Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sonnathu Neethana?
Sonnathu Neethana?
Sonnathu Neethana?
Ebook154 pages1 hour

Sonnathu Neethana?

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Sonnathu Neethana?

Reviews for Sonnathu Neethana?

Rating: 3 out of 5 stars
3/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sonnathu Neethana? - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    சொன்னது நீதானா?

    Sonnathu Neethana?

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    விடியல் தன் முகவரியை பூமியில் பதிக்கத் தொடங்கியது. மழை வந்துமுத்துக்குளித்திருந்த மரங் களில்.. சின்னப் பறவைகள் கலகலத்வனி செய்து பூபாளம் பாட ஆரம்பித்தன.

    அதிகாலையில் எழுந்து கொள்ளும் வழக்கம் கொண்டவள்மீரா. சிறு வயதிலிருந்தே பறவைகளின் 'கலகலத்வனி’யைக் கேட்டு ரசிப்பதில் அவளுக்கு அலாதி சுகம்.

    அதைக் கேட்கும் போதே இனம் புரியாத குதூகல மும் சுறுசுறுப்பும் பரவசமும் தொற்றிக் கொள்வதைப் போல் உணருவாள்மீரா.

    "மீரா! இந்தக்காலத்துப் பொண்ணா இருந்தாலும் விடியக்காத்தால டாண்ணு எந்திரிச்சுடறே. ஸ்நானம் பண்ணிட்டு பிரம்ம முகூர்த்தத்திலே பூஜை அறையில விளக்கேத்திடறே....

    எனக்கு சூடா பனை வெல்லத்தைத் தட்டிப் போட்டு காபி காய்ச்சி குடுத்திட்டு துறுதுறுன்னு வளைய நீ வர்றதைப் பார்க்கும் போது எனக்கு ரொம் பவே பெருமையா இருக்கும்மா..." என்று அடிக்கடி தாத்தாசதாசிவம் அவளைப் பாராட்டுவார்.

    "இதுக்கெல்லாம் காரணம் நீங்க தானே தாத்தா? உங்க வளர்ப்புலே வளர்ந்து நிக்கிறேன்நான்.

    ஒரு காலத்துல ராணுவத்துல பணியாற்றி விட்டு ஒய்வு பெற்றவர் நீங்க... நேரம் தவறாமை, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பரிவு, பாசம், இரக்கம், மனிதநேயம், கருணை, பண்புன்னு. அத்தனைநல்ல குணங்களையும் ஒட்டு மொத்தமாகுத் தகைக்கு எடுத்துக்கிட்டதினுசுல நீங்க நடமாடறதைப் பார்த்து சின்ன வயசிலேருந்து நான் பிரமிச்சுப் போயி ருக்கேன்.

    உங்க பராமரிப்புலே வளர்ந்த பேத்தி நான். அன் பும் கவனமும் கண்டிப்பும் கறாருமா என்னை வளர்த் துட்டு. இப்படி என்னைப் பாராட்டறது சரியில் லையே தாத்தா?

    எல்லாகிரடிட்டும் உங்களைத்தான்சாரும். காலங் கார்த்தால நான்சுறுசுறுப்பாவளைய வர்றதுக்கு.. இன்னொரு காரணமும் இருக்கு தாத்தா.

    இதோ… தோட்டத்துலேருந்து பறவைங்க ‘கீச் கீச்னு’ கலகலத்வனி செய்யறதைக் கேட்கும் போது எனக்கு அப்படியே உடம்புலே சார்ஜ் ஏத் திக்கிட்டாப்பல ஒரு தெம்பும் சுறுசுறுப்பும் பரவுதுதாத்தா...

    கொஞ்சநேரத்துக்கு கலகலத்வனி பண்ணிட்டு, சொல்லி வச்சாப்பல பறவைங்க எல்லாம் கை கோர்த்தாப்பல ஒண்ணாசேர்ந்து இரை தேடப் பறந்துடுதுங்க...

