Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalagik Kaninthu
Kaadhalagik Kaninthu
Kaadhalagik Kaninthu
Ebook142 pages1 hour

Kaadhalagik Kaninthu

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan. Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Kaadhalagik Kaninthu

Reviews for Kaadhalagik Kaninthu

Rating: 4.375 out of 5 stars
4.5/5

8 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Great story that gives energy and hope when a person feel down with problems

Book preview

Kaadhalagik Kaninthu - GA Prabha

http://www.pustaka.co.in

காதலாகி கனிந்து

Kaadhalagi Kanindhu

Author:

ஜி.ஏ.பிரபா

G.A.Prabha

For more books

http://www.pustaka.co.in/home/author/ga-prabha

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

1

விடியல் வானம் நட்சத்திரங்களுடன் மின்னியது. லேசாக விடிந்து கொண்டிருந்தது. பறவைகளின் கரையல், பால் வண்டிகளின் சைக்கிள் மணி ஒலி தாண்டி, சுற்றுப்புறத்தில் ஒரு அமைதி நிலவியது.

அந்த அதிகாலையிலும் பிள்ளையார் குளித்து அலங்காரத்தில் இருந்தார். அவர் வீற்றிருந்த அரசமரத்தைச் சுற்றி போட்டிருந்த சிமெண்ட் தரையில் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது.

ஒரு அணில் கீழே குதித்து மீண்டும் அரசமரத்துக்கு தாவியது. ஆதில் அங்கிருந்த பறவைகள் சடசடவென்று சிறகடித்து பறந்து சென்றது.

சந்தியா பூக்களை பிள்ளையார் பாதத்தில் சாற்றி கைகுவித்து வணங்கினாள். சுற்றிவிட்டு, சிமெண்ட் தரையில் ஈரமில்லாத இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்து, கண்மூடி இருகரம் குவித்து, மனம் ஒருமித்து நிறுத்தினாள்.

ஹாஸ்டல் வார்டன் ரூமிலிருந்து சன்னமாய் வீணை இசை. காற்றில் உதிர்ந்த இலைகள், பவழமல்லி, வேப்பம்பூ மணம் ஒரு பரவச நிலைக்கு கொண்டு சென்றது.

இந்த தியானம் மனது ஒருமைப்பட. பரபரவென்று ஓய்வு இல்லாது திரியும் மனதை இழுத்து நிறுத்த இந்த தியானம் உதவும். எதிர்காலம் பற்றிய குழப்பத்தில் உலவும் புத்தியை நிலைநிறுத்த.

இன்னும் சிறிது நேரத்தில் ஹாஸ்டல் முழுதும் விழித்து விடும். கல்லூரியுடன் இணைந்த ஹாஸ்டல், சிரிப்பும், கலகலப்புமாய் அமைதி அழிந்து விடும். மூன்று வருடம் ஓடி, ஆடித் திரிந்த இடம். முடிந்தது இந்த பட்டாம்பூச்சி வாழ்க்கை.

இனி தன் வாழ்க்கை எந்த திசையில் திரும்பப் போகிறது. அதை நிர்ணயம் செய்யப் போவது யார்?

மேல்படிப்பா? வேலையா? திருமணமா?

ஹாய் சந்தியா!–உடன் பயிலும் மைதிலி, கைநிறைய பூக்களுடன் வந்தாள்.

சந்தியா வெயிட் பண்ணேன். நம்ம தலைவருக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு ஓடி வரேன் மைதிலி ஓடினாள்.

அடுத்தடுத்து மாணவிகள் வர ஆரம்பித்து விட்டார்கள். தேர்வு நடைபெறும் நேரம் என்பதால் வேண்டுதல் அதிகமாக இருந்தது.

உனக்கு என்ன வேண்டுதல் மைதிலி?

தேங்காய் மாலை

எதுக்கு?

இன்னைக்கு மெக்கானிக்ஸ் பேப்பர். நான் அம்பேல், ஹீரோதான் காப்பாத்தணும்

நமக்கு பதிலா பிள்ளையார் எக்ஸாம் எழுதினா தேவலாம்.

அதைச் சொல். உனக்கு முடிஞ்சுதா சந்தியா?

நாளைக்கு ஒரு எக்ஸாம் இருக்கு.

மேல எம்.சி.ஏ. சேரப் போறியா? ரேங்க் ஸ்டூடண்ட் நீ

தெரியலை மைதிலி. இவ்வளவு படிக்க வைச்சதே அதிகம்.

மைதிலி வியப்பாக பார்த்தாள். ஆசை இல்லையா?

எனக்கு ஆசை இருந்தா போதுமா?

பின்ன?

காலேஜ்ல சேரும் போது அப்பா இருந்தார். இப்ப இல்லை. அண்ணா மாமனார் வீட்டோடு போய்ட்டான். மாமா ஆதரவுல அம்மா. அவங்க எடுக்கிற முடிவுதான் என்னுது.

எப்படி சந்தியா… நீ எந்நேரமும் சிரிச்சுக் கிட்டு ஜாலியா இருக்கே?

அப்படி இல்லைன்னா பைத்தியம் பிடிச்சுரும்–சந்தியா புன்னகையுடன் தன் ரூமுக்குத் திரும்பினாள். நாலு பேர் தங்கும் சகல வசதிகளும் நிறைந்த அறை. குளியலறை, கட்டில், தனி ஷெல்ஃப், படிக்கும் மேஜை, டேபிள் லைட் என்று வசதியாக இருந்தது.

நீலா, வேணி, பாமா என்று மூலைக்கொருவராக கட்டிலில் சரிந்து கிடந்தார்கள்.

அழகிகளா எழுந்திருங்கடி–சந்தியா உலுக்கினாள்.

