Aasai 60 Varusham
By Devibala
5/5
()
About this ebook
Reviews for Aasai 60 Varusham
1 rating0 reviews
Book preview
Aasai 60 Varusham - Devibala
http://www.pustaka.co.in
ஆசை அறுபது வருஷம்
Aasai Arubathu Varusham
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
முன்னுரை:
வெ
குஜன ரசிகர்களுக்கு கதை சொல்லுவதென்பது ஒரு கலை. ஒரு சமயம் திரு.இந்திரா பார்த்தசாரதி சொன்னது போல ‘மகாபாரதம், இராமாயனம் இரண்டிற்கும் பிறகு யாரும் புதிதாக கதை சொல்லிவிட முடியாது: ஏனெனில், மனிதர்களுக்கு எத்தனையெத்தனை விதங்களில் சந்தோஷமும், கோபமும், சோகமும் ஏற்படுமொ, இவைகளுக்காக எவ்விதத்திலெல்லாம் சம்பவங்கள் நேருமோ அவற்றையெல்லாம் வியாசனும் வால்மீகியு படைத்த இவ்விரு மகாகாவியங்களில் காணலாம். தற்போது நாங்கள் கதை சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் அதே அடிப்படையிலான ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு தான்’ என்றார். உண்மைதான். ஆனாலும் அந்த புதிய ‘மொந்தையை’ படைப்பதும் அவ்வளவு சுலபமான காரியமாக இருப்பதில்லை. அதிலும், மிகக் குறைந்த சொற்களில் கண்முன்னே விரிந்த (புத்தக) சின்னத் திரையில் விரைந்து செல்லும் ரஸமான காட்சிகளே போன்று கதை சொல்லும் பாணி திரு.தேவிபாலா போன்றவர்களுக்கே சாத்தியமாகியிருக்கிறது.
திரு.தேவிபாலா இன்றைக்கு முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக விளங்குகிறார். அனைத்து பத்திரிகைகளும் இவரை கொண்டாடுகின்றன. சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கும் பிடித்தமானவராகிவிட்டார்.
இந்த நாவலில் இந்திய சினிமா உலகத்தின் அவல முகத்தை நிறம் பிரித்து காட்டுகிறார். திடீரென நேரும் திருப்பங்களுடன் கதை தொய்வே இன்றி பறக்கிறது. காதலும்,திகிலும் கைகோர்த்து செல்லும் இக்கதை வாசகர்களுக்கு ஒரு விருந்து.
பதிப்பாசிரியர்
1
ரா
ம்பாபுவை உங்களுக்கு யாரும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
கடந்த பத்து வருடங்களாக தமிழ் திரைப்படத்தில் கொடிகட்டிப் பறக்கும் இயக்குனர்களில் அவரும் ஒருவர்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்து திரைப்பட உலகத்தையே கலக்கியவர்.
அகில இந்திய ரீதியில் பேசப்பட்ட புதுமை இயக்குனர்.
இரண்டு வருடங்களாக ராம்பாபு படமே பண்ணவில்லை. மற்றவர்கள் எல்லோரும் கோடிக்கணக்கான செலவில் பிரம்மாண்டப் படங்களைச் செய்து தொடர்ந்து தோல்வியை தழுவிக்கொண்டிருக்கையில் ராம்பாபு மட்டும் மவுனமாக இருந்தார்.
நீங்கள் ஏன் படம் செய்யவில்லை?
பத்திரிகைக்காரர்களின் கேள்விக்கு நேற்று வரை மவுனம் சாதித்த ராம்பாபு இன்று பேசத் தீர்மானித்துவிட்டார்.
அந்த நட்சத்திர ஓட்டலில் அறை பதிவாகியிருந்தது.
தன் உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர் என அனைவரையும் காலை பத்து மணிக்கு வரும்படி சொல்லியிருந்தார்.
அவர்கள் அத்தனை பேரும் சொன்னபடி வந்து விட்டார்கள்.
ராம்பாபு பத்தரை மணிக்கு உள்ளே நுழைந்தார்.
வணங்கினார்கள்.
மூக்கு வியர்த்து ஒரு தமிழ் நாளிதழ் நிருபரும் வந்துவிட்டார்.
நாம படம் பண்ணனும். அதுவும் உடனடியாக பண்ணனும்!
