Sooriyakanthi Pookkal
3.5/5
()
About this ebook
Reviews for Sooriyakanthi Pookkal
2 ratings0 reviews
Book preview
Sooriyakanthi Pookkal - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
சூரியகாந்தி பூக்கள்
Sooriyakanthi pookkal
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
விடிந்து வெகு நேரமாகியும், படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் வீணா.
இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. ஏதோவொரு இன்ப உணர்வு மனதை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. மனதில் உள்ளதை யாரிடமாவது சொல்லி மகிழ வேண்டும் போலிருந்தது.
ஆனால், இதை வெளிப்படையாக யாரிடமும் சொல்ல முடியாதே?
பெற்றவர்களுக்கு வீணா ஒரே மகள்.
அக்கா தங்கை என்று இருந்தாலாவது… மனதில் உள்ளதை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். ஆலோசனை கேட்கலாம்.
எதற்கு வழி இல்லையே?
அப்பா சுந்தரம் ஒரு பிசினஸ்மேன். அம்மா சாந்தா தனியார் நிறுவனத்தில் அதிகாரி. கை நிறைய சம்பாதிப்பவள்.
ஆபீசுக்கு தினமும், தானே காரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டு… இரவு ஏழு மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாள்.
அலுத்துக் களைத்து வந்ததும்.. ஒரு குளியல் போட்டுவிட்டு போனில் தனது நெருங்கிய சிநேகிதிகளோடு மணிக்கணக்கா அரட்டை அடிக்கத் தொடங்கிவிடுவாள்.
தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை… கலகலவென்று சிரித்து அரட்டைக் கச்சேரியை முடித்துவிட்டு.. சமையல்காரி சூடாய் கொண்டு வந்து வைக்கும் சப்பாத்தி, டால், குருமாவை ரசித்து சாப்பிட்டுவிட்டு… ஓய்ந்து போய் உடனே படுக்கையில் சாய்ந்துவிடுவாள்.
சில நேரங்களில்… படுப்பதற்கு முன் டெலிவிஷன் செய்திகளில் மூழ்கிப் போவதும் உண்டு.
அந்த தருணத்தில்… மகள் வீணா அம்மாவின் அருகே சென்று, பாட சம்பந்தமமாக ஏதாவது சந்தேகம் கேட்டாலோ அல்லது பள்ளியில் நடந்த முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச வந்தாலோ.. வள்ளென்று எரிந்து விழுவாள்.
ஏய் வீணா! உனக்கு அறிவு வேணாம்? அம்மா ஒரு பெரிய ஆபீசுக்கு மேலதிகாரி தெரியுமில்ல…? காலையில் இருந்து அடுக்கடுக்கா வேலைகள்.. எல்லாத்தையும் இழுத்துப்போட்டு கட்டியழுதுட்டு டயர்டாகி… வீட்டுல வந்து இப்போதான் அப்பாடான்னு உட்காந்தேன் வந்துட்டியா? அம்மாவைப் பார்த்தா.. உனக்குப் பாவமா இல்லையா? நீ ஒரு புத்திசாலிப் பொண்ணு… கிளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கிறவள்தானே? கொஞ்சம் அம்மாவைப் புரிஞ்சு நடந்துக்கோ… நீ இப்போ சின்னப் பொண்ணு இல்ல… எதுவா இருந்தாலும் நீயே மேனேஜ் பண்ணிக்கணும். அது தான் நல்லது. புரிஞ்சுதா? தொந்தரவு பண்ணாம போ… அந்த பக்கமா.. ச்சே!
என்று பொரிந்து தள்ளிவிடுவாள் சாந்தா.
அப்பா சுந்தரத்தைப் பத்தியோ கேட்கவே வேண்டாம. அவர் வீடு திரும்புவதற்குள் வீணா துங்கிப் போய்விடுவாள். பணத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம்? என்று சதா அப்பா சிந்தித்தாரே தவிர.. மகளிடம் பாசத்தைக் காட்டுவதற்கு, பத்து நிமிடங்களாவது ஒதுக்கலாம் என்று அவருக்கு தோன்றாமல் போனது.. வீணாவின் துரதிர்ஷ்டம்தான்!
இரவு பதினொரு மணிவாக்கில்… பார்ட்டி அல்லது மீட்டிங்கில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு களைத்துபோய் வீடடிற்கு வந்ததும் படுப்பவர்.. மறுநாள் காலை பத்துமணி வாக்கில்தான் கண் விழித்தே பார்ப்பார்.
பாசத்திற்காக வீணா ஏங்கித் தவிப்பதை கணவன்,மனைவி இருவருமே புரிந்து கொள்ளவில்லை.
அவரவர் கோணத்தில் பார்த்தால்…அன்பு மகள் வீணாவுக்காகத்தானே ஓடி,ஓடி சம்பாதித்து, சேர்த்து வைக்கிறோம். மகளின் எதிர்கால நல் வாழ்விற்காக மெழுகுவர்த்தியாக உருகிக் கொண்டிருக்கிறோம் என்று மனதளவில் இருவருமே நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான நிஜம்.
அம்மா சாந்தா என்றாவது தனக்காக ருசியாக தன் கைப்பட சமைத்தப்