Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mun Anthi Chaaral Nee
Mun Anthi Chaaral Nee
Mun Anthi Chaaral Nee
Ebook162 pages1 hour

Mun Anthi Chaaral Nee

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Mun Anthi Chaaral Nee

Reviews for Mun Anthi Chaaral Nee

Rating: 4.4 out of 5 stars
4.5/5

10 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mun Anthi Chaaral Nee - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    முன் அந்திச் சாரல் நீ

    Mun Anthi Chaaral Nee

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    மந்தமாருதம் தவழ்ந்து வந்து சில்லென்று மேனி தொட்டுத் தழுவியது.

    பால்கனி கதவைத் திறந்து... வாயில் சிகரெட்டைப் புகைத்தபடி நட்சத்திர வானத்தை அண்ணாந்து பார்த்தான் பத்ரிநாத்.

    மனதுக்குள் இனம் புரியாத டென்ஷன்...!

    அடிக்கடி திரும்பிப் பின்னால் பார்த்துக் கொண்டான்.

    "இது தப்பு தானே? 

    இதில் தப்பில்லை என்கிறானே நண்பன் அரவிந்த்?" உள் மனம் யோசித்தது. 

    "டேய் பத்ரி? நான் சொன்னா கேளு. இந்தக் காலத்துல உன்னை மாதிரி எவனுமே இருக்க மாட்டான்டா...

    வீட்டு சாப்பாடு போரடிச்சா. ஹோட்டல்லே சாப்பிடறதில்லை?

    ஒரு வித்தியாசமான டேஸ்ட்டை நாம்ப தேடிப் போறதில்ல. அது மாதிரிதான்டா இதுவும்...!

    கல்யாணம் ஆனவங்களே அடிக்கடி இந்த மாதிரி ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க... 

    நீ என்னடான்னா... ரிஷ்ய சிருங்கனா காலத்துக்கும் இருப்பேன்னு அடம் பண்றியே?

    இதோ பாரு பத்ரி! இது தப்புன்னு நெனச்சாத்தான் தப்பு. இதனால யாருக்காவது எந்த பாதிப்பாவது ஏற்பட்டா. நீ தயங்கறதிலே நியாயம் இருக்கும்... 

    நூத்துக்கு தொண்ணுரத்தி ஒன்பது பேரு. ஜாலியா ரிலாக்ஸ் பண்ணிட்டிருக்காங்க... 

    இந்தக் காலத்து இளைஞர்கள்லே. ஒரே ஒருத்தனை நீ சுட்டிக்காட்டு பார்ப்போம். தண்ணி அடிக்காம. அழகான பொண்ணைத் தொட்டுப் பார்க்காம... எவனுமே இருக்கமாட்டான்.

    ஆம்பளையா பொறந்ததே வேஸ்ட் தெரியுமா? எதுக்கு தயங்கறே? 

    நீயும் பவித்ராவும் விரும்பறீங்க... இந்த மாதிரி ரிலாக்ஸ் பண்ணினா... பவித்ராவுக்கு செய்யற துரோகம்னு நெனைக்கிறியா?

    கல்யாணத்துக்கு அப்புறம். மனைவியை. குடும்பத்தை கவனிக்காம... இதுலே அப்படியே மூழ்கிப் போனாத்தான் தப்பு...!

    இது. ஜஸ்ட். ஹோட்டல்லே வித்தியாசமான பிடிச்ச அயிட்டத்தை ருசிச்சுப் பார்க்கிற மாதிரிதான்...!

    நாட்டை ஆண்ட அந்தக் காலத்து மன்னர்களைப் பத்தி நீ கேள்விப்பட்டதில்லையா? 

    சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தின வீராதி வீரர்களா இருக்கிறவங்க... அடிக்கடி ‘சோம பானம் அருந்துவாங்க... அழகிகளைத் தொட்டுப் பார்ப்பாங்க...

    அந்தப்புரத்துல பல அழகிகள் இருப்பாங்க... மன்னன் அவங்களோட ஏகாந்தமா இருந்ததை. தப்புன்னு சரித்திரம் சொல்லலையே? 

    சாதிக்கிறவங்க அடிக்கடி இந்த மாதிரி தங்களை ரிலாக்ஸ் பண்ணிக்கிடறது. அந்தக் காலத்துலேர்ந்து நடந்துட்டுத் தான் வருது."

