Maayamo Naan Ariyean...
3.5/5
()
About this ebook
Reviews for Maayamo Naan Ariyean...
13 ratings0 reviews
Book preview
Maayamo Naan Ariyean... - Arunaa Nandhini
http://www.pustaka.co.in
மாயமோ நான் அறியேன்
Maayamo Naan Ariyean
Author:
அருணா நந்தினி
Arunaa Nandhini
For more books
http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
1
சௌம்யாவிற்கு தலைக்கு மேல் வேலை இருந்தது. மதிய உணவை சீக்கிரம் முடித்துக் கொண்டு வந்தவள்… தன் வேலையில் மூழ்கிப் போனாள்.
அந்த நேரத்தில்தான் அவளுக்குப் போன் வந்தது. வீட்டிலிருந்து அம்மாதான் பேசியது. குரலில் பதற்றம் தெரிந்தது.
சௌமி… உடனே புறப்பட்டு வாயேன்…
என்னம்மா விஷயம்…
வேலை மத்தியில் இதென்ன தொல்லை என்ற எரிச்சலுடன் கேட்டாள்.
பேசறதுக்கு நேரம் இல்லைடீ… நீ உடனே புறப்பட்டு வா… சொல்கிறேன்…
அப்படிச் செல்லும்போதே ஏதோ சீரியஸ் விஷயம் என்று தெரிந்தது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லையோ… இல்லை… யாராவது வீட்டிற்கு வந்து… ஊகூம்… இருக்காது…. வாடகையிலிருந்து ஒன்றையும் பாக்கி வைக்காமல் கொடுத்து விட்டோமே… பின்னே… எதுவாக இருக்கும்.
பொறுமையிழந்தவளாய் தாயிடம் கேட்டாள். என்னன்னு சொல்லும்மா. நினைத்த போதெல்லாம் புறப்பட்டு வர முடியாதும்மா… தெரிஞ்சுக்கோ..
உன் அக்காவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம். அவள் வீட்டிலிருந்து போன் வந்தது… அதைக் கேட்டதும் நான் ஆடிப்போயிட்டேன்டீ… உடனே புறப்பட்டு வா… நீ வந்ததும் புறப்படணும்
அதற்கு மேல் பேசாமல் வைத்துவிட்டாள் தாய்.
அதைக் கேட்டு அவளுக்கு அதிர்ச்சியோ.. திகைப்போ வரவில்லை. ஏனோ சலிப்புதான் வந்தது.
ஆரம்பத்தில் அக்காவிற்கு காயம் பட்டிருக்கிறது. ஆஸ்பத்திரியில் இருக்கிறாள்… கையில் பிராக்சர்.. கட்டுப் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டதும் துடித்துப்போய் ஓடுவாள்.
கட்டுடன் இருக்கும் அக்காவைப் பார்க்கும்போது மனம் வலிக்கும். வேதனையில் தவிப்பாள்.
ஓரிரு முறையாக இருந்தால் சரி…
ஆனால் அதுவே வழக்கமாகிப் போய்விட்டதும்… அக்காவைப் பார்க்க எரிச்சலாக இருந்தது.
தினமும் சாகிறவர்களுக்கு அழுவார்களா… என்ன… பார்த்துப் பார்த்து உள்ளம் மரத்து விடுமே… அதுமாதிரிதான்.
வாயில்லாப் பூச்சியாய்… தன் கணவனின் அடிகளைத் தாங்கிக் கொண்டு… தன் கையாலாகாத தனத்தை கண்ணீரில் காட்டும் அக்காவைப் பார்க்க ஆத்திரமாய் வரும்.
ஏன்க்கா… இப்படி அநியாயமா சாதுவா இருக்கே… குனியக் குனியக் குட்டுவார்கள்னு தெரியாதா உனக்கு… ஓடுகிற வரைக்கும் தான் துரத்துவார்கள். நின்று… திரும்பி முறைத்துப் பார்… அப்படியே அடங்கிவிடுவார்கள்… என்று கூடச் சொல்லிப் பார்த்து விட்டாள்.
ஊகூம்… சாது மிரண்டால் தானே.
அதான்.. முதலில் அய்யோ… அக்காவிற்கு அடிப்பட்டிருக்கிறதா…
என்று துடித்தவள்.. பின்பு… என்ன அக்காவிற்கு அடிபட்டிருக்கிறதா.. என்று பரிதாபம் அடைந்து.. இப்போது..
