Ondru Serndha Anbu Maaruma?
5/5
()
About this ebook
Reviews for Ondru Serndha Anbu Maaruma?
1 rating0 reviews
Book preview
Ondru Serndha Anbu Maaruma? - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
Ondru Serndha Anbu Maaruma?
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
1
பசுவின் மடி பீய்ச்சியடிக்கும் பாலைப் போல...
இளங்காலைக் கதிரவன் தன் ஒளியை பூமியில் பொழிய ஆரம்பித்திருந்தது. வெம்மை மிகாத பால் ஒளி!
நெடிய ரப்பர் மரங்களின் ஊடாய் வெளிச்சம் வழிந்த அழகை ரசித்தபடி நடந்தாள் சங்க மித்திரை.
அவளது அழகிய முகத்தில் பெருமிதம் ஒட்டிக் கொண்டு இருந்தது. நேற்றுதான் தேர்வு முடிவுகள் வெளி யாகியிருந்தன. பி.ஈ.கம்ப்யூட்டர் என்ஜினியரிங் கோர்ஸில் முதல் வகுப்பில் அவள் தேறியிருந்தாள்.
அப்பாசக்கரவர்த்திக்கு அவள்மீது அதீத பாசம்.. அவர் தேவாரம் எஸ்டேட்டில் கணக்கராக பல ஆண்டுகள் உழைத்த பின்னர் இப்போதுதான் தலைமை மேற்பார்வை யாளர் பதவியை எட்டிப் பிடித்திருந்தார். கட்டும் செட்டு மாக குடும்பத்தை நடத்தி வந்த வருமானத்தில்... சங்கமித் திரையை தேனியில் உள்ள ஹாஸ்டலில் சேர்த்து விட்டு படிக்க வைத்தார்.
பிளஸ்டு-வில் அவள் நல்ல மதிப்பெண்கள் பெற்றி ருந்ததால் பணத்திற்கு செலவில்லாமல் வெகு சுலபமாய் அவளுக்கு கல்லூரியில் சீட் கிடைத்து விட்டிருந்தது.
கண்ணும் கருத்துமாய் சிரத்தையாய் படித்ததில் ... நான்கு ஆண்டுகள் மாயமாய் பறந்து விட்டிருந்தன.
அப்பா சக்கரவர்த்தியையும், அம்மா தங்கத்தையும் நினைத்துப் பார்த்தாலே... அவளது உள்ளம் பெருமிதத்தில் பூரித்துப் போய்விடும். அம்மாதங்கம் வெகுளியானவள் 'குடும்பமே உலகம்' என்று வாழ்பவள். சூது வாது அறி யாத அப்பாவி!
அப்பா சக்கரவர்த்திக்கு சுயநலமாய் சிந்திக்கவே தெரியாது. பற்றாக்குறை பட்ஜெட்டில் வாழ்ந்தாலும்... குணத்தில் அவர் ஒரு சக்க ரவர்த்தி' யாகத்தானிருந்தார்.
குலதெய்வம் கோவிலுக்குச் சென்று திரும்பிய தங்கை சிவகாமி யும் அவளது கணவரும் விபத்தில் அகால மரணமடைந்ததும்... தங்கை சிவகாமியின் இரு குழந்தைகளையும் சக்கரவர்த்தி தன் வீட் டிற்கு அழைத்து வந்து விட்டிருந்தார்.
தாய் மாமனின் வீட்டில் அடைக்கலமாய் தஞ்சம் புகுந்த செல் வத்திற்கும், தாராவிற்கும் ... 'பெற்றவர்களை இழந்து அனாதை களாகி விட்டோமே" என்ற தவிப்பே. துளி கூட தோன்றவில்லை.
சக்கரவர்த்தியின் மனமறிந்து நடப்பவள் தங்கம். இருவரும் பாச மழை பொழிந்ததால் ... தாராவுக்கும், செல்வத்திற்கும் துக்கம் சிறி தளவு கூட தலை காட்டவே இல்லை. மனதளவில் சக்கரவர்த்தியை யும், தங்கத்தையும் நடமாடும் தெய்வங்களாகவே பூஜித்து வந்தனர்.
செல்வம் சங்கமித்திரையை விட ஏழு வயது மூத்தவன். தாரா நான்கு வயது மூத்தவள்.
தாராவுக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை. ஒன்பதாம் வகுப் போடு படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு... தையல் கலை, சமை யல் கலையைக் கற்றுக் கொண்டு... வீட்டில் வளைய வந்து கொண் டிருந்த தாராவுக்கு ... இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தேறியது.
பத்து பவுன் போட்டு சீர் செனத்தி செய்து பெற்ற மகளைப் போன்றே தாராவை வழியனுப்பி வைத்த தன் தந்தையைக் கண்டு...சங்கமித்திரை பெருமிதத்தில் பூரித்துப் போனாள்.
செல்வம், பட்டப்படிப்பை முடித்த கையோடு...எஸ்டேட்டி லேயே சூப்பர்வைஸர் வேலையைத் தேடிக் கொண்டு ... சக்கரவர்த் தியை விட்டுப் பிரிய மனமில்லாமல் ... விசுவாசமாய் அந்த வீட் டில் ஒரு மகனைப் போல் வளைய வந்து கொண்டிருந்தான்.
சங்கமித்திரைக்கு அபாரமான படிப்பாற்றல் இருந்ததைக் கண்டு அடிக்கடி சக்கரவர்த்தி சிலாகித்துப் பேசுவார்.
"மித்ரா! நம்ம வம்சத்திலேயே யாருக்கும் உன் அளவுக்கு படிப்பு வந்ததில்லை... உன்னை அழகாபடைச்சகடவுள்... என்னிக்கும் அழி யாத கல்விச் செல்வத்தையும் வாரி வழங்கியிருக்காரு....
