Thulli Sellum Megam
By GA Prabha
5/5
()
About this ebook
Reviews for Thulli Sellum Megam
3 ratings0 reviews
Book preview
Thulli Sellum Megam - GA Prabha
http://www.pustaka.co.in
துள்ளி செல்லும் மேகம்
Thulli Sellum Megham
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
இந்த உலகில் பேசுவதை விட
மவுனமாக இருக்கத்தான் அதிக வலிமை தேவை.
காற்று ஒரு குதூகலத்துடன் உள்ளே நுழைந்தது.
ஆழ்ந்த, இனிமையான, நிதானமான காற்று, சின்னச் சின்ன மழைத் துளிகளுடன் ஜன்னல், வாசல் கதவுகள் தாண்டி, சுவாதீனமாய் உள்ளே நுழைந்தது.
இதமாய் வருடிச் செல்லும் காற்று…
இரவு முழுவதும், புழுக்கத்தை அள்ளி வீசிய சூழ்நிலை விடியலில் மாறி விட்டது.சூரியனின் தகிப்பில் கொதித்த பூமி, அதிகாலை மழையில் குளிர்ந்தது.
கோடை மழை.
பங்குனி கடைசியில், திடீரென்று வந்து குதூகலத்தை அள்ளி வீசிய மழை.விசிறி விசிறி அடித்த மழைக் காற்று… ரூமிற்குள் குளிர்ச்சியை பரப்பி இருந்தது.ஜன்னல் கம்பிகளில் படிந்திருந்தது மழைநீர்.
நேத்ரா கம்பியில் முகத்தை பதித்துக் கொண்டாள்.‘சில்’லென்று குளிர்ச்சி உள்ளே இறங்கியது.சரம், சரமாய் இறங்கிய மழைத்துளி சாரலாய் முகத்தில் அடித்தது.
மழை ஆரம்பித்தவுடன் தூக்கம் போய்விட்டது.
வீடே உறக்கத்தில் இருந்தது.சித்தப்பா மகேஸ்வரன் மட்டும் மொட்டை மாடியிலிருந்து ஹாலுக்கு இறங்கி வந்தார்.வாசல் வராண்டாவிலிருந்து அப்பாவும் ஹாலுக்கு வந்து விட்டார்.
இரவு ஒரு மணிக்கு ஆரம்பித்த மழை.
நடுவில் நின்று பின் வலுத்து, மீண்டும் பொழிய ஆரம்பித்திருக்கிறது.நாலரைக்கு விழிப்பு வந்துவிட்டது நேத்ராவுக்கு.அதன்பின் தூங்கப் பிடிக்கவில்லை.மழையில் நனைந்த தெருக்களை, மழைத்துளி வழியும் மின்விளக்கு கம்பங்களை பார்த்தபடி நின்று விட்டாள்.
சில விஷயங்களை அப்போதைக்கு அப்போதே ரசித்து விட வேண்டும்.சரி, அப்புறம் பார்க்கலாம் என்றால், இந்த அழகு பிறகு கிடைக்காமலேயே போய்விடும்.இயற்கை ஒவ்வொரு நிமிஷமும் புதியதாக இருக்கும் என்பாள் நேத்ரா.
காற்றுக்கு சாற்றிக் கொண்ட ஜன்னலை, திறந்து கொக்கியைப் போட்டாள்.நல்லவேளை தனி ரூம்.நேத்ரா கல்லூரி முடித்தவுடன் தனி ரூம் தந்து விட்டார்கள்.மிகச்சிறிய அறைதான்.ஒரு கட்டில், கணினி.அவ்வளவுதான் இடம்.
ஹாலில் எதிர்புறம் ஒரு ரூம்.அது அப்பா, அம்மாவுக்கு.அருகில் சித்தப்பாவுடையது.கிச்சன், டைனிங் , பூஜை என்று தனித்தனி இடம்.சின்ன ரேழி போல் சென்று முடிவில் டாய்லெட், பாத்ரூம்.அட்டாச்டு பாத்ரூம் அப்பாவுக்கு பிடிக்காது.
தம்பி அரவிந்த், சித்தப்பா ரூமில்.அவன் சித்தப்பா செல்லம்.
அப்பாவின் கண்டிப்பு, அடக்கு முறையிலிருந்து காக்கும் கவசம் சித்தப்பா.ஏனோ மகேஸ்வரன் சொல்வதை அப்பா குணாளன் மறுக்க மாட்டார்.சரி, போ.நீ சொல்றே
என்று போய் விடுவார்.சித்தப்பாவும் நியாயம் இல்லாத விஷயத்தைச் சொல்ல மாட்டார்.
குடும்பத்தில் அக்கறை கொண்டவர்.
‘அவரிடம் பேச வேண்டும்.’ நேத்ரா நினைத்தாள்.
மணி பார்த்தாள்.அஞ்சரை.
