Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maalaip Pozhuthin Mayakkathiley
Maalaip Pozhuthin Mayakkathiley
Maalaip Pozhuthin Mayakkathiley
Ebook140 pages1 hour

Maalaip Pozhuthin Mayakkathiley

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Maalaip Pozhuthin Mayakkathiley

Reviews for Maalaip Pozhuthin Mayakkathiley

Rating: 3.25 out of 5 stars
3.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maalaip Pozhuthin Mayakkathiley - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே

    Maalai Pozhuthin Mayakkathiley

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே

    1

    தோட்டத்தில் தூறலாய் புள்ளி வைத்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தது மழை! 

    விருட்சிப்பூக்களையும் செம்பருத்திப்பூக்களையும் பறித்துமுடித்த பூஹா… வீட்டிற்குள் செல்ல மனமின்றி அண்ணாந்து பார்த்தாள். தூறல் வலூக்க அரம்பித்தது.

    "மண்ணின் அதிசயம்! பள்ளிட்கூடம் விட்ட குழந்தைகளாய் பழைத் தாரைகள்! செடிகளுக்கும், மரங்களுக்கும் ரத்ததானம் நிகழ்கின்றதோ? அல்லது…. பூமிக்கு நிகழும் புனித ரசிப்பவள் அவள்.

    மலை போல் மனதை அழித்திக் கொண்டிருந்த பெரும் பாரம் தற்காலிகமாய் சட்டென்று விலகியது.

    ஆசை தீர நனைந்து சிலிர்த்த போது… உள்ளுக்குள் குதூகலம் குமிழியிட்டது.

    மழைபாடும் பூபாளத்தில்… ஒவ்வொரு பூக்களும், இலைகளும் பரவசப்பட்ட்டு தலையாட்டின.

    அப்பா மட்டும் அயிரோடு இருந்திருந்தால்….?

    இவள் இப்படி நனைவதைப் பார்த்தால்…? நெஞ்சம் பதைக்க குடையுடன் ஒடோடி வந்திருப்பார்.

    உலகில் தனக்கென்று இருந்த ஒரே ஜீவனும் போன பின்பு... பூஜா விரக்தியின் விளிம்பில்தான்நின்றுகொண்டிருந்தாள்.

    நாளை என்ன நடக்கப் போகிறதோ? அது பகவானுடைய சித்தம்!

    ஆனால் இன்று... இப்பொழுது... இந்த கணத்தில்...

    கண்ணையும் கருத்தையும் கவரந்த இயற்கை அழகை ரஎய்த்து அனுபவிப்பதில் பயித்து போனாள் பூஜா.

    கவலைகள் மனதை ஆட்டிப் படைத்தாலும் சரி… கோபம் வந்தாலும் சரி…

    சற்று நேரத்திற் கெல்லாம் அதைத்துக்கி எறிந்து விட்டு நிகழ் கால நிதர்சனத்தை ஏற்று நடப்ப வள்.

    " வாருங்கள் மனிதர்களே

    சிந்தும் மழையோடு

    சிநேகமாவோம் 

    மழையில் தெப்பமாவோம்!

    குடையா?

    குடை எதற்கு?

    அது

    மழைக்கெதிராய் ம

    னிதன் பிடிக்கும்

    கறுப்புக் கொடி!

    ஏன்.?

    ஏனிந்த ஒட்டம்?

    வரம் வரும் நேரம்

    தபசி ஒடுவதா?

    ஐயோ!

    மழையோடு வாழாத

    வாழ்வென்ன வாழ்வோ?" 

    தனக்கு மிகவும் பிடித்தமானகவிதை வரிகளை...தன் அழகிய இதழ்களால் மெல்ல மந்திரம் போல் உச்சரித்த போது...அப்பாவின் நினைவு சாம்பிராணி புகையால்... அவளது.இதயம் முழுவது பரவியது.