நீ எவ்வளவு வேணும்னாலும் படி!... நீ பெண்ணா பொறந் துட்டே...உனக்கொரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ... மத்த பெத்தவங்க மாதிரி பேசி... உனக்கு நான் ஒருக்காலும் முட்டுக் கட்டை போடவே மாட்டேன்.
நீ நல்லா படிச்சு பெரிய உத்தியோகத்துக்குப் போகணும். நல்ல பதவியில் நீ உட்காரணும். கை நிறைய சம்பாதிக்கணும். என் மன சுக்கு திருப்தி படற வரை நான் படிச்சிட்டேன். இனிமே உங்க இஷ்டம் அப்பான்னு… நீ சொல்லணும்.
அதுக்கு அப்புறம் தான் உனக்கேத்த வரனைத் தேட ஆரம் பிப்பேன். சந்தோஷம் தானே ராஜாத்தி?"
உங்களுக்கு மகளா பிறக்க... நான் குடுத்து வச்சிருக்கணும் அப்பா! தேங்க்யூ அப்பா!
சந்தோஷமாய் பதிலளிப்பாள் சங்கமித் திரை.
"நல்லாயிருக்கே நீங்க பேசுறது?... உங்க பெண்ணை விட்டா நாற்பது வயசு வரைக்கும் படிச்சுக்கிட்டே இருப்பா...
காலாகாலத்துல நம்ம கடமையை நாம முடிக்க வேணாமா? நமக் கும் வயசாகிட்டே போகுது. நல்ல இடமா பார்த்து சீக்கிரமா இவ ளைக் கரையேத்திட்டோம்னா... நாம நிம்மதியா மூச்சு விடலாமே?" என்று புலம்புவாள் தங்கம்.
"ஏன் இப்படிப் புலம்பறே தங்கம்? நம்ம மித்ரா தங்கமான பொண்ணு! நாம்ப கிழிச்ச கோட்டை என்னிக்காவது அவதாண்டியி ருக்காளா?
நம்ம மித்ராவோட குணத்துக்கும், அழகுக்கும், படிப்புக்கும் ஏத்த மாப்பிள்ளை அமைஞ்சிட்டா... உடனடியாகல்யாணம் தான்...
நாம்ம எந்த முடிவெடுத்தாலும்... மித்ரா மீறவே மாட்டாள்னு உனக்குத் தெரியாதா? எனக்கு மட்டும் அக்கறை இல்லையா என்ன?
அவளுக்கேத்த நல்ல வரன் அமையணுமேன்னு உள்ளுர எனக் கும் கவலையாத் தானிருக்கு. சில சமயம் இப்படிக்கூட தோணுது... கையில வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையற மாதிரியும் இருக்கு..."
நம்ப செல்வம் அடக்க ஒடுக்கமான பையன். பணிவா பாசமா பதவிசா இருக்கான். அவன் கையில் மித்ராவைப் பிடிச்சுக் குடுத்தா... எந்த பிரச்சனையும் இல்ல... மித்ராவையும் நாம்ம பிரிய வேண்டி யது இல்ல...
"ஹும்! அதுக்குத்தான் குடுப்பினை இல்லாம போச்சேதங்கம்! 'சின்ன வயசிலேருந்து ஒண்ணாவே வளர்ந்ததாலே... செல்வம் அத் தான் எனக்கு உறவு முறையில.... முறைப் பையனா இருக்கலாம்... ஆனாமனசளவிலே அவரை ஒரு அண்ணனாகத் தான் நான் பாவிக்கி றேன்.அப்பான்னு. மித்ரா சொல்லிட்டாளே?
அவபேசினதைக் கேட்டதுக்கு அப்புறம்... அந்த ஆசைக்கே நான் முழுக்கு போட்டுட்டேன். நாம ஆசைப்பட்டா முடியுமா?
இன்னாருக்கு இன்னார் தான்’னு...கடவுள் என்னிக்கோ முடிச்சு போட்டு வச்சிருப்பாரே? அதன்படிதானே வாழ்க்கை துணை அமை யும்?"
"அம்மாடி மித்ரா! நீ ஹாஸ்டல்லே தங்கியிருக்கிறவ... லீவு கிடைக்கும் போது தானே... இங்க வர்றே?
இனிமே நீ இங்க வர்றப்போ எல்லாம்... தவறாம ஒரு காரியம் பண்ணும்மா.
நம்ம எஸ்டேட்டுல... ஆஞ்சநேயர்சன்னதி இருக்கு பாரு...அ போயி வேண்டிக்கிட்டு... நெய் விளக்கேத்தி வாலில் குங்கும். பொட்டு வச்சுட்டு வாம்மா... நல்ல வேலை கிடைக்கும். நல்ல க வர் கிடைச்சு உன் வாழ்க்கை அமோகமா இருக்கும். அந்த ஆஞ்சநே யர் ரொம்ப சக்தி வாய்ந்தவரும்மா நெனச்சது நடக்கும்... கேட்டது கிடைக்கும். நான் சொல்றபடி செய்றியாமித்ரா?
உங்க வார்த்தையை நான் என்னிக்கு மீறியிருக்கேன்? உங்க இஷ் டபடியே செய்றேன்.அப்பா!
மித்ராசம்மதம் தெரிவிப்பதற்குள் அவ சரமாய் இடை புகுந்தாள் தங்கம்.
"அந்த இடம் ரொம்ப ஆபத்தானது ஆச்சே? ஆஞ்சநேயர் சன்ன திக்கு வெகு சமீபத்துல பெரிய அதல