ஓகோ… அப்படியா.. சரி" என்று சாதாரணமாய் எடுத்துக் கொள்ளும் அளவில் இருந்தாள்.
அதற்காக சந்தியா மீது பாசம் இல்லை என்று சொல்ல முடியாது. அக்காவின் மீது கொள்ளைப் பிரியம்தான்.
ஆனால்… கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகியும்.. முதுகெலும்பு இல்லாத பிராணியா இருக்கிறாளே என்ற கோபமும் ஆவேசம்தான் அதிகம்.
ஏன்க்கா.. அந்த வீட்டி¬¬¬ல் அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.. பேசாமல் வந்துவிடு… உன்னையும் குழந்தைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லிப் பார்த்தாள்… மாட்டேன் என்று பிடிவாதம் வேறு.
அத்தனை செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தபின்… அதை உதறிவிட்டு வந்து… பாரமாய் இருக்க விரும்பவில்லை. அடுத்து ‘வாழா வெட்டி’ என்று மற்றவர்கள் தூற்றுவார்களாம்.. அதுமட்டுமல்ல… பெத்தது இரண்டும் பொண்ணுங்க.. அவர்களுடைய எதிர்காலத்துக்காகவாவது அத்தனை கஷ்டங்களையும்சகித்துக்கொள்ள வேண்டுமாம். பற்களை நறநறவென்று கடித்தாள் சௌம்யா.
இதற்கு அம்மாவும் ஓத்து ஊதுகிறாள்… கஷ்டமோ நஷ்டமோ.. அவள் அங்கேதான் இருக்கணும்.. அடிக்கிற கைதான் அணைக்கும் என்று வியாக்கினம் வேறு.
அங்கே அரவணைப்பு ஏது.. வெறும் அடிமட்டுமே…
சே! பெண்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும்தான். அதற்காக அநியாயங்களைப் பெறுத்துப் போக வேண்டும் என்று இருக்கிறதா..
அந்த பூமாதேவியே… சில சமயம் பொறுமையிழந்து சிலுப்பிக் கொள்கிறாள்… அதனால்தான் பூகம்பமும்.. சுனாமியும் வருகிறது..பொறுமைக்கு உதாரணம் என்று சுட்டிக் காட்டப்படும் பூமித்தாயே தன் கோபத்தைக் காட்டுகிறாள் எனும் போது.. சாமானிய மனிதன்.. இல்லை.. மனுஷி காட்டுவதில் தப்பேது…
காட்டக்கூடாதாம்… பெண்கள் அடங்கிப்போக வேண்டுமாம். காலம் காலமாய் இப்படி பெண் இனத்தை அடக்கியே வைத்து... உணர்ச்சியில்லா ஜடமாய் ஆக்கி விட்டார்களே என்ற கொந்தளிப்பு சௌம்யாவிற்கு…
கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன் என்ற பழமொழியில் அவளுக்கு உடன்பாடு இல்லைதான்.
சொல்லப்போனால்.. அவற்றை இன்னும் மாற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைப்பாள்.
கழுதையானாலும் கணவன்.. பேயானாலும் புருஷன் என்று கழுதையையும் பேயையும் கட்டிக்கொண்டு அழ என்று தலையெழுத்தா.. பெண்களுக்கு நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து வாழ கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் ஆணாதிக்கத்தை துணிவுடன் எதிர்கொள்ளவும்.. அதை சமாளித்துக் கொள்ளவும் முடியும்…
எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன.. பெண்களின் கண்ணீருக்கு விடிவே இல்லை.. ஆணாதிக்கமும் ஒழிந்த பாடில்லை.
அன்று அம்மா… இன்று அக்கா.. சே.. பெண்களுக்கு சகிப்புத்தன்மை இருக்கவேண்டும்தான்… அதற்காக அநியாயங்களைப் பொறுத்துப் போக வேண்டும் என்று இல்லையே…
என்னடீ விஷயம் சௌமி.. முகம் ஒரு மாதிரியா இருக்கிறது..
அவளுடன் பணியாற்றும் ரேவதி விசாரித்தாள்.
