Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasaikku Moondru Kangal
Aasaikku Moondru Kangal
Aasaikku Moondru Kangal
Ebook79 pages41 minutes

Aasaikku Moondru Kangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai. He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu. Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
LanguageUnknown
Release dateMay 2, 2016
ISBN6580100700932
Aasaikku Moondru Kangal

Related categories

Reviews for Aasaikku Moondru Kangal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    wow ? it’s so unit
    thanks for posting the story.
    Makes people think of their life.

Book preview

Aasaikku Moondru Kangal - Indira Soundarrajan

http://www.pustaka.co.in

ஆசைக்கு மூன்று கண்கள்

Aasaikku Moondru Kangal

Author:

இந்திரா செளந்தர்ராஜன்

Indira Soundarrajan

For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

ஆசைக்கு மூன்று கண்கள்

1

‘யானையும் ரயிலும் எப்பொழுது பார்த்தாலும் சலிக்காது’ என்று சொல்லுவார்கள். அதோடு விஸ்வநாதபுரம் சிவன் கோயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஊரின் எந்தத் திசையில் இருந்து வேண்டுமானாலும் அதன் கோபுரத்தைப் பார்க்க முடியும்.

சோழர்காலத்துக் கோயில்!

புறாக்களின் சிறகடிப்புக்கு நடுவில் நெடிதுயர்ந்து நிற்கும் அதன் அழகும், மணிசப்தமும் மனதுக்கு அப்படி ஒரு சாந்தியை அருளுபவை.

அதிலும் காவேரி ஆற்றின் படித்துறையில் சுழன்றபடி செல்லும் ஆற்றுநீரில் முங்கிக் குளித்துக்கொண்டிருக்கும் போது சில சமயங்களில் கோயில் மணிசப்தம் கேட்கும். முழுக்குப்போட்ட தலையை உசுப்பிக் கொண்டு பார்த்தால் கோயில் யானை நடராஜ ஸ்வாமியின் திருமஞ்சனத்திற்காக தங்கக் குடத்தோடு ஆற்றங்கரையில் வந்து நின்றபடி இருக்கும். அதே சமயம் ஒரு முந்நூறு மீட்டர் தொலைவில் ஆற்றின் மேல் உள்ள ரயில் பாலத்தில் பாசஞ்சர் ரயிலும் போய்க்கொண்டிருக்கும்! ஒருசேர இவைகள் அனைத்தையும் பார்க்க முடிந்த அந்த நொடிப் பொழுதுகள் அற்புதமானவை.

இன்று இளங்கோவனுக்கும் அப்படித்தான் இருந்தது. கூடவே அவன் அப்பா தன் அந்திமக்காலத்தை விஸ்வநாதபுரத்தில் சுழிக்க ஆசைப்பட்டதில் ஒரு மிகப்பெரிய அர்த்தம் இருப்பதாகக் கூட தோன்றியது.

இதெல்லாம் கலப்படமில்லாத சுகங்கள்.

காவேரியை ஒட்டி அடர்வாக மாந்தோப்பும், வாழைத்தோப்பும் தழைத்திருக்கின்றன. வாழைத்தோப்பில் கிளிகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டு அதில் பழுத்துவிட்ட வாழையைத் தங்கள் கூரிய அலகுகளால் கிள்ளிக் கிழித்துத் தின்றுவிட்டு அதன் பசும் இலைகள் உரச பறப்பதைப் பார்ப்பது ஒரு அடிஷனலான சுகம்.

மாந்தோப்பில் சீசனுக்குத்தான் பழங்களைப் பார்க்க முடியும். ஆனால் வாழை அப்படி இல்லை. அது எல்லாக் காலத்திலும் காய்த்துக் குலுங்கியது. அது என்னவோ தெரியவில்லை...விஸ்வநாதபுரத்துக் காரர்கள் வாழைத்தாரை மூட்டம்போட்டு பழுக்க வைப்பதில்லை. அது மரத்திலேயே பழுக்கும்வரை காத்திருக்கிறார்கள் அங்கங்கே வெளிர் மஞ்சளில் வாழைத்தார்கள். வரப்பின் வழியாக நடக்கும் போது அதையெல்லாம் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கூடவே நொடியில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் சரசரவென்று ஜன நடமாட்டத்துக்கு நடுவில் நான்காவது மாடியில் அமைந்திருக்கும் தனது ஃப்ளாட்டும், அங்கே நிலவும் தண்ணீர் கஷ்டமும் இளங்கோவனின் ஞாபகத்தில் தவிர்க்க முடியாதபடி தோன்றி இந்த விஸ்வநாதபுரம் போல சென்னையும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பத் தவறவில்லை.

இளங்கோவனுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தால் தான் உடம்பு உடம்பாக இருக்கும். அப்படிக் குளித்துமே படுக்கப் போதும் போல கசகசவென்று வியர்வையால் உடம்பில் சன்னமாய் நாற்றடிக்கும்.

இன்னொரு முறை போய் குளிக்கத்தோன்றும். ஆனால் அதை வீட்டுக்காரர் முகம் தடுத்து நிறுத்திவிடும்.

உகலில் கொடியவர்கள் பட்டியலில் அவன் சென்னையைச் சேர்ந்த வீட்டுச் சொந்தக்காரர்களையும் சேர்த்து வைத்திருந்தான். அவர்களில் நல்லவர்களே கிடையாது என்பது இளங்கோவனின் தீர்மானம்.

ஒரு முறை தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்கும் போது குழாயில் தண்ணீர் வருவது நின்றுவிட்டது. பாத்ரூம் அடைபட்டிருந்த நிலையில் மனைவியை கூப்பிட்டு அலறினான்.

சகுந்தலா தண்ணி வரலை பார்...

அவள் பால்கனியில் நின்றுகொண்டு பதிலுக்குக் கீழே இருக்கும் வீட்டுக்காரனைப் பார்த்துக் கத்தினாள்.

என்னங்க...கொஞ்சம் மோட்டார் போடுங்க? மேல டேங்க்ல தண்ணி இல்ல!

"கரண்ட் இல்லம்மா...நீ

Enjoying the preview?
Page 1 of 1