Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mandhira Viral
Mandhira Viral
Mandhira Viral
Ebook90 pages46 minutes

Mandhira Viral

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai. He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu. Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
LanguageUnknown
Release dateMay 2, 2016
ISBN6580100700020
Mandhira Viral

Related categories

Reviews for Mandhira Viral

Rating: 4 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mandhira Viral - Indira Soundarrajan

    http://www.pustaka.co.in

    மந்திர விரல்

    Mandhira Viral

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    ஒவ்வொரு நாளும் பொழுதிலும் ஆயிரமாயிரம் வினாடிக் கழிவிலும் நட்சத்திர திதி கர்ம ஹோரைகள் நாழிகைகள் தங்களுக்கே உரிய சக்தியோடுஅந்த பொழுதில் பயணித்த வண்ணமுள்ளன. இதில் சர்வாமிர்த நாழிகைமிகச் சரியாக 12 நொடிதான்.

    இந்த 12 நொடிப் பொழுதை ஒருவன் கண்டறித்து அவ்வேளையில் தொழில் தொடங்குவானாயின் அவன் குபேர விலாசம் அடைவது நிச்சயம். அதே போலத்தான் அர்த்தஜாமத்தில் வரும் ராஜஸ வினாடி இதில் நிறைய நேர் நட்சத்திர ஆணும் பெண்ணும் புணர்ந்து பெருக்கிய சுக்கிலம் உயிர்ப் பிணைவு கொண்டு கருப்பையை அடைய கருத்தரித்த அந்த பெண்ணே தேவாம்சங்களுக்கு உள்ளாவாள்.

    எனில் ஜனிக்கும் அந்தக் குழந்தை…?

    அது பாப ராசிச் சக்கரங்களையே பந்தாக உதைத்து விளையாடும். அதன் விரல்கள் மந்திரவிரல்கள்.

    அது பட்டால் இறந்து பட்டதும் உயிர் பெறும்!

    -அமிர்தகடிகை

    ந்த பைத்தியக்கார பெண்ணின் முகத்தில் வட நாட்டு ஜாடை நிறையவே தெரிந்தது.

    ஆடை, துணியெல்லாம் கிழிந்து ஐக காலெல்லாம் அழுக்கோடு பார்க்கஅசிங்கமாக தெரிந்தாலும் இன்னொரு பக்கத்தில் அவளது இளமை அனைத்தையும் மீறி அவளை அழகானவளாக காட்டிக் கொண்டிருந்தது.

    அதிலும் மார்பின் மையத்து கிழிசலில் அவளது தனங்கள் அவ்வப்போது வெளியே பிரண்டு வந்து அவளைப் பார்ப்பவர்களில் இளசுகளை மிரட்சியடைய வைத்தது. அந்தத் தெருவில் அவள் ஒரு வாரமாக புரியாத பாஷை பேசியபடி சுற்றிக் கொண்டிருந்தாள்.

    தெரு முக்கில் ஒரு பிள்ளையார் கோயில் - கோயிலை ஒட்டி ஒரு அரசமரம் அந்த மரத்தடியில் தான் இரவு வேளையில் படுத்துத் தூங்குகிறாள்.

    யார் எதை கேட்டாலும் சிரித்து வைக்கிறாள்.

    தமிழே புரியவில்லையோ என்னவோ?

    வயது இருபது இருந்தால் அதிகம்.

    தற்சமயத்துக்கு அவளை நோட்டமிடுவதும் ரசிப்பதும் தான் மாணிக்கத்துக்கு வேலையாக இருக்குகிறது.

    தெருவில் குடியிருக்கும் ஹெட்கிளார்க் சிவலிங்கத்தின் மகன்.

    டிகிரி முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறான்.

    சிகரெட், கஞ்சா என்று எல்லா சனியனும் உண்டு. இது இருந்தால் வீணாப் போன ஒரு நட்பு வட்டமும் இருந்தாக வேண்டுமே… ஜாபர், மாரிமுத்து, காசி என்று அவர்களும் இவனைப் போலத்தான்.

    நால்வருக்குமே இப்போதைக்கு அந்த பைத்தியக் காரி விருந்தளித்துக் கொண்டிருக்கிறாள் என்று தான் சொல்லவேண்டும்.

    மரத்தடியில்உட்கார்ந்து கொண்டு எங்கோ பார்த்தபடி படுத்திருக்கும் அவளை பக்கவாட்டில் பார்க்கிறார்க்கிறார்கள்.

    மேலே சுத்தமாக துணியில்லை. நடுபக்க மார்பு அப்பட்டமாகத் தெரிகிறது. கீழேயும் அழுக்குப் பாவாடை தொடைவரை ஏறியிருக்கிறது.

    பார்க்க பார்க்க என்னவோ செய்கிறது.

    மாரி… கிழங்கா கிடக்கறாடா விடக்கூடா துடா…

    டேய்… பகல் பொழுதுடா. அக்கம் பக்கம் பார்த்துப் பேசு… நேரா பார் செட்டியார் நம்மளையே பாக்கறதை

    அந்த ஆள் நம்மளைப் பாக்கலடா. அவனும் இவளைத்தான் ரசிக்கிறான்.

    அது சரி… பார்ட்டி படிவாளா?

    படிவாளாவா… பைத்தியக்காரிடா இவ, பத்தினின்னு நினைச்சுட்டியா, விடவே கூடாது…

    பேசியபடியே அவளைப் பார்க்கின்றனர். அவளும்பார்க்கிறாள். சிரிக்கிறாள். கபடு சூதில்லாத சிரிப்பு அப்பொழுது ஒரு பெண் அந்தப்பக்கமாக குடத்தில் தண்ணீருடன் தாண்டிப் போகிறாள். அவள் கண்ணிலும் அவள் ரவிக்கைக் கிழிசல் படுகிறது. அவள் மனதை என்னவோ செய்கிறது. பார்வை மாணிக்கம் குரூப் பக்கமும் திரும்புகிறது. பார்வையா அது…நெருப்பு கிட்டே நெருங்கி மேலாக்கை சரி செய்கிறாள். மாணிக்கம் குரூப்பை பார்த்து எழுந்து போங்கடா அந்த பக்கம், பாவம்டா இந்த பொண்ணு – உங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சி இல்லை அவர்கள் பதில் பேசாமல் எழுந்து நெளிந்தபடியே அகலுகின்றனர்.

    அவள் இப்பொழுது அந்த பைத்தியக்கார பெண்ணைப் பார்த்து கேட்கிறாள்.

    யாரும்மா நீ… இப்படியா வாலிபப்பசங்க எதுர படுத்திருப்பே? அவள் பதிலுக்கு சிரிக்கிறாள். தலையை வருக்கு வருக்கு என்று சொறிகிறாள்.

    "நான்

    Enjoying the preview?
    Page 1 of 1