Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Irukkum Nenjam
Nee Irukkum Nenjam
Nee Irukkum Nenjam
Ebook136 pages1 hour

Nee Irukkum Nenjam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan. Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Nee Irukkum Nenjam

Reviews for Nee Irukkum Nenjam

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Irukkum Nenjam - GA Prabha

    http://www.pustaka.co.in

    நீ இருக்கும் நெஞ்சம்

    Nee Irukkum Nenjam

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    "என்னிடம் நிறையக் காதல் உள்ளது.

    வாங்கிக் கொள்ளத்தான் நீ இல்லை."

    ஓம்…ம்…ம்

    நீண்ட மூச்சை உள்ளிழுத்தாள் பாரதி. சுத்தமான அதிகாலை காற்று குளுமையாய் நுரையீரலை நிரப்பியது. சீரான சுவாசம் உடல் முழுதும் ஒரு புத்துணர்ச்சியைப் படர விட்டது.

    சுற்றிலும் அதிகாலை அமைதி. குழந்தையின் மென்மையாய் பரவி இருந்தது. உயர்ந்து, பரந்து, கிளை விரிந்திருந்த அரசமரத்தில் தங்கியிருந்த பறவைகளின் கீச்சொலி, அழகான பின்னணி சங்கீதமாய் ஒலித்தது.

    உதிர்ந்திருந்த பூக்கள், பிள்ளையாருக்குச் சாற்றியிருந்த மாலைகளின் நறுமணம் கலந்து ஒரு பரவச உணர்வைத் தந்தது. அதிலிருந்து நகர மனமில்லாமல் கண்மூடி நின்றிருந்தாள் பாரதி.

    காலடியில் உணர்ந்த ஈரம், குளுமையாய் உடல் எங்கும் பரவியது.

    இந்த அதிகாலை சுகம்… இறைவன் முன் நின்று, அதைத்தா, இதைத்தா என்று நச்சரிக்காமல், இன்னொரு நாளைத் தந்ததற்கு நன்றி என்ற உணர்வுடன் நின்றால் அமைதியும், ஆனந்தமும் நிரம்பி விடுகிறது.

    எதைத்தான் வேண்டுவது? ஒன்று கிடைத்தால் அடுத்ததற்கு மனம் தாவி விடுகிறது.

    இன்னும் மருத்துவமனை வளாக மெர்குரி, சோடியம் விளக்குகள் அணையவில்லை. பிரம்மாண்ட மருத்துவமணை, விளக்கொளியில் ஜொலித்தது. ஆறுமணிக்கு, இன்னும் மார்கழிப் பனி சூழ்ந்து, அடர்ந்திருந்து.

    பாரதி குளித்திருந்தாள். மார்கழியில் அஞ்சரைக்கே குளித்து ஏதேனும் ஒரு கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பது கௌரியின் உத்தரவு. அம்மா சொல் மீறியதில்லை பாரதி. நைட் டியூட்டி என்பதால் இங்கேயே குளித்து பிள்ளையாரை தரிசித்து விடுவாள். ஏழரைக்கு இன்சார்ஜ் டாக்டர் வந்ததும் கிளம்பினால் மீண்டும் மாலை அஞ்சரைக்கு வந்தால் போதும்.

    பாரதி சாந்தியைச் சுற்றி வந்தாள். தன்வந்திரி கோவில் முன் அமைந்த பிள்ளையார் சந்நிதி. கேரள முறையில் கட்டப்பட்ட கோவில். தினமும் ஒரு நம்பூதிரி பூஜை செய்ய வருவார். கோவில் முழுவதும் தீபங்கள் எரிந்தது.

    தன்வந்திரி சந்நிதியில் நின்றிருந்த பெண்மணி புன்னகைத்தார்.

    வணக்கம் டாக்டரம்மா

    நல்லா இருக்கும்மா. ராத்திரி நல்லா தூங்கிச்சு

    இனி ஒரு பிராப்ளமும் இல்லம்மா. ரெகுலர் செக்கப் வந்தா போதும்

    தெய்வம்தாம்மா உங்களை அனுப்பியிருக்கு அவர் நெகிழ்ந்தார்.

    கூலி வேலை செய்யும் அவரின் பெண் வேணிக்கு இதயக் கோளாறு. கணவன் இல்லை. பாரதி வீட்டுக்கு பெயிண்ட் வேலை செய்ய வந்தவரின் மூலம் விஷயம் தெரிந்து, சீப் டாக்டரிடம் சொல்ல, இலவச அறுவை சிகிச்சை, பராமரிப்பு தருகிறது மருத்துவமனை.

    இங்கு பணியாற்றுவதில் பெருமிதம்தான் பாரதிக்கு. நகரிலேயே புகழ்பெற்ற மருத்துவமனை. வெளிநாடுகளிலிருந்தும் சிகிச்சைக்கு ஆட்கள் வருகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும், இரண்டு அடுக்கு கொண்ட கட்டிடங்கள். மொத்தம் ஆறு கட்டிடங்கள். நவீன பரிசோதனைக் கருவிகள்.

