Kaalamellam Kaathiruppen
5/5
()
About this ebook
Reviews for Kaalamellam Kaathiruppen
1 rating0 reviews
Book preview
Kaalamellam Kaathiruppen - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
காலமெல்லாம் காத்திருப்பேன்
Kaalamellam Kaathiruppen
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
கும்பக்கரை அருவி தங்களை அன்புடன் வரவேற்கிறது
என்ற அறிவிப்பு பலகையின் அருகே அந்த பஸ் வந்து நின்றது.
சிரிப்பும் கும்மாளமுமாய் கல்லூரி மாணவிகள் பஸ்ஸிலிருந்து உதிர்ந்தார்கள்.
இடித்துப் பிடித்துக்கொண்டு, ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு இறங்குவதில் அவசரம் காட்டினார்கள்.
நிதானமாய் கடைசியாய் இறங்கினாள் நந்தனர். வன தேவதை போன்ற பேரழகுடன் ஜொலித்தாள்.
"ஐ லைக் யூ நந்தனா என்று கூறி கல்லூரி விரிவுரையாளர் இவளைப் பார்த்து முறுவலித்தார்.
நந்தனா திகைத்துப்போய் ஏறிட்டாள்.
"புரியலையா? எதிலேயும் நீ காட்டற நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, பண்பு, அடக்கம், மரியாதை... இதையெல்லாம் வேற எந்த ஸ்டுடண்ட்கிட்டேயும் பார்க்க முடியாது.
படிப்புலே நம்பர் ஒண்ணா இருக்கே... எழுத்துப் போட்டி, கட்டுரைப் போட்டிகள்லே முதல் பரிசு வாங்கறே... நம்ம காலேஜ்லே மட்டுமில்ல யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் வேற...
இருந்தாலும் துளியளவு கர்வம் உன்கிட்டே தலைகாட்டினே இல்ல... அலட்டல், பந்தா கிடையாது.
ஜாலியா மத்தவங்க அரட்டையடிச்சு குதிச்சு கும்மாளம் போட்டாலும். எதிலேயும். ஒட்டாம தாமரை இலை தண்ணிர் மாதிரி தனியா உட்கார்ந்து மவுனமா புன்சிரிப்போட வேடிக்கை பார்க்கிறே. மெச்சூர்டா பொறுப்பா நடந்துக்கிறே. உன்னை மகளா அடைஞ்சதுக்கு... உன்னோட பேரண்ட்ஸ் குடுத்து வச்சிருக்கணும்."
நந்தனா சங்கோஜமாய் முறுவலித்தாள்.
பொறுப்புணர்வோட நடந்துக்கிடறது என் கடமைன்னு நினைக்கிறேன் மேடம்...! இதைப்போய் பாராட்டறீங்களே மேடம்?
இந்தக் காலத்துப் பொண்ணுங்க மத்தியில நீ என் கண்ணுக்கு அபூர்வமா தென்படறே. அதான் அப்ரிஷியேட் பண்ணினேன்.
மேடம்! இவகிட்டே இன்னொரு பிளஸ் பாயிண்ட்டும் இருக்கு...
என்ற தேவியை இருவரும் ஏறிட்டனர்.
"மேடம்...! நானும் இவளும் பக்கத்துப் பக்கத்து வீட்டுலே இருக்கோம்.
சின்ன வயசிலேர்ந்து ஒண்ணா ஒரே. கிளாஸ்லேதான் படிச்சோம்.
அடி மக்குப் பொண்ணு நான்...! காலேஜ் வாசலை மிதிச்சு... இந்த வருஷத்தோட டிகிரி வாங்கப் போறேன்னா... அதுக்கு ரீஸனே நந்தனாதான்...!
எக்ஸாம் சமயத்துல.. பொறுமையா எனக்கு சொல்லித் தருவா. எனக்கு மட்டுமில்ல... இன்னும் ரெண்டு பேர் அக்கம் பக்கத்துல இருக்காங்க...
எங்களை குரூப்பா உட்கார்த்தி வச்சு... மர மண்டைங்களுக்கு ஏறும்படியா எளிமையா விளக்கம் தந்து... எங்களை ஆவரேஜ் மார்க் வாங்க வச்சுடுவா...
'நேரம் விரயம் ஆகுதே? நாம்ப தனியா படிச்சா இன்னும் நிறைய ஸ்கோர் பண்ணலாமே'ன்னு சுயநலமா சிந்திக்கவே மாட்டா....
இவங்கம்மாகூட கூப்பிட்டு ஜாடைமாடையா இதை எடுத்துச் சொன்னாலும். இவ கேட்கமாட்டா...
'கவலைப்படாதம்மா.. என்னோட மார்க்ஸ் கண்டிப்பா, குறையாது.
அள்ள அள்ள வற்றாதது கல்விச் செல்வம் மட்டும்தான்...
பாவம்... இவங்க பாஸ் ஆனா... அந்தப் புண்ணியம் நமக்குத்தானே அம்மா?ன்னு கேட்டு அவங்களை சமாதானப்படுத்திடுவா...
உதவற குணத்துல மட்டுமில்ல... பாரதியார், பாரதிதாசனார் பாடல்கள்னா... இவளுக்கு உசுரு...
எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி வச்சிருக்கா. அதை இனிமையா பாடவும் செய்வா...
சமையல்னா... எங்களுக்கு அடுப்பைப் பத்த வச்சா வெந்நீர் போட மட்டும்தான் தெரியும்....
ஆனா... நந்தனா சமையல்லேயும் எக்ஸ்பர்ட்...!
