய் முப்பது வீடுகள். இருபது வருட சேமிப்பை தந்து வாங்கிய வீடு. நேற்று காலை தான் பால் காய்ச்சினாள்.
இனிதான் போய் சாமான் எடுத்து வர வேண்டும்.
சுபத்ரா எழுந்தாள். தரையில் படுத்ததால் உடல் வலித்தது. ஆனால் , எந்தச் சாமானும் இல்லாமல் பளிச்சென்று இருந்த வீடு அழகாக இருந்தது. பம்மலில் அண்ணா வீட்டிலிருந்து சாமான் கொஞ்சம் தான் வரும். இப்போதே அவளின் சாமான்களை எடுக்க அண்ணா முகம் சுருக்கினான்.
டி.வி. ப்ரிட்ஜ் , வாஷஷிங் மெஷஷின் இங்க இருக்கட்டுமே. நீ காலேஜ் புரபசர் , கைநிறைய சம்பாதிக்கறே. நினைச்சதை வாங்கலாம். என்னால முடியுமா?
– முணுமுணுத்தான்.
இருபது வருஷமாக சுபத்ராவின் சம்பளத்தில் தான் அவன் வாழ்க்கை வண்டி ஓடியது. இன்று சுபத்ரா சொந்த வீடு வாங்கி தனியாக போகிறாள் என்பதில் எரிந்து போனான். அம்மாவை தான் வச்சுக்க முடியாது. நீ கூட்டிட்டு போ என்று கூறிவிட்டான்.
மனிதர்களில் பலர் அருவெறுப்பான குணம் உடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்களோடு சரிசமமாய் போட்டியிட்டு , சண்டை இட்டு தரம் தாழ்ந்து போக சுபத்ரா விரும்பவில்லை. சரி
என்று கூறிவிட்டாள்.
இன்று எல்லா சாமான்களுடன் அம்மாவும் வந்து விடுவாள். அம்மாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையாக இருந்தது. சுபத்ராவின் வாழ்வு அழிய அவளின் சுயநலம் தான் காரணம். எப்போதும் யாரைப்பற்றியானும் குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்பாள்.
சின்னக் கவலை எழ யோசித்தபடி எழுந்தாள். அவிழ்ந்த நீண்ட கூந்தலை முடிந்த நேரம் ஸ்வேதா வெளியில் வந்தாள். அந்தநேரத்துக்குக் குளித்திருந்தாள்.
ஆறடி கூந்தலை முடிஞ்சாச்சா
- ஸ்வேதா.
ஏன் நீயும் கூந்தலை வளர்க்கறது. வசதின்னு யார் பாப் வெட்டிக்கச் சொன்னது?
– சுபத்ரா.
என் செல்ல அம்மா. என்னை விட யங்கா இருக்கியே
மனசுடி
எங்க மனசுக்கு என்னவாம்?
என் மனசுல ஒருத்தர் தான்
யாரு , மிஸ்டர் மௌலீஸ்வரனா?
எஸ்
எங்க மனசுல யாரும் புகுந்துக்கலையே இன்னும்
புகுந்தாலும் திட்ட மாட்டேன்.நல்லவனான்னு விசாரிச்சு கட்டி வச்சுடுவேன். காதல் இயற்கையானது.
இன்னும் யாரும் கிடைக்கலை மம்மி
- ஸ்வேதா நீர் சொட்டிய தன் பாப் கூந்தலை உலர்த்தினாள். ஜீன்ஸ் குர்தா மாட்டி நெற்றியில் சின்ன பொட்டு வைத்தாள்.
அதற்குள் சுபத்ரா மின்சார அடுப்பில் குக்கரை ஏற்றியிருந்தாள். ஒரு சாதம் வைத்து விட்டால் சாமான்கள் வந்தவுடன் அடுக்கி வைக்க உதவியாயிருக்கும். சுபத்ரா எதிர் கடையில் பால் வாங்க கிளம்பினாள்.
குட்டிமா. குக்கருக்கு வெயிட் போட்ருடா
– மகளிடம் கொஞ்சியபடி காலில் செருப்பை மாட்டினாள்.
நோ மம்மி
ஏண்டா குட்டி
– சுபத்ரா விழித்தாள்.
கரெக்ட் வெயிட்டா இருக்கேன். நான் வெயிட் போடக் கூடாதுன்னு ஃபிரெண்ட்ஸ் சொல்லியிருக்காங்க
உங்களை எல்லாம் ஓட விட்டு உதைக்கணும்
– சுபத்ரா படி