இணை இயக்குநர் செல்வம் முன்னால் வந்தான்.
யாருக்கு சார்?
என் சொந்த படம்!
பெரிய பட்ஜெட் படமா சார்?
இல்லை! என்னிக்கு நான் பிரமாண்டத்தை விரும்பியிருக்கேன்? சின்ன பட்ஜெட்தான். நல்ல கதை கிடைச்சிருக்கு. முழுக்க முழுக்க புது முகங்கள்!
இப்ப இருக்கிற நிலைமையில போதுமா சார்?
செல்வம் மனதில் பட்டதைக் கேட்டுவிடும் ரகம்.
ராம்பாபுவுக்கு மூக்கு நுனியில் சுருக்கென கோபம் வந்துவிட்டது.
நான் என்னை நம்பறவன்டா! நட்சத்திர நடிகர்களையும் பிரமாண்டக் காட்சிகளையும் நம்பரை! பணத்தை கொட்டி எடுத்தான் படம்னு நினைக்கலை. ஏன் ரெண்டு வருஷமா பேசாம இருக்கேன். செஞ்சாலும் அதிரடியா ஒரு கலக்கு கலக்கணும்னுதான்!
யாரும் பேசவில்லை.
கதை கதாநாயகிமேல போகுது! அதனால நான் நினைத்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கணும்!
சார் ஆல்பம் இருக்கு. காட்டட்டுமா?
பொது ஜனத் தொடர்பாளர் அப்புசாமி பக்கத்தில் வந்தான்.
வேண்டாம்! சுனிமாவில நடிக்கணும்னு வர்ற பொண்ணுங்ககிட்ட வெகுளித்தனம் இல்லை. ஒரு தொழில் களை இருக்கு!
பின்ன எப்படி சார் பிடிக்கிறது?
"நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணா இருக்கணும்!
நடுத்தர வர்க்கம்னா, நடைபாதைவாசிகளுக்கும் கொஞ்சம் மேலே. ஏழ்மை நிறைய இருக்கணும். பதினேழு,பதினெட்டு வயசு அதிக பட்சம். மனதிலே ஒரு ஏக்கம், எதிர்பார்ப்பு இதெல்லாம் முகத்துல தெரியனும். எனக்கு அழகும், எடுப்பான உடம்பும் முக்கியமில்லை ரொம்ப சுமாரா இருந்தால் போதும். ஆனா கண்ணுல ஒரு ஜீவன் இருக்கணும். கண்டுபிடிக்க முடியுமா என் கதாநாயகியை?
யாரும் பேசவில்லை.
நம்ம யூனிட்ல உள்ள எல்லாரும் தேடலாம். ஆனா சீக்கிரம் கொண்டு வரணும்!
எல்லோரும் தலையாட்டினார்கள்.
சரி! நீங்கள்லாம் புறப்படலாம்.இன்னும் நாலஞ்சு நாள் கழிச்சு இதே இடத்துல சந்திக்கணும்.அப்ப நல்ல பதிலை யாராவது சொல்வீங்கன்னு நான் எதிர்பார்கிறேன். கதையை, கதாநாயகி கிடைச்ச பின்னால விவாதிக்கலாம். சரிதானா?
புறப்பட்டுப் போய்விட்டார்.
இணை இயக்குனர் செல்வம் எரிச்சலோடு சிகரெட் பற்ற வைத்தான்.
ஆமாம் சொல்லிட்டுப் போயிட்டாரு! இரண்டு வருஷமா எதுவும் இல்லாம கும்பி சுருங்குது.வெளில வேலைசெய்யவும் மனசு இடம் குடுக்கலை
.
ஏன்? நீ போகவேண்டியதுதானே செல்வம்?
எப்படி காமிராமேன் சார்? பெரிய டைரக்டர்கிட்ட வேலை பார்த்துட்டு வெளில போனா தனியாப் படம் பண்ணணும். இல்லாம, திரும்பவும் இணை இயக்குனராவே போனா என்ன மரியாதை?
நிஜம்தான்!
சிக்கனம், பட்ஜெட்னு சொல்லிட்டு நம்ம எல்லார் வயித்துலேயும் அடிப்பாரு! இவர் மட்டும் பத்து எடத்துல பெரிய பங்களாவும், மூணு காரும் வாங்கியாச்சு! எனக்கொரு ஆசை!
