Maatru Kuraiyadha Ponno?
5/5
()
About this ebook
Reviews for Maatru Kuraiyadha Ponno?
1 rating0 reviews
Book preview
Maatru Kuraiyadha Ponno? - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
மாற்றுக் குறையாத பொன்னோ?
Maatru Kuraiyadha Ponno?
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
மாற்றுக் குறையாத பொன்னோ?
1
மாமரத்துக் கிளையில் அவசரமாய் ஏறிய அணில், கனிந்த பழத்தை கொறித்து ருசித்தது. ருசித்தபடியே தனது வாலை மூன்று முறை அடித்து சத்தியம் செய்தது.
மழை பெய்து ஓய்ந்து விட்டிருந்தது. அன்னாந்து பார்த்து அணிலை ரசித்துக் கொண்டிருந்த தேவி, மெல்ல ஒரு கிளையை பற்றி உலுக்கினாள். இலைகளில் தேங்கியிருந்த மழைத்துளிகள்... தொட், தொட்' என்று அவள் மீது வர்ஷித்தன. அண்ல் மிரண்டு விருட்டென்று தாவி ஒடியது. மழைத்துளிகள் தன் மீது பட்டதும், தேவியின் அழகிய முகத் தில் குறு நகை பூத்தது.
பலத்த காற்றடித்து, அணில் கடித்த பழம் பொத்தென்று தரையில் விழுந்தது. குனிந்து அந்த மாங்கனியை எடுத்துக் கொண்டவள், அந்த தோட்டத்தை பார்வையால் வலம் வந்தாள்.
இரண்டு மாமரங்கள், ஒரு நெல்லிக்காய் மரம், கறிவேப்பிலை செடி, நான்கு தென்னை மரங்கள், பச்சை மிளகாய், கத்தரிக்காய், தக் காளி செடிகள், கீரைப் பாத்திகள், தொட்டிகளில் ரோஜா செடிகள்,
சிறு தோட்டம் தான்... முறையாய் பராமரிக்கப்பட்டு வந்ததால் பச்சை பசேலென்று கண்களை கட்டிப் போட்டது.
காற்றுக்கு தலையசைத்த பன்னீர் ரோஜாவை ஆசையுடன் வருடி னாள்.
நடை சப்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள். முரளி கண்ணன் வந்து கொண்டிருந்தான்.
என்ன தேவி ரோஜாப்பூவை தடவிக்கிட்டிருக்கே? பறிச்சு தலையில வச்சுக்க வேண்டியதுதானே?
செடியில இருந்தா ஒரு அழகு தான். பறிக்க மனசுவரலை
.
"செடியில இருக்கிறதை விட, பொண்ணுங்க தலையில சூடிக் கிட்டா, அதோட அழகே தனி தான்'.
உனக்குப் பிடிக்கும்னு தான். நர்சரியில விதவிதமான கலர்லே செடிகள் வாங்கி வச்சேன்
.
அதான் கண்ணன் ஆசையா சொல்றானில்ல? தலையில வச்சுக் கோயேன்
.
தோட்டத்தில் தக்காளி, பச்சை மிளகாயைப் பறிக்க வந்த தேவியின் அம்மா பங்கஜம், மகளை உரிமையாய் அதட்டி விட்டுச் சென்றாள்.
பன்னீர் ரோஜாவை இலையுடன் சேர்த்துப் பறித்து காதோரமாய் செருகிக் கொண்டாள் தேவி.
கண்ணன் அவளை ரசித்துப் பார்த்தான்.
இலைகளிலே பூச்சி, பொட்டு அரிக்காம நல்லா தோட்டத்தைப் பராமரிக்கிறீங்க அத்தான்
.
செழுமையா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு
. –
தேங்க்ஸ் தேவி
.
இதுக்குப் போயி தேங்க்ஸ் சொல்றீங்களே அத்தான்? உண்மையை தானே நான் சொன்னேன்?
ஒரு சின்ன பாராட்டுக்கே தேங்க்ஸ் சொல்லணுமா? அப்படிப் பார்த்தா நாங்க தான் தினமும் ஆயிரம் வாட்டி நன்றி சொல்லிட்டே இருக்கணும் அத்தான்
.
அப்படியென்ன நான் பெரிசா செஞ்சுட்டேன் தேவி. சும்மாயிரு
. உள்ளுர கண்ணனுக்கு சில்லென்று தான் இருந்தது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேசினான்.
