Panimalar Paathaigal
By GA Prabha
5/5
()
About this ebook
Reviews for Panimalar Paathaigal
4 ratings0 reviews
Book preview
Panimalar Paathaigal - GA Prabha
http://www.pustaka.co.in
பனிமலர் பாதைகள்
Panimalar Paathaigal
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
காற்றில் அனுப்புகிறேன்
தென்றலாய் என் காதலை
விழிக்கும் போது மழை தூறலாய், ஜில்லீப்பாய், சாரல் வீசியது. இரவு முழுதும் சடசடவென்று ஆவேசத்துடன் கொட்டித் தீர்த்த மழை. விடியலில் தூறலாய் மாறியிருந்தது.
இந்த சன்னத் தூறல்தான் சுகம்.
இழுத்துப் போர்த்தி கண்கள் கிறங்க, பாதி தூக்கம், பாதி விழிப்புமாய், கிடப்பது அற்புதம். அபூர்வமாய்த்தான் இப்படி வாய்ப்புகள் அமைந்து விடுகிறது.
ஆனால் எழுந்து பழகிய உடம்பு, படுக்க மறந்துவிடுகிறது. தாத்தா விநாயகம் கட்டிலை விட்டு இறங்கினார். தரை ‘ஜில்’ என்று இருந்தது. அதன் குளிர்ச்சியில் விரல் நடங்கியது.
கைவிரல்களை தேய்த்து சுகம் ஏற்படுத்தி கன்னத்தில் பதித்தார். செருப்பில் கால் நுழைத்து, பாத்ரூமில் புகுந்தார்.
மணி எத்தனை?
புத்தி கேள்வி கேட்டது.
ஹால் கடிகாரம் ஐந்து என்றது.
வாக்கிங் போகணுமா? மனம் கேள்வி.
போ
உள்மனசு.
ஆனால் அதுதான் விடுதலை. ராமஜென்ம பூமியாய், ஜப்பான் எரிமலையாய் கொதிக்கும் இந்த வீட்டு சூழ்நிலையிலிருந்து தப்பிக்க வாக்கிங்தான் ஒரே வழி.
விநாயகம் ஜிப்பாவை அணிந்து கொண்டார். தலையில் மப்ளரை கட்டிக் கொண்டு ரூமை விட்டு வெளியில் வந்தார். ஹால் சின்ன குழல் விளக்கில் நனைந்திருந்தது. வாசு ஓரமாகப் படுத்திருந்தான்.
அவனைத் தாண்டி, கிச்சனுக்குள் போய் ஃபிரிஸ் திறந்து பால் எடுத்து சுடச்சுட காஃபி வைத்துக் குடித்தார். ஒரு சுறுசுறுப்பு வந்தது.
வாவ். தட்ஸ் குட்.
உற்சாகமாய் வெளியில் வந்தார்.
வீடே முழு உறக்கத்தில் இருந்தது. வாசுவின் குறட்டை ஒலி, விதவிதமாய் ஒலி எழுப்பியது. அவன் ஹேமாவின் ரூம் வாசலில் படுத்திருந்தான். அது பாட்டி தெய்வநாயகியின் கட்டளை, அடுத்து தாத்தா அறை. கிச்சன், பூஜையறை. மற்றபடி அவர்களின் மூத்தமகள் பிரேமா. அவள் மகள் ரூபிணி. மகன் டீனு எல்லோரும் மேல் போர்ஷனில்.
அது தன் உலகம். வீண் பெருமை, ஆடம்பரம், கர்வம் என்று ஒரு மாய உலகில் சஞ்சரிக்கும். ஆணவம், ஆங்காரமாய், ஹேமாவை போட்டு மிதிக்கும் அதன் வேகம் தாங்காமல் தனக்குள் ஒடுங்கி, அமிழ்ந்து, அமைதியாகிவிட்டாள் ஹேமா.
தனக்கான தண்டனை இது என்று ஏற்று நடக்கிறாள். அவளுக்குள் எத்தனை ஏக்கம். வேதனை இருக்கிறதோ?
தானும் ஒதுங்கினால் தவறா என்று தாத்தா விநாயகம் அவளுக்கு ஆறதல். அதனாலேயே தெய்வநாயகி அவளிடம் கடுகடுப்பு காட்ட முடிவதில்லை. கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும். விநாயகம் தந்த சப்போர்ட்டில்தான் பி.எஸ்ஸி முடித்தாள். இனி அடுத்து எம்.எஸ்ஸி போக அவளின் சம்மதத்திற்கு காத்திருக்கிறாள்.
