Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai Veedu
Aasai Veedu
Aasai Veedu
Ebook88 pages44 minutes

Aasai Veedu

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan. Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Aasai Veedu

Reviews for Aasai Veedu

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasai Veedu - GA Prabha

    http://www. pustaka. co. in

    ஆசை வீடு

    Aasai Veedu

    Author:

    ஜி. ஏ. பிரபா

    G. A. Prabha

    For more books

    http://www. pustaka. co. in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ஓம் மகா கணாதிபதயே நமஹ

    கணகணவென்ற மந்திர ஒலியில் விழிப்பு வந்து விட்டது. இதமான காலைப் பனியும் சன்னமாய் ஒலிக்கும் மந்திரமும் உள்ளுக்குள் ஏதோ ஒரு பரவசத்தை உண்டு பண்ணியது.

    இந்த விடியல் பரவசம் கலந்த உணர்வை உண்டு பண்ணினால் அந்த நாள் இனிய நாளாக அமைந்து விடுகிறது. நினைத்து நினைத்து மகிழும்படியான சம்பவம் ஒன்றும் நிகழ்ந்து விடும்.

    அந்த நினைப்பு வந்ததும் வித்யா சங்கரியால் படுத்திருக்க முடியவில்லை. இரு கைகளையும் தேய்த்து கண்ணில் ஒற்றிக் கொண்டு எழுந்தாள்.

    கட்டில் தரை எல்லாம் ஜில்லென்றது. லேசான குளிர். ஏற்கெனவே கோவை – குளிர் நகரம். நேற்றிரவு பெய்த மழையில் இன்னும்குளிர்ந்து ஃபிரிஜ்ஜிக்குள் இருப்பது போல் இருந்தது.

    இந்த மாடியும் விடியலும் வித்யாவுக்கு பிடித்தமான இடம். திட்டம் போட ஏது உரிமை? இந்த வீடு அடிமைகளின் கூடாரம். ரிங் மாஸ்டர் சர்வதிகாரி அப்பா. அவர் ஆசை கோபம்சந்தோஷம்தான் மற்றவர்களிடம் பிரதிபலிக்க வேண்டும். யாரேனும் அதை மீறினால் அவர் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வார்.

    வித்யா அண்ணா பிரஸன்னா அம்மா அப்பாவின் ஆதரவில் தங்கி இருக்கும் அத்தை… ஏன்?நாய்க்குட்டி ஸ்டூபி கூட அப்பாவின் முகம் பார்த்துதான் நடக்கும்.

    சலிப்பு மனதை நிரப்புவதை உணர்ந்து வெளியில் வந்தாள் வித்யா. கைப்பிடிச்சுவரில் ஈரம் இருந்தது. தெருக்கள் கழுவி விட்ட மாதிரி இருந்தது. பக்கத்து ரூம் அண்ணா பிரஸன்னாவினுடையது. அங்கிருந்துதான் மந்திர ஒலி வந்தது.

    இந்த வீடுவாங்கி வந்த அடுத்த வருஷம் வித்யாவுக்கு வேலை கிடைத்தது. அப்பாவிடம் கெஞ்சி வீட்டு லோன் போட்டு மாடிகட்ட ஏற்பாடு செய்தாள்.

    பிரஸன்னாவும் லோன் போட்டுத் தந்தான்.

    இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் அப்பா எந்த மறுப்பும் சொல்லவில்லை.

    சதாம் உசேன் பேசவே இல்லையே? கிரேட்– பிரஸன்னா கை குலுக்கினான்.

    இது அவருக்கு கௌரவம்தர்ற விஷயம்தானே!

    நீ அப்பாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவே!

    அப்பா அப்பாதானே.

    நாம இப்படிஇருக்கறதுனாலதான் அவர் துள்றார்.

    துள்ளட்டுமே… எத்தனை நாளைக்கு?உண்மைல அவர் ரொம்பப் பாவம்ணா. அவர் நம்மளை அடக்கலை. நாமதான் அவரை அடக்கறோம் - அன்பால. நாம் கொஞ்சம் எதுத்தாலும் அவர் நொறுங்கிடுவார்.

    நல்ல லாஜிக்.

    அண்ணாவை நினைக்கையில் பரிதாபம் தான் வந்தது. இந்த வயசுக்கு உண்டான எந்த சந்தோஷமும்உற்சாகமும் இன்றி… சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கை.

    ஹாய் விது…! குட்மார்னிங்- பிரஸன்னாவின் குரல்-

    அண்ணா! திங்க் ஆஃப் எ டெவில்.

    ஹியர் ஐ’ம்யா

    பிசாசுன்னுஏத்துக்கறியா?

    எஸ்…‘வேதாந்த சிரோன்மணி’‘உபன்யாச சக்கரவர்த்தி’ திருவாளர் ராஜகோபாலன் புள்ளையா பொறந்துட்டு மனுஷனா இருக்க முடியுமா?குட்டிச் சாத்தான் கூட்டம்தான்.

    அண்ணா! ஓவரா பேசறே!

    உஷ்… கூல்டவுன். இன்னைக்கு ஃப்ரீ. சிரோன்மணி சொற்பொழிவுன்னு கரூர் போயாச்சே. வர வரைக்கும் என்ஜாய்.

    அப்பா வீட்டில் இல்லாத சந்தோஷம் எங்கும் எதிரொலித்தது. ஸ்டூபி தைரியமாக வீடெங்கும் சுற்றியது. அத்தை கூட ஹால் வரையிலும் வந்து டி. வி. யில் நியூஸ் கேட்டாள்.

    கல்யாணமாகி அடுத்த வருஷம் புருஷனை இழந்து இந்த வீடே கதி என்று வந்தவள். பிரஸன்னா வித்யாவை வளர்ப்பதிலேயே முழு திருப்தி அடைந்தவள்.

    நாள் கிழமை நல்லது கெட்டது

    Enjoying the preview?
    Page 1 of 1