Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naadhaswara Oosaiyiley
Naadhaswara Oosaiyiley
Naadhaswara Oosaiyiley
Ebook180 pages1 hour

Naadhaswara Oosaiyiley

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Naadhaswara Oosaiyiley

Reviews for Naadhaswara Oosaiyiley

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naadhaswara Oosaiyiley - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    நாதஸ்வர ஓசையிலே

    Naadhaswara Oosaiyiley

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    நாதஸ்வர ஓசையிலே

    1

    "தனம் தரும்; கல்வி தரும்; ஒரு நாளும் தளர்வறியா

    மனம் தரும்; தெய்வ வடிவம் தரும்; நெஞ்சில் வஞ்சம் இல்லா

    இனம் தரும்; நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

    கனம் தரும், பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே..."

    சஹானா தேனினும் இனிய குரலில் இலயித்துப் பாடினாள்.

    விழிகளை மூடியவண்ணம் பாடியவளை இமைகொட்டாமல் பார்த்தார், சதாசிவம்.

    பாடி முடித்ததும் ஆரத்தித் தட்டில் கற்பூரத்தை வைத்து, இடது கையில் சிறு வெங்கல மணியைப் பிடித்து ஆட்டி ஓசையெழுப்பி. கற்பூர ஜோதியைக் காட்டினாள்.

    அபிராமி அம்மன் படத்தை ஊன்றிப் பார்த்து உளமுருக வேண்டிக் கொண்டாள்.

    அருகில் நின்றிருந்த சதாசிவம் ஆரத்தியைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.

    தம்பி அமுதனும் பவ்யமாய் ஆரத்தியைத் தொட்டான்.

    ஆரத்தித் தட்டைக் கையிலேந்தியபடி நடந்து வந்தாள் சஹானா.

    சற்றுத்தள்ளி, சுவாமி மாடத்திற்கு நேர் எதிரில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அம்மா பர்வதத்தின் அருகில் சென்று. ஆரத்தியைத் தொட்டு. அம்மாவின் நெற்றியைத் தொட்டாள்.

    வலது கையும் காலும் செயலிழந்து போய்... இலேசாய் வாய் ஒருபுறம் கோணிவிட்ட கோலத்தில்... அம்மாவைப் பார்த்தாலே. சஹானாவுக்கு அடிவயிறு பிசைந்தாற் போல் வலிக்கும்.

    கர்நாடக சங்கீதத்தை அற்புதமான குரலில் பாடியவளாயிற்றே பர்வதம்!

    வலது கையால் எத்தனை அருமையாய் வயலினை வாசித்திருக்கிறாள்!

    அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு பாட்டு சொல்லித் தந்தவளாயிற்றே

    சுற்று வட்டாரத்திற்கே பர்வதம் தானே பாட்டு டீச்சராய் இருந்தாள்! யாரையும் அதிர்ந்து பேசாதவள் ஆயிற்றே!

    அவளுக்கா இந்த கதி வரவேண்டும்?

    சஹானா ஆரத்தித் தட்டை கீழே வைத்தாள். அதிலிருந்த விபூதியைத் தொட்டு அம்மாவின் நெற்றியில் பூசிவிட்டாள்.

    அம்மாவின் தாடையை இதமாய் வருடினாள். வலது கையை மெல்ல அழுத்திவிட்டாள்.

    அம்மா! உனக்கு சீக்கிரமா சரியாயிடும். மறுபடியும் நீ வயலினைத் தூக்கி வச்சுக்கிட்டு இனிமையா பாடத்தான் போறே... என்றாள்.

    பர்வதத்தின் முகத்தில் சிறு புன்னகை பூத்தது.

    உன்கிட்டே இருக்கிற கலையை, முடங்கிப் போக விட்டுடமாட்டேன், அம்மா...!

    அந்தக் கவலைதான் எனக்கு இல்லையே! அற்புதமான கலையை சிரத்தையா நீ கத்துக்கிட்டு, என்னையும் மிஞ்சிட்டியே! என்று குழறித் திணறி இடது கையை ஆட்டிப் பேசினாள், பர்வதம்.

    அதுக்காக... நான் அப்படியே விட்டுட முடியுமா? நீ எங்களுக்காக... அட்லீஸ்ட் தினமும் சாமி படத்துக்கு முன்னாடி நாலு வரியாவது பாடணும். அதைநாங்க காது குளிர கேட்கணும். நீ இந்த வீட்டுக்குள்ளே வளைய வந்துட்டிருக்கணும். இதான் என் வேண்டுதல்...!

    கண்களில் கண்ணிர் குளம் கட்ட. நெகிழ்ந்து போய் பேசினாள், சஹானா.

