En Manasu Un Madiyil
By Devibala
4/5
()
About this ebook
Reviews for En Manasu Un Madiyil
8 ratings0 reviews
Book preview
En Manasu Un Madiyil - Devibala
http://www.pustaka.co.in
என் மனசு உன் மடியில். . . !
En Manasu Un Madiyil… !
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
‘நை
ஷ்டிக பிரம்மசாரி’னா அர்த்தம் தெரியுமா உமா?" கண்களைக் குறும்பாகச் சிமிட்டிக் கொண்டு கேட்டாள் வைஜயந்தி.
'நைட்டுல மட்டும் பிரம்மச்சாரியா?"
உமா அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டதும், குபீரென்று எழுந்தது சிரிப்பு.
'அடிப்பாவி. ‘பலான’ சமாச்சாரம் இல்லைடி இது. சுத்த பிரம்மச்சாரி. ஆம்பளைல அக்மார்க் கற்புடீ. "
மறுபடியும் சிரிப்பு.
'சரி. அப்படி யாராவது உண்டா என்ன?"
'அப்படிக் கேளு ராசாத்தி. நம்ம காலேஜ்ல எம். ஏ. பிலாஸபினு ஒரு படிப்பு உண்டு தெரியுமா?அந்தவகுப்புல எட்டு பெண்களும்,பன்னண்டு ஆண்களும் படிக்கறது தெரியுமா? அதுல கீர்த்தனா பக்கத்துல,இந்திராகாந்தி ஆர்ட்ஸ் காலேஜ்ல,எம். ஏ. ஃபிலாஸபில பன்னண்டு ஆண்கள்ள ஒருத்தர்தான் நம் கதாநாயகன்.
படபடவென கைதட்டல்.
'ஹேய் எனக்குத் தெரியும்!" வடிவு கை தூக்கினாள்.
'என்ன தெரியும்?"
'அந்த கதாநாயகனை!"
'எல்லோருக்கும் சொல்லு பார்க்கலாம்!"
'பேரு மோகன். உயரம் 175 சென்டிமீட்டர்,எடை அறுபது கிலோ,மார்புச்சுற்றளவு,விரிவடையும் போது 85-90. "
'அடி நிறுத்துடி!மார்புச் சுற்றளவோட நிறுத்திக்கோ,ஆள் அவனேதான்!"
'சரி,எதுக்கு இந்த தகவல்?"
'அந்த ஜடத்தை யாராவது மயக்க முடியுமா?நம்ம எட்டு பேர் இருக்கோம். நமக்குள்ள ஒரு பந்தயம்!"
'நான் தயாராயில்லை!"என்ற குரல் நாலு திசைகளிலிருந்து வந்தது.
'ஸோ நாலு பேர்தானா?"
'நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்றேன்"என்றாள் சுமதி.
'எனக்கு பணவசதி பத்தாதம்மா!" பிரதிபா.
'அடி உன்னை ஒட்டல்ல ரூம் புக் பண்ணவா சொன்னாங்க?"
'இந்த காலத்து காதலர்கள் மோசம்டீ. காதலியோட மணிபர்ஸை காலி செய்துட்டுதான் மறுவேலை. காலம் மாறிபோச்சு!"அட்டகாசமான சிரிப்பு எழுந்தது.
'சரி. மைதானத்துல இறங்க போறது யாரு?"
'நான் ரெடி!" வைஜெயந்தி முன்னாள் வந்து நின்றாள்.
'நானும் தாயார்!" இது உமா.
'வெரிகுட். எ குட் ட்ரயாங்கிள். இந்தி சினிமா மாதிரி வரப்போகுது. ஒரு காதலன்,ரெண்டு காதலி. சக்களத்தியாகாம பாத்துக்குங்கடீ. . . நைஷ்டிக பிரம்மச்சாரி ரகசியமாக ரெண்டு வண்டிகளையும் ஒட்டப்போறான். ஜாக்கிரதை!"
'நாங்க என்ன கல்யாணமா செஞ்சுக்கப் போறம்?மனசுல காதலை விதைச்சு,அவனை தேவதாஸக்கிட்டு விலகிருவோம். சரிதானா உமா?"
'கரெக்ட்!"
'சரி எப்ப ஆரம்பம்?"
'இன்னும் அரை மணி நேரத்துல. ஃபைனல் பெல் ரிங் ஆன உடனே