என்ன அத்தான்? சாதாரணமா சொல்லிட்டீங்க?
"எங்கப்பா ஒரு டி.பி. பேஷன்ட். நோய் தீவிரமாகி வீட்டோட முடங்கிட்டாரு. குடும்பத்துக்கு வந்த வருமானம் நின்னு போச்சு. வீட்டு செலவுக்குப் பணம் வேணும். நானும் ரெண்டு தங்கச்சிகளும் படிக்கணும். அப்பாவோட வைத்தியச் செலவையும் சமாளிக்கணும்.
குடியிருக்கிற வீட்டை வித்துடலாம்னு, அம்மா முடிவு பண்ணி னப்போ, நீங்க விஷயம் கேள்விப்பட்டு ஓடோடி வந்து தடுத்தீங்க.
பரம்பரையா வந்த வீட்டை வித்துட்டு, தட்டுமுட்டு சாமான்களை தூக்கிக்கிட்டு, வீடு வீடா காலத்துக்கும் மாறிக்கிட்டு இருக்கணுமா? வாடகைக்கு முள்ளங்கிப்பத்தையாமாசம் பிறந்ததும் டாண்ணு எடுத்து வைக்கணுமே? சொந்த வீட்டுல இருக்கிற நிம்மதிக்கும் எதுவும் ஈடா காது அத்தை. அப்படின்னு சொல்லி, பண உதவி செஞ்சீங்க.
கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா உங்க தயவாலே தானே. எங்க குடும்ப வண்டி ஒடிட்டிருக்கு? எங்க குடும்பத்தையே தாங்கிக்கிட்டு இருக்கீங்க. இதோ பி.இ. படிச்சு முடிச்சுட்டு ரிசல்ட்டுக்கு காத்திட் டிருக்கேன். நான் படிச்சு என்ஜினீயரானதும் உங்க புண்ணியத்தால தானே?
இந்த காலத்துல யாரும் இப்படி உதவி செய்ய மாட்டாங்களே அத் தான்?
அம்மா அடிக்கடி சொல்வாங்க. ‘நம்ம குடும்பமே நட்டாத்துல நின்னிருக்கும். நமக்கு கண்ணன் தான் குலதெய்வம்’னு பெருமையா சொல்லிட்டிருப்பாங்க. அது வாஸ்தவம் தானே அத்தான்?
ஈரேழு ஜென்மத்துக்கும் நான் உங்களுக்கும் கடமைப்பட்டிருக் கேன் அத்தான்.
நான் மட்டுமில்ல அத்தான். எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. இந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கிறதுன்னு தெரியலை அத்தான்".
நெகிழ்வாய் பேசினாள் தேவி.
"நான் என்ன வேத்து மனுஷனா தேவி? என்னோட கடமையை தானே நான் செஞ்சேன். நன்றி அது இதுன்னு பேசி, என்னை மூணாம் மனுஷனாக்கிடாதே தேவி. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு'.
ஐயோ அத்தான். உங்களை சங்கடப்படுத்தறதுக்காக நான் இப்படி பேசலை. கட்வுளுக்கு நாம நன்றி சொல்றதில்லையா? அது மாதிரி தான் இதுவும்
.
நான் சாதாரண மனுஷன் தேவி. என்னைப் போயி கடவுள், குல தெய்வம்னு பேசாதே. அது ரொம்பத் தப்பு
.
"தப்பில்லை அத்தான். நான் சொன்னது சரிதான். தெய்வம் மனுஷ்ய ரூபனே’ன்னு சொல்வாங்க. எங்களைப் பொறுத்தவரை கடவுள் தான்
கண்ணன் ரூபத்துல வந்திருக்கிறதா? நாங்க நம்பிட்டிருக்கோம்".
குத்தம் குறைகள் நெறஞ்ச சாதாரண மனுஷன் நான். அது தான் நிஜம்
.
"உங்க பெருந்தன்மைக்கு நீங்க இப்படி தன்னடக்கமா பேசறீங்க அத்தான்.
எங்கே இதுவரைக்கும் இத்தன வருட காலத்துல உங்ககிட்டே ஒரு சின்னக் குறையை யாராச்சும் கண்டிருப்பாங்களா? குன்றிமணி அளவு கூட உங்ககிட்டே குறையை காணவே முடியாதுன்னு, எங்கம்மா அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க தெரியுமா?
குறை ஒன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா!. அப்படீங்கிற