Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Serndhathey Nam Jeevaney...!
Serndhathey Nam Jeevaney...!
Serndhathey Nam Jeevaney...!
Ebook158 pages1 hour

Serndhathey Nam Jeevaney...!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Serndhathey Nam Jeevaney...!

Reviews for Serndhathey Nam Jeevaney...!

Rating: 4.076923076923077 out of 5 stars
4/5

13 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Serndhathey Nam Jeevaney...! - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    சேர்ந்ததே நம் ஜீவனே...!

    Serndhathey Nam Jeevaney…!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    எனது தாயுமானவருக்கு இதய அஞ்சலி!

    பிரபல எழுத்தாளர் கவுதம நீலாம்பரன் ஐயா அவர்கள் திடீரென மறைந்துவிட்டார்.

    எனது தாயையும் தந்தையையும் இழந்த தருணத்தில் நான் அடைந்த சோகத்தை... மீண்டும் அடைந்தாற் போலிருந்தது. காரணம்....!

    என் தாயாரின் மறைவுக்குப்பின் நான் உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிக்கப்பட்டதில்... எழுதுவதையே விட்டுவிட்டேன். என்மீது அக்கறை கொண்ட பல எடிட்டர்கள் அடிக்கடி ஃபோன் செய்து "உங்கள் எழுத்தில்தான் அம்மாவின் ஆத்மா இருக்கிறது. அவசியம் எழுதுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.

    நான் அதை செவிசாய்க்கும் மனநிலையில் இல்லை. ஆனால், ஐயா கவுதம நீலாம்பரன் அவர்கள் சில முக்கியமான எடிட்டர்களுடன் பேசி அந்தப் பெண்ணிடம் மேட்டரை கேட்டு வாங்குங்கள் என்று கூறி எனது ஃபோன் நம்பரைத் தந்துவிட்டார்!

    அந்த எடிட்டர்களிடம் என்னால் மறுப்பு தெரிவிக்க இயலவில்லை. ஐயாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து வேறு வழியின்றி மீண்டும் பேனாவைப் பிடித்தேன். இதுபற்றி நான் அவரிடம் கேட்டேன். ஒரு தீபம் அணைவதை நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? குன்றின்மேல் இட்ட சுடர்போல் நீ பிரகாசிக்க வேண்டும். நிறைய விருதுகள் வாங்குவதை நான் காண வேண்டும் என்றார் ஐயா.

    என் எழுத்துக்கு அஸ்திவாரம் எனது தாய் என்றால் அதே எழுத்துக்கு "புனர் ஜென்மம் தந்து புத்துயிருடன் புகழுடன் நிலைக்க வைத்தவர் திரு.கவுதம நீலாம்பரன் ஐயா அவர்கள்தான். இந்த துறையில் எனக்கு ஒரு தாயுமானவராய், பக்கபலமாய் இருந்தவர் அவர்.

    ஐயா நம்மிடையே இல்லை என்றாலும் அவரது ஆத்மாவும் ஆசியும் என்றும் இந்த எழுத்தில் பரிணமிக்கும் என்று நம்புகிறேன்....

    1

    விடியல் மிக அழகாக கண்முன் விரிந்து தெரிந்தது. அதிகாலை நேரத்துப் பூங்குயில் ஒன்று தனியே சாதகம் செய்து கொண்டிருந்தது.

    ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தின் அழகை மீண்டும் ஒருமுறை பார்வையால் வருடி விட்டு, எதிர்ச்சுவரை ஏறிட்டுப்பார்த்தாள், மானஸா.

    மணி நான்கே முக்கால்...!

    காலை ஐந்து மணிக்கு அவள் அருள் இன்ஸ்டிட்யூட்டில் இருக்க வேண்டும்.

    அவசரமாக துப்பட்டாவை எடுத்து மடித்துப் போட்டுக் கொண்டு " அறையை விட்டு வெளிப்பட்டாள்.

    அம்மா...! நான் போயிட்டு வர்றேன்...

    காபி குடிச்சுட்டுப் போ மானஸா...!"

    அடுப்படியிலிருந்து அம்மா மரகதத்தின் குரல் வந்தது.

    வேணாம். எனக்கு டயமாச்சு...

    வாசலிலிருந்த ஸ்கூட்டியைத் தள்ளியபடி பதில் சொன்னாள்,மானஸா.

    "பொறு...! ரெண்டரை மணி நேரம் தொண்டைத் தண்ணி வத்த நீ கிளாஸ் எடுக்கணும்.

    அதுவும் மேத்ஸ் கிளாஸ்...! ஒரு டம்ளர் காபியைக் கூட நீ குடிக்காம போனா எப்படி? வெறும் வயித்தோட அவ்ளோ நேரம் கிளாஸ் எடுத்தா, தலைவலிக்க ஆரம்பிச்சுடும். சொன்னா கேளு..!"

    மரகதம் காபியை ஆற்றியபடி வாசலுக்கே வந்துவிட்டிருந்தாள்.

    சரி. உன் பேச்சை மீறலை... குடு...! என்றபடி காபி டம்பளரை வாங்கி, அவசரமாய் தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள்.

    நான் வரேன் அம்மா...!" காலி டம்ளரை அம்மாவிடம் தந்துவிட்டு, ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு விரைந்தாள்.

    தேனியில் அருள் இன்ஸ்டிட்யூட் மிகவும் பிரபலம் அடைந்திருந்தது.

    பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டு படிக்கும் மாணவர்களுக்கு கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை எளிய முறையில் அருமையாக கற்றுத்தந்ததோடு, மாணவர்களை ஊக்குவித்து, மதிப்பெண்களை அள்ள வைத்த நல்ல கல்வி நிறுவனம் என்று பெயர் பெற்றிருந்தது.

