Pesath Thudikkum Mounam
By GA Prabha
4.5/5
()
About this ebook
Reviews for Pesath Thudikkum Mounam
7 ratings1 review
- Rating: 5 out of 5 stars5/5Great! I've just started G.A Praba's stories. Each and everyone tells something to the readers in a good way. But this publishing has errors - please do some editing prior to publish
Thank you1 person found this helpful
Book preview
Pesath Thudikkum Mounam - GA Prabha
http://www.pustaka.co.in
பேசத் துடிக்கும் மௌனம்
Pesa Thudikkum Mounam
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
காற்றில் நறுமணம் இருந்தது.
‘கம்’ என்று யுகலிப்டஸ் வாசனை. மெல்லியதாய் வீசிய சுற்றுப்புற காற்றில் சில்லிப்பு உறைய வைத்தது.
'வாவ்"-கண்கள் மலர, பரவசத்தில் குதித்தாள் பூர்ணா.
கண் எதிரே தெரிந்த நீலமலைத்தொடர் பிரமிக்க வைத்தது. மேகங்கள் மிதக்கும் நீலமலை, பயத்தை விட, ஆனந்தத்தை தந்தது.
இயற்கைதான் சாஸ்வதம். உண்மை. மற்றதெல்லாம் மாயை என்று சொல்வதுபோல் கம்பீரமாக நின்றது நீலமலைத் தொடர். பரந்த ஆகாயமும், தவழ்ந்து செல்லும் மேகமும் மெய்மறக்க வைத்தது.
மலைப்பாதையில் ஓரமாய் நின்றிருந்தது கல்லூரிப் பேருந்து. டிரைவர் டீக்கு இறங்கி இருந்தார். ரோடின் மறுபக்கம் டீக்கடை. லாரி ஒன்று ஓரமாக நின்றிருந்தது. மேலிருந்து ஒரு லாரி,ஏராளமான வெளிச்சங்களோடு இறங்கியது.
பூர்ணா கைப்பிடிச் சுவரை ஒட்டி நின்றாள்.
செங்குத்தாக இறங்கிய மலை ஆழம் கலக்கியது. அதன் நடுவே மிதந்து சென்று, கடந்தது மேகங்கள். தூரத்து மலையிலிருந்து அருவி ஒன்று குறைவான தண்ணீருடன் வளைந்து, நெளித்து இறங்கியது.
'ஹாய் பூர்ணா. இங்கயா இருக்கே" , சிந்து.
'அதோ அந்த அருவியைப் பாரேன். நமக்கு வாழக் கத்துக் கொடுக்குது"
'அருவி கத்துத் தருது! ஆஹா கவிதை"- சிந்து ஏளனமாய்ச் சிரித்தாள்.
'உண்மைதான் சிந்து, வளைஞ்சு கொடுத்து, வாழ்ந்தா கம்பீரமா, ஆனந்தமா வாழலாம். இயற்கைதான் நம்முடைய குரு. அதை உற்றுப்பாரு. அது நம்மோடு பேசறது புரியும்"
'போச்சுடா. ஆரம்பிச்சிட்டியா?"
பூர்ணா புன்னகையோடு திரும்பினாள். பேருந்துக்குள் உறங்கியக் கொண்டிருந்த மாணவிகள் எழுந்து விட்டார்கள்.
'ஏய்! தூங்கு மூஞ்சிகளா. வாங்கடி வெளியே!"
'ஏ! நாங்க வரமாட்டோம். பிரிஜ்ல வச்ச மாதிரி இருக்கு. உறைஞ்சு போயிடுவோம்"- ராகவி.
'உறங்கும் மானிடனே உடனே வா, வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா, வா
அதிகாலை உனைப் பார்த்து
வணக்கமும் சொல்லும்"- பூர்ணா பாடினாள்.
'ஆஹா. தாலாட்டு, தாலாட்டு"- மதுமதி.
சிந்து தண்ணீர் பாட்டிலை திறந்து, எல்லோர் மேலும் தெளிக்க, அடுத்த நிமிஷம் பேருந்தே அலறியது. கீழிருந்து மேலே வருவதற்குள் தண்ணீர் ஐஸாக மாறிருந்தது. எல்லோரின் தூக்கமும் கலைந்து குதித்து இறங்கினார்கள்.
கண் எதிரே கண்ட பரவசத்தில் பேச மறந்து நின்றது தோழிகள் பட்டாளம்.
'ஏய், என்னை ஃபோட்டோ எடுடி"- ராகவி.
'என்னடா இது என் கேமிராவுக்கு வந்த சோதனை"- சிந்து.
'நீ மலையோட பின்னணியில் என்னை எடேன்" ராகவி குதித்தாள்.
சிந்து அவளை க்ளிக்கினாள். 'பூர்ணா, நீ வா"
'நான் எதுக்குடி?"
'அழகா, இயற்கையோடு சேர்ந்து, இயற்கை அழகை போட்டோ எடுக்கறேன்"
'அப்போ என்னை எடுத்தியே"- ராகவி சீற்றாள்.
'அது மேக்கப் உபயம். குன்னூர் வரப்பவே நீ லிப்ஸ்டிக் போட ஆரம்பிச்சிட்டியே!"
'ஏய் - வெறியோடு பாய்ந்தாள் ராகவி. சிந்து விலக, குப்புற விழுந்தாள் ராகவி. ‘ஹேய்’ என்று குதூகலித்தது கும்பல்.