இனி தூக்கம் வராது.காபி குடிக்கலாம் என்று தோன்றியது.வெளியில் வந்தாள்.
குட்மார்னிங் நேத்ரா
- மகேஸ்வரன்.
ஹாய் சித்தப்பா.குட்மார்னிங் காபி குடிக்கலாமா?
அதுக்குத்தான் நான் எழுந்தேன்.பல் தேச்சிட்டு வா.
பல் தேய்க்கணுமா?
வருஷத்துல ஒரு நாள் தேச்சிடு.
நேத்ரா சிரித்தபடி போனாள்.டிகாஷன் வாசனை, கடைகோடி வரை வீசியது.மகேஸ்வரன் எது செய்தாலும் அது நன்றாக இருக்கும்.ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்வார்.
வாழ்வதே ருசித்துச் சாப்பிட.அதை ரசித்து செய்!
என்ற மகேஸ்வரனின் வாழ்வில்தான் ரசனை இல்லாத பல விஷயங்கள்.கல்லூரியில் படிக்கும்போது ராதா என்ற பெண்ணை விரும்பினார்.இரு பக்கமும் பலத்த எதிர்ப்பு.அதிக எதிர்ப்பு இந்தப் பக்கம்தான்.
தாத்தா விஷம் குடித்தார்.
அப்பா, வெளியே போ!
என்றார்.
சத்தியம் பண்ணு.அந்தப் பெண்ணை விட்றேன்னு
என்று பாட்டி அழுதாள்.என் தாலியைக் காப்பாத்துடா.
சித்தப்பா சத்தியம் செய்தார்.
ராதாவுக்கு வேறு இடத்தில் திருமணம் ஆனது.
ஆனால் சித்தப்பா மறுத்துவிட்டார்.
என் மனசை மாத்திக்க முடியாது.மீறி வற்புறுத்தினா செத்துருவேன்
என்ற பயமுறுத்தலுக்கு பணிந்தது வீடு.ஆயிற்று சித்தப்பாவுக்கு நாற்பத்தி நான்கு வயதாகிறது.
குணாளனுக்கு திருமணம் ஆகியிருந்தது.நேத்ரா பிறந்திருந்த சமயம்.அம்மா, சித்தப்பாவுக்கு முழு ஆதரவு.நீங்க ராதாவை கூட்டிட்டு வாங்க தம்பி.இவங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம்.இப்படியா ஒரு மனசை கொல்றது?
என்று கொதித்தாள்.
புன்சிரிப்புதான் பதில்.
இன்று வரை அதுதான்.
தான் உண்டு.தன் வேலை உண்டு என்று இருப்பார்.கேட்டால் மட்டுமே பதில், கருத்துக்கள் சொல்வார்.
பதில் பேசுவதை விட மவுனம்தான் வலிமை வாய்ந்தது நேத்ரா.அது என்கிட்ட இருக்குன்னு சந்தோஷப்படறேன்
என்பார்.
அவங்க போட்டோ இருக்கா சித்தப்பா?
இதயத்துல இருக்கு.
ஏன் சித்தப்பா?
கல்யாணம் ஆகி இன்னொருத்தருடன் வாழறவ.அவ லைப் கெடக் கூடாது.காதல், கல்யாணத்துல முடியணும்னு இல்லை.தான் விரும்பினவ நல்லா இருக்கணும்னு நினைக்கறது கூடத்தான்.என் நிழல் கூட ராதா மேல படக்கூடாது.
சித்தப்பா மேல் மதிப்பு அதிகரித்தது அதன் பிறகுதான்.
அப்பா கூட அவரிடம் குரல் உயர்த்திப் பேச மாட்டார்.
அம்மா மட்டும்தான் இயல்பாய் பேசுவார்.அம்மாவிடம் அண்ணி என்பதை விட, தாய் ஸ்தானம் தந்திருந்தார்.
அண்ணிக்கு இன்னைக்கு ரெஸ்ட்.
ஏன் சித்தப்பா?
அண்ணாவும், அண்ணியும் எங்கியோ வெளியூர் போறாங்க.ஸோ, நான்தான் சமையல்.
ஹை ஜாலி
நேத்ரா குதித்தாள்.
என்ன சதி வேலை நடக்குது?
அரவிந்தும் வந்து விட்டான்.
இன்னைக்கு என்னடா வேணும் உனக்கு?
ஒரு இருபதாயிரம் வேணும்.
போதுமா?
ஒரு ஆன்ட்ராய்டு போன் வாங்கணும்.
சரி.அப்பாகிட்ட சொல்லிட்டு தரேன்.
அதை விட, என்னை வெட்டிப் போட்ரலாம்.
கண்ணு பி.ஈ. செகண்ட் இயர்தான் படிக்கிறே.கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகு.நானே வாங்கித் தரேன்.
இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
அக்கா.நீதான் ஐ.டி.ல சம்பாதிக்கிறீல்ல.தாயேன்.
"தம்பி.