    "சஹி! முன்னைவிட இப்ப ரொம்ப தேறிக்கிட்டு வர்றா உங்கம்மா... இவ ஆரோக்கியத்துல நல்ல முன்னேற்றம் தெரியுது.

    எல்லாமே நீ கொடுக்கிற ட்ரீட்மெண்டாலதான்...! உனக்கொரு விஷயம் தெரியுமா சஹி? உங்கம்மாவுக்க நீண்ட காலமா ஒரு கனவு இருந்துச்சு தெரியுமா? அது இப்போ நிறைவேறிடுச்சு..." என்றார் சதாசிவம்.

    "எனக்கு தெரியாம, அப்படி என்ன கனவுப்பா இருந்துச்சு?

    "நம்ம பொண்ணு சஹானா டாக்டராகணும். அவ கையால எனக்கு ஊசி போட்டு சிகிச்சை தரணும். அவ கைராசி டாக்டர்னு பேரெடுக்கணும்னு அடிக்கடி உங்கம்மா சொல்லிட்டிருப்பா...

    அவளோட கனவு நனவாயிருக்குல்ல! ஆசை தீர தினமும் உன்கிட்டே சிகிச்சை எடுத்துட்டிருக்கா இல்லியா...?"

    ஆனா என் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கே அப்பா?

    "உங்கம்மாவுக்கு ஏற்பட்ட நிலைமையை நெனச்சா, எனக்கு ரொம்ப வருத்தம் தான். ஆனாலும் உள்ளுர அவளுக்கு எப்பேர்ப்பட்ட திருப்தி தெரியுமா...?

    பிரபலமான வீ.ஆர். ஹாஸ்பிடல்லே, வேலை கிடைக்கிறது ரொம்பப் பெரிய விஷயம்!

    நீ அதிலே டாக்டரா ஜாயின் பண்ணின ஆறே மாசத்துல ரொம்ப நல்ல பேர் வாங்கிட்டியே! 

    எம்.பி.பி.எஸ’. முடிச்சிட்டு, எம்.எஸ்.லே சேர்ந்தே. சேர்ந்தது பெரிசில்ல. "எம்.எஸ்.லே பாஸ் மார்க் வாங்கறதே பெரிய கஷ்டம்னு எல்லாரும் சொல்லிக்கிறாங்க...

    நீ என்னடான்னா... அதுலே டிஸ்டிங்ஷனிலே தேறினே. யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்"ங்கிற பெருமை. உனக்கு உடனடியா வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துச்சு.

    வி.ஆர். ஹாஸ்பிடலோட எம்.டி. ஊர்லே இல்லாத நேரத்துல சிக்கலான ஆபரேஷனை செய்து வெற்றிகரமா பேஷண்டை பிழைக்க வச்சுட்டே...!

    கேஸ் ஹிஸ்டரியை வந்து புரட்டிப் பார்த்துட்டு, எம்.டி.யே திகைச்சுப் போயிட்டாரே!

    நானே இருந்திருந்தாலும், இந்த ஆபரேஷனை இப்படி சக்ஸஸ்புல்லா பண்ணியிருப்பேனாங்கிறது சந்தேகம்தான். ரிஸ்க் எடுக்க ரொம்ப யோசிச்சிருப்பேன். துணிஞ்சு காரியத்துல இறங்கி, ஒரு உயிரைக் காப்பாத்திட்டே... வெல்டன் சஹானா...!

    இது என்னோட சொந்த ஹாஸ்பிடல்தான். உன்னை நான் பிரமோட் பண்றேன். ஹாஸ்பிடல் பொறுப்பை உன்கிட்டே ஒப்படைக்கிறேன். எனக்கு அடுத்தபடியா இருக்கிற ஸ்தானத்துக்கு நீதான் வரணும்.

    இனிமே என்னோட வலது கையும் நீதான். ஹெட் டாக்டரும்" நீதான்னு, உன்னை எம்.டி. குருமூர்த்தி உசரத்துல தூக்கி வச்சுட்டாரே!

    ஹாஸ்பிடல்லே வேலை பார்க்கிற சீனியர் டாக்டர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, உன்னைப் பார்த்து பொறாமைப்படற அளவுக்கு, குறுகிய காலத்துல வளர்ந்துட்டே...!

    உன்னை மகளா பெத்ததுக்கு, நானும் உங்கம்மாவும் புண்ணியம் பண்ணியிருக்கணும். உன்னை நெனச்சு நான் ரொம்ப ரொம்ப பெருமைப்படறேன், சஹானா...!"

    நெகிழ்ந்து போய் பேசினார் அப்பா சதாசிவம்.