'கேர்ல்ஸ். டீ குடிச்சுட்டு டிரைவர் வந்தாச்சு" புரஃபசர் மேடம் குரல் கொடுக்க, எல்லோரும் ஓடிப்போய் வண்டியில் ஏறினார்கள். ராகவி கோபத்தோடு தனியே போய் அமர, சிந்து அருகில் பூர்ணா அமர்ந்தாள்.
'என்ன சிந்து இப்படி பேசிட்டே?"
'ஸோ. வாட்"
'அவ கோபமா இருக்கா பார்"
'இருக்கட்டுமே"
'டூர் வந்த மூடே கெட்டுப் போச்சே!"
'ஒண்ணும் கெடலை. அவ மட்டும்தான் வந்திருக்காளா. முப்பது பேரு. ரெண்டு மேடம், ஒரு சார் வந்திருக்கோம்"
'சரி. ஆனா...?"
'டோண்ட் டாக். என்னவோ தான்தான் உலக அழகிங்கற ரேஞ்சுக்கு அலட்டறா. உன் பக்கத்துல அவ நிக்க முடியுமா?"
'கடவுளே! கொஞ்சம் வாயை மூடறியா?"
'எனக்கு திங்க எதனாலும் கொடு!"
'பல் தேய்ச்சியா?"
'நேத்து பஸ்ல ஏறும்போதே தேச்சிட்டேன்"
'திருந்த மாட்டேடி"- பூர்ணா தலையில் அடித்துக்கொண்டு, கடலைமிட்டாய் பாக்கெட்டை எடுத்துத்தந்தாள்.
ராகவியின் மௌனக் கோபம் ஊட்டி வந்த பிறகும் தொடர்ந்தது. அது பூரணாவை உறுத்தியது. அவளுக்கு தான் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்க வேண்டும். முகம் சோர்ந்தோ, கலங்கியோ, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தால், அது பூர்ணாவுக்கு பிடிக்காது. அதை மாற்ற முடிந்த வரை பாடுபடுவாள்.
ராகவியுடனும் கலகலப்பாக பழக முயன்றாள்.
ராகவி விலகிப் போனாள்.
'ஏண்டி பின்னாடியே சுத்தறே?"- சிந்து.
'சிந்து, டூர் முடிஞ்சு போனா செமஸ்டர் எக்ஸாம். அதுக்கு பிறகு காலேஜ் முடிச்சு, ஆளாளுக்கு, ஒவ்வொரு பக்கம் போயிடுவோம்.அப்புறம் எங்க சந்திக்க போறோம்? அதனாலதான் டூர் வந்தோம். இப்படி இறுக்கமா இருந்தா எப்படி?"
'தாழ்ந்து போறியா?"
'தாழ்ந்தவர்கள் வீழ்ந்ததில்லை"
'அம்மாடி தத்துவ ஞானி- சிந்து இருகை கூப்பி வணங்கினாள். 'என்னவோ செய்
- தாங்கலை.
தோழிகள் பொட்டானிகல் கார்டனில் ஆளுக்கு ஒரு பக்கம் விலகி இருந்தார்கள். ராகவி ஒரு இடத்தில் ஒதுங்கி இருந்தாள். பசேல் என்ற பச்சைப் புல் மைதானத்தில் தோழிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அங்கங்கே, பெரிய அடிமரத்தின் கீழ், காதலர்கள். புதுமணத் தம்பதிகள். பாதி வெட்டிய பருத்த மரத்தின் கீழ் ஒரு பைத்தியக்காரன் சாய்ந்திருந்தான்.
பைத்தியம் என்று கூட சொல்ல முடியாது.
பிச்சைக்காரன் போல் இருந்தான். அடர்த்தியான தாடி. பரட்டையான தலை. வெள்ளை குர்தாவில் பாதிக்கு மேல் மண் அப்பியிருந்தது. கண்மூடி சாய்ந்திருந்தான.
'பாவம்டி. பசிபோல"- பூர்ணா அவனருகில் நெருங்கி, தோளில் தட்டினாள். கண் திறந்தான்.
'சாப்ட்டியாப்பா?" அவன் பேசவில்லை.
'இந்தா இதைச் சாப்பிடு"- இட்லிப் பொட்டலம் ஒன்றை அவன் கையில் தந்தாள். ராகவியிடம் வந்தாள்.
'ராகவி இந்தா இதைச் சாப்பிடு 'எனக்கு வேண்டாம்
'இது என்னுது இல்லை கண்ணா. காலேஜ் கேண்டீன்"- பூர்ணா அருகில் அமர்ந்தாள்.
'ஏன் தனியா உக்காந்துட்டே?"
'...."
'அவ டிரீம்ல இருக்கா- சிந்து. 'டிரீமா. வாவ். என்ன கனவு?
'நாளைக்கு கல்யாணம் ஆனதும் ஹனிமூன் ஊட்டி"
'நான் எதுக்கு ஊட்டிக்கு வரேன்?"- தலையைச் சிலுப்பினாள் ராகவி.
'எழுபது பவுன் நகை போட்டு, ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியருக்கு கட்டித் தரார் எங்கப்பா. நான் எதுக்கு இங்க வரணும். காஷ்மீர் போறேன்"
'அங்க போனா. பாகிஸ்தான் கடத்திட்டு