Maayap Punnaigai
4.5/5
()
About this ebook
Related categories
Reviews for Maayap Punnaigai
2 ratings0 reviews
Book preview
Maayap Punnaigai - Indira Soundarrajan
http://www.pustaka.co.in
மாயப் புன்னகை
Maaya Punnagai
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
வி
டிந்து விட்டது.
கண் விழித்த நந்தகுமாருக்கு ‘அடடா… தூக்கம் கலைந்து விட்டதே’ என்றிருந்தது.
இரு கைகளையும் பரபரவென்று தேய்த்துவிட்டபடி ரேகைகளை ஒரு பார்வை பார்த்தான்.
கண்டவர் முகத்தில் விழிப்பதைவிட இப்படி உள்ளங்கையை பார்ப்பது நல்லது என்று அவனது பாட்டி மிகச்சிறிய வயதிலேயே சொல்லியிருந்தாள்.
பின்னாளில் அவன் மனம் கவர்ந்த நடிகர் ஒருவரும், எழுத்தாளர் ஒருவரும், அரசியல்வாதி ஒருவரும், ஒரு இந்தியப் பிரசித்திபெற்ற விஞ்ஞானி ஒருவரும்கூட ‘விடிந்ததும் உள்ளங்கையைப் பார்த்துவிட்டுத்தான் மற்றவைகளைப் பார்ப்போம்’ என்று அவரவர்களுக்கான பேட்டிகளில் சொன்னதையெல்லாமும் அவன் படித்திருந்தான்.
எனவே அப்படி உள்ளங்கையைப் பார்த்தால் தானும் ஓர் ஊரறிந்த புள்ளியாகிவிடலாம் என்று நம்பியோ, இல்லை அதை சோதித்த பார்க்கவோ அன்று முதலே அவனும் உள்ளங்கையைப் பார்ப்பதையே ஒரு வழக்கமாகிக் கொண்டுவிட்டான்.
சரி… அதனால் அவன் ஊரறிந்த ஒரு புள்ளியாக ஆனானா என்றெல்லாம் கேட்டுவிட வேண்டாம். அதற்காக முயற்சிகளில் தான் அவன் இருக்கிறான்.
நந்தகுமார் ஒரு சராசரிப் பட்டதாரிதான்.
அடித்துப் பிடித்து இடம் வாங்கி ஒரு டாக்டராகவோ எஞ்ஜினியராகவோ அவனால் முடியவில்லை.
எல்லாவற்றிலும் ஐம்பது அறுபது என்று மார்க்குகள் வாங்கி செகண்ட் கிளாஸில் பாஸ் செய்ததே பெரிய விஷயமாகிவிட்டது அவனுக்கு.
தொண்ணூறு மார்க்குகளுக்கு மேல் வாங்கியவர்களே ‘தில்லாலங்கடி தில்லாலோ’ என்று வேலைக்காக சீரழியும் போது ஐம்பதும் அறுபதும் சோறு சாப்பிட்டு ஜீவிப்பதே பெரிய விஷயம் தானே?
அதிலும் நந்தகுமார் இன்று ஒரு ஃப்ரீ லான்ஸ் பத்திரிகையாளன்! வித்தியாசமான செய்திகளுக்காக அலைந்து திரிந்து பத்திரிகைகளுக்கு அனுப்பி மாசம் மூவாயிரம் நாலாயிரம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பல சமயங்களில் வருவது அந்த மாதத்தின் பதினைந்து நாள்செலவுக்ககூட தாங்கமாட்டேன் என்கிறது. நல்லவேளை கல்யாணம் பிள்ளை குட்டி என்று குடும்பக்குழியில் விழுந்துவிடவில்லை.
அப்படி ஆகியிருந்தால் அவனது நண்பன் சங்கரராமனைப் போல் கன்னாபின்னாவென்று பொய் சொல்லி கண்டதையும் எழுதி ஜீவிக்க வேண்டி வந்திருக்கும். நந்தகுமார் அப்படி இல்லை. ஆதாரபூர்வமான செய்திகளைத்தான் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புகிறான்.
உறங்கிக் கண் விழித்த நிலையில் அவனுக்குள் இன்று எந்த மாதிரி செய்தி கிடைக்கப் போகிறதோ தெரியவில்லையே என்கிற கவலை!