    கவனமா படிச்சு, பொறுப்பை உணர்ந்து நடந்துக்கிடறது என் கடமை தானேப்பா...! இதைப் போய் பெரிய விஷயமா எடுத்துப் பேசிட்டிருக்கீங்க...? 

    "என்ன இப்படி சொல்லிட்டே சஹி! எங்களைப் பொறுத்தவரை இது பெரிய விஷயம் தான்.

    உங்கண்ணன் சம்பத்தை எடுத்துக்க, ப்ளஸ்டுவில கம்மி மார்க்தான் எடுத்திருந்தான்.

    உங்கம்மாவோட நகைகளை வித்து, அவனுக்கு காலேஜில சீட் வாங்கிக் கொடுத்தேன். ஏதோ படிச்சான். பி.ஈ. முடிச்சா பத்தாது, எம்.ஈ. முடிச்சாத்தான் வேலை கிடைக்கும்னு சொன்னான்.

    நமக்குன்னு இருந்த பூர்வீக நிலத்தை வித்துப் படிக்க வச்சேன்.

    வெளிநாட்டுக்குப் போனா இலட்ச இலட்சமா சம்பாதிக்கலாம். தங்கச்சி, தம்பியோட படிப்பு செலவு, தங்கச்சியோட கல்யாணச் செலவு எல்லாத்தையும் நானே செய்யறேன்.

    இந்த வீட்டை இடிச்சுத் தகர்த்துட்டு எல்லாம் புதுசா எடுத்துக் கட்டிடலாம். உங்களை உட்கார வச்சு சோறு போடறேன்னு சொன்னான்.

    அவனை நம்பி டாக்ஸியை வித்தேன். அந்த டாக்ஸி ஓட்டித்தானே இத்தனை வருஷமா குடும்பத்தைக் காப்பாத்திட்டு வந்தேன். மனசார அதையே வித்து பணத்தைத் தந்து வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சேன்.

    போனவன் பணமே அனுப்பலை. ஜீவனம் நடத்தறதுக்காக நான் ஒரு பணக்கார வீட்டுல டிரைவரா வேலைக்குச் சேர்ந்தேன்.

    ஒரு மூணு மாசம் பொறுத்து முப்பதாயீரம் பணம் அனுப்பி. வச்சுட்டு, கூட வேலை பார்க்கிற பொண்ணை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்பா! அவ கிறிஸ்டியன். கண்டிப்பாக நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டிங்கன்னுதான், இந்த முடிவுக்கு வந்தேன்.

    எனக்குன்னு ஒரு ஃபேமிலி உண்டாயிடுச்சு. வீட்டு வாடகை, குடும்பச் செலவு இதெல்லாம் எக்கச்சக்கமா இருக்கு...

    சம்பாதிக்கிற பணம் எனக்கே பத்தலை. தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க... என்கிட்டே எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லி, நம்ம தலையிலே குண்டைத் தூக்கிப் போட்டானே உங்க அண்ணன். ப்ளஸ்டுவில நீ மெரிட்டிலே தேறினே... எங்க முதலாளி ஐயா இதைக் கேள்விப்பட்டு, அவர் நடத்தற டிரஸ்ட் மூலமா உனக்கு ஸ்பான்ஸர் செஞ் சாரு...

    உனக்கும் மெடிக்கல் காலேஜில ஈஸியா சீட் கிடைச்சது. அக்கறையா சிரத்தையா படிச்சு முடிச்சே. உன் திறமைக்கு உடனடியா வேலையும் தேடி வந்துச்சே...! 

    ஒரு பொண்ணா பொறந்துட்டு, கடமை உணர்ச்சியோட பொறுப்பா பாசமா நடந்துக்கிறே.

    எனக்கு திடீர்னு மைல்ட் அட்டாக் வந்துச்சு, இதுக்கு மேலே நீங்க வேன்லக்குப் போக வேணாம்னு, தடை உத்தரவு போட்டுட்டே...

    குடும்பத்தை நான் பார்த்துக்கிறேன்னு பிடிவாதமா சொல்லிட்டே... ஒரு மகனைப் பெத்தோம், நம்பிக்கை துரோகியா மாறிட்டான். அவனால கண்ணிர்விட்டதுதான் மிச்சம்...! 

    ‘வீட்டுல சும்மா இருக்க, மனசு கேட்கலைம்மா"ன்னு வருத்தப்பட்டு சொன்னேன். லோன் போட்டு ரெண்டு இலட்ச ரூபாய்க்கு ஒரு டாக்ஸியை வாங்கி,

    Enjoying the preview?
    Page 1 of 1