பச்சு.. அக்காவிற்கு உடம்பு சரியில்லையாம்.. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம்… தகவல் வந்திருக்கிறது. அதைப் போனில் சொல்லி.. உடனே வா என்று சொல்கிறாள் அம்மா. இத்தனை வேலைகளை விட்டுவிட்டு நான் எப்படிப் பேவேன்.. அதான்.. குழப்பத்தில் இருக்கிறேன்..
என்றாள் சௌம்யா.
இதில் என்ன குழப்பம்.. முதல்ல அக்காவைப் போய் பார் சௌமி.. ஆஸ்பத்திரியில் இருக்கிறாங்க என்றால் ஏதாவது சீரியஸா இருக்கலாம்.. இந்த நேரத்தில் வேலை.. அது இது என்று தயங்காதே… எல்லாவற்றையும் ஒதுக்கி வச்சுட்டுப் புறப்படு… நாளைக்கு பண்ணுவியாம்.. முடிஞ்சா நானும் உனக்கு ‘ஹெல்ப்’ பண்ணுகிறேன்.. ம்ம்… புறப்படு…
என்று சொல்லிவிட்டு.. அவளும் சௌம்யாவுக்கு உதவ வந்தாள்.
கம்யூட்டரை ’ஷட் டவுன்’ பண்ணிவிட்டு அவளும் கிளம்பினாள். நல்ல வேளையாய் ‘எம்.டி’ எதுவும் பேசாமல் ‘ஓகே’ என்று சொல்லிவிட்டார்.
வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு நேரே வீட்டிற்கு போனாள் சௌம்யா. ஆட்டோவிலிருந்து இறங்கியது தான் தாமதம்… பாக்கியம் அவளைப் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
என்ன ஆச்சம்மா… கொஞ்சம் விஷயத்தை சொல்லிவிட்டு அழேன்..
என்றாள் சௌம்யா பொறுமையிழந்து போய்…
எனக்கு சரியாத் தெரியாதுடீ.. திடீர்னு சந்தியாவோட மாமனார் பக்கத்து வீட்டுக்குப் போன் செய்து.. சந்தியாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்.. விஷயத்தை அவங்க வீட்டில் சொல்லிடுங்கன்னு சொன்னாராம்.. எனக்கு கையும் ஓடலை.. காலும் ஓடலை..
என்றாள் பாக்கியம்… கண்ணீரைத் துடைத்தவாறு…
சரி… எந்த ஆஸ்பத்திரின்னு சொன்னாரா… அது தெரியாமல் எங்கே போவது.. இரு வருகிறேன்..
என்றவள்… சற்றுத் தொலைவில் இருக்கும் ‘பூத்’’தை நோக்கி சென்றாள்.
பிடிக்காவிட்டாலும்… பேச வேண்டிய நிர்பந்தம்.. சந்தியாவின் வீட்டிற்கு போன் செய்து மருத்துவமனையின் பெயரைக் கேட்டாள்.
பேசியது சந்தியாவின் மாமனார்.. அழுத்தக்காரர்… அடிப்பட்டிருப்பது சொந்த மருமகள் என்ற வேதனையோ.. வருத்தமோ இன்றி.. பட்டும் படாமல் பதில் சொன்னார்.
வரலட்சுமி நர்ஸிங் ஹோம்!
பரவாயில்லை… அத்தனை மோசமான ஆஸ்பத்திரியில்லைதான். அந்த லொகாலிட்டியில்… நல்ல பெயர் வாங்கிய ஆஸ்பத்திரி.
அதே சமயம்… கணிசமான தொகையை ‘பில்’லாக போட்டு கறந்து விடுவார்கள் என்ற பதைப்பும் உண்டானது நிச்சயம்…. அந்த மனுஷன். அக்காவின் புருஷன் என்ற பெயரில் இருக்கும் இரண்டு கால் மிருகம் கட்ட மாட்டான். பில்லை மெல்ல இந்த பக்கம் தள்ளப் பார்ப்பான்… அந்த தொகை இவள் தலைமேல் தான் விழும்… அதுமட்டும் நிச்சயம்… இது எப்போதும் நடக்கும் விஷயம் தான்.
விரக்தியுடன் சிரித்துக் கொண்டாள்.
அக்காவிற்கு விடிவுகாலம் வருகிறதோ இல்லையோ தனக்கு இல்லவே இல்லை.
