Eeramana Rojavey...!
By Devibala
4/5
()
About this ebook
Reviews for Eeramana Rojavey...!
2 ratings1 review
- Rating: 4 out of 5 stars4/5it's only a story, why sad ending?.... a. what to say
Book preview
Eeramana Rojavey...! - Devibala
http://www.pustaka.co.in
ஈரமான ரோஜாவே,,,!
Eeramana Rojavey,,,!
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
வி
டிகாலை நாலுமணியை, அலாரம் தன் கிணுகிணு சங்கீதத்தால் அறிவித்தது.
புரண்டு படுத்தாள் சரோஜா.
கண்களை மெல்ல கசக்கிக் கொண்டு, பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். கண்மூடி ஒரு நிமிட பிரார்த்தனையை முடித்துக் கொண்டாள். எழுந்து பாயைச் சுருட்டி வைத்து விட்டு, புடவையை திருத்தியபடி பின் கட்டுக்குப் போனாள்.
சரோஜா தன் காலைக் கடமைகளை முடிப்பதற்குள் அவளைப் பற்றி தெரிந்து கொண்டு விடலாமா?
போன மாசி மாதம் சரோஜாவுக்கு வயது இருபத்தி நாலு முடிந்து விட்டது.
ஐந்தடி நாலங்குலத்தைப் பெற்ற சரோஜா சுமாரான நிறம்தான். ஆனால் அந்தப் பெரிய கண்களும், கூர்மையான நாசியும் அவளை வசீகர வரிசைக்குக் கொண்டு வந்திருந்தன. தளதளப்பான உடம்பு சாலையோர சங்கீதங்களை நிறைய பெற்றுத் தந்ததுண்டு.
பி.காம் முடித்து விட்டு, ஆறுமாதம் போல வேலையில்லாமல் இருந்த சரோஜாவுக்கு அந்த தனியார் நிறுவனத்தில் சேரும் அதிர்டம் பின்னாலேயே வந்து விட்டது. சாதாரண டைப்பிஸ்ட் உத்யோகம்தான், எண்ணூத்திச் சொச்சம் சம்பளம்.
சரோஜா பல் தேய்த்து, முகம் கழுவிக் கொண்டு வந்து விட்டாள். இனி சுருக்கெழுத்துப் பயிற்சி ஆரம்பமாகி விடும். ஓரு மணி வரை கடுமையான பயிற்சி நடக்கும் அது முடிந்து குளியல், சாப்பாடு முடிந்தால் அம்மாவுக்குக் கொஞ்சம் உதவி எட்டரைக்கெல்லாம் கைப் பையோடு புறப்பட்டு விடுவாள். ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்ததும் சுருக்கெழுத்து வகுப்பு, அது முடிந்து இசைப் பயிற்சி...வீடு திரும்பும் போது ஏழரை எட்டுக்கு சாப்பாடு. அது முடிந்ததும் கவிதை எழுதுவாள். பதினொரு மணிவரை புத்தகங்கள் படிப்பாள்.
மறுபடியும் நாலுமணி அலாரம்.
இதோ சுருக்கெழுத்துப் பயிற்சி தொடங்கி விட்டது.
பக்கத்து அறையில் அப்பா எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
ஆஸ்த்மா தொல்லைதான்.
இது குளிர்காலம். விடிகாலை வேளையில் ஆண்டாள் பாசுரம் பக்கத்திலுள்ள கோயிலில் ஆரம்பமாகும் போது, அப்பாவின் ஆஸ்த்மா பக்க வாத்தியம் தொடங்கி விடும்.
சில நாள் எல்லை மீறி விடும். மூச்சுத் திணறல் அதிகமாகி சக்கரவட்டமாக அப்பா சுழலும் கோரக் காட்சிகள் அடிக்கடி நிகழ்வதுண்டு.
சரோஜா நோட் புத்தகத்தை வைத்து விட்டு எழுந்தாள்.
என்னப்பா அதிகமா இருக்கா?
கிச்...கிச் சப்தம் ‘ஆமாம்’ வென்றது.