    எதைப் பத்தியும் விசனப்படாம சுதந்திரமா அதுங்க பறந்து போற தைப் பார்க்கும் போது நமக்கு இறக்கை கட்டிப் பறக்கமாட்டோமான்னு உள்ளுற ஏக்கம்ஜனிக்குதுதாத்தா" என்று தணிந்த குரலில் தக்க பதிலைக் கூறுவாள்மீரா.

    இன்றும் அதே கலகலத்வனி தான்!

    அதைக் கேட்டு ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. தாத்தாசதா சிவத்திற்கு நேற்றுதான் ‘காரியம்’ முடிந்திருந்தது.

    உலகமே இருண்டு விட்டாற் போலிருந்தது.

    ‘தாத்தா சதாசிவம் தான் உலகம்' என்று இது நாள் வரை வாழ்ந்து விட்டவள்மீரா.

    எண்பது வயது கிழவராக இருந்தாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டு கம்பீரமாகத் தான் வளைய வந்தார் சதாசிவம்.

    அந்தக்காலத்தில் ராணுவத்தில் உழைத்து உரமேற்றிய உடம்பு. காய்ச் சல், தலைவலி என்று ஒரு நாளும் முடங்கிப்படுத்ததில்லை.

    தியானம், யோகா, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவைகளைக் கடைப்பிடித்து வந்தவர்தான்.

    ராணுவ வீரர் என்பதால் எதையும் தாங்கும் இதயம் கொண்டவராய் வலம்வந்தாலும் உள்ளுரகவலை அவரை செல்லாய் அரித்துக் கொண்டிருந்தது நிஜம்!

    சதாசிவம்- முத்தம்மாள் தம்பதியினருக்கு புத்திர சோகம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.

    கறி வேப்பிலை கொத்தாக இருந்த ஒரே மகன் சத்தியசீலனுக்கு புற்றுநோய் வந்திருப்பது தெரிந்ததும். இருவரும் ஆடிப்போய்விட்டனர்.

    பேத்தி மீராவுக்கு அப்போது நான்கு வயதிருக்கும். மருமகள்காந்தா மணி இரண்டாம் முறையாக கருவுற்றிருந்தாள்.

    என்ன செலவானாலும் பரவாயில்லை. ஒரே மகனை மரணத்தின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றியே தீரவேண்டும் என்று வைராக்கியத்துடன் பிரபல மருத்துவமனைகளை நோக்கி அவர் படையெடுக்கத்தான் செய்தார்.

    ஹீமோ தெரபி- மருந்து மாத்திரைகள், ஸ்பெஷலிஸ்டுகளுக்கு தர வேண்டிய கட்டணம் என்று பணம் தண்ணிராய் செலவழிந்ததில் கையிருப்பு கரைந்தது.

    மேற்கொண்டு செலவிற்கு அவர் தமது நிலத்தையும், வீட்டையும் விற்கவும் ஏற்பாடு செய்தார்.

    என்ன செய்து என்ன பிரயோஜனம்? அன்புக்கு கந்த கணவர் சத்திய சீலன் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தின் விளிம்பிற்குச்செல்வதைகண்கொண்டு பார்க்க முடியாமல் துடித்துப் போனாள் காந்தாமணி.

    சத்தியசீலன் பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல குணம் படைத்தவர் ஆயிற்றே.

    எப்பேற்ப்பட்ட உத்தமர்? சதாசிவத்திற்குதப்பாமல் பிறந்த பிள்ளை ஆயிற்றே? கட்டும் செட்டுமாக வாழ்ந்தவர். யாருக்கும் மனதால் கூடத் தீங்கு நினைக்காதவர்.

    தயாள மனம், இளகிய உள்ளம் படைத்தவருக்கா புற்றுநோய் வர வேண்டும்?

    காந்தாமணி உள்ளுரகதறித் தீர்த்தாள்.

    கணவர் இறந்த பின்னால் இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஒரு விதவையாய் வாழ்க்கையில் போராட வேண்டும் என்பதை நினைக் கும் போதே அவளுக்கு குலை நடுங்கியது.

    அந்த அவலநிலையை அவளால் கற்பனைசெய்துபார்க்கக்கூடமுடி யவில்லை.