தாயையும் அழைத்துக் கொண்டு அதே ஆட்டோவில் புறப்பட்டாள்.
வுழியெல்லாம் தாயின் புலம்பலைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு வந்தாள் சௌம்யா.
பெற்ற வயிற்றின் தவிப்பு அது.
பாவம்.. அம்மாவும் என்ன சுகத்தைக் கண்டாள்… சின்ன வயசில் கல்யாணம்.. அடுத்தடுத்து மூன்று பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு… என் பொறுப்பு தீர்ந்தது என்று குடும்பத்தை நிராதரவாய் விட்டு விட்டு ஓடிப்போய் விட்டான் தாலிகட்டிய மகாராஜன்.
போன ஆள் எங்கிருக்கிறார்… என்ன செய்கிறார். அவர் இருக்கிறாரா… இல்லையா… தனியாகவா… வேறு ஒரு குடும்பம் அமைத்துக் கொண்டா என்று எதுவும் தெரிந்து கொள்ளாமல் பரப்பிரம்மமாய் வாழும் பேதை… அம்மாவிற்கு பிள்ளைகள்தான் உலகம்.. தாயை நினைக்கையில் பரிதாபமாய் இருந்தது.
அவளுக்குத் துன்பங்கள் என்றும் தொடர்கதைதான்… தினமும் ஒரு பிரச்சனை அவளை வாட்டும். அம்மாவின் முகத்தில் கவலை ரேகைகள் நிரந்தரமாய் விழுந்து விட்டது.
அவளது முகத்தில் சிரிப்பைப் பார்த்ததில்லை… எப்போதும் எதையாவது நினைத்து கலங்குவாள்.
தொலைந்து போன கணவனை… புகுந்த வீட்டில் துன்பப்படும் அக்காவை… பொறுப்பு உணராமல்… விளையாட்டுத்தனமாய் இருக்கும் மகனை… வீட்டுக்காக ஓடாய் உழைக்கும் இளைய மகளை… இப்படி எல்லோரையும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் அவளுக்கு… தன்னைப்பற்றிய சிந்தனை இல்லவே இல்லை.
சௌம்யாவிடம் சொல்லுவாள்.
உனக்கும் கல்யாணம் ஆகிவிட்டால்… அக்கடான்னு இருப்பேன்டீ… சௌமி… உனக்கும் வயசு ஏறிக் கொண்டே போகிறது… காலா காலத்தில் முடித்துவிட வேண்டும்
அதைக்கேட்டு கையெடுத்துக் கும்பிட்டாள் சௌம்யா.
என்ன விட்டுவிடும்மா… எனக்கு இந்தக் கல்யாணம் கண்றாவியெல்லாம் வேண்டாம்.. தெரிஞ்சும் பாழும் கிணத்தில் விழச் சொல்கிறாயா… புதை மணலில் குதிக்கச் சொல்லு… தயார்.. இந்தக் கல்யாணம்.. வேண்டவே வேண்டாம்…
என்றாள் உறுதியுடன்.
எத்தனை நான் இப்படிக் கல்யாணம் இல்லாமல் இருப்பே… பெண்ணிற்கு கல்யாணம் அவசியம்மா.
ஆகா, ரொம்ப அவசியம்.. ஆமாம்.. நீயும்.. அக்காவும் கல்யாணம் பண்ணிக்கொண்டு என்ன சாதித்தீர்கள்.. பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டதுதான் பெரிய சாதனை.. மற்றபடி பூஜ்யம். உன் கடந்த கால வேதனைகளையும்.. அக்கா படும் கஷ்டங்களையும் பார்க்கும்போது ‘கல்யாணம்’ என்ற வார்த்தையே கசக்கிறது. ஆண் ஜென்மங்களைப் பார்க்கும் எரிச்சலாக வருகிறது. தயவுசெய்து என்னை இப்படியே விட்டுவிடும்மா… அது போதும்
அவள் குரலில் இருந்த உறுதியைப் பார்த்து விட்டு பாக்கியம் அடங்கி விட்டாள்.
என்னடீ… நான் என்ன சொல்கிறேன் என்பதை காதில் வாங்கிக் கொள்ளாமல்… எங்கோ நினைவை வைத்துக் கொண்டு வருகிறாயே…
அவளை உலுக்கியது போல வந்தது அம்மாவின் வார்த்தைகள்.