    கடந்த ஒரு வருடமாய் அதில் பகுதி நேரமாய் வேலை பார்த்து வந்தாள், மானஸா.

    பி.ஈ. ஃபைனல் இயர் படிக்கும் போதே, அங்கு வேலைக்குச் சேர்ந்துவிட்டிருந்தாள். 

    காலையிலும் மாலையிலும் கோச்சிங் கிளாஸ் எடுத்ததில், இருபதாயீரம் சம்பளம் கிடைத்ததோடு, மனதிற்கும் அவளுக்குப் பரம திருப்தி...!

    கோச்சிங் கிளாஸ் மாணவர்களுக்கு மானஸாவின் கிளாஸ் என்றாலே, குஷி பிய்த்துக் கொண்டு போகும்.

    மானஸா கண்களை வசீகரிக்கும் பேரழகி மட்டும் அல்ல...!

    கணக்குப் பாடத்தை வெகு லாவகமாக கடைநிலை மாணவனுக்குப் புரியும் வண்ணம் மிக அழகாய் சொல்லித் தருவாள்.

    எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும், பொறுமையாய் சிரித்த முகத்தோடு விளக்கம் சொல்வாள். 

    அவள் கரும்பலகையின் முன்னால் நின்றபடி, கைகளை நாசூக்காய் அசைத்து சொல்லித் தரும் விதத்தில், மாணவர்கள் அப்படியே ஒன்றிப்போய் விடுவார்கள். 

    ஏண்டீ...! மானஸா மிஸ் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காங்க இல்ல?

    அவங்க எப்பவுமே அழகாத்தான் இருக்காங்கடி. லூஸ் மாதிரி பேசாதே! 

    மானஸா மிஸ் எந்த டிரஸ் போட்டாலும் அழகுதான்... சேலை கட்டினா சிலை மாதிரி இருக்காங்க... சுடிதார், குர்தா போட்டா... ஜவுளிக்கடை பொம்மை மாதிரி இருக்காங்க...

    வாஸ்தவம்தான்டி... அவங்க மேல வச்ச கண் வாங்க முடியலை. பார்த்துக்கிட்டே இருக்கணும் போலிருக்கு... இடது தாடை ஒரமா ஒரு அழகு மச்சம் அமைஞ்சிருக்கு. அது பார்க்க கொள்ளை அழகா இருக்கு. 

    இவங்களோட ரோஜா நிற மேனிக்கு, திக் கலர்ஸ் மட்டுமில்ல, லைட் கலர்லே டிரஸ் போட்டாலும் சூப்பராதான் இருக்காங்க...

    ஆமாண்டி. நேத்து ஒயிட் கலர்லே டிரஸ் போட்டு வந்தாங்களே. அப்படியே ஒரு ஏஞ்சல் மாதிரி இருந்தாங்கல்ல?

    கரெக்ட் தான். அவங்க கையை அசைச்சு, அசைச்சு எக்ஸ்ப்ளைன் பண்ற மேனரிஸம் இருக்கே? மனசு சொக்கிப் போகுது...

    எந்தக் கோணத்துல பார்த்தாலும் இளவரசி மாதிரி அப்படியொரு லட்சுமி பிரபா அழகு...! உள்ளுக்குள்ளே கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு...

    "மானஸா மிஸ் போட்டிருக்கிற துப்பாட்டாவைப் பார்த்தியா? ரொம்ப நேர்த்தியா வளைவு வளைவா ஆரம் மாதிரி எப்படி இந்த மாதிரி மடிப்பு வைக்கிறாங்கன்னே தெரியலையே.டி..?

    அதெப்படி இவங்களாலே மட்டும் இவ்ளோ சூப்பரா துப்பட்டாவை மடிக்க முடியுது?

    இளம் மாணவிகள் தங்களுக்குள் கிசுகிசுப்பது வழக்கம்...!

    நான் இந்த சேப்டரை முடிச்சாச்சு எனி டவுட்?

    சாக்பீஸை டேபிளில் வைத்துவிட்டு, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி மாணவர்களை ஏறிட்டாள், மானஸா.

    கேர்ல்ஸ்! உங்களுக்குள்ளேயே டிஸ்கஸ் பண்ணாதீங்க. டவுட் இருந்தா தயங்காம கேளுங்க.

    மிஸ். நோ டவுட் மிஸ்! என்று கோரஸாய் பதில் வந்தது.

    டவுட் இல்லையா? அப்புறம் என்னத்துக்கு சலசலன்னு சப்தம் வந்துச்சு? சீரியஸா எதைப் பத்தி அப்படி பேசிட்டிருந்தீங்க?

    புன்னகை மாறாமல் கேட்டாள், மானஸா.

    மிஸ்! நீங்க ரொம்ப, ரொம்ப அழகா இருக்கீங்க... அதைப் பத்தித்தான் பேசிட்டிருந்தோம்...

    துணிந்து ஒரு துடுக்கான மாணவி பதில் சொன்னாள்.

    ஆமா... நீங்க எந்த டிரஸ் போட்டாலும் அழக... எல்லா கலரும் உங்களுக்கு சூட் ஆகுது... சேலை கட்டினா...

    இன்னொரு மாணவி சிலாகித்து சொல்லி முடிப்பதற்குள் சட்டென்று இடைமறித்தாள் மானஸா.

    "எனஃப்...! எனஃப்...! என்னது இது? கோச்சிங் கிளாசுக்கு வந்துட்டு,

    Enjoying the preview?
    Page 1 of 1