    'ஊகூம். அவரின்றி என்னால் வாழ முடியாது. அவர் விரைவில் கண்ணை மூடி விடுவார் என்பது நிச்சயம்.

    ஆனால் அந்தக்காட்சியைக் காணும் திராணி எனக்கில்லை. அவருக்கு முன்னால் நான் போய்விடவேண்டும்.

    பூவோடு பொட்டோடு சுமங்கலியாக கண்ணைமூடும்பாக்கியத்தை கொடு பகவானே!’ என்று வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்காந்தாமணி.

    விளைவு. வாழ்க்கையில் பிடிப்பு விட்டுப் போனதால் இரண்டாவது பிரசவத்தில் ஜன்னி கண்டு இறந்து விட்டாள்.

    அந்த சிசுவும் இறந்து விட்டது.

    எதிர்பாராத அதிர்ச்சி, நோயின் தீவிரம். எல்லாமாகச் சேர்ந்து சத்திய சீலனை ஒரேயடியாக கண்ணை மூட வைத்துவிட்டது.

    வீட்டையும், நிலத்தையும் விற்ற பணத்தை வைத்து வைத்தியச் செலவு செய்து வந்த கையோடு... அடுத்தடுத்து மருமகள், மகனைவாரிக் கொடுத்து காரியத்தை நடத்திய சதாசிவம்- முத்தம்மாள் தம்பதியினர் நடைப் பிணங்களாயினர்.

    அவர்களுக்கு இருந்த ஒரே பிடிப்பு மீராதான்!

    எஞ்சியிருந்த தொகையை பேங்கில் போட்டு வைத்தனர். சதாசிவத் துக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தது.

    சத்தியசீலன் மில்லில் வேலை பார்த்து வந்தவர். ஒர்க் காம்பன்சே ஷன், இன்சூரன்ஸ் என்று கணிசமாக ஒரு தொகை கிடைத்தது.

    சொற்ப வாடகைக்கு அந்தக் காலத்தில் இந்த வீட்டில் குடி வந்தனர். வீட்டின் சொந்தக்காரர் சதாசிவத்துக்கு சிநேகிதர் என்பதோடு... அவர் தமது மகனோடு அமெரிக்காவில் வாசம் செய்து கொண்டிருந்தார்.

    எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லை. சதாசிவம் இருக்கும்வரை சொந்த வீட்டில் இருப்பது போல் நிம்மதியாக வாழ்ந்தாகி விட்டது.

    அவரது மறைவுக்குப் பின் மீரா இதே வீட்டில் நிம்மதியாக இருக்க முடியுமா?

    தாய்தந்தையரை சிறு வயதிலேயே இழந்து அனாதையாகிவிட்டவள் மீரா.

    தாத்தா பாட்டியின் நிழலில் வளர்ந்தவள் தான். பெற்றவர்களின் அன்பு மழையில் நனையக் கொடுத்து வைக்காதவள் தான்!

    ஆனால் கடவுள் அவளுக்கு ஈடு இணைஇல்லாத சவுந்தரியத்தை வாரி வழங்கி விட்டிருந்தார்.

    நீண்டகூந்தல், நீள்வட்டமுகம், அகன்ற விழிகள், கூர்மூக்கு, ரோஜா இதழ்கள், சங்கு கழுத்து, சிறுத்த இடை என்று சிற்பி செதுக்காத பொற்சி லையாய் காண்போர்கண்களைக் கட்டிப் போட்டாள்.

    பாட்டிமுத்தம்மாள் இவளது பத்தாவது வயதிலேயே போய் சேர்ந்து விட்ட பின்பு தாத்தா சதாசிவம் தான் இவளுக்கு சகலமும் என்றாகிப் போனார்.

    அவரை ‘தாத்தா’ என்பதை விட தாயுமானவர் என்றழைத்தால் சாலப் பொருத்தமாஇருக்கும்.

    மீரா பிளஸ் டு முடித்துவிட்டு அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.ஏ. இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

    கூடுதல் தகுதிக்காக பக்கத்துத் தெருவிலிருந்த

    Enjoying the preview?
    Page 1 of 1