கவனத்தை திருப்பினாள் சௌம்யா.
என்னம்மா கேட்டே..
இத்தனை நேரம் நான் பேசினது எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காட்டம்தானா… இங்கே தொண்டை வரள… என் வேதனையைப் புலம்பிக் கொண்டு வருகிறேன். நீ அதைக் காதில் போட்டுக்காமல்…
சரி.. என்னன்னு சொல்லும்மா.. ப்ளீஸ்…
உன் அக்காவிற்கு ஏதும் ஆகிடாதே.. அதை நினைச்சா.. எனக்கு வயித்தைக் கலக்கிறதுடீ… சௌமி…
அக்காவிற்கு ஒண்ணும் இருக்காதும்மா.. கவலைப்படாமல் வா…
என்று வாய் சொன்னாலும், ஒருவேளை… அடிபலமாய் பட்டிருந்தால்… பயம் உள்ளுக்குள் எலியாய் பிராண்டியது.
மனதில் படபடப்புடன் அந்த நர்ஸிங் ஹோமிற்குள் சென்றனர்.
சந்தியா ஜெனரல் வார்டில் சேர்க்கப்பட்டிருந்தாள்… தலையில் பலத்த கட்டுடன்.. நினைவிழந்து கிடந்தவளைப் பார்க்கும்போது.. சௌம்யாவிற்கு தொண்டை அடைத்து வந்தது… துக்கம்…
அவள் நினைத்தது போல சாதாரண அடியில்லை என்று தெரிந்தது.
தாங்கியிலிருந்து ‘டிரிப்ஸி’ன் வழியே மருந்து போய் கொண்டிருந்ததாலோ என்னவோ… வலியை மறந்து கிடந்தாள் அவள்.
அவளை அந்த நிலையில் பார்த்ததும் பாக்கியம்,
‘ஓ!’ வென்று அழ ஆரம்பித்து விட்டாள்.
கண்களில் கண்ணீர் தளும்ப… அருகே நின்றிருந்த மாமியாரைப் பார்த்துக் கேட்டாள் சௌம்யா.
என்ன நடந்தது ஆனட்டீ.. அக்காவிற்கு எப்படி அடிப்பட்டது. வழக்கம் போல உங்க பிள்ளை அடித்து விட்டாரா.. உண்மையைச் சொல்லுங்கள்…
உரத்த குரலில் அவள் கேட்க…
அந்த அம்மாள் என்ன சொல்வது என்று தெரியாமல் திரு திருவென்று விழித்தாள். அவரைப் பார்க்கையில் பாவமாக இருந்தது.
அந்த வீட்டில் வாயில்லா பூச்சியாக இருப்பவள் அந்த அம்மாள். அக்காவிற்கு அவர்தான் ஆதரவு என்றும் தெரியும்.
கணவனின் கோபத்திற்கும்… மகனின் ரௌத்ரத்திற்கும்.. அவராக இருக்கக் கண்டு சமாளித்துக் கொண்டு அமைதியாக நாட்களை கடத்துகிறார்.
அவரது இளைய மகன் சம்பத்… தாயைப் போல பொறுமைசாலி.
அவரைக் கேட்டால் தெரியும்.
இந்த மாதிரி அக்காவை அடித்துப் போட்டிருக்கிறானே அந்த மனுஷன்.. ஊகூம்.. மனித உருவில் இருக்கும் ராட்சசன்..
செய்வதையும் செய்துவிட்டு.. இங்கே அக்காவைக் கொண்டு வந்து போட்டுவிட்டு.. கைத்துடைத்துக் கொண்டாரா… பற்களைக் கடித்தாள்.
அந்த ஆளை சந்தித்து நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல நாலு வார்த்தை சொல்ல வேண்டும். இவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்.. எதுக்கு குடும்பம்…
கல்யாணம் செய்து கொள்ளாமல்.. தெருக்காளை மாதிரி ஊர் திரியலாமே.. சே.
அக்காவைப் பற்றி விசாரிக்க வேண்டும். யாரிடம்… டாக்டரைப் பார்த்துக் கேட்டால் என்ன.. அதுதான் சரி.. என்ற எண்ணத்துடன் வெளியே எட்டு வைத்தபோது தான் ஃபிளாஸ்க்குடன் வந்தான் சம்பத்.. சந்தியாவின் மைத்துனன்.