    நண்பன் அரவிந்தன் அடிக்கடி போதித்து. இவனது மனதைக் கரைத்துக் கொண்டிருந்தான். 

    இத்தனை காலமாய் மறுத்துக்கொண்டு வந்தவன்தான்...

    ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று சொல்வார்கள்.   

    எறும்பு ஊற ஊற... கல்லும் தேய்வது சகஜம்தானே?

    அதிலும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தி... பத்ரியை டென்ஷன்படுத்திக் கொண்டிருந்தன.

    "டேய் பத்ரி! இந்த டென்ஷன்லே இருந்து நீ விடுபடணும். உன்னை ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டாத்தான். உன்னால ஃப்ரீயா அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைக்க முடியும். 

    ஸ்மூத்தா மேலே நீ முன்னேற முடியும் சொன்னா கேளு.... நீ சரின்னு ஒரு வார்த்தை சொல்லு. இன்னிக்கே இப்பவே நான் அரேஞ்ச் பண்ணிடறேன்."

    அது வந்து அரவிந்த்? பல பேர் கூட பழகின பெண்கிட்டே. நான் எப்படி? சே..! எனக்கு டெலிகேட்டா இருக்குடா...

    "புரியுது மச்சான்...! ஃபிரெஷ் அயிட்டம் வேணும்னு சொன்னா... அதுக்கு தனி ரேட் மச்சான்!

    உனக்கு ஃபிரெஷ் அயிட்டத்தை அனுப்பச் சொல்லிட்டா - போச்சு...! உன் மனசு மாறிடப் போகுது... நான் உடனே ஃபோன் பண்ணி ஏற்பாடு செஞ்சுடறேன்."

    பத்ரி தயக்கத்துடன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதைக் காதிலேயே வாங்காமல். நகர்ந்து சென்று ஃபோனில் யாரிடமோ பேச ஆரம்பித்தான் அரவிந்த். 

    பேசி முடித்துவிட்டு இவனருகில் வந்தான்.

    எங்க வச்சுக்கலாம்?னு கேட்கறாங்கடா

    பு…. புரியலைடா... 

    இல்ல. நீ அவங்க எடத்துக்குப் போறியா?

    நோ. நோ. நான் அங்கெல்லாம் போகமாட்டேன். அவசரமாய் மறுத்தான் பத்ரி. 

    அப்போ... எங்கே? உன் கெஸ்ட் ஹவுஸ்லே? 

    டேய்... இந்த தேனியில என்னை எல்லோருக்கும் தெரியும்டா. கெஸ்ட் ஹவுஸுக்கு ஒரு பொண்ணு வந்துட்டுப் போனா. விஷயம் காத்துல பறந்து எங்கம்மா காது வரைக்கும் போயிடுமேடா... 

    நான் சும்மா உன்னைச் சிண்டிப் பார்த்தேன்டா

    "டேய்...! எனக்கொரு யோசனை...! கும்பக்கரை பார்ம் ஹவுஸ்லே வேலை பார்க்கிற ஆளு. மதியம் வந்து என்னைப் பார்த்துட்டுப் போனான்...   

    கிராமத்துல ஏதோ திருவிழாவாம். நாலு நாள் லீவு வேணும்னு கேட்டுக்கிட்டு... பண்ணை வீட்டுச் சாவியை ஒப்படைச்சுட்டுப் போயிட்டான்." 

    புரியுது பத்ரி...! அந்தப் பண்ணை வீட்டுக்கு அந்த ஃபிரெஷ் அயிட்டத்தைக் கொண்டாரச் சொல்லிடறேன். நீ கொஞ்சம் லிக்கரை கன்ஸ்யூம் பண்ணிக்கடா. ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வை... 

    பத்ரிக்கு உள்ளுர படபடப்பாக இருந்தது.

    பாட்டிலிலிருந்து திரவத்தை கண்ணாடிக் கோப்பையில் சரித்து அரவிந்த் நீட்டினான்.

    வாங்கி மடக் மடக் என்று குடித்துவிட்டு வைத்தான்.

    தொண்டை கமறியது.

    நான்கைந்து தரம் இருமிக் கொண்டான்.

