Manathukkuthan Karpu
4/5
()
About this ebook
Reviews for Manathukkuthan Karpu
5 ratings0 reviews
Book preview
Manathukkuthan Karpu - Indira Soundarrajan
http://www.pustaka.co.in
மனதுக்குத்தான் கற்பு
Manathukkuthan Karpu
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
என்னுரை
வி
த்தியாசமான சில சமூக சிந்தனைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துபவனாக இருந்து விடக்கூடாது.அவனுக்கு பல்நோக்கு வேண்டும்.சரித்திரம், சமூகம், நகைச்சுவை, விஞ்ஞானம் என்று எல்லாம் அவன் கைவரப் பெற்றிருக்க வேண்டும்.
என்வரையில் இதன் காரணமாகவே தொடர்களையும், நாவல்களையும் உருவாக்கும் போது ஒன்றுக்கு அடுத்தது மிக மாறுபாட்டுடன் களம் முதல் சர்வமும் வித்தியாசமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்.அந்த வகையில் இந்த மாதிரி செயல்பட்ட பலரை நான் நன்கறிவேன்.திரு.ரா.கி.ரங்கராஜன், சுஜாதா இவர்களில் மிக முக்கியமானவர்கள்.அழுத்தமாகவும் ஆழமாகவும் வெரைட்டி தந்தவர்கள்.
பொதுவில் ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ஒரு சூட்சுமம் அற்புதமாய் பிடிபட்டிருக்கும்.குமுதம் உதவி ஆசிரியர் ப்ரியாகல்யாணராமன் குடும்பச் சிக்கலுடன் கூடிய மன உணர்வுகளை அற்புதமாக பதியமிடுவார்.அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பு என் மனதில் கல்வெட்டாகவே படிந்து விட்டது.
இப்படி முன்னொடிகளை பார்ப்பதால் நானும் வித்தியாசமாக எதையாவது சாதிக்க முனைவது உண்டு.அப்படி ஒரு முயற்சிதான் இந்தத் தொகுப்பு.உளவியல் ரீதியாக இதில் செயல்பட்டிருக்கிறேன்.பெண்களின் சிக்கல்களைப் பொறுப்புணர்ச்சியோடு அணுகிப் பார்த்திருக்கிறேன்.
பணிவன்புடன்,
இந்திரா சௌந்தர்ராஜன்.
21-4-98
மதுரை-3
1
கா
லை ஏழு மணி! ராம் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருந்தான். அதிகம் தூங்கிவிட்டதாக எண்ணி வருத்தம் வேறு பட்டுக் கொண்டான். மனைவி காஞ்சனா சமையல் கட்டில் இருந்தாள். காபி கலக்கிக் கொண்டிருப்பது வாசனையில் தெரிந்து போயிற்று.
காஞ்சனா… காஞ்சனா…
எழுந்தாச்சா? தோ வந்துட்டேன்.
வர்றது இருக்கட்டும். ஆறு மணிக்கு எழுப்பச் சொன்னேன்ல?
சொன்னீங்க…களைச்சு தூங்கற உங்களை எழுப்ப மனசு வரலீங்க.
உனக்கெல்லாம் எதுக்கு எக்ஸிகியூடிவ் உத்தியோகம்னு ஆபீஸ்ல மேனேஜர் கடிச்சு துப்பப் போறாரு…
… பேச்சு பதறலாகிப்போனது. தலையணை துப்பட்டியெல்லாம் அப்படியப்படியே கிடக்க டூத்பேஸ்டை வாயில் அடைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.
வெளியேற எப்படியும் இருபது