    அந்தக் கரிய பெரிய விழிகளில் குபுக் என்று வெப்ப நீருற்ற்ய் உடைப் பெடுத்துக் கொண்டு வழிந்து. மழைத்துளிகளுடன் சங்கமமானது.

    "மழையில் நனைஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகும் பூஜா?

    நல்ல மொண்ணும்மா நீ….

    மழைக்கெதிராய் மனிதன் பிடிக்கும் கறுப்புக் கொடியா? சரிதான்…

    அளவு கடந்த ரசனை உள்ள பொண்ணு நீ!

    அததுக்கு தகுந்த உவமை உவமேயத்தைச்சொல்லிடறே...

    கேட்கறதுக்கு ரொம்ப பெருமையாத் தானிருக்கு.

    நல்ல புத்திசாலிப் பொண்ணு. அறிஉக் களஞ்சியம் தான்…

    கலை ஆர்வம் ஜாஸ்தியுள்ள பொண்ணுதான்!

    உன்னை மகளா அடைய நான் கொடுத்து தான் வச்சிருக்கணும் போ!

    ஆனா இந்த மாதிரி கவிதை வரிகளை நீ வெளியில சொன்னா..சரியான மறை கழண்ட பொண்ணுன்னுதான் நெனப்பாங்க... 

    சிந்தும் மழையோடு சிநேகமாகி... மழையில தெப்பமாக ஆவோம்னு வஜ்ரவேலோட பொண்ணு பூஜா பினாத்திட்டு திரிய றான்னு... பேசஆரம்பிச்சிடுவாங்க கண்ணா!

    உங்கம்மாவைத்தீஸ்வரி உயிரோட இருந்திருந்தா... சமயோசிதமா | நீ பேசறதையும் உன்னோட ரசனையையும் பார்த்துட்டுப் பொங்கி பூரிச் சுப் போயிருப்பா... 

    கொடுத்து வைக்காத மகராசி போய் சேர்ந்துட்டா...

    ஹூம் உலகத்துல இருக்கிற ஒட்டு மொத்த அழகையும் கொட்டி உன்னைப் படைச்சுட்டாரு பகவான்... 

    அழகுக்கேத்த அறிவையும் வஞ்சனை இல்லாம சேர்த்துக் கொடுத் திருக்கிறாரே 

    அழகு, அறிவு, குணம்... இந்த மூணும் ஒண்ணா அமையறது அதிச யம்னு சொல்வாங்க... 

    ஆனா உனக்கு இதெல்லாமே அமைஞ்சிருக்கே? உன்னோடகள்ளம் கபடமில்லாத வெள்ளை மனசு, மனிதநேயம், இரக்கம், கருணை, பணிவு, தன்னடக்கம், கலா ரசனை எல்லாத்தையும் பார்த்து மனசு நிறைஞ்சு கிடக்கேன். 

    அதே சமயத்துல உள்ளூரதிகில் ஊறிக்கிட்டிருக்கு பூஜா! 

    இப்பேற்பட்ட குணவதிக்கு ஏத்த மாப்பிள்ளையை... நான் எங் கேன்னு தேடிப்பிடிக்கப் போறேன்? 

    நல்ல எடமா அமையனுமேன்னு ஒரு பயம்... மனசைப் போட்டு வாட்டுதுடா..

    சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து ஆஞ்சநேயருக்கு வாலில் குங் குமப் பொட்டு வச்சு நீ பிரார்த்தனை பண்றது. வீண் போகாதும்மா....

    உன்னோடநல்ல குணத்துக்கு பகவான்அனுக்கிரகத்துல நல்ல மாப் பிள்ளை அமைவான்... பாரேன் இந்தா...துண்டை எடுத்து நல்லாதலை யைத் துவட்டு. பூஜா... 

    ஜலதோஷம் பிடிச்சுக்கப் போறது... காய்ச்சல் தலைவலி வந்தா..யாரு அவஸ்தைப்படறது?" 