இத்தனைக்கும் இவங்க வீட்டுல இவங்கம்மா இருக்காங்க... அக்கா இருக்காங்க...
லீவு நாட்கள்லே அவங்களை ஒதுங்கச் சொல்லிட்டு. நளபாகத்துல இறங்கிடுவா...
இவளுக்கு எல்லா அயிட்டம்களும் அத்துப்படி... அதிலும் அத்திக்காய்லே வடை சுட்டுத் தருவா பாருங்....
நெனச்சாலே நாக்குல தண்ணி ஊறுது... அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்."
அப்படியா? நந்தனா சகலசகலாவல்லி போலிருக்கே? குட்... வெரி குட்...! நீ நல்லா பாடுவியாமே? எங்கே எனக்காக ஒரு பாரதியார் பாட்டு பாடு...! கேட்போம்.
மற்றவர்கள் அருவிக்கரையை நோக்கி குதியாட்டம் போட்டு நடந்துபோய் கொண்டிருந்தார்கள்.
நந்தனாவுக்கு சங்கோஜமாய் இருந்தது.
இன்னொரு நாளைக்கு பாடட்டுமா மேடம்?
"இங்கே நம்ப மட்டும் தானே இருக்கோம்?
ஆசையா கேட்கிறேன் பாடும்மா..."
'கும்பக்கரை’ வனாந்தரத்தில் விருட்சங்கள் வானளாவ வளர்ந்திருந்தன.
மந்த மாருதம் வீசியதால்... கிளைகள் அசைந்து சலசலப்பு சப்தம் கேட்டது.
வனாந்தரத்துப் பறவைகள் கீச். கீச்சென்று கலகலத்வனி செய்து கொண்டிருந்தன.
ரம்யமான பசுமையான காட்சியை... ஒரு கணம் ஏறிட்டு ரசித்துவிட்டு. தொண்டையை செருமிக்கொண்டு பாடத் தொடங்கினாள்.
"வானகமே! இளவெயிலே...!. மரச்செறிவே! நீங்களெல்லாம்
கானல் நீரோ? - வெறுங்காட்சிப் பிழை தானோ?
போனதெல்லாம் கனவினைப் போற் புதைந்தழிந்தே
போனதனால்
நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய் தானோ?"
பூமரங்கள், சாமரங்கள் வீசிய அழகைக் கண்டு லயித்தபடி இவள் பாடி முடித்ததும்... லெக்சரரும், தேவியும் கைகளைத் தட்டினார்கள்.
"அபாரம்! என்ன குரல் வளம்? ஸ்ருதி பிசகாம அருமையா பாடறே... பாட்டு கத்துக்கிட்டிருக்கியா?
இல்லை மேடம்! வீட்டுலே அதுக்கெல்லாம் வசதி பத்தலை. வெறும் கேள்வி ஞானம்தான்
முறைப்படி பாட்டு கத்துக்கிட்டா... நீ எங்கியோ போயிடுவே... ஏனி ஹவ்...! தேங்க்ஸ். கங்கிராஜசலேஷன்ஸ்...
தேங்க்யூ மேடம்.
சரி வாங்க போகலாம்...
விதி வலியது...!
பஸ்ஸை விட்டு இறங்கியதும். அந்த லெக்சரர், நந்தனாவைப் பாராட்டியதும். அதன் பின் நடந்த உரையாடல்களில்.... இவளது ஒட்டு மொத்த குணாதிசயம் வெளிப்பட்டதும். விதி வசம்தான்...!
தற்செயலாய் ஒரு ஜீவன் அதை செவி மடுத்ததையும். இதனால் இவளது வாழ்வே திசை மாறப்போகிறது. என்பதையும். இவள் கனவிலும் கருதவில்லை...
விதி சிரித்தது...!
2
துரத்தில் அந்த மாணவிகள் ஓரிடத்தில் கும்பலாய் நின்றிருந்தார்கள்.
என்ன மேடம்! இவங்க இன்னமும் அருவிக்கரைக்குப் போகாம. அங்கே எதுக்கு நின்னுட்டிருக்காங்க?
அதானே?
மேட்ம்! அங்க வனத்துறை ஸ்டாஃப் டேபிள் சேர் போட்டு உட்கார்ந்திருக்காரு... லெட்ஜர்லே எல்லாரையும் கையெழுத்து போட்டுட்டு போகச் சொல்றாரு போலிருக்கு...
என்றாள் நந்தனா.
"சைன் பண்ணினா... போய் கிட்டே இருக்க வேண்டியதுதானே? என்னத்துக்கு எல்லாரும் கும்பலா நிக்கிறாங்க? அந்த லெக்சரர் முணுமுணுத்தபடி நடந்தார்.
அந்த மாணவிகளுக்கு மத்தியிலிருந்த இரு இளம்
விரிவுரையாளர்களைப் பார்த்து சீனியர் லெக்சரர், "சைன் பண்ணினவங்களை அனுப்பாம இங்க ஏன் நிக்க வச்சுட் இருக்கீங்க?' என்று அதட்டினார்.
"எல்லாரையும் நிக்க வச்சு ‘கவுண்ட்’ பண்ணுவாங்களாம்,
அதுக்கு அப்புறமாதான் போகணும்னு வனத்துறை அதிகாரி சொல்லிட்டாரு மேடம்!"
"எதுக்காம்?
இது அவங்களோட ரூல் போலிருக்கு. அதை அவங்க ஸ்டிரிக்டா ஃபாலோ பண்றாங்க
ஐ ஸீ...!
நந்தனா இறுதியாக கையெழுத்திட்டாள்.
அந்த