Aairam Jannal Maaligai
4.5/5
()
About this ebook
Related categories
Reviews for Aairam Jannal Maaligai
4 ratings0 reviews
Book preview
Aairam Jannal Maaligai - Indira Soundarrajan
http://www.pustaka.co.in
ஆயிரம் ஜன்னல் மாளிகை
Aairam Jannal Maaligai
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
ஜில்லென்ற காற்று!
கம்பம் பள்ளத்தாக்கின் பசுஞ்செடிகளையும், மூங்கில் மரங்களையும் தழுவி வரும் காற்றென்றால் அதன் மகத்துவமே தனி.
குறிப்பாக வண்டிப்பெரியார் சாலையில் தென்னை மற்றும் பாக்குத் தோட்டங்களை ஒட்டிய ஐந்து ஏக்கரா சமவெளியில் கம்பீரமாக தெரியும் ஆயிரம் ஜன்னல் மாளிகையில் முற்றத்தில் அமர்ந்து அந்தக் காற்றின் வீச்சை சுகிக்கத் தெரிய வேண்டும்.
ஒரு ஈஸிச்சேரை போட்டுக் கொண்டு அதில் சாய்ந்தபடி திறந்த மார்போடு இந்த காற்றை சுகிப்பதில் ஆனைமுடியார் முதலானவர்.
சமயங்களில் பேயின் குரல்போல் ‘விஸ் விஸ்’ என்று சப்தமிட்டபடி குசலம் போட்டு காற்று வீசும். ஆழ்ந்து சுவாசித்தால் மெல்லிய மூலிகை வாசம் மூக்கை நிரடும்.
முற்றத்து சாளரம் வழியாக பார்வையை விட்டால் பச்சைக் கம்பளமாய் பள்ளத்தாக்கின் விரிவு. பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
உயரமான ராணுவ வீரர்கள் தலையில் குஞ்சரம் தரித்துக்கொண்டு சரியான இடைவெளியில் அணிவகுத்து நின்றால் பார்க்க எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது தென்னை மற்றும் பாக்குத் தோப்பின் மரங்கிளின் வரிசை. தோப்பில் ஆயிரம் மரங்கள் தேறும். அவ்வளவும் ஆனை முடியாரின் சொத்து.
அது மட்டுமா?
பள்ளத்தாக்கின் விரிவே அவருடையதுதான். சொத்து மதிப்பை குத்துமதிப்பாக கணக்கிட்டதில் இருபது கோடியை அது தாண்டிவிட்டதாக அவரின் கைத்தடி கஜபதி கூறியபோது ஆனைமுடியார் தன் மீசையை நீவிவிட்டுக் கொண்டதில் அநியாயத்துக்கு ஒரு பணக்கார கெத்து.
சாதாரண கெத்தல்ல… பரம்பரை கெத்து. ஒண்டிப் புலியார், பஞ்சவர்ணத்தார், காட்டுமுனியார் என்கிற ஒரு நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சிதான் ஆனைமுடியார்.
-அவ்வளவு பேருமே கிரீடம் தரிக்காத ராஜாக்கள். ஊரே வியக்க வாழ்ந்து மறைந்தவர்கள்.
இதில் காட்டு முனியார் மட்டும் சற்றும் விதிவிலக்கு. பெண்கள் விஷயத்தில் சரியான இந்திரன். ‘ஆயிரம் பெண் பார்த்த அபூர்வசிகாமணி’ என்கிற பட்டத்திற்குத் தகுதியானவர்.
அவரது பேரன் ஆனைமுடியாரும் அப்படித்தான். அது என்னவோ எந்தப் பெண்ணைக் கண்டாலும் இவருக்குள் ஆசைபாலாய் பொங்கி விடுகிறது.
வயது வரம்பு மீறிய ஆசை. ஐம்பது வயதாகிய பிறகும் அவருக்கு உடம்பு ஒத்துழைப்பு அதைவிட பெரிய விஷயமல்லவா?
-ஆயிரம் ஜன்னல் மாளிகையில் இவரின் இந்த சல்லாபத்திற்கென்றே ஒரு தனி அறை இருக்கிறது. உள்ளே சுவரில் கிளுகிளுப்பான படங்களின் தொங்கல்கள்.
நல்ல சந்தனத்தால் கடைந்த நாற்காலியின் கால்கள் கூட, புட்டம் வரை மேலேறிய பெண்ணின் அழகிய கால்களைப் போலவே செதுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த நாளைய தவமணி தேவியின் படத்திலேயே இருந்து இந்த நாளைய பூஜாபட் வரை அந்த அறையில் தொங்குவது மகா ஆச்சரியமான ஒரு ரசனைக் காட்சி.
"குட்டிகளா… பிரம்மன் பலே ஆசாமி குட்டிகளா… எப்படித்தான் இங்க அங்கங்களை இப்படி லட்டு லட்டா படைச்சானோ? அம்புட்டும் ஒரு அளவா அமைப்பா அமைஞ்சு துணிக்குள்ளே மறைஞ்சு… நினைக்கையிலேயே இந்த தேவன் மனசுல கிளுகிளுப்பை பீச்சுதே…
-படங்களைப் பார்த்து வாய்விட்டுப் புலம்புவார். கஜபதி வருவான்.
