Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Ullam Irupathu Ennidamey...!
Un Ullam Irupathu Ennidamey...!
Un Ullam Irupathu Ennidamey...!
Ebook164 pages1 hour

Un Ullam Irupathu Ennidamey...!

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Un Ullam Irupathu Ennidamey...!

Reviews for Un Ullam Irupathu Ennidamey...!

Rating: 3.5555555555555554 out of 5 stars
3.5/5

9 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Ullam Irupathu Ennidamey...! - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    உன் உள்ளம் இருப்பது என்னிடமே...!

    Un Ullam Irupathu Ennidamey…!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    உன் உள்ளம் இருப்பது என்னிடமே...!

    1

    மாவிலைத் தோரணம் வாசலில் அழகாய் கட்டப்பட்டிருந்தது.

    முன்புறத்தில் முகூர்த்தக் கால் நடப்பட்டிருந்தது.

    அந்த வீடே கல்யாணக் களை கட்டியிருந்தது.

    நாளை மறுநாள் உத்ராவுக்கு திருமணம்!

    வெளியூர்களிலிருந்து சொந்தக்காரர்களும், நெருங்கிப் பழகியவர்களும் வந்து இறங்கி விட்டிருந்தனர்.

    பியூட்டி பார்லரிலிருந்து வரவழைக்கப்பட்ட பெண் ஒருத்தி... உத்ராவின் அழகான கரங்களில் மெஹந்தி வரைந்து கொண்டிருந்தாள்.

    இடது கையில் முழங்கை வரை மெஹந்தி அலங்காரம் முடிந்து... வலது கைக்குப் போடத் தொடங்கியிருந்தாள்.

    உத்ராவின் நினைப்பெல்லாம் அப்பா சிவராமனின் மீதுதான் இருந்தது.

    அப்பா கோர்ட்டுக்குப் போய் இருந்தார்.

    பூர்வீக சொத்து சம்பந்தமாக அப்பா கேஸ் போட்டிருந்தார். வெகுகாலமாய் இழுத்தடித்துக் கொண்டிருந்த வழக்குக்கு இன்றுதான் தீர்ப்பு...

    "தீர்ப்பு நமக்குத்தான் சாதகமாய் வரும். கண்டிப்பா கேஸ் ஜெயிச்சுடும்.

    கோடிக்கணக்கான சொத்து உங்க கைக்கு வந்துடும். கவலைப்படாதீங்க" என்று வக்கீல் சொன்னதை. வேத வாக்காய் நம்பிக் கொண்டிருந்தார் சிவராமன்.

    அப்பா! நானும் உங்க கூட கோர்ட்டுக்கு வரட்டுமா அப்பா? ஜட்ஜ்மெண்ட் என்னன்னு தெரிஞ்சுக்கிற வரைக்கும் ரெஸ்ட்லஸ்ஸா இருக்கும் அப்பா! வீட்டுலே எனக்கு இருப்பே கொள்ளாதே...?

    உத்ரா அப்பாவிடம் கெஞ்சி மன்றாடினாள்.

    "நாளன்னிக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு. பொண்ணைக் கோட்டுக்கா கூட்டிக்கிட்டு போவாங்க? 

    மணப்பந்தல் போட்டாச்சு. முகூர்த்தக் கால் நட்டாச்சு...

    உன் கையில கங்கணம் கட்டியாச்சு... கங்கணம் கட்டியாச்சுண்ணா... பொண்ணும் சரி.... மாப்பிள்ளையும் சரி...

    வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. வெளியே போனா ஏதாச்சும் அசம்பாவிதம் நேரிடலாம்னு.... பெரியவங்க அந்தக் காலத்துலேர்ந்து கடைப்பிடிக்கிற சம்பிரதாயம் இது!

    அதை நாம்ப மீறக் கூடாதுல்ல? தீர்ப்பு என்னன்னு தெரிஞ்சதும்... உடனடியா உனக்கு ஃபோன் பண்ணிட்டு நான் டாக்ஸியில கிளம்பி வந்துடறேன். அப்புறம் என்ன உத்ரா?" என்று கேட்டார் சிவராமன்.

    இல்ல. நானும் வந்தா உங்களுக்குத் துணையா இருப்பேன்...

