Jenma Jenmamai
5/5
()
About this ebook
Related categories
Reviews for Jenma Jenmamai
5 ratings0 reviews
Book preview
Jenma Jenmamai - Indira Soundarrajan
http://www.pustaka.co.in
ஜென்ம ஜென்மமாய்
Jenma Jenmamai
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அணிந்துரை
பூர்வ ஜென்மம் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அது ஒரு புதிரான விஷயம்! அதை மறுத்து ஒதுக்கி விடுவது சுலபம். ஆனால் ஒப்புக்கொண்டு சிந்திப்பதுதான் கடினம். பொதுவில் இந்த மாதிரி விஷயங்கள் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதும் முற்போக்கானவர்கள் செயலாக இருக்க முடியாது என்கிற ஒரு கருத்து முற்போக்கு. பிற்போக்கு என்று பேசிக் கொள்ளும் ஒரு கூட்டத்திடம் உள்ளது. அவர்களுக்குப் பயந்து நான் இம்மாதிரி விஷயங்களை மறுதலிக்க விரும்பவில்லை. இந்த ஜென்ம ஜென்மமாய் நாவல் பூர்வ ஜென்மம் குறித்த என்னுடைய ஒரு ஆய்வின் வெளிப்பாடு. நடுநிலையோடு இந்த நாவலை நான் எழுதியுள்ளேன். படித்து முடித்த 10 ஆவது நிமிடமே எனக்கு போன் செய்து பலர் பாராட்டி விட்டனர்.
அடிப்படையில் மறுபிறவிகளில் நம்பிக்கை உள்ளவன் நான் என்பதால், இந்தாவலில் அந்த சார்பு நன்றாகவே வேலை செய்துள்ளது. இது நான் கேள்விப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தின் எதிரொலி. பத்திரிகைச் செய்தி ஒன்றில் படித்தேன். இக்கதையை நான் தொலைக்காட்சியில் தொடராகவும் அளித்தேன். இதில் உள்ள இன்னொரு நாவலான பேய் பிசாசு பூதமும் நான் அனுபவித்து எடுதிய இன்னொரு நாவல். நன்றாகவே அந்த விஷயத்தையும் அலசினேன் என்று கூறுவேன். குதைக்காக ஒரு திகைப்பூட்டும் முடிவு வேண்டும் என்பதற்காக ஒரு எழுத்தாளனால், அந்த கதைப் போக்கை ஒட்டி நான் எடுக்கும் கதையின் முடிவுகளோடு எனக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடு இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.
இதைப் புரிந்து கொண்டு என் நாவல்களைப் படிப்பவர்களுக்கு நன்றாகவே பொழுது போகும். அதே சமயம் உள்ளுக்குள் கேள்விகளால் வேள்விகளைச் செய்யும் ஒரு உத்வேகமும் எழும்.
லண்டனில் இருந்து ஒரு வாசகர் ஒருநாள் தொலைபேசியில் என்னுடன் பேசும்போது, சார் நீங்க மட்டும் இந்த மண்ணுல (லண்டன்) பிறந்திருந்தா, உங்க படைப்புகளுக்காக நீங்க உலக பணக்காரர் வரிசையில் சேர்ந்திருப்பீங்க. ஒவ்வொரு படைப்புமே அவ்வளவு கேள்விகளை எழுப்புவதோட சிந்திப்பு, சிலிர்ப்புன்னு இரண்டையுமே தருது
அவர் உணர்ச்சி மிகுதியில் மிகையாகப் பேசியிருக்கலாம். ஆனால், என் வாசகர்கள் எனப்படுபவர்கள். பெரும்பாலும் இப்படித்தான் உணர்ச்சி வயப்படுகிறார்கள். எனக்கு இதில் ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் இதனைத் தக்கவைத்துக் கொள்ள நான் பெரும்பாடு படவேண்டியுள்ளது.