    பத்ரி கண்ணியமான இளைஞன்தான். நல்ல முறையில் வளர்க்கப்பட்டவன்தான். 

    எந்தவிதமான கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் உத்தமனாய் வளைய வந்தவன்தான்... 

    சமீப காலமாய்த்தான்... சோகம் தாளாமல் மெல்ல சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான்.

    நண்பன் வற்புறுத்தியதன் பேரில்...

    மது அருந்தத் தொடங்கிவிட்டிருந்தான்.

    ‘ஐயையோ... இதற்கெல்லாம் அடிமையாகிவிடக் கூடாதே?

    எப்படியெல்லாம் கட்டுக்கோப்பாய் இருந்து விட்டு. இப்படி கண்டதையும் தொடுகிறோமே? 

    குற்ற உணர்வு அவனைப் புழுவாய் குடையத்தான் செய்தது.

    இருப்பினும் அந்த சோகத்திலிருந்தும் டென்ஷனிலிருந்தும் விடுபட. அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

    மனசாட்சி உந்தித் தள்ளிய போதெல்லாம். டைரியில் னது உள்ளக்குமுறலை வார்த்தைகளாக கொட்டி எழுதி வத்தான் பத்ரி.

    கும்பக்கரை பண்ணை வீட்டிற்கு இரவு எட்டு மணிக்கெல்லாம் காரில் வந்து விட்டார்கள். 

    "பத்ரி அவங்க பின்னாடி கர்லே வந்துட்டு இருக்காங்க. நீ உன் பெட்ரும்லே வெயிட் பண்ணு. பத்து நிமிஷத்துல பொண்ணு வந்துடும். பொண்ணு வந்ததும். உன் ரூமுக்கு அனுப்பிடறேன். நான் இந்த பாட்டிலை எடுத்துட்டு. எதிர்த்த ரூமுக்குப் போறேன். 

    என்ன பார்க்கிறே? நமக்கு ஒரு பொண்ணை செட் பண்ணி விடறானே? வெறும் பாட்டிலோட போறானேன்னு பார்க்கிறியா?

    எனக்கெல்லாம் அவங்க எடத்துக்குப் போயி... அயிட்டம்ஸை வரிசையா நிக்க வச்சு... பார்த்து செலக்ட் பண்ணிட்டு அங்கேயே நைட் ஹால்ட் ஆகிறதுதான் பிடிக்கும்...

    என் கதையை விடு... என்ஜாய் யுவர் செல்ஃப். குட் நைட் மச்சான்...!

    பாட்டிலோடு நகர்ந்து விட்டிருந்தான் அரவிந்த்.

    பத்ரி தனது அறைக்குள் வந்து. கால் மணி நேரமாகிவிட்டிருந்தது.

    "கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. சில நிமிடங்கள் நிசப்தத்தில் நசுங்கின. 

    இவனது அறைக்கதவு திறக்கப்படும் ஓசையைக் கேட்டதும். ஆர்வமாய் திரும்பிப் பார்த்தான். 

    பத்ரியின் இதயத் துடிப்பு இன்பமான எதிர்பார்ப்பில்.... பன்மடங்காய் அதிகரித்தது. 

    அப்சரஸ் போன்ற பேரழகுடன் பார்வையைத் தழைத்தபடி அந்த இளம்பெண் உள்ளே நுழைந்தாள்.

    விதி சிரித்தது.

    வித்தியாசமாக காயை நகர்த்தி விளையாடத் தொடங்கியது விதி! 

    2

    பத்ரி ஸ்தம்பித்துப் போனான். 

    அவன் நேசிக்கும் பவித்ரா கூட நல்ல அழகிதான்.

    ஆனால்... இந்தப் பெண்ணோ பேரழகுப் பெட்டகமாய் ஜொலித்தாள். 

    காலோடு தலை வரை... அவளை நோட்டமிட்டான்.

    மயில் கழுத்து வண்ணத்தில். கம்பி சரிகை போட்ட காட்டன் சில்க் புடவையை உடுத்தியிருந்தாள்.

    அவள் உள்ளே நுழைந்ததும். அறைக்கதவு சாற்றப்பட்டுவிட்டது. 

    சில

    Enjoying the preview?
    Page 1 of 1