தெய்வநாயகி கோவை சென்றிருக்கிறாள்.
இன்று காலை வந்து விடுவாள்.
வந்ததும் ரூபிணியை எம்.காம் வகுப்பில் சேர்க்கப் போகிறாள் ஹேமா? தாத்தாவுக்குள் கேள்வி எழும்பியது. அத்துடனேயே வாக்கிங் போய்விட்டு வந்தார். வந்தபோது வீடு முழுதும் வெளிச்சம். பரபரப்பாய் வேலையாட்கள். தெய்வநாயகி வந்துவிட்டாள்.
ஹால் சோபாவில் கம்பீரமாக சாய்ந்திருந்தாள் தெய்வா. பளீரென்ற நிறம். டை போட்டு, கருகருவென்ற கூந்தல். அந்த அதிகாலையிலும் பளிச்சென்று உடை. முகத்தில் சிரிப்பு. தெய்வா கடுமையானவள் என்று யார் சொன்னாலும் நம்ப முடியாது.
அவள் அருகில் சலுகையாக மேலே சாய்த்தபடி ரூபிணி. காஃபி ஆற்றியபடி பிரேமா.
வெல்கம் தெய்வா
விநாயகம் அருகில் வந்தார்.
போன காரியம் முடிஞ்சுதா?
அம்மா தொட்ட காரியம் எல்லாமே சக்ஸஸ்தானே
பிரேமா.
பாட்டி எனக்கு ஐ பாட் கேட்டேனே
ரூபிணி.
வாங்கி இருக்கேண்டி தங்கம்
தெய்வா. தன் காஃபியை வாங்கி விநாயகத்திற்கு பாதி தந்தாள். அது அவள் வழக்கம். விநாயகம் அவளுக்கு உயிரை விட மேல். தனக்கு எது தந்தாலும் அவருக்கு பாதி. தன்னில் பாதி அவர்தானே என்பாள்.
வெறும் பத்தாம் கிளாஸ் படிச்சிருந்த என்னை டிகிரி முடிக்க வைச்சு. டெக்ஸ்டைல் மில் முதலாளி ஆக்கினது அவர்தானே என்பாள் அடிக்கடி. அந்த நன்றி. தனக்கு சரி, சமமான உரிமை தந்த கணவர் பற்றிய பெருமிதம் அனைத்தும் அவனிடம் உண்டு. அதனால் பல சமயங்கள் அவரிடம் அடங்கிப் போவாள்.
அதனால்தான் ஹேமா கொஞ்சம் நிம்மதியுடன் இருக்க முடிகிறது. அவரவர்க்கு வாங்கி வந்ததை தந்து விட்டு தன் அறைக்குப் போனவள் பின்னாடியே வந்தார்.
ஹேமாவுக்கு என்ன வாங்கினே தெய்வா?
விருட்டென்று பாம்பின் சீறலாய் திரும்பினாள்
எதுக்கு வாங்கணும்?
அவளும் உன் பேத்திதானே?
இல்லை
தப்பு தெய்வா விநாயகம் கண்டித்தார். சிறு வயசுல அறியாத பருவத்துல செஞ்ச தவறு. அதை இன்னமும் நினைச்சு. நீ வெறுக்கறது ரொம்ப தப்பு.
என் பொண்ணை கொன்னவ.
அது ஹேமா தப்பு இல்லை. உன் பொண்ணோட முட்டாள்தனம்.
‘சரி’, விநாயகம் தன் பொருள்களை டேபிளில் வைத்தார்.
எனக்கு வேண்டாம்.
என்னங்க இது? தெய்வா பதறினாள்.
ஒரே வீட்டுல நீ பாரபட்சம் பாக்கறது எனக்குப் பிடிக்கலை. உன் பொருள்கள் எனக்கு வேண்டாம்.
தெய்வா கடுகடுப்பாய் பார்த்தாள்.
எனக்கு வேண்டாம் விநாயகம் திரும்பி நடந்தார்.
இருங்க தெய்வா சுரதி குறைந்தது.
எடுத்துட்டு போய் அவளுக்கு கொடுங்க
எவளுக்கு
ஹேமாவுக்கு ஆனா நான் தர மாட்டேன்
இதுவரைக்கும் இறங்கி வந்தியே,