என்ன செல்வம்?
இந்த ஆள் எடுக்கப்போற இந்தப் படம் செமத்தியா அடி வாங்கணும்
.
ஏன் அப்படி சொல்ற?
அப்பத்தான் மத்தவன் அருமை புரியும்!
சரி போலாம?
விவாதத்துக்குன்னு கூப்பிட்டார். ஒரு டீயாவது வாங்கித் தந்தாரா பாரு! கருமி!
கலைந்து போனார்கள்.
செல்வம் கடந்த நாலு வருடங்களாகத்தான் ராம்பாபுவிடம் வேலை பார்க்கிறான்.
முதலில் வெறும் பயிற்சியாளனாக, எடுபிடியாகச் சேர்ந்து வசனங்களை பிரதி எடுக்கும் நிலைக்கு உயர்ந்து படிப்படியாக தனது புத்திசாலித்தனத்தால் முன்னேறி,இன்று இணை இயக்குனராகி விட்டான்.
செல்வம் அடிப்படையில் வசதியுள்ளவன்தான்.
பட்டதாரி.
பெற்றவர்களுக்கு ஒரே மகன்.
பட்டம் வாங்கியதும் இவனுக்கு சினிமாத் துறையில் நாட்டம் ஏற்பட, அப்பாவுக்கு கோபம். ஆனால் அம்மாவின் ஆதரவு!.
விளைவு சென்னைக்கு ரெயிலேறிவிட்டான்.
ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிறான். அவனுக்கே அது சரியாக இருக்கிறது.
பத்திரிகையில் சிறுகதை எழுதப்போக, அது பிரசுரமாகி, அந்த ஆர்வத்தில் தொடர்ந்து எழுதுகிறான்.
பிரபலமான நட்சத்திர வரிசையில் வராவிட்டாலும் அவனையும் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் தமிழ் மக்களுக்குத் தெரியும்.
ஓவியம் நன்றாக வரைவான்.
பலவித வேலைகளில் பணம் தேறுவதால் இரண்டு வருடங்களாக படம் இல்லாவிட்டாலும் செல்வத்தால் சமாளிக்க முடிகிறது.
செல்வம் காத்திருக்கிறான்.
ராம்பாபுவுடன் சேர்ந்து ஒரே ஒரு வெற்றி படம் தந்துவிட்டால்கூட போதும்… வெளியில் குதித்து விடலாம்.
தன் அறைக்கு திரும்பினான்.
சாலிக்கிராமத்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மூன்று வருடங்களாக தங்கியிருக்கிறான்.
வயதான தம்பதிகள். அவர்கள் மட்டும் வாழ்கிறார்கள்.
மாடி அறையை இவனுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள்.அவர்களுக்கு ஒரு மகன் போல எல்லா உதவிகளையும் செல்வம் செய்து வருவதால் அவர் மேல் பாசம் உண்டு அவர்களுக்கு.
தன் அறைக்குள் நுழைந்து, உடைகளை மாற்றி லுங்கிக்குள் நுழைந்தான்.
அந்த அம்மா மேலே வந்தாள்.
செல்வம்! அப்பாவுக்கு உடம்பு முடியலை. நீ மருந்துக் கடையில் சொல்லி ஏதாவது வாங்கிட்டு வர்றியா?
சரிம்மா!
இந்த பணம்!
ஏம்மா… உங்களுக்கு வடநாட்டுல மட்டுமில்லாம அயல்நாட்டுலகூட மகன், மகள் எல்லாம் இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் ஏன் தனியாக இப்படி வயசான காலத்துல கஷ்டப்படணும்?
அப்பா பிடிவாதம். யார்கிட்டேயும் போய் இருக்க விரும்பல அவர். இது அவர் வருமானத்துல கட்டின வீடு. ஓய்வு ஊதியம் வருது. சாகற வரைக்கும் யார் காலடிலேயும் இருக்கக் கூடாதுன்னு பிடிவாதம்.
நல்ல கொள்கைதான்.
"நீ தான் இருக்கியே எங்க பிள்ளையா! அதுபோதும்.ரெண்டு நாளா வேலைக்காரி வரலை! காரணமும் சொல்லிவிடலை. என்னால முடியலை.