    கிட்டத்தட்ட அம்பது கிரவுண்ட் பரப்பில் கம்பீரமாக நிற்கும் மருத்துவமனையில் வேலை கிடைக்க பாரதி பெற்ற தங்கப் பதக்கங்களே காரணம். படிப்பு முடிந்து நாலு மாதம் கூட ஆகவில்லை. இரண்டு மாதச் சம்பளம் வாங்கி விட்டாள்.

    மேற்கொண்டு இதய சம்பந்தமாக படிக்க ஆசைதான். ஆனால் இதற்கே கௌரி பட்ட சிரமங்கள் அதிகம். சிறிது நாள வேலை பார்த்து, பணம் சேர்த்து பின்பு படிக்கலாம் என்று நினைத்தாள் பாரதி.

    நினைப்பதை நிறைவேற்றுவது காலம் தானே.

    காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது?

    பத்தாவது படிக்கும் தன்னையும், ஆறாவது படிக்கும் தங்கை ஓவியாவையும், அழைத்துக் கொண்டு கண்ணீரோடு அம்மா வெளியில் வந்தது இப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது.

    இதோ பாரதி டாக்டர். ஓவியா பி.ஈ. படிக்கிறாள்.

    எல்லாமே ஓடுகிறது. மாறுகிறது.

    வாழ்க்கை மட்டும் மாறாமல்.

    கௌரியின் கண்ணீரும், ஏக்கங்களுமாய்.

    தன்னை அழுத்தும் எண்ணங்களிலிருந்து மீண்டு, மனதைச திசை திருப்பினாள் பாரதி. மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. ரூமிற்கு வந்தாள். மற்றொரு டிரெய்னிங் டாக்டர் மீனா டீ போட்டுக் கொண்டிருந்தாள்.

    குட்மார்னிங் பாரதி. டீ வேணுமா?

    தேங்க்யூ… சூடா

    மீனா நீட்டிய டீயடன் சேரில் அமர்ந்தாள் பாரதி. நைட் ரெஸ்ட் இல்லா டென்ஷன்

    ஏன்?

    ஒரு ஆக்ஸிடெண்ட். சின்னப் பொண்ணு

    என்னாச்சு?

    ஈவ் டீசிங். ஹேட் இன்ஜூரி

    ஸேப்டி இல்லைன்னு தெரியும்ல! எதுக்கு பத்து மணிக்கு மேல வெளில சுத்தறா?

    நாகரீகம்!

    ஈஸ் ஷீ அலைவ் ஆர் நாட்

    இன் ஐ.சி.யு

    ஸோ பேட்

    மனசு தாங்கலை மீனு கண்கள் கலங்கியது.

    ஏய் பாரதிகுட்டி! ஏன் கண்ணீரும் கம்பலையுமா இருக்கே! கிவ் மீ யுவர் டீ யாபத்மினி வேகமாக நுழைந்து பாரதியின் டீயின் கப்பை பிடுங்கிக் கொண்டாள்.

    ஏ… ஏய் அது என்னுது

    ஸோ வாட்? உன் பேர் எழுதியிருக்கா! படபடப்பாய் இருக்கு

    ஏன்?

    ஏனோ, தெரியலை. வரவர ரொம்ப படபடப்பாகுது

    எதிர்ல ஏதானும் ஹேஸ்ட்ஸம் பாய் வந்தானா?

    எஸ்… எஸ். அதான் ரீசனா?

    பாத்து. அடிக்கடி படபடப்பாகறது நல்லதில்லை- பாரதி.

    பத்மினி லவர்ஸ் டேக்கு உனக்கு ஏதும் அப்ளிகேஷன் வரலையா?

    நிறைய! எங்க அத்தான்கிட்ட கேட்டு ஒரு பேர் டிக் பண்ணணும்?

    அத்தான் யார்? யார் அந்த அத்தான்?

    நான் கட்டிக்கப் பேறவர்

    பேஷ், ரொம்ப நல்லாயிருக்கு. தமிழ்ப் பொண்ணாடி நீ!

    இப்ப தமிழ் எங்க இருக்கு சொல்லு. உச்சிப்பு சுத்தமா, தெளிவா யார் பேசறாங்க. குடும்பத்தோடு உட்கார்ந்து ஒரு நிகழ்ச்சி பார்க்க முடியுதா. துணிப் பஞ்சம் வேற. ஒரு திருப்பாவை, திருவாசகம் தெரியுமா?

    "பூழியர் கோன் வெப்பொழித்த புகழியர் கோன் கழல் போற்றி

    ஆழிமிசை கல் மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி

    வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி

    ஊழிமலி திருநாதவூரர் திருத்தாள் போற்றி" பாரதி பாடினாள்.

    ஹா.. பத்மினி மயங்கினாள்.

    என்னாச்சு?- மீனா.

    மயக்கம் வருது

    தூக்கி தண்ணித் தொட்டில போடு பாரதி கிளம்பினாள்.

    பாரதி ஒரு தமிழ் சினிமாப் பாட்டு பாடிட்டு போ

    டைலமோ… டைலாமோ…டைலாமோ… டைலாமோ

    ஆஹா! செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

    லிட்டர் என்ன விலைன்னு விசாரிச்சு வை பாரதி வேகமாய் இறங்கி வந்தாள். இன்று சிறிது நேரமாகி

    Enjoying the preview?
    Page 1 of 1