அழகிகள் அதிகாலையில் எழுவதில்லை.

வசனமா பேசறே? எழுந்து படி.

புதுசா ஏதோ சொல்றே?

நீலா உனக்கு மத்தியானம் அரியர்ஸ் பேப்பர்

இருக்கட்டுமே!

செகண்ட் இயர்ல வச்ச அரியர்ஸ் பேப்பர். இன்னும் கிளியர் ஆகலை. ஜோதிகா கூட தன் மேரேஜ் புடவை எதுன்னு கிளியர் செஞ்சாச்சு.

எழுதினாள், எழுதுகிறாள், எழுதுவாள்.

அஹோ, வாரும் பிள்ளாய் விக்கிரமாதித்தரே– பாமா கூந்தலை தூக்கிமுடிந்தபடி எழுந்து உட்கார்ந்தாள்.

வந்தேன்–சந்தியா.

நீலா எப்போது அரியர்ஸ் பேப்பரை முடிப்பாள்? இதற்கு சரியான பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்.

…….

ஏன் மவுனம் விக்கிரமாதித்தரே?

பதில் தெரியவில்லை வேதாளம்.

நல்லது. எனக்கும் பதில் தெரியவில்லை. வேதாளம் முருங்கை மரத்துக்கே மீண்டும் குடி போகிறது.

கொழுப்புடி உங்களுக்கு– நீலா போர்வையை சுருட்டி அவர்கள் மேலே எறிந்தாள்.

கிளியர் செஞ்சா என்ன? செய்யாட்டி என்னா. எக்ஸாம் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் கல்யாணம். குடும்பம், குழந்தை, குட்டின்னு செட்டில் ஆகப் போறேன்–நீலா.

ஏய்! பெண்கள் சாதனை புரியற காலம்டி இது.

ஸோ வாட்? அப்பவும் வீட்ல சோறு பொங்கி, புருஷன், குழந்தை, குட்டின்னு கவனிச்சுட்டுதானே வெளில போகணும்.

சூப்பர் லாஜிக். சகிக்கலை.

தேங்க்யூ!- நீலா எழுந்த உட்கார்ந்தாள். நீளக் கூந்தலை வாரி முடித்துக் கொண்டை போட்டாள். கண்ணாடியில் முன்னும் பின்னும் திரும்பி தன்னை அழகு பார்த்தாள்.

எப்படி இருக்கு. என் ரிசப்ஷன்ல இந்த கொண்டைதான்.

அண்டங்காக்கா கொண்டைக்காரி– பாமா பாடினாள்.

ரண்டக்க, ரண்டக்க–சந்தியா பாட, வேணி துள்ளிக் குதித்து ஆட ஆரம்பித்தாள். உற்சாகம் தீப்பிடிக்க சந்தியாவும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டாள். பாட்டு சப்தத்தில் அக்கம் பக்கம் கூட வீசிலும், கை தட்டலும் கொப்புளித்துப் பறந்தது.

ஹேய் குட்டீஸ்… வார்டன் ஈஸ் கம்ங்யா- சீனியர் ஒருத்தி குரல் கொடுத்து விட்டு ஓட கூட்டம் சிட்டாய் ஓடி மறைந்தது. சந்தியா மூச்சு வாங்க உட்கார்ந்தாள். வேணி அவளை கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

ச்சீ! என்னடி இது?

தீப்பிடிக்க, தீப்பிடிக்க முத்தம் குடுடி– வேணி பாடினாள்.

ஆயிரம் முத்தம் தருவேன். ஆனால் உனக்கல்ல–சந்தியா பதிலுக்கு பாடினாள்.

போடி, மனசை காயப்படுத்திட்டே ரணம் ஆயிடுச்சி.

டெட்டால் ஊத்து. சரியாயிடும்.

கிளாஸா டான்ஸ் ஆடறே, பாடறே சந்தியா.

சந்தியா, பேசாம நீ டான்ஸ் மாஸ்டர் ஆயிடு

வேலை தேடற வேலை இல்லை.

போங்கடி, நா கிளிசரின் ஃபேக்டரிதான் ஆரம்பிக்கப் போறேன்–சந்தியா முறுக்கிக் கொண்டாள்.

அது எதுக்குடி?

என்ன பேசற நீ? இப்ப டி.வி.ல எத்தனை மெகா சீரியல் வருது. ஒன்னுலயானும் ஹீரோயின் அழாம இருக்காளா? கடல் மட்டம் கூட ஒரு இஞ்ச் கூடிப் போச்சாம். அத்தனை கண்ணீர் விட கிளிசரின் வேணாமா? எப்படியும் ஒரு நாளைக்கு அரை லிட்டர் தேவை. இப்போதைக்கு லாபகரமான தொழில் அதுதான்.

கொழுப்புடி உனக்கு.

நான் ஹாலிவுட் சினிமால நடிக்கப் போறேன்–பாமா.

அது என்ன பாவம் பண்ணித்து

திமிருடி. எத்தனை ஹாலிவுட் டைரக்டர்ஸ் என்னை கூப்பிட்டாங் தெரியுமா? நடிக்க வா, வான்னு.

"எது? அனகோண்டா பார்ட் த்ரியா நடிக்கவா?- சந்தியா.

பாமா அடிக்கடி பாய்ந்தாள். சந்தியா தப்பிக்க குனிந்து, வளைந்து ஓடியவள் வார்டன் மேல் மோதி நின்றாள். பதறி மற்றவர்கள் மூலைக்கு ஒடுங்கினார்கள்.

ஸா… ஸாரி… ஸாரி மேடம்.

என்ன ஸாரி? படிக்காம பாட்டும், கூத்தும்?

ஸாரி மேடம்.

"என்ன

Enjoying the preview?
Page 1 of 1