நேற்றுதான் இந்தியா வந்திருந்த ஒரு அமெரிக்கப்பெண், ஊரைச்சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் அவளுக்கு கைடாக இருந்து செயல்பட கைலாபதி என்கிற இளைஞனிடம் மனதைப் பறிகொடுத்து அவனை ரிஜிஸ்தர் மேரேஜ் செய்திருந்தாள்.
‘காதலுக்கு கண் இல்லை’ என்கிற கருத்துக்கு ஏற்ற விஷயம் வசமாய் வந்து மாட்டியது. எழுதி ஃபேக்ஸ் செய்திருந்தான்.
பத்திரிகை எடிட்டரும் பதிலுக்கு போன் செய்து ‘நல்ல விஷயம்யா..இதே மாதிரி வித்தியாசமாகவே விஷயத்தைத் தேடு’ என்று பாராட்ட வேறு செய்து விட்டார்.
அதுவே பெரிய குளுகோஸ் ஆகிவிட்டது.
இன்று அந்த மாதிரி ஏதாவது செய்தி மாட்டுமா?
கேள்வியோடு எழுந்த மனிதர்கள் காலையில் செய்தாக வேண்டிய சகலத்தையும் செய்து முடித்தான்.
அவன் வரையில் டாய்லெட்டில் போய் உட்கார்ந்தபடி பேப்பர் வாசிப்பது என்பது உலகத்தின் உன்னதமான இன்பங்களில் சேர்க்க வேண்டிய ஒரு இன்பமான விஷயம்.
சுத்தமாக முக்கால் மணிநேரம்!
பேப்பர் படித்த மாதிரியும் இருக்கும்வயறும் சுத்தமாகி மனது பரம சுகத்தில் மிதக்கும்.
எத்தனை பெரிய மனிதனாய் இருந்தாலும் தனிமையில் அவர்களிடம் சில கிறுக்குத்தனங்கள் இருக்கும்.
அதில் ஒன்று மூத்திரம் பெய்யும்போது பெய்யுமிடம் சுவரோரமாக இருந்தால் அதில் பீறிடும் மூத்திர நீரால் தன் பெயரை எழுதிப் பார்ப்பது.
நந்துவும் அப்படித்தான்.
அதே நாலுபேர் இருக்குமிடம் என்றால் மிக இறுக்கமாய் மாறிப் போவான். எது எப்படியோ ஓடும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டேஇருக்க வேண்டியிருக்கிறது. நிம்மதியாய் உட்கார்ந்து ஒரு நாள் மூச்சுவிட முடியவில்லை.
வயதும் இருபத்து ஒன்பதைக் கடந்து முப்பதுக்குள் பிரவேசித்து ‘வாழ்வில் இன்னம் நீ செட்டில் ஆகவில்லை நந்து’ என்று சதா பிரச்சனைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவன் வயதுதான் ஒரு பிரபல சினிமா இயக்குநருக்கு…லான்சர்காரென்ன…செல்போனென்ன…? லட்சம், கோடி என்று ஜமாய்க்கிறார். நினைத்தாலே நந்துவுக்கு தீக்குச்சியில்லாமலே வயிறு எரியும்.
இந்திய அரசாங்கம் சத்தியமாய் எல்லோருக்கும் பொதுவாகத்தான் நாசிக்கில் நோட்டு அடிக்கிறது. ஆனால் அதை சிலர் மட்டும் கோணிச்சாக்கில் வாரி அள்ளுகிறார்கள். சிலருக்கு நாலணா எட்டணாகூட கிடைப்பதில்லை.
இது எதனால் என்று நந்தகுமார் அடிக்கடி கேட்டுக் கொள்வான்.
அவனது சகா சங்கரராமன் வேடிக்கையாய் அதற்கு பதில் சொல்வார்.
‘எல்லாத்துக்கும் சுழிவேணும் நந்து. பிச்சைக்காரங்ககூட தினம் அம்பது நூறு பாக்கறாங்க. நம்மப்பாரு…கழுவத் தெரியாதவனையெல்லாம் பேட்டி எடுத்து பீறாய