மார்புக் கூட்டின் ஏற்ற இறக்கம் சற்று அதிகப்படியான அவஸ்தைதான் என்றது. உட்கார முடியாமல் வலக் கையை தரையில் ஊன்றிக் கொண்டு, உடம்பு முழுக்க வியர்வை வழிய அண்ணாந்து மகளைப் பார்த்தார் அப்பா.
ரிக்ஷா கொண்டு வரட்டுமாப்பா? 24 மணி நேர டிஸ்பென்சரிலபோய் ஒரு டெரிஃபிலின் போட்டுக்கிட்டா அடங்குமே!
வே... வேண்டாம்மா!
அந்த வார்த்தையை முடிப்பதற்குள் ஒரு முறை செத்துப் பிழைத்தார்.
சரோஜா உள்ளறைக்கு வந்தாள்.
காயத்ரி...காயத்ரி எழுந்திரு!
புரண்டு படுத்த காயத்ரி முனகலாக, ஏண்டீ தொந்தரவு பண்ற?
என்ன காயத்ரி நீ? அப்பாவுக்கு ரொம்ப முடியலை என்னோட வா, போய் ‘ரிக்ஷா கொண்டு வந்திரலாம்!
காயத்ரி அவசரமாக எழுந்தாள். புடவையை சரி செய்து கொண்டாள். விடியகாலை தூக்கம் விலக்கப்பட்ட எரிச்சல் கண்களில் அப்பியிருந்தது.
அம்மா...அம்மா...
அம்மா சடக்கென எழுந்தாள்.
என்ன சரோ?
அப்பாவுக்குத் திணறல் அதிகமா இருக்கு. கவனிச்சுக்கோ. வாடீ காயத்ரி!
வெளியே இருட்டு அப்பிக் கிடந்தது. இவர்களது செருப்பு சப்தத்தில் நாய்கள் விழித்துக் கொண்டு, ஆக்ரோஷமாக அலற ஆரம்பத்தின.
பேசாம ஒரு பெட்னிலான் குடுத்துட்டு, வென்னீர் வெச்சுத் தந்திருந்தா போதும். அப்பாவுக்கு தினசரி ஆஸ்த்மாதான் தினமும் விடியறதுக்கு முன்னால ஓட முடியுமா? அவசரம்டீ சரோ உனக்கு!
புரியாம பேசாதே காயத்ரி. இன்னிக்கு ரொம்பக் கஷ்டப்படறார்!
‘ரிக்ஷாகாரனை எழுப்பி, அவன் கேட்ட ரேட்டுக்கு ஒப்புக் கொண்டு ‘ரிக்ஷா வீட்டு வாசலில் வந்து நின்ற போது, அம்மா ஏராளமான பதட்டத்தைத் தடவிக் கொண்டு வாசலில் நின்றாள்.
ஏம்மா?
வாயால சுவாசிக்கவும் முடியாம ஒரு மாதிரி ‘குப்குப்’ன்னு சத்தம் வருதுடீ சரோ!
சொல்லும் போது அழத்தொடங்கினாள்.
அப்பாவைத் தாங்கிப் பிடித்து ‘ரிக்ஷாவில் ஏற்றி விட்டு சரோஜா ஏறிக் கொண்டாள். ‘ரிக்ஷா புறப்பட்டது பயப்படாதேம்மா...ஒண்ணுமில்லை!
வாக்கியம் காற்றில் கரைந்தது.
‘ரிக்ஷா ஓடும் நேரம் இந்தக் குடும்பம் பற்றிக் கொஞ்சம் பார்த்து விடாலாமா?
சுந்தரம் அதுதான் சரோஜாவின் அப்பாவுக்கு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா உத்யோகம். ஐந்து அக்கா தங்கைகளோடு பிறந்த சுந்தரத்துக்கு மிஞ்சியது வறுமை தான். ஒவ்வொருவராக கல்யாணம் செய்து சீமந்தம் நடத்தி பிரசவம் பார்த்து...கவலைப்பட்டு கவலைப்பட்டுதான் ஆஸ்த்மாவை வாடகைக்கு வைத்தார். அது இப்போது சொந்த வீட்டுக்காரனாகி விட்டேனோ பார் என்று விலக மறுக்கிறது.