ஏறக்குறைய சௌம்யாவின் வயசுதான். வாட்டசாட்டமாய் இருந்தான்.
அவர்களைப் பார்த்ததும்.. அவனது முகம் கன்றியது.. அவமானத்தில் கூனிக் குறுகினான்.
இப்போதூன் வந்தீர்களா…
என்று விசாரித்தவன் தாயிடம் ஃபிளாஸ்க்கை நீட்டினான்.
சம்பத்… என் அக்காவிற்கு என்ன ஆச்சு என்று நீங்களாவது சொல்வீர்களா.. அக்காவிற்கு எப்படி அடிப்பட்டதுன்னு சொல்லுங்க சம்பத்..
அவனிடம் தடுமாற்றமும்.. தயக்கமும் கண்டு விட்டு அவளே பேசினாள்.
ஏதோ நடந்திருக்கிறது.. உங்க அண்ணாதான் அடித்திருக்க வேண்டும்... அப்படித்தானே..
சௌம்யா.. நான் சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள்.. என் அண்ணா ஒரு மூர்க்கன். கோபம் வந்தால் என்ன செய்கிறோம்.. ஏது செய்கிறோம் என்று தெரியாமல் நடந்து கொள்கிறான். நானும் அம்மாகிட்ட சொல்லிப்பார்த்தேன்.. வேண்டாம் அம்மா.. அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் வைத்துக் கொள்ளாதே… வருகின்ற பெண்தான் கஷ்டப்படுவாள்.. இந்த வீட்டில் நீ ஒருத்தி படுவது போதாதா என்று கூடச் சொன்னேன். அப்படி இல்லைடா. ஒரு பெண்டாட்டின்னு வந்துட்டா அடங்கிடுவான்னு சொல்லி… தான் ஆசைப்பட்ட மாதிரியே பிள்ளைக்கு கல்யாணமும் பண்ணிட்டா அம்மா… ஆனால்… இப்போ தினமும் ஏச்சும் பேச்சும்.. அடியும் உதையும் வாங்கி… அண்ணி அவஸ்தைப் படுவதைப் பார்த்துவிட்டு.. ஏண்டா பண்ணினோம்னு வருத்தப்படுகிறாள்.
சௌம்யா ஏதோ சொல்ல வாயெடுக்கும்போது,
"நான் சொல்வதைக் கேட்டு விட்டு அப்புறம் பேசுங்கள் சௌம்யா.. தப்பை நியாயப்படுத்தவோ… நடந்ததை மறைக்கவோ நான் விரும்பவில்லை… யார் செய்தாலும் தப்பு தப்புதான்… இன்னிக்கு என் அண்ணா புதுசா ஒரு ‘டாபிக்’ எடுத்தான். அண்ணி அவனுக்கு ஏற்ற மனைவி இல்லையாம்.. பெற்றெடுத்தது இரண்டும் பொட்டைகளாகி விட்டதாம்.. அதனால் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிப் போகிறேன்.. உன்னைத் தொலைத்து விட்டு அந்த வேலையைத்தான் செய்யப் போகிறேன் என்று குதித்தான்.. இது கிளைமாக்ஸ் பேச்சு.. அதுக்கு முன் ஏதேதோ வாக்குவாதம்… அண்ணியும் பொறுமையிழந்து ஏதோ பேசிவிட்டாங்க போல் தெரிகிறது. ஆத்திரத்தில் கண்மண் தெரியாமல்.. சொல்லவே கஷ்டமா இருக்கிறது.. என் கிரிக்கெட் ‘பேட்’டால் அண்ணியை ஓங்கி அடித்துவிட்டான் சந்தானம்.. அதனால் அடிப்பட்டதா.. இல்லை விழும்போது அடிப்பட்டதா என்று தெரியாது.. ஏன்னா… நான் அப்போது அங்கில்லை… இருந்திருந்தால் தடுத்திருப்பேன்.. ப்ச்சு.. மண்டையில் பலத்த காயம்.. பயரங்கரமா ரத்தம் வழிந்துபோய்.. மயங்கி கிடந்தவங்களைப் பார்த்து