அன்புடன்
இந்திரா சௌந்தார்ராஜன்
1
"வி
ஞ்ஞானம் பூர்வ ஜென்மம் பற்றிய செய்திகளை அப்பட்டமாக மறுக்கிறது. ஆனால் சிலருக்கு ஏற்படும் அனுபவங்களைப் பார்க்கும் போது, விஞ்ஞானம் என்ன பெரிய விஞ்ஞானம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கல்லூரி சுற்றுலாவில் கலந்து கொண்ட ஒரு பெண், சுற்றுலா செல்லும் வழியில் ஒரு கிராமத்துக்குள் இருக்கும் ஏரி, கிணறு, கோயில் இவைகளைப் பற்றித் துல்லியமாக தகவல் தந்தாள். அந்தக் கிராமத்துக்குள் அப்பொழுதுதான் அவள் நுழையப் போகிறாள்.
முன்னதாக அருகே இருந்து பார்த்தது போல அவள் தந்த தகவல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. அது எப்படி சாத்தியம் என்று கேட்டுக் கொண்ட போது கிட்டிய விடையில்தான் பூர்வ ஜென்மம் என்கிற மர்மமான விஷயம் ஒளிந்திருந்தது!’
அது ஒரு அழகிய படகு கார்! ஆப்பிள் நிறத்தில் காற்றைக் கிழித்தபடி பயணித்துக் கொண்டிருந்தது. காரின் டிரைவிங் சீட்டில் சந்திரசேகர் என்கிற பிரபல தொழிலதிபர். அவருக்கு இடப்பக்கத்தில் சந்திர சேகரின் உயிர் நண்பரான ராம்நாத்.
இருவருமே ஐம்பது வயதைத் தாண்டப் போகிறார்கள். அதற்கு அடையாளமாக காதோரமாக கிருதாவில் மட்டும் நரை. செல்வந்தர்கள் என்பதால் விரல்களில் விதம்விதமான மோதிரங்கள். சந்திரசேகர் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்புரிபவர். ஆனாலும் ஆன்மிகத்திலும், நம் நாட்டு பண்பாடு கலாச்சாரத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர். அதனாலேயே அவர் நெற்றியில் எப்போதும் ஒரு விபூதிப் பட்டையும், கழுத்திலும் ஒரு ருத்ராட்சம் கட்டிய மாலையும் இருந்தது.
காரின் டேஷ் போர்டில் ஒரு மினி சிவலிங்கம்! அதன் முன் ஒரு சீரியல் பல்ப் நிரந்தரமாக எரிந்தபடி இருந்தது. அடிக்கடி அந்த சிவலிங்கத்தைப் பார்த்து கன்னத்தைத் தொட்டுக் கொண்டே தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.
அவரின் அந்த செய்கை ராமநாத்துக்குச் சிரிப்பைத் தான் வரவழைத்தது. அதற்காக பெரிதாகச் சிரிக்காமல் அமட்டலாக சிரித்துக் கொண்டார். அப்படியே சந்திரசேகரைப் பார்த்து, சந்திரா… கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்கியேடா…
என்று ஒரு விமர்சனமும் செய்தார்.
நீ என்ன சொல்றே… மாறிகிட்டே இருக்கணும்கறியா?
சந்திரசேகரும் லாவகமாக கார் ஓட்டியபடி புன்னகை மாறாமல் எதிர் கேள்வி கேட்டார்.
நான் உன் பக்தியைச் சொன்னேன். சின்ன வயசுல பள்ளிக்கூடம் போகும் போது வழியில மொட்டைப் பிள்ளையார் கோயில் பார்த்தா கன்னத்துல போட்டுக்குவே. இப்ப காருக்குள்ள போட்டுக்கறே… மொத்துத்துல எப்ப பார் கன்னத்துல போட்டுக்கறே… அதுல நீ மாறவேயில்லை. அதைத்தான் சொன்னேன்.
என்றார்.
பக்திதாண்டா என்னோட சக்தி. இது தெரியாதா உனக்கு.
"பக்தியை ஒரு எனர்ஜியா… ஐ மீன் சக்தியாக நினைக்கிற