கடவுளே! பஷ்பம் வந்துருக்கு…
என்பான். புஷ்பம் என்றால் பெண். கஜபதிக்கு அப்படிச் சொல்லித்தான் பழக்கம். அவர் அவனுக்கு கடவுள். அவனும் அப்படி அழைத்தே பழகிவிட்டான். வேறு எப்படிக் கூப்பிட்டாலும் அது அவரை நிறைவாக கூப்பிட்ட மாதிரி இல்லை என்பது அவன் தீர்மானம்.
இதோ இன்றும் கஜபதி புஷ்பம் சகிதம்… கடவுளே… புஷ்பம் வந்துருக்கு…
ஆனைமுடியார் காற்றின் சிலாகிப்பில் இருந்து விடுபட்டு திரும்புகிறார். கஜபதியின் பின்னால் பெண் ஒருத்தி. பள்ளத்தாக்கின் மலைஜாதிக் கூட்டத் தவளைப் போல தெரிகிறாள். அள்ளுக்கொசுவம் உடுத்தி ரவிக்கை தரிக்காமல் சேலை முந்தானையை மூடியபடி தலைகுனிந்து நிற்கிறாள்.
உச்சந்தலையில் மலை ரோஜா ஒன்று. "ஆருவே இது புதுசா…?
தொழிலுக்கு மட்டுமில்ல, கடவுளே… உங்களுக்கும் இவ புதுசுதான். பேர் முத்துமணி.
மலைக்குடிச்சியா…?
ஆமாம் கடவுளே. இவ புருசனைத்தான் பச்சைக் கூமாச்சி மலை புலி அடிச்சிப்புடிச்சு. அதுல இருந்து நிர்க்கதி. மூங்கில் வெட்டிப் பொழைக்க வந்தவகிட்ட உங்க ஆசை பத்தி சொன்னேன். சரின்னு…
-கஜபதி இழுப்புக்கு இசைவான போக்கு அந்தப் பெண்ணிடம். அப்பொழுதே கிளம்பி அறைக்குள் நுழையத் தொடங்கினாள்.
ஆரும் பார்க்கலைதானே?
பார்க்கலை கடவுளே…
சந்திரசூடமணி ரொம்ப புலம்பிக்கிட்டிருக்கறதா கேள்விப்பட்டேன். அதான்…
அவுக கண்ணுல படாமதான் கூப்பிட்டாந்துருக்கேன்.
நல்லது… நீ போ…
-கடவுளாகிய அவரின் ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு சிறிது தொலைவு நடந்த கஜபதி உடனே திரும்பி வந்தான். தலையைச் சொறிந்தான்.
என்னடா?
ஒரு முக்கியமான விஷயம். போடிநாயக்கனூருக்கு ஒரு ஜோசியர் வந்துருக்காரு…
சரி அதுக்கென்ன இப்போ…
நம்ம நாட்டுப் பிரதம மந்திரிக்கே ஜோசியம் சொன்னவராம்!
ஏலேய்…விஷயத்துக்கு வாடா… அந்த ஜோசியனுக்கென்னடா…?
"இல்ல… நம்ம நடராசு பத்தி அந்த ஜோசியர்கிட்ட கேட்டுப் பார்க்கலாமுள்ள…?
-குரலில் இழைசலோடு ஒரு முக்கிய விஷயம் பற்றி ஞாபகப்படுத்தும் தினசில் கஜபதி பேசிய பேச்சினால் அவரின் நடு நெற்றியில் பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டது.
காமஜெபம் செய்த மனதில் இப்போது சோக மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது போல் ஒரு மாற்றம்.
முத்துமணி என்னும் அந்த மலைக்குடிச்சி ஓரமாக ஒதுங்கி நிற்கிறாள். அவிழ்த்துப் போடவேண்டிய உடுப்பை இழுத்து மூடிக்கொண்டு அவள் நிற்பதைப் பார்க்க கஜபதிக்கு சிரிப்பாக வந்தாலும் நடராசு பற்றி ஆனைமுடியாரிடம் பேசிவிட்டதன் நிமித்தம் அதை நினைத்து அந்த சிரிப்பு சுருண்டு போகிறது.
நடராசு…
இருபதைத் தாண்டிவிட்ட ஆனைமுடியாரின் ஒரே ஒரு புதல்வன். யானை வயிற்றில் இன்னொரு யானையல்லவா வந்து பிறந்திருக்க வேண்டும்? இவன் வேறு மாதிரி ஆகிவிட்டான்.
நான் போனநூற்றாண்டில் நம்கொள்ளுத்தாத்தா பெற்ற சாபத்தின் எச்சம் என்கிற மாதிரி பெண்பிள்ளைத்தனம் செய்கிறான்.
புடவையைக் கண்டால் எடுத்து சுற்றிக் கொள்கிறான்.