Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maavilai Thoranam
Maavilai Thoranam
Maavilai Thoranam
Ebook99 pages43 minutes

Maavilai Thoranam

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Maavilai Thoranam

Reviews for Maavilai Thoranam

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maavilai Thoranam - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    மாவிலைத் தோரணம்

    Maavilai Thoranam

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை.

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    என்னுரை வணக்கம்!

    'வைரமூக்குத்தி இதழில் முதல் முறையாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மாவிலைத் தோரணம் மென்யைான காதல் கதைதான்...!

    இப்போதெல்லாம் வருடம் முழுவதும் கோடை வெயில் நம்மை வாட்டி வதைக்கிறது. வாசகர்கள் இந்த நாவலை வாசிக்கும் போது ஜில்லென்ற குளுமையையும், சுகானுபவத்தையும் உணரும் வண்ணம் மயிலாடும் பாறை' எஸ்டேட்டை கதைக் களமாக்கி இருக்கிறேன்.

    கதாநாயகி சரயுவும், நாயகன் சந்தனும் நிச்சயமாக உங்கள் மனதில் நீங்கா இடம் பெறுவார்கள். உங்களது கைகளில் தவழும் வைரமூக்குத்தி இதழ்... தங்களின் அன்பான, அமோகமான ஆதரவுடன் மென்மேலும்

    வளர்ந்து, மகோன்னத நிலைக்கு உயர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

    ஆசிரியர் திரு.ராஜசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    மிக்க நன்றி

    அன்புடன் உங்கள்

    லட்சுமி பிரபா எம்.ஏ., பி.எட்.,

    lakshmiprbanovelsreview@gmail.com

    1

    மயிலாடும் பாறை எஸ்டேட். இலேசாய் சாரலடித்துக் கொண்டிருந்தது. மேட்டுப் பகுதியிலிருந்த சிறு வீட்டிலிருந்து வெளிப்பட்டாள் சரயு. எதிரே ஆகாயத்தில் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாய் அழகான வானவில் தோன்றியிருந்தது.

    மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகுக்குப் பரிசாக... வானமே மகிழ்ந்து அதன் கழுத்திற்கு மாலை போட்டு விட்டாற் போலிருந்தது. வானவில்லை பூமாலை போல் சூடியிருந்த அந்தப் பச்சைப்பசேலென்ற மலையை ஒருகணம் ரசித்தபடி லயித்து நின்றாள்.

    பாட்டி உள்ளே லொக் லொக் என்று இருமும் சப்தம் கேட்டது. சட்டென்று வீட்டிற்குள் புகுந்தாள்.

    எந்திரிச்சுட்டீங்களா பாட்டி? சுக்கு காபி சூடா இருக்கு...கொண்டு வரவா?

    நீ இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு வேலைக்குப் போகலையா?

    லிவு பாட்டி

    என்னத்துக்கு லீவு விட்டாங்க?

    ஞாயித்துக்கிழமை பாட்டி மறந்துட்டீங்களா?

    அட ஆமா... ஹீம்...! உங்கப்பா சிவராமன். ஆசை ஆசையா உன்னைப் பெரிய கான்வெண்ட்டிலே படிக்க வைச்சான்.

    அவன் உன்னைப் பத்தி என்னென்னவோ கனவு கண்டு வச்சிருந்தான். உங்கப்பாவும் அம்மாவும் கார் விபத்துல மாட்டி இறந்து போகாம இருந்திருந்தா... இந்நேரம் உன் நிலைமை எப்படியெல்லாம் இருந்திருக்கும்? வயசான கட்டை நான் கிடக்கிறேன். என்னை விட்டுட்டு என் பிள்ளையையும் மருமகளையும் விதி அழைச்சுட்டுப் போயிருச்சே?

    தளதளன்னு பச்சைப் பசுங்கொடியா நிக்கிறே...உனக்கு ஆதரவா இந்த சருகாப் போன கிழவி தான்இருக்கேன்.

    உன்னை நல்ல இடத்துல கரை சேர்க்கிறதுக்கு முன்னே... நான் கண்ணை மூடிட்டா உன் கதி என்னாகுமோன்னு ஒரே திகிலா இருக்கு ராஜாத்தி!"

    காமாட்சியின் விழிகள் உடைப்பெடுத்துக் கொண்டு... கண்ணிர் வழியத் தொடங்கியது.

    தினமும் இந்தப் பேச்சுதானா பாட்டி? எப்பவுமே நல்லதை மட்டுதான் நினைக்கணும். நம்ம எண்ணங்கள் நல்லதா இருந்தா... நல்லதுதான் நடக்கும். இந்தப் பேச்சை இத்தோட விடுங்க பாட்டி! எண்ணங்களுக்குப் பலிதமாகக் கூடிய சக்தி உண்டுன்னு அப்பா அடிக்கடிசொல்வாரு...

    நம்ம வீட்டுல அப்படியொரு துக்கம் நடந்ததும்... உறவுக்காரங்க யாரும் கைகொடுத்து உதவ முன் வரலையே?

    வயசுப் பொண்ணு சரயுவைக் கரையேத்தற பொறுப்பு... நம்ம தலையில விழுந்திடுமோங்கிற பயத்துல... என் பிள்ளை எத்தனை பேத்துக்கு கணக்குப் பார்க்காம உபகாரம் பண்ணியிருப்பான்? அந்த நன்றியை யாரும் நெனச்சுப் பார்க்கலையே? மத்தவங்களை விட்டுத் தள்ளு. உன் கூடப் பிறந்த அண்ணன் கோபி. உன்னை. உன்னோட எதிர்கால வாழ்க்கையைப் பத்தி... கடுகளவு கூட கவலைப்படலையே? -

    தேனியில நாம்ப வாழ்ந்த வீட்டை... தனக்கே வேணுமேனு எடுத்துக்கிட்டான். பொண்டாட்டி தாசனா அநியாயத்துக்கு மாறிட்டானே? கொஞ்சம் கூட ரத்தப் பாசம் இல்லாமே போச்சே அவனுக்கு...?

    எப்பவோ சிக்கனம் புடிச்சு இந்த எஸ்டேட்டுல... உங்கப்பா வாங்கிப் போட்ட ஒட்டு வீடு இது...! உங்கம்மாவோட நகைகள் இருபது பவுன் மிஞ்சி இருக்கு...

    எஸ்டேட்டுல இருக்கிற ஒட்டு வீட்டையும் நகைகளையும் சரயு எடுத்துக்கட்டும். அவ லைஃப்புக்கு அது போதும்...! படிப்பு வேற இருக்கு...

    கல்யாணம் காட்சி அது இதுன்னு பணம் கேட்டு வந்து நிக்காதீங்க... எனக்கு ஃபேமிலி இருக்கு... விக்கிற விலைவாசியிலே குடும்பத்தை இழுத்துட்டுப் போறதுக்கு... என் முழி பிதுங்குது... என்னால எதையும்

    Enjoying the preview?
    Page 1 of 1