    "எனக்கு ஒண்னும் ஆகாதுப்பா... என்னப்பா நீங்க? என்னோட குணத்தைப் பத்தி இவ்ளோசிலாகிச்சுப் பேசறீங்க... 

    எல்லாம் உங்க கிட்டேயிருந்து வந்ததுதானேப்பா?

    உங்களுக்கு மகளா பிறக்க நான்தானப்பாகுடுத்துவச்சிருக்கணும்.

    தான்..  தனக்கு... தன்னோட குடும்பம்னு நீங்க ஒரு நாளும் சிந்திசதே இல்லையேப்பா...

    உங்களோட கடமை உணர்ச்சி, தாராள மனப்பான்மை, தயாள குணம், பொறுமை, சகிப்புத்தன்மை...இதையெல்லாம் பார்த்துட்டு எனக்கும் ரொம்பவே பெருமையா இருக்குப்பா. 

    ஏன் அப்பா பதட்டப்படறீங்க? சின்னத் தூறல் தானே? ஆசையா ! நாலு சொட்டு நனையறதுக்குள்ளே... நீங்க தான் குடையோட ஓடி வந் துட்டீங்களே?   

    போங்கப்பா... எனக்கு ஒண்ணும் ஆகாது. சமீப காலமாஉங்க முகத் துலசோகம் படிஞ்சிருக்குப்பா... 

    வரவர நீங்க மெலிஞ்சிட்டே போறிங்க... மனசுவிட்டு எதையும் என் கிட்ட விவரமா சொல்லமாட்டேன்கிறீங்க...

    அதான்...உங்கமனசுக்கு நிம்மதி கிடைக்கணும்னு. ஆஞ்சநேயரை மனசார சேவிச்சுட்டு இருக்கேன். 

    இன்னிக்காவது என்கிட்ட சொல்லுங்களேன் அப்பா பிளீஸ்... என்னப்பா விஷயம்?

    உங்க பிரண்ட் ராமநாதன் அங்கிள்... சமீப காலமா வீட்டுக்கே வர்ற தில்லையேப்பா?

    உங்களுக்குள்ளே ஏதாச்சும் பிரச்சினையாப்பா? 

    முந்தா நாள் நான் கோவிலுக்குப் போயிட்டு திரும்பறச்சே. அங்கி ளைப் பார்த்தேன். 

    எப்பவும் என்னைப் பார்த்தா முகம் மலர்ந்து அன்பா... சொந்த பொண்ணுகிட்ட பேசறமாதிரி பேசுவாரு.... 

    ஆனா...அன்னிக்கு என்னைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி விருட் டுனுவண்டியைக் கிளப்பிட்டுப் போயிட்டாரு.

    முகத்துல அறைஞ்சமாதிரி இருந்துச்சுப்பா... வீட்டுக்கு வந்து உங்க ! கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன்.

    எதையோ பறிகொடுத்தாப்பல சோகமா நீங்க இருக்கவே... நானும் ! கம்முனு இருந்துட்டேன். 

    என்னாச்சுப்பா? ராமநாதன்.அங்கிளும் நீங்களும் நகமும் சதையுமா இருக்கிற நண்பர்கள்... பார்ட்னர்ஸ்னு எல்லாரும் பெருமையாபேசிக்கு வாங்களேப்பா? 

    என்கிட்ட சொன்னா... உங்க பாரம் குறையுமேப்பா?" 

    அன்றொரு நாள் இதே போன்று ஒரு மழை நாளில் பூஜா,அப்பாவை  துருவித்துருவிகேள்விகேட்டது...ஞாபகத்திற்கு வந்து அவளது மனதைப் பிசைய ஆரம்பித்தது.

    "ஒ. ஒண்னும் இல்லடா...ஒண்ணும் பிரச்சினையில்ல... ராமநாதன் ஏதோ ஞாபகத்துல உன்னை சரியாகவனிக்காம போயிருப்பான்...

    Enjoying the preview?
    Page 1 of 1