    அவள் முடிப்பதற்குள் குறுக்கிட்டார் அப்பா.   

    அதான். ஆறுமுகம் கூடவே இருக்கானில்ல...? நிழல் போல என்னை விட்டு அவன் பிரியறதில்லைன்னு உனக்கு தெரியுமே?

    இருந்தாலும்...

    "உன்னைக் கூட்டிட்டுப் போறதுக்கு நான் தயங்குவேனா உத்ரா? இந்த மாதிரி சந்தர்ப்பத்துல நீ வெளியே வர்றது நல்லதில்லையம்மா. அதுவும் தவிர... பார்க்கிறவங்க என்னைத்தான் கேள்வி கேட்பாங்க...

    அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்க முடியுமா? டயமாச்சு. நான் போறேன்...

    தீர்ப்பு தெரியற வரைக்கும்... நான் செல்ஃபோனை சைலண்ட்டுல தான் போட்டு வச்சிருப்பேன் சரியா? 

    போயிட்டு வர்றேன்னு சொல்லுங்கப்பா. தழுதழுத்தபடி அப்பாவை ஊன்றிப் பார்த்தாள்.

    சரி... சரி... போயிட்டு வர்றேன்... நல்ல சேதியோட வர்றேன். போதுமா? ஏதோவொரு பதட்டத்துல சொன்னதைப் பெரிசா எடுத்துக்கிட்டு. கண் கலங்கலாமா உத்ரா? நல்ல பொண்ணும்மா நீ...! நா வரேன்.

    அவளது உச்சந்தலையை ஆதரவாய் வருடி விட்டு விருட்டென்று வெளியேறி விட்டார் சிவராமன். 

    ஆறுமுகமும் அவசரமாய் பின் தொடர்ந்தார். 

    பல வருடங்களாய் விசுவாசமாய் வேலை பார்ப்பவர் அவர்.

    சிவராமன் பஞ்சு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். வருடக்கணக்கில் இழுத்தடித்த கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாய் அவர் அல்லாட நேர்ந்தது.

    அந்த மாதிரி தருணங்களில் எல்லாம். ஃபைலைத் தூக்கிக்கொண்டு ஆறுதலாய் நான்கு வார்த்தைகளை சொல்லியபடி பின் தொடர்வது ஆறுமுகத்தின் வழக்கம்!

    உத்ராவின் மனம் திக். திக்கென்று அடித்துக் கொண்டது.

    நொடிக்கு ஒரு தடவை அவளது பார்வை.... சுவர்க்கடிகாரத்தில் படிந்து மீண்டது.   

    "ஐயையோ இந்தக் கேஸ் தோற்றுவிடுமே?

    அதிர்ச்சி தாளாமல். அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுமே?

    என்னை அப்பா அனாதையாகத் தவிக்க விட்டுவிட்டுப் போய் விடுவாரே?

    வீடே கல்யாணக் கோலம் பூண்டு களைகட்டி இருக்கிறது.

    ஆனால். இந்தக் கல்யாணம் நடக்கப் போவதில்லையே?

    அப்பா மணப்பந்தல் அமைக்கவே... பணத்தைத் தண்ணிராய் இறைத்து செலவு செய்தாரே?

    வாசலடைத்து அமைக்கப்பட்ட மணப்பந்தலைக் காணவே... ‘பகீர்’ என்றிருக்கிறதே? 

    மணப்பந்தல்... பிணப் பந்தல் ஆகி விடுமே?

    மணமகள் ஊர்வலம் நடக்கப் போவதில்லை....

    பிண ஊர்வலம் நடக்கப் போகிறதே? 

    சகலமும் தெரிந்திருந்தும்.... அமைதியாய் உட்கார்ந்து மெஹந்தி அலங்காரத்திற்காக கையை நீட்டிய வண்ணம் இருக்கிறேனே?

    'கோ'வென்று வெடித்து அழ வேண்டும் போலிருக்கிறதே?

    கையாலாகாமல் புது மணப்பெண்ணாய் அமர்ந்திருக்கிறேனே?

    என்னால் வேறு என்ன செய்ய முடியும்? 

    பலவிதமாய் யோசித்துப் பார்த்துவிட்டு. "ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று தெரிந்துதானே. விதியை நொந்து உட்கார்ந்திருக்கிறேன்?

    கடவுளே...! இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டுமே?

    நடக்காமல் எப்படி இருக்கும்? 

    விதியை யாரால் வெல்ல முடியும்?

    யாராலும் விதியை மாற்றி எழுத முடியாதே?

    விதிப்படி எல்லாமே நடந்துதானே தீரும்?

    பொங்கி வந்த அழுகையை... கீழுதட்டை அழுந்தக் கடித்து அடக்கியபடி சிலையாய் அமர்ந்திருந்தாள் உத்ரா. 

    தங்கச் சிலையே உயிர் பெற்று வந்தாற் போன்று. அப்படியொரு அழகுத் தோற்றம் கொண்டவள் உத்ரா, 

    பேரழகு மட்டுமல்ல... நல்ல அறிவுச் செல்வத்தையும் கடவுள் அவளுக்கு வாரி வழங்கி விட்டிருந்தார். 

    எம்.ஈ. முடித்தவள் அவள். அதுவும் டிஸ்டிங்ஷனில் தேறி வந்தவள். இந்த மாதம்தான் ரிசல்ட் வந்தது. 

    அவளுக்கு இருக்கும் திறமைக்கு... நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும்தான்.

    ஆனால், அதில் எல்லாம் சிவராமனுக்கு விருப்பமில்லை. மகளின் விருப்பப்படி அவளைப் படிக்க வைத்தார்.

    "உன் இஷ்டப்படி உன்னைப் படிக்க வச்சாச்சு. உன்னை மாலையும், கழுத்துமா மணக்கோலத்துல பார்க்க நான் ஆசைப்படறேன்.

    உங்கம்மாவுக்கு குடுத்து வைக்கலை. பொசுக்குனு கண்ணை மூடிட்டா..

    காலா காலத்துல நல்ல காரியத்தை நடத்திட்டா... பேரக் குழந்தையை கண்ணார பார்த்துப்பேன்... 

    இன்னும் நாள் கடத்தினா. என் கடமையை நான் முடிக்கிறதுக்குள்ளே. உங்கம்மா மாதிரியே கண்ணை மூடிடுவேனோ?ன்னு... உள்ளுர பயமா இருக்கு உத்ரா...!" 

    அப்பா மனசுடைந்து கண்ணிர் உகுத்துவிட்டார்.

    அதற்கு மேல் அவள் மறுப்பு தெரிவித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

    எ... என்னப்பா நீங்க? உங்க இஷ்டப்படி செய்யுங்கப்பா... என்று கூறியபடி அவரது கண்ணிரைத் துடைத்து விட்டாள்.

    "மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? என் அத்யந்த நண்பன் லிங்கமூர்த்தியோட புள்ளை மதன்தான்.

    எங்களுக்குள்ளே நாற்பது வருட கால நட்பு இருக்கு. இந்தக் கல்யாணத்தின் மூலமா சம்பந்திகள் ஆகி. உறவை பலப்படுத்திக்கலாம்னு இருக்கோம்.

    லிங்கமூர்த்தி உன்னைத் தன்னோட மருமகளாக்கிடணும்னு ரொம்பப் பிரியப்படறான்.

    அதுவும் தவிர... நம்ம மதன் நல்லா படிச்ச பையன். ஃபாரின்லே போயி எம்.பி.ஏ முடிச்சுட்டு வந்திருக்கான்.

    உன் அழகுக்கும், படிப்புக்கும் தோதான புள்ளைதான் மதன்... எனக்கு இந்த வரன்லே பரிபூரண திருப்தி...!

    உனக்கு சம்மதம்தானே உத்ரா? எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லிடுடா...!" என்றார். .

    நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி. அது என் நன்மைக்குத்தான்னு தெரியும் அப்பா...! நீங்க என்னைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லையப்பா...

    "கேஸ்லே தீர்ப்பு வந்ததும் ஒப்புத் தாம்பூலம் வச்சுக்கலாம்னு நான் சொன்னேன். ஆனா லிங்கம் ஒப்புக்க மாட்டேங்கிறான். எப்படியும்

    